Like me

Sunday, October 7, 2012

திரும்பி பார்கிறேன்.............! இன்னும் திருந்தாமல்.....! மன்னித்துவிடு.....!

திரும்பி பார்கிறேன் .............!     இன்னும் திருந்தாமல் .....! மன்னித்துவிடு .....!


                                             




ஆம் திரும்பி பார்கிறேன் ...................!

உன்னை தேடி அலைந்த நாட்களை 

உற்சாகமூட்டும்  உன் புன்னகையை 

எனை பார்த்தால் மட்டும் கலவரமடையும் உன் கண்களை 

உலகில் எங்கு தேடினாலும் கிடைக்காத அமைதியான உன் முகத்தை 

உயிர் உருகினாலும் உனக்கு நானில்லை என்ற உன் வார்த்தையை 

காத்திரு உன் காதல் வெல்லும் எனும் நண்பனின் வாக்கு மெய்ப்படுமா ?

உண்மைதான் உன் ஆம் எனும் வார்த்தைதான் என் காதலை முழுமைப்படுத்தும்

அது வரை நான் காத்திருப்பேன் ...!  


                                                              
                                      

அணு உலைக் கூடங்கள் அழிவைத் தருவன; அந்த ஆபத்தை தடுக்கவும் முடியாது




அணு உலைக் கூடங்கள் அழிவைத் தருவன; அந்த ஆபத்தை தடுக்கவும் முடியாது என்ற உண்மையை 1979-இல் அமெரிக்க நாட்டில் நடைபெற்ற மூன்றுகல் தீவு அணு உலை விபத்திலிருந்தும், 1986-இல் அன்றைய சோவியத் ரஷ்யாவின் செர்னோஃபில் அணு உலை விபத்தில் இருந்தும், அனைத்துக்கும
் மேலாக கடந்த 2011-ஆம் ஆண்டு மார்ச் 11-இல் ஜப்பானின் புகுஷிமா அணு உலை கோர விபத்திலிருந்தும் உணர்ந்து கொண்ட உலகத்தின் பல நாடுகள் அணு உலைகளை மூடுவது என்றும், புதிதாக அணு உலைகளை அமைப்பதில்லை என்றும் முடிவு செய்து அறிவித்து விட்டன.


ஜப்பான் நாட்டில் இயங்கி வந்த 56 அணு உலைகளில், 55 அணு உலைகள் மூடப்பட்டதோடு, மீதம் இருக்கின்ற உலையையும் மூடுவதாக ஜப்பான் அரசு அறிவித்து விட்டது. ஜப்பான் பிரதமர் இதுபற்றிக் கூறுகையில், இருட்டில் தவித்துத் துன்பப்படுவோமே தவிர, எங்கள் மக்களை அணு உலைக்கு சாகக் கொடுக்க மாட்டோம் என்று திட்டவட்டமாகச் சொல்லி விட்டார். அறிவியலிலும், தொழில் துறையிலும் உலகின் முதல் வரிசை நாடுகளில் ஒன்றான ஜெர்மனியின் அதிபர் அஞ்சலா மிச்சல் 2022-ஆம் ஆண்டுக்குள் ஜெர்மனியில் அனைத்து அணு உலைகளையும் மூடப் போவதாக அறிவித்து விட்டார். பிரான்ஸ் நாட்டில், அணு உலைகள் மூடுவது குறித்து விரைவில் பொதுஜன வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது. உலக நாடுகளுக்கு அணு உலைகளை விநியோகம் செய்யும் அமெரிக்க ஏகாதிபத்தியம் 1979 மூன்றுகல் தீவு விபத்துக்குப் பிறகு, தங்கள் நாட்டில் ஒரு அணு உலைக் கூடத்தைக்கூட அமைக்கவில்லை என்பதை தமிழ் நாட்டு மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.


