Like me

Saturday, March 24, 2012

35வது புத்தகக் கண்காட்சி



                    சென்னை புத்தக கண்காட்சியில் தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பான நூல்கள் இடம்பெற்றிருந்தன - தேசியத்தலைவரது நாட்காட்டி அமோக விற்பனை.

tamilnadu news
     சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 35வது புத்தகக் கண்காட்சியில் தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றிய நூல்களும் அதிகளவில் இடம்பிடித்துள்ளன.
  குறிப்பாக தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் நாட்காட்டி அமோக விற்பனையாகி வருவதை காணக்கூடியதாக உள்ளது.

  நடைபெற்றுவரும் 35வது புத்தகக் கண்காட்சி 05ம் திகதி முதல் சென்னை பச்சயப்பா கல்லூரி எதிரில் உள்ள கல்லூரி மைதாணத்தில் நடைபெற்றுவருகின்றது. இதில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கலந்து கொண்டதுடன் பல்வேறு நூல்களையும் வாங்கிச் சென்றனர்.
tamilnadu news

  இந்தமுறை நடைபெற்றுக் கொண்டு இருக்கும் புத்தகக் கண்காட்சியில் தமிழகத்தில் உள்ள பல்வேறு பதிப்பகங்களில் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பான நூல்கள் விற்பைனைக்கு வைக்கப்பட்டிருந்ததையும் அதனை பல மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றதையும் கண்கூடாக காணக்கூடியதாக இருந்தது.
tamilnadu news
  தமிழீழத் தேசியத் தலைவர் குறித்த பல்வேறு புத்தகங்களும் இடம்பெற்றிருந்தன. உலகளாவிய பிரபலமானவர்களின் தலைவர் குறித்த கருத்துக்களை தொகுத்து தோழமை வெளியீட்டினால் வெளியிடப்பட்ட இவன் ஒரு வரலாறு என்ற நூலும் தமிழீழத் தேசியத் தலைவரது மாவீரர் நாள் உரைத் தொகுப்பு நூலும் தலைவரது சிந்தனைகள் அடங்கிய நூலும் தலைவர் தொடர்பாக தமிழக எழுத்தாளர்களால் எழுதப்பட்ட இன்னும் பல நூல்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

  தமிழீழ ஆதரவாளரும் இந்திய கம்யூனிட்டு கட்சியின் மாநிலத் துணைத்தலைவருமான சி.மகேந்திரன் அவர்கள் ஆனந்தவிகடன் வாரஇதழில் தொடராக எழுதிவந்த முள்ளிவாய்க்கால் துயரங்கள் "வீழ்வேன் என்று நினைத்தாயோ" என்ற தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டிருந்தது. கடந்த 13ம் திகதி இந்நூல் வெளியீட்டு நிகழ்வு இதே புத்தகக் கண்காட்சி அரங்கில் நடைபெற்றிருந்தது.

  தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது முழு உருவப்படம் தாங்கிய நாட்காட்டி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது முதல் பெருமளவில் மக்களால் வாங்கிச் செல்லப்பட்டதாக விற்பனையில் ஈடுபட்டிருந்தவர் தெரிவித்திருந்தார். புத்தக கண்காட்சிக்கு வந்திருந்த பலர் தலைவரின் நாட்காட்டியை தொகை தொகையாக வாங்கிச் சென்றதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

உலகத் தமிழர் பேரமைப்பின் வெளியீடான தமிழ் மண் பதிப்பகத்தால் வெளியிடப்பட இருக்கும் பழ.நெடுமாறன் அய்யா எழுதிய பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற வரலாற்று நூலின் விளம்பரம் மக்களை கவர்ந்திருந்தது.

  இந்த நூலின் மாதிரி வடிவம் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. தமிழீழ விடுதலைப்புலிகளின் இராணுவச் சீருடையில் தலைவர் பிரபாகரன் அவர்கள் கம்பீரமாக நிற்கும் படத்தினை தாங்கிய அட்டைப்படத்துடன் கூடிய இந்த நூலின் மாதிரியை பார்க்கும் போது தலைவரே நேராக வந்து நிற்பது போன்று இருந்தது.
tamilnadu news
tamilnadu news
tamilnadu news
tamilnadu news
tamilnadu news
tamilnadu news
tamilnadu news
tamilnadu news
tamilnadu news
tamilnadu news
tamilnadu news
tamilnadu news
tamilnadu news
tamilnadu news
tamilnadu news tamilnadu news

                                                                                                                                                                                                               நன்றி: ஈழ தேசம் இணையம்   

கூடங்குளமும் தமிழக அரசின் வியூகமும்

கூடங்குளமும் தமிழக அரசின் வியூகமும்

கூடங்குளத்தில் அணு உலை கட்டுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தான பொழுதிலிருந்தே தொடங்கிய அணு உலை எதிர்ப்புப் போராட்டம், 'கூடங்குளத்தை இழுத்து மூடு' என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த ஏழு மாதங்களாக உச்சத்தை அடைந்தது. இதில் கடந்த 200 நாட்களுக்கும் மேலாக கூடங்குளத்தை இழுத்து மூடவும் செய்தனர் போராடும் மக்கள். இந்நிலையில் தான் தமிழக அரசு மார்ச் 19 அன்று கூடங்குளம் அணு உலைக்கு ஒப்புதல் கொடுத்தது. இதற்கு சில வாரங்கள் முன்பாகவே கூடங்குளம், அதைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் மாற்றப்பட்டு அதிகார வர்க்கத்திற்கு ஏற்றவர்கள் அங்கு பணியமர்த்தப்பட்டார்கள். காவல்துறை உயர் அதிகாரிகள் கூடங்குளம் சென்று வியூகம் வகுக்கத் தொடங்கிவிட்டனர்.



அமைச்சரவை ஒப்புதல் கொடுக்கும் முன்னரே போராட்டக்குழுவைச் சேர்ந்த மக்களை கைது செய்யும் படலம் தொடங்கியது. 11 பேரின் மேல் இந்திய ஒன்றியத்திற்கு எதிராக போர் தொடுக்க முயற்சித்தது, தேசத் துரோகம், அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டது. மீதமுள்ள 184 பேரின் மேல் சட்டத்திற்குப் புறம்பான வகையில் ஒன்றுகூடுதல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் 43 பேர் பெண்கள், இரண்டு பேர் பள்ளி மாணவிகளாவர். மேலும் இங்கு 144 தடையுத்தரவும் போடப்பட்டது. கூடங்குளம் அதைச் சுற்றிய கிராமங்கள் ஒவ்வொன்றும் தனி காவல்படையினால் சுற்றி வளைக்கப்பட்டு கிராமங்களுக்கு இடையிலான தொடர்பும், பிற இடங்களைச் சேர்ந்தவர்கள் இக்கிராமங்களுக்குள் நுழைவதும் தடுக்கப்பட்டது. மேலும் மனிதர்களின் அடிப்படை தேவையான குடிநீர், பால், உணவுப் பொருட்கள் கூட இக்கிராமங்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. கூடங்குளம் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் கடலோர பகுதிகள் என்பதால் அங்குள்ள நிலத்தடி நீரை குடிக்கமுடியாது. அங்கு வாழும் மக்கள் வெளியிலிருந்து வரும் நீரையே குடித்து வந்துள்ளனர். இந்நிலையில் குடிநீர் தடுக்கப்பட்டது அவர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் செயலாக அமைந்தது. மேலும் 3,000த்திற்கும் அதிகமான குழந்தைகள் இக்கிராமங்களில் உள்ளனர். இவர்களுக்கான உணவான பால் கூட அங்கு உள்ளே அனுமதிக்கப்படாதது, நம்மை மனித நேய கோரிக்கைகளை நோக்கித் தள்ளியது.