கடுமையான மின்வெட்டு தமிழக மக்களைப் பாதித்துள்ள சூழலில் கூடங்குளம் அணு உலைக்கூடம் இயங்கினால், மின்வெட்டுக்குத் தீர்வு ஏற்படும் என்றும், தேவையான மின்சாரம் கிடைக்கும் என்றும், மோசடியான பித்தலாட்டப் பிரச்சாரத்தை மத்திய, மாநில அரசுகளும், காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட சில கட்சிகளும் செய்து வருகின்றன. இந்தியாவில் கூடங்குளத்தைச் சேர்க்காமல், மொத்தம் 21 அணு உலைகள் உள்ளன. இவற்றின் மொத்த மின்சார உற்பத்தி, இந்தியாவின் அனைத்து வழிகளிலும் கிடைக்கும் மின்சார உற்பத்தியில், மொத்தம் மூன்று சதவிகிதத்திற்கும் குறைவாக - 2.7 சதவிகிதம் மட்டும் தான் என்பது அதிர்ச்சி தரும் உண்மை ஆகும்.


தி.மு.க. தலைவர் கருணாநிதி, கூடங்குளம் அணு உலைக்கு வக்காலத்து வாங்கியவராக ஜெயலலிதா முதலில் அணு உலையை ஆதரித்து விட்டு, பின்னர் கடற்கரைப் பகுதி மக்களை ஏமாற்ற அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக அணு உலை செயல்படுவதற்குத் தடங்கலாக இருந்தார் என்று குற்றம் சாட்டுகிறார். அதுமட்டுமல்ல, கூடங்குளம் அணு உலையை எதிர்ப்பவர்கள், தொடக்க காலத்தில் ஏன் எதிர்க்கவில்லை என்று அவரது அறியாமையின் காரணத்தினாலோ அல்லது போராட்டக்காரர்களைக் கொச்சைப்படுத்தும் நோக்கத்திலோ கூறி வருகிறார்.


1988-ஆம் ஆண்டு நவம்பர் 21-ஆம் தேதி, இந்திய நாடாளுமன்றத்தில் கூடங்குளம் பெயரைக் குறிப்பிடாமல், இந்திய நாட்டில் ஓர் அணு உலை அமைக்க சோவியத் ரஷ்யாவுடன் தனது அரசு ஒப்பந்தம் செய்துள்ளது என்று அன்றைய பிரதமர் இராஜீவ் காந்தி அறிவித்த போது, அந்த அணு உலை தென் தமிழ் நாட்டில் கூடங்குளத்தில் தான் நீங்கள் அமைக்கப் போகிறீர்கள். அந்தப் பகுதி வாழ் மக்கள், குறிப்பாக மீனவர்கள் இதனை முன்கூட்டி தெரிந்து கொண்டதால், எக்காரணத்தைக் கொண்டும் அங்கு அணு உலை அமைக்கக் கூடாது என்று இந்தியப் பிரதமருக்குக் கோரிக்கை மனு அனுப்பியதோடு, அந்தப் பகுதியில் பல போராட்டங்களும் நடைபெறுகின்றன. எக்காரணத்தைக் கொண்டும் கூடங்குளத்தில் அணு உலை அமைக்கக்கூடாது, பெரு விபத்து நேர்ந்து, எங்கள் மக்களும், எங்கள் சந்ததிகளும் அழிந்து போவார்கள் என்று நான் நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் பேசினேன். எனக்கும் இராஜீவ் காந்திக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மறுநாள் நவம்பர் 22-ஆம் தேதி, தினகரன் ஏடு இதனை முக்கியச் செய்தியாகப் பிரசுரித்தது.