முன்னர் போராட்ட களமாக இருந்த கூடங்குளம் அணு உலை இப்பொழுது முழுவதுமாக காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கூடங்குளத்தை இழுத்து மூடு என்ற முன்னைய கோரிக்கையில் இருந்து, அரசு மனித நேய கோரிக்கைகளை எழுப்ப வைத்துள்ளது. நமது கவனம் முழுவதையும் இடிந்தகரை, அதைச் சுற்றிய பகுதியில் மட்டும் இருக்குமாறு காவல்துறையின் வியூகம் அமைந்துள்ளது. ஆம், அதற்காகத் தான் பால், குடிநீர், உணவு போன்ற அடிப்படை பொருட்களை அங்கு தடை செய்தது. மேலும் ஆயிரக்கணக்கில் அங்கு காவல்துறையைக் குவித்து எந்நேரமும் காவல்துறை வன்முறையை ஏவலாம் என்ற நிலையை உருவாக்கியது. இந்நிலையில் தான் ஊடகங்களை நேற்று(21 மார்ச்) மதியம் முதல் இடிந்தகரை பகுதியினுள் காவல்துறை அனுமதிக்கத் தொடங்கியது.



காவல்துறைக்கு வன்முறையை ஏவும் எண்ணம் இருந்தால் ஊடகங்களை உள்ளே அனுமதித்திருக்காது. காவல்துறையின் வியூகத்தின்படி குறைந்த பட்சம் இன்னும் ஒருமாத காலம் இப்பொழுது இருக்கும் அதே எண்ணிக்கையில் காவல்துறை கூடங்குளத்திலும், இடிந்தகரையைச் சுற்றிய பகுதிகளிலும் இருக்கும். இப்பொழுது அணு உலையின் பராமரிப்பு பணிகளே நடைபெற்று வருகின்றன. கூடங்குளம் இயங்கத் தொடங்கியதும் காவல்துறை இடிந்தகரை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து வெளியேறும். கூடங்குளம் அணு உலையைச் சுற்றியுள்ள காவல்துறை அணு உலை இயங்கத் தொடங்குவதிலிருந்து குறைந்த பட்சம் இரண்டிலிருந்து மூன்று மாதங்களுக்கு பின்னர் வெளியேறக்கூடும்.





கூடங்குளத்தில் முதல் அணு உலை இயங்கத்தொடங்கும் வரை காவல்துறை நமது பார்வையை இடிந்தகரை பகுதியிலேயே வைத்திருக்க முயல்கின்றது. குடிநீர், பால், உணவு போன்ற மிகவும் அத்தியாவசியமான பொருட்கள் அம்மக்களுக்கு கிடைக்கச் செய்ய இயலாததன் மூலம் காவல்துறை இந்நிலையை நீடிக்க இயலும். நாமும் உயிர் தொடர்பான பிரச்சனை என்பதால் இடிந்தகரையில் மட்டுமே நம் கவனத்தை வைத்திருப்போம். அணு உலை தொடங்கிய பின்னர் அதை போராடி நிறுத்துவது என்பது மிகவும் கடினமான ஒன்று. இதனை மனதில் கொண்டே காவல்துறையும், அரசும் செயல்பட்டு வருகின்றது.


பாளையங்கோட்டையில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தைத் தவிர தமிழக அளவில் கூடங்குளம் மக்களுக்கு ஆதரவாக பெரிய போராட்டங்கள் நடக்கவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்க நிகழ்வாகும். அணு உலை எங்களுக்கு வேண்டாம் என்று போராடியதற்கு அவர்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறை நாளை நம்மை நோக்கியும் திரும்பும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். சனநாயகத்தின் இறுதி மூச்சு இடிந்தகரை மக்களின் போராட்டத்தில் தான் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கின்றது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.



இடிந்தகரை மக்களின் உயிர்வாழும் உரிமையை மீட்டெடுக்கும் அதே வேளையில் கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு என்ற கோரிக்கையையும் நம் மனதில் நாம் நிறுத்தவேண்டும். இல்லையென்றால் இவ்வளவு ஆண்டுகளாக மக்கள் அங்கு போராடியததற்கான பொருள் இல்லாமல் போய் விடும்.



மக்கள் போராட்டம் ஓங்குக…..



நன்றி - ப.நற்றமிழன்

இடிந்தகரை மக்களுக்கு ஆதரவாக பூனாவில் போராட்டம்


         கூடங்குளத்தில் அணு உலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு ஆதரவு தரும் வகையில் இன்று (23/03/12) ஒரு நாள் அடையாள உண்ணா நோன்பு போராட்டத்தில் பூனாவில் உள்ள லோகாயத் என்ற அமைப்பு ஈடுபட்டுள்ளது. இந்த போராட்டத்தில் சுமார் 35 போராளிகள் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் பூனா மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தின் எதிரே நடைப் பெறுகிறது. இவர்கள் மகாராஷ்டிரா மாநில ஜைதாபூர் அணுஉலைக்கு எதிராக பல நாட்களாக போராடி வருபவர்கள். அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடும் இது போன்ற போராளிகள் கூடங்குளத்தில் இப்போது போராளிகள் சந்தித்திருக்கும் நெருக்கடியான சூழ்நிலையில் போராட்டக்க் காரர்களுக்கு உறுதுணையாக தாங்கள் இருப்போம் என்று இந்த ஒரு நாள் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டுள்ளனர். இந்த போராட்டம் இடிந்தகரை போராட்டத்திற்கு மேலும் வலு சேர்பதாக அமைந்துள்ளது.



மன அமைதிக்கு ஒரு மருந்து

 


பயனுள்ள வேலை என்பது மன அமைதிக்கு ஒரு மருந்து :-



எப்பொழுதும் ஏதாவது பயனுள்ள, நன்மை பயக்கும் வேலையைச் செய்யுங்கள். இதை செய்யலாமா? அதைச் செய்யலாமா? என நேரத்தை வீணாக்காதீர்கள். இதனால் பயனற்ற மனப் போராட்டத்தில் நீங்கள் நாட்கள் வாரங்கள், மாதங்கள், என் வருடங்களைக் கூட வீணாக்கி கடைசியில் ஒன்றும் செய்யாமல் போய்விடுவீர்கள். அதிகமாக திட்டங்களைத் தீட்டாதீர்கள். திட்டம் போடுவது அந்த இறைவன் தான். எப்பொழுதும் ஏதாவது நல்லதையே செய்து கொண்டிருங்கள். ஆக்கப் பூர்வமான உங்கள் காரியத்தில் இடைவெளி எதுவும் இருக்க வேண்டாம். ஒரு சில கவனக் குறைவான வினாடிகள் கூட வாழ்வில் உங்களை கீழே தள்ளிவிடும். காலமே வாழ்வு. நேரத்தை பொன் போலப் பாதுகாத்து அதை மிகவும் பயனுள்ள விதத்தில் செலவிடுங்கள். நீங்கள் உடலளவில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாலும் மனதை வெறுமையாக வைத்திருக்காதீர்கள் ஜபம், மானசீக பிரார்த்தனை மற்றும் ஏதாவது பயனுள்ள நூல்களைப் படிப்பதில் ஈடுபடுங்கள். எல்லா தொல்லைகளும் மனதில்தான் ஆரம்பிக்கிறது. கடும் சொற்களும், தீய செயல்களும் மனதில்தான் உதிக்கின்றன. எனவே ஆரம்ப ஸ்தானத்தைச் சுத்தமாக வைத்திருங்கள். உங்கள் வாழ்வாகிய நதி மிகப் பெரிய மன நிம்மதியுடன், படிகம் போல தூய்மையாகப் பாயும்.       

இந்தியாவின் முதல் நவீன விஞ்ஞானி

                                   
India's first modern scientist Jagadish Chandra Bose, popularly known as J.C.Bose, occupies a unique position in the history of modern Indian science. But then it is also true that Bose was not only the pioneer of modern Indian science, but also an inventor of the first order. He devised many sensitive instruments for his research both in Physics and Physiology. Bose was was honoured both in India and outside for his contributions to science. He was elected Fello of Royal Society on May 13, 1920, becoming the First Indian to be honoured by the Royal Society in the field of Sciense. In 1903 Bose was honoured with commander of the order of the Indian Empire (CIE) at Delhi by the British Government. He received in 1912 the Commander of the Star of India (CSI) at the coronation of the British emperor. He was knighted by the British Government in 1916.