கூடங்குளம் அணு உலையை எதிர்த்து கிறித்துவ மதத்தின் தூண்டுதலால் மீனவர்கள் போராடுகிறார்கள் என்றும், வெளிநாட்டுப் பணம் கோடி கோடியாகப் போராட்டக் காரர்களுக்கு வருகிறது என்றும், குறிப்பாக அணுசக்தி எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் மீது மத்திய அமைச்சர்களும்,காங்கிரஸ்கட்சியினரும்அபாண்டமான பழியைச்சுமத்துகிறார்கள். 420 நாட்களாக தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்கள், குறிப்பாக தாய்மார்கள் இடிந்தகரையில் துளியளவும் வன்முறை இல்லாது நடத்தி வரும் அறப்போராட்டத்திற்கு நிகரான ஒரு போராட்டம் இந்திய வரலாற்றிலேயே நடந்தது கிடையாது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் 2011-ஆம் ஆண்டு செப்டம்பர் 16-ஆம் தேதி தந்த அறிக்கையில், ஆழிப்பேரலை தாக்கினாலும் கூடங்குளம் அணு உலைக்கு எந்த ஆபத்தும் நேராது என்றும், அணு உலை குறித்து எந்த அச்சமும் தேவையில்லை என்றும், எனவே அணு உலைக்கு எதிர்ப்பு தேவையற்றது என்றும் அறிக்கை தந்தார். ஆனால், இடிந்தகரை, கூடங்குளம் உள்ளிட்ட கடற்கரை பகுதி மக்களின் கொந்தளிப்பையும், வீரம் நிறைந்த போராட்டத்தையும் கண்டு, மக்கள் அச்சம் தீரும் வரையில் அணு உலையை இயக்க அனுமதிக்க மாட்டோம் என்று தனது முன்னைய நிலையை மாற்றிக் கொண்டு அறிவித்தார்.


சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிந்தவுடன், நிபுணர் குழுக்கள் தந்த அறிக்கைகள் திருப்தியாக இருக்கிறது என்று சொல்லி, அணு உலையைத் தொடங்குவதற்கு தமிழக அரசு ஒத்துழைக்கும் என்றார். மத்திய, மாநில அரசுகளின் நிபுணர் குழுக்கள் அப்பகுதி மக்களைச்சந்தித்து கருத்து கேட்கவில்லை. போராட்டக் குழுவினரின் நியாயமான கேள்விகளுக்குப் பதில் தரவில்லை. ஆனால், தமிழக அரசின் காவல்துறை, அமைதியாகப் போராட்டம் நடத்திய மக்கள் மீது தடியடியும் கண்ணீர் புகை பிரயோகமும் செய்ததில் பலர் படுகாயமுற்றனர். மணப்பாட்டைச் சார்ந்த அந்தோணி ஜான் என்ற மீனவர் தமிழக காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டார்.


அநியாயமான இந்தக் கொலையைச் செய்த காவல்துறையினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விசாரணைக் கமிஷனும் அமைக்கப்பட வில்லை. அறவழியில்போராடிய இடிந்தகரை மக்களை மிரட்டுவதற்காக இந்திய அரசு விமானப்படையின் சிறிய ரக விமானங்கள் இடிந்தகரை, கூடங்குளம் பகுதி மக்களை அச்சுறுத்துவதற்காக தாழ்வாகப் பறந்ததால், இடிந்தகரையைச் சேர்ந்த சகாயம் என்ற மீனவர் கொல்லப்பட்டார். மத்திய அரசுதான் இந்தக்கொலைக்குக் காரணமாகும். இதுகுறித்து எந்த நடவடிக்கையும் மாநில அரசு மேற்கொள்ள வில்லை. கூடங்குளத்திலும், வைராவிக் கிணற்றிலும் வாழுகிற மக்கள் பெரும்பாலும் இந்துக்கள். இங்கு தமிழகக் காவல்துறை மிருகத்தனமாக அடக்குமுறையை ஏவியது. பலர் காயமுற்றனர்; பலர் கைது செய்யப்பட்டனர். 


வைராவிக் கிணற்றில் இந்துக்கள் வழிபடும் பிள்ளையார் சிலையையும் காவல்துறையினர் உடைத்தனர். அந்தப் பகுதியில் உள்ள தாய்மார்கள் இது குறித்து குமுறலோடு அணு உலை கூடவே கூடாது என்று மனம் கொதித்துச் சொல்லுவது ஏடுகளிலும், ஊடகங்களிலும் இருட்டடிப்புச் செய்யப்பட்டு விட்டது. இவை அனைத்தையும் விட சகிக்க முடியாத கொடுமை என்னவென்றால், தமிழகம் மின்வெட்டில் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ் இனக்கொலை செய்த சிங்கள அரசோடு, இந்தியா 2010-ஆம் ஆண்டு ஜூனில் இலங்கைக்கு மின்சாரம் வழங்குவதாக ஒப்பந்தம் செய்து கொண்டு, இராமேஸ்வரம் - தலைமன்னார் கடலுக்கு அடியில், மின் கம்பிகள் பதிக்கும் வேலைகளை இந்திய அரசு துரிதப்படுத்தி வருகிறது.


கூடங்குளம் அணு உலையை எதிர்க்கின்ற நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட மக்களுக்கு, குறிப்பாக மீனவ சமுதாயத்துக்கு ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் நன்றிக் கடன்பட்டுள்ளது. தென் தமிழ்நாட்டையும், அங்கு வாழும் மக்களையும் வருங்கால சந்ததிகளையும் பாதுகாக்க கூடங்குளம் அணு உலையை இயக்க விடாமல் அகற்ற வேண்டியது தமிழக மக்களின் தலையாயக் கடமையாகும். அடுத்த கட்டத்தில் கல்பாக்கம் அணு உலையையும் மூட வேண்டியது அவசியமாகும். இலட்சக்கணக்கான கோடிகளை ஸ்பெக்ட்ரம் ஊழலிலும், கிரானைட் ஊழலிலும் கொள்ளை அடித்த ஊழல் திமிங்கலங்கள், கூடங்குளம் போராட்டத்தை எதிர்ப்பதையும், கொச்சைப் படுத்துவதையும் தமிழக மக்கள் நடுநிலையோடு எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன்.


சட்டமன்றத்திற்கு வைர விழாவை முதலமைச்சர் நேரு விளையாட்டரங்கத்தில் நடத்த முற்பட்டுள்ள அக்டோபர் 29-இல் கூடங்குளம் அணு உலையை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்நிறுத்தி, தமிழக சட்டமன்றமும், தலைமைச் செயலகமும் அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையை அணுசக்தி எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினரும், அவர்களுக்குத் தோள் கொடுக்கும் உணர்வுடைய அனைவரும் முற்றுகையிடும் போராட்டத்தை திட்டமிட்டவாறு நடத்தியே தீருவோம். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகக் கண்மணிகளையும், அணு உலை கூடாது என்ற கொள்கையை ஏற்றுள்ள அரசியல் இயக்கத்தினரையும், தமிழகத்தின் எதிர்கால நலனில் அக்கறையுள்ள அனைவரையும், ஜாதி, மதம், கட்சி எல்லைகளைக் கடந்து அமைதி வழியில் நடக்கப்போகும் இந்த அறப்போரில் பங்கேற்க தமிழகத்தின் ஊழியனாக இருகரம் கூப்பி அன்புடன் அழைக்கிறேன்.



‘தாயகம்’ வைகோ
பொதுச் செயலாளர்,
மதிமுக.


தகவல் :- திரு.மின்னல் முகமது அலி,
நெல்லை மாவட்ட துணைச் செயலாளர்,
மதிமுக

கதிர்வீச்சு உண்மையைச் சொன்னால் என்கவுண்டர்!! - மருத்துவர் புகழேந்தி



                              
அனுப்புநர்

மருத்துவர் வி. புகழேந்தி M.B.B.S.,

1/187, முதலியார் தெரு,

சத்ரசு, காஞ்சிபுரம் மாவட்டம் – 603102

பேசி: 8870578769

பெறுநர்

குடியரசின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரும்

மதிப்பிற்குரியவர்களே,

பொருள்: கல்பாக்கம் அணுமின் நிலையத்தைச் சுற்றி அணுக்கதிர் வீச்சினால் ஏற்படும் நோய்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி வரும் என் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் கூறி என்னுடைய பணியைத் தடுப்பது பற்றி..