         இந்தியாவின் முதல் நவீன விஞ்ஞானி ஜகதீஷ் சந்திர போஸ், (ஜே.சி.போஸ் என அறியப்படுபவர்) இந்திய நவீன விஞ்ஞானிகளின் முன்னிலையில் ஒருவராக கருதப் படுகிறார். இவர் கம்பிகளின் துணையின்றி மின்சாரத்தை அலைகளாக அனுப்ப முடியும் என்று கண்டார். தாவரங்களின் வளர்ச்சியைக் கணக்கிடும் "கிரஸ்கோ கிராப்ட்" என்ற நேர்த்தியான கருவியையும் அவரே உருவாக்கினார். ரேடியோ அலைகளைக் கண்டுபிடிக்க உதவும் "கொஹரர்" என்ற கருவியையும் கண்டுபிடித்தார். தாவரங்களுக்கும் மனிதர்களைப் போல உணர்வுகள் உண்டு என்பதனையும் அவை சுவாசிக்கக் கூடியவை என்பதையும் அறிவியல் பூர்வமாக நிருபித்தார். இளைஞர்களிடையே அறிவியலின் முக்கியத்துவத்தையும் அதைப்படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் தூண்டும் வகையிலும் ஆங்கிலம் மற்றும் வங்காள மொழியில் பல்வேறு புத்தகங்களை எழுதினர். இவருடைய கண்டுபிடிப்புக்கள் மருத்துவம், விவசாயம் மற்றும் பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிய உதவ்வியாக இருந்தன. 

வேற்றுக்கிரக வாசிகள்?

                          

1947 இல் பூமிக்கு வந்திறங்கிய வேற்றுக்கிரக வாசிகள்? - FBI வெளியிட்டுள்ள புதிய படங்கள் !
seithi: Monday, 11 April 2011 18:00


1947 இல் ஆம் ஆண்டு பூமிக்கு வந்திறங்கிய வேற்றுக்கிரக வாசிகளின் (Aliens) புகைப்படத்தை (?) FBI தற்போது வெளியிட்டுள்ளது. 1000 ற்கும் மேற்பட்ட தனது பழைய கோப்புக்களை, ஆன்லைனில் நேரடியாக பதிவு செய்யும் நடவடிக்கையின் போதே, FBI இத்தகவலை வெளியிட்டுள்ளது. நியூ மெக்ஸிகோ நகரில் மூன்று வேற்றுகிரக வாசிகளின் சடலங்கள் கிடைக்கப்பெற்றதாகவும், மிகவும் இரகசியமான முறையில், ஆராயப்பட்ட இச்சடலங்கள் தொடர்பில் வெளியில் தகவல்களை வெளியில் கூறக்கூடாது, என FBI அப்போது கூறிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஸ்பெஷல் ஏஜெண்டான Guy Hottel எனும் நபர், 1950ம் ஆண்டு வாஷிங்டனிலிருந்து, FBI டைரக்டருக்கு அனுப்பிய குறிப்பு ஒன்றில், இவ்வேற்றுக்கிரக வாசிகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளார். அவருடைய குறிப்பு மேலும் தெரிவிக்கையில் மூன்று வேற்றுக்கிரக வாசிகளின் சடலங்கள் நியூ மெக்ஸிகோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மூன்றும் மனித உடலங்களை ஒத்ததாக காணப்பட்டதுடன், 3 அடி உயரம் கொண்டவையாக இவை இருந்துள்ளன. உலோகத்திலான ஆடை அணிந்துள்ளன. ஆடை நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
            
                       
             அமெரிக்க இராணுவத்தினரின் விமானப்படையினர் இதனை கண்டுபிடித்துள்ளனர், என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் FBI யிடம் இதற்கான விசாரணை வந்ததை அடுத்து, இவ்விடயம் வெளியில் தெரியாமல் போயுள்ளது. பத்திரிகைகளில் செய்திகள் வந்த போதும் யாரும் நம்பவில்லை. இந்நிலையில், குறித்த வேற்றுக்கிரக வாசிகளின் சடலங்களை மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்யும் போது படம்பிடிக்கப்பட்ட புகைப்படங்களையும் FBI வெளியிட்டுள்ளது.
                     