நான் ஒரு மருத்துவராக (M.B.B.S.,) கல்பாக்கம் அணுமின்நிலையத்தின் அருகில் உள்ள சத்ரசு கிராமத்தில் 1989ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகிறேன். மதுரை மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவப்படிப்பு படித்தபோது தங்கப் பதக்கம் வென்ற மாணவன் நான். கிராமங்களில் உள்ள ஏழை மக்களுக்குப் பணியாற்ற வேண்டும் என்னும் ஒரே காரணத்திற்காக மேற்கொண்டு மேல்படிப்புக்கு நான் விண்ணப்பிக்கவில்லை. கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலையத்தில் என்னுடைய நண்பர்கள் பலர் அப்போது வேலை செய்து வந்ததால் கல்பாக்கத்துக்குப் பக்கத்தில் உள்ள சத்ரசு என்னும் இடத்தைத் தேர்ந்தெடுத்தேன்.

1989 ஆம் ஆண்டு முதல் 2000ஆவது ஆண்டு வரை அப்பகுதியில் உள்ள தலித்துகளுக்கும் மீனவர்களுக்கும் தொண்டுசெய்வதையே முதல் குறிக்கோளாகக் கொண்டு நான் பணியாற்றி வந்தேன். மக்களின் உடல் நலத்தைப் பேணுவதில் அதிக ஆர்வம் காட்டி வந்த நான், மக்களுக்கு அடிக்கடி ஏற்படும் நோய்களுக்கு மிகக் குறைந்த செலவில் சிகிச்சை அளிக்கும் புதிய முறைகள் பலவற்றைக் கண்டறிந்து செய்து வந்தேன். இம்முறைகள் பற்றி பல இதழ்களில் நான் எழுதி வந்திருக்கிறேன். இவற்றைப் பற்றிப் புத்தகங்களும் வெளியிட்டிருக்கிறேன். இவற்றை எல்லாம் அறிந்த உள்ளூர் ஊடகங்களும் தேசிய அளவிலான ஊடகங்களும் பல முறை என்னுடைய நேர்காணல்களை வெளியிட்டிருக்கிறார்கள். முதலுறு வேக உற்பத்தி உலை('Prototype Fast Breeder Reactor')யை இங்கு தொடங்குவதற்கு முன் 2001ஆம் ஆண்டு சூலை 27ஆம் நாள் மக்கள் கலந்தாய்வுக்கூட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. இதனையொட்டி 2001 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் ஆங்கில இதழான ‘அவுட்லுக்’, எங்கள் பகுதியில் மிகைவிரல் நோய் ('Polydactyl') (கை, கால் ஆகியவற்றில் ஐந்து விரலுக்கும் அதிகமாக விரல்கள் கொண்டிருப்பது) இருப்பது பற்றி கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. 

இப்பகுதி மக்களுக்குக் கதிர்வீச்சால் ஏற்படும் விளைவுகள் பற்றிப் படிக்க என்னை இக்கருத்துக்கணிப்பின் முடிவுகள் தூண்டின. அதிலிருந்து கதிர்வீச்சால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி அறிய முழுவீச்சில் இறங்கினேன். தேசிய அளவிலும் உலக அளவிலும் கடைபிடிக்கப்படும் பாதுகாப்பு அளவுகளை நம்முடைய அணுமின் நிலையமும் கடைபிடிக்க வேண்டும் என்னும் நோக்கில் பல்வேறு கேள்விகளை அணுமின் நிலையப் பொறுப்பாளர்களிடம் எழுப்பினேன். கதிர்வீச்சின் மோசமான விளைவுகளைச் சிந்திக்கும் மக்கள் ஓர் அமைப்பை உருவாக்கியிருந்தனர். அவ்வமைப்பின் பெயர் “அணுக் கதிர்வீச்சு பாதுகாப்புக்கான மக்கள் இயக்கம்” என்பதாகும். என்னுடைய செயல்பாட்டைப் பாராட்டி அவ்வமைப்பின் தொழில்நுட்பம், மருத்துவம் ஆகியவற்றுக்கான அறிவுரையாளராக என்னை அமர்த்தினார்கள். தேசிய அளவிலும் பன்னாட்டு அளவிலும் கடைபிடிக்கப்படும் பாதுகாப்பு அளவுகளை, கல்பாக்கம் அணுமின் நிலையம் கடைபிடிக்கத் தவறியதைக் கண்டித்து இவ்வமைப்பு தான் வருகின்ற திசம்பர் 12ஆம் நாள் போராட்டம் நடத்தவிருக்கிறது. நிறைய அறிவியல் சான்றுகளுடன் அவர்கள் இந்தப் போராட்டத்தை நடத்துகிறார்கள். கடந்த ஒரு மாதமாக இப்போராட்டத்திற்கான வேலைகளை இவ்வமைப்பு செய்து வருகிறது. 

இந்தப் பின்னணியில் தான் கடந்த திசம்பர் ஒன்றாம் நாள் மாலை ஆறு மணிக்குப் புதுப்பட்டினம் காவல் நிலையத்தில் இருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அக்காவல் நிலைய ஆய்வாளர் திரு. சிவக்குமார் என்பவர் பேசினார். ‘புதுப்பட்டினம் பஞ்சாயத்துத் தலைவர் எனக்கு எதிராக விண்ணப்பம் கொடுத்திருப்பதாகவும் இதற்காகக் காவல் நிலையம் வர முடியுமா’ என்றும் அவர் என்னிடம் கேட்டார். நான் அப்போது என்னுடைய மருத்துவமனையில் வேலையாக இருந்தேன். அதைச் சொல்லி வேலை முடிந்ததும் காவல் நிலையம் வந்து பார்ப்பதாகக் கூறினேன். பின்னர் இரவு 7.30 மணிக்கு அங்கு சென்றேன். என்னைக் காத்திருக்கச் சொன்னார்கள். அதன் பின், காவல் ஆய்வாளர் பஞ்சாயத்துத் தலைவரைத் தொலைபேசியில் அழைத்தார். அவர் அங்கு 8.10க்கு வந்தார். முப்பது மணித்துளிகள் விசாரணை நடந்தது. நான் இரவு 8.50க்கு அங்கு இருந்து கிளம்பினேன். 

என் மீதும் திரு. நேரு என்பவர் மீதும் புதுப்பட்டினம் கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் திரு. கலியபெருமாள் கூறும் குற்றச்சாட்டுகள் எனக் காவல் நிலைய ஆய்வாளர் சொன்னவை இவைதாம்:

நாங்கள் இருவரும் செய்து வரும் அணு உலை எதிர்ப்பு வேலைகளுக்கு உரிய ஒத்துழைப்பைக் கொடுக்காவிட்டால் கொன்று விடுவோம் என்று இருவரும் அவரை மிரட்டினோமாம். இந்த மிரட்டலை ஒரு மொட்டைக் கடிதத்தின் மூலம் அவருக்கு அனுப்பினோமாம். அக்கடிதம் என்னுடைய வழிகாட்டுதலின் பேரில் திரு.நேரு எழுதினாராம். ஏதோ ஒரு தெரியாத கைப்பேசி எண்ணில் இருந்து அவருடைய கைப்பேசிக்குக் கொலை மிரட்டல் குறுஞ்சேதி அனுப்பப்பட்டிருக்கிறதாம். அதுவும் என்னுடைய வழிகாட்டுதலின் பேரில் யாரோ செய்தது தானாம்! இது மட்டுமன்றி, தெரியாத கைப்பேசி எண்கள் பலவற்றில் இருந்து அவரைத் திட்டிக் குறுஞ்சேதிகள் வருகின்றனவாம். அவை அத்தனையும் என்னுடைய வழிகாட்டுதலின் பேரில் நடப்பதாக அவர் நம்புகிறாராம். 