                               
 

தடையில்லா மின்சாரம்!

                           

தடையில்லா நிரந்தர இலவச மின்சாரம்!


அணுமின்சாரம் வேண்டுமா? வேண்டாமா? என காரசாரமாக விவாதித்து வரும் இவ்வேளையில் இந்த தடையில்லா நிரந்தர இலவச மின்சாரத்தை பற்றிய பதிவு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

இன்று வருடத்தின் பெரும்பாலான நாட்கள் சூரிய ஒளியையே காண முடியாத ஐரோப்பிய நாடுகளில், சூரிய கதிர்களால் செயல்படும் மின்சார சக்தியை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்கள். இங்கு இங்கிலாந்தில் இது பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. தமிழகமோ அனல் பறக்கும் சூரிய ஒளிக்கதிர்களை கொண்டிருந்தும் இந்த சூரிய ஒளிக்கதிர்களால் இயங்கும் மின்சாரத்தை அமல்படுத்தவில்லை. ஒரு சதுர மீட்டர் கொள்ளளவில் படுகின்ற சூரிய ஒளிக்கதிரால் ஒரு நாளைக்கு 1௦௦௦ வாட்ஸ் மின்சாரத்தை பெற முடியும். இதற்கு நாம் சோலார் பனல் எனப்படும் தகடுகளை நம் வீட்டின் கூரையிலோ அல்லது நன்கு சூரிய ஒளிக்கதிர்கள் படும் இடத்திலோ பொருத்தினால் போதும்.

இதனால் சாதாரணமாக ஒரு வீட்டிற்கு தேவைப்படும் மின்சாரத்தை பெற முடியும். ஆனால் Air conditioner போன்ற அதிக மின்சாரம் தேவைப்படும் இடங்களுக்கு இவையால் முழு மின்சாரத்தையும் வழங்க முடியாது. இங்கிலாந்தில் நம் வீட்டில் நாம் உற்பத்தி செய்யும் மின்சாரத்திற்கு அரசே பணம் தருகிறது. அதாவது நாம் பயன்படுத்தும் மின்சாரத்திற்கும் சேர்த்து.

இங்கிலாந்தில் இதன் வருமானத்தை கருத்தில் கொண்டு, பெரிய நிறுவனங்கள் வீட்டின் கூரைகளை ஒப்பந்தபடி பெற்று அதில் இந்த சோலார் பேனல்களை நிறுவி, அதிலிருந்து வரும் வருமானத்தை பெற்றுக் கொள்கிறார்கள். வீட்டின் உரிமையாளர் தேவையான மின்சாரத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.

நாமும் இத்திட்டத்தை அமல் படுத்தினால் அரசின் மின்சாரத்தையே சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. காற்றாலை மூலம் தயாரிக்கப் படும் மின்சாரம் நன்கு காற்று வீசினால்தான் நிறைய உற்பத்தியாகும். ஆனால் சூரிய ஒளிக்கதிர்கள் என்றுமே அடிப்பதால் தினமும் இது மின்சாரத்தை உற்பத்தி செய்யும். இதன் ஒரே பிரச்சினை என்னவென்றால், இதன் ஆரம்ப கட்ட முதலீடு அதிகமாக இருக்கும். இதற்கு இந்தியாவில் எவ்வளவு பணம் ஆகும் என தெரியவில்லை. இங்கிலாந்தில் சுமார் பத்து லட்சம் ரூபாயாகிறது.