இக்குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் காவல் நிலைய ஆய்வாளரிடம் நான் கொடுத்த மறுமொழிகள்:

நான் அணுக்கரு எதிர்ப்பு வேலை எதிலும் ஈடுபடவில்லை. அணுக்கதிர் வீச்சின் பாதிப்புகள் பற்றியும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தால் ஏற்படும் கதிர்வீச்சின் பாதிப்புகள் பற்றியும் கடந்த இருபதாண்டுகளாக நான் செய்து வந்த ஆராய்ச்சிகளின் முடிவுகளைத் தாம் எல்லோரிடமும் பகிர்ந்து வருகின்றேன். நான் அணுக்கரு எதிர்ப்பு அமைப்பு எதையும் அமைக்கவில்லை. அப்படிப்பட்ட அமைப்புகளில் தொழில்நுட்பம், மருத்துவம் ஆகியவற்றுக்கான அறிவுரையாளராக மட்டுமே இருந்து வருகின்றேன். கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கம் அண்மையில் என்னுடைய பணிசார்ந்த பட்டறிவைப் பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டியது. இதே போல் நாடு முழுவதும் பல இடங்களில் என்னுடைய பட்டறிவைப் பகிர்ந்து வந்திருக்கிறேன். 

பஞ்சாயத்துத் தலைவர் திரு. கலியபெருமாள் அவர்களை நான் பல இடங்களில் சந்தித்திருக்கிறேன்; உள்ளாட்சித் தேர்தலில் அவர் வென்ற அன்றே அவரைப் பாராட்டியும் இருக்கின்றேன். அணுக்கரு கதிர்வீச்சைப் பற்றி எல்லோரிடமும் சொல்வது போல, அவரிடமும் சொல்லியிருக்கின்றேன். நான் ஓர் அரசியல்வாதியாக இருந்தால் கூட அவரை என்னுடைய ‘வேலைக்காக’ மிரட்டினேன் என்பது பொருந்தலாம். ஒரு மருத்துவராகப் பணியாற்றும் என்னுடைய வேலை மருத்துவம் பார்ப்பது, படிப்பது, பகிர்வது ஆகியவை தாம்! இதில் நான் அவரை என்னுடைய வேலையில் சேர்ப்பதற்காக மிரட்டினேன் என்பது எப்படிப் பொருந்தும்?

இருந்தாலும் நீங்கள் அக்கேள்வியை என்னிடம் கேட்பதால், நான் திரு. கலியபெருமாளை அணுக்கரு எதிர்ப்புப் போராட்டத்தில் சேர்ந்து கொள்ளுமாறு எந்தச் சூழலிலும் மிரட்டவில்லை என உறுதியாகத் தெரிவிக்கிறேன். 

கொலை மிரட்டல் விடுக்கும் மொட்டைக் கடிதங்களுக்கும் எனக்கும் எத்தொடர்பும் இல்லை. திரு.நேரு என்பவரை எனக்குத் தெரியும். ஆனால் நானும் அவரும் இணைந்து பணியாற்றியதே இல்லை. என்னுடைய வழிகாட்டுதலில்தான் திரு.நேரு இக்கடிதத்தை எழுதினார் என்பது வடிகட்டிய பொய்யாகும். 

இப்படி என்னுடைய மறுமொழியை முடித்ததும் காவல் நிலைய ஆய்வாளர், தாம் முதல் தகவல் அறிக்கையைப் பதியவில்லை என என்னிடம் கூறினார். “நீங்கள் அழைக்கும் போதெல்லாம் நான் விசாரணைக்காகக் காவல் நிலையம் வருவேன். அப்படி வரவில்லை என்றால் என் மீதுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையானவை” என்று எழுதித் தருமாறு கேட்டார். அவர் இப்படிச் சொன்னதும், ‘இப்படிக் காவல் நிலையத்திற்கு அலைந்து கொண்டிருந்தால் என்னுடைய தினசரி வேலை என்னாவது? இது என்னுடைய மருத்துவத் தொழிலைப் பாதிக்கும் என்றும