இனி இது செயல்படும் விதத்தை பார்ப்போம்:

இந்த சோலார் தகடுகள் சூரிய ஒளியை DC கரண்ட்டாக மாற்றி விடும். பின்னர் இது நம் உபயோகத்திற்கு தேவையான AC கரண்ட்டாக மாற்றப்பட்டு நம் வீட்டில் ஏற்கனவே இருக்கிற Switch board இல் இணைக்கப்படும். இது உற்பத்தி செய்கின்றதைவிட அதிக மின்சாரம் தேவைப்பட்டால், அது அரசின் மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும். அதே சமயம் நம் தேவையைவிட அதிகமாக வரும் மின்சாரம், அரசின் மின் கம்பத்திற்கு மீட்டரின் வழியே சென்று விடும். இதனால் நாம் அரசிற்கு எவ்வளவு மின்சாரம் வழங்கியுள்ளோம் என தெரிந்து கொள்ளலாம். அதற்கான பணத்தை அரசு வழங்கிவிடும்.

தமிழகத்தில் எதையெல்லாமோ இலவசமாக வழங்குகிறார்கள். இப்படி உருப்படியானவற்றை இலவசமாக வழங்கலாம்! அல்லது மானியங்கள் கொடுக்கலாம். மிச்சி, கிரைண்டர் என கொடுத்து விட்டு மின்சாரத்தை சரியாக வழங்கமாட்டார்கள்! தமிழக முதல்வர் ஜெயலலிதா, என்ன புரட்சியை செய்து புரட்சி தலைவி என்ற பட்டத்தை பெற்றாரோ தெரியவில்லை. இந்த மின் திட்டத்தை அமல் படுத்தி உண்மையிலேயே புரட்சி தலைவி ஆவாரா?
பின்குறிப்பு: இந்த பதிவை யார் வேண்டுமானாலும் தங்கள் வலைத்தளத்தில் வெளியிடலாம். இது பலரையும் சென்றடையவேண்டும் என்பதே என் நோக்கம்.  

கூடங்குளம்

            

           


                

               


இலங்கைக்கு எதிராக மெரினாவில் ஒன்றுகூடல்

         March 18
                        மெரினாவில் ஐ நா சபையை இலங்கையின் மேல் சர்வதேச விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும், இலங்கைக்கு ஆதரவு தரும் இந்தியாவை கண்டித்தும் மாபெரும் ஒன்று கூடல் எழுச்சியுடன் நடைபெற்றது.

   



   

  

  

  

  

  

  

  

  

  

  

  

  

  

  

  

  

  

  

உங்கள சொல்லி தப்பு இல்ல ...

   
வெள்ளைக்காரன் கூட நமக்கு குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டனர் ..... ஆனா நம்ம ஊருல நம்மை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் ஒரு கூட்டம் அவர்களுக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்து கொண்டு "கட் ஆவுட்","பால் அபிஷேகம்" என்று என் தமிழ் இளைஞர்களை சீரழித்து கொண்டிருகின்றது .... எவனாச்சும் இந்த சிங்கள அட்டூழியத்தை கண்டித்து ஒரு பதில் பேசிருப்பனுங்க??? 
இந்த சேனல் - 4 காணொளி பாத்தேன் ரொம்ப கஷ்டமா இருந்திச்சி அப்படின்னுஎவனாச்சும் சொன்னனா ??
ஹம் ஹம் இல்லவே இல்லை

நம்ம விசய்(விஜய்) அவர்களோட ஒரு பரம விசிறி ஒரு காரியத்தை பன்னிருக்காறு... அடேங்கப்பா .... இவன் என்னைகாசும் தன்னோட அப்பன் பெற பெருமையா "நான் இன்னரோட மகன்னு" சொல்லிருப்பானா ??

எல்லா நடிகனும் இதே "குட்டையில ஊறின மட்டைங்க தான்"
உங்கள சொல்லி தப்பு இல்ல ... உங்களையும் சோறு போட்டு வளக்குறாங்க பாரு அவங்கள சொல்லணும்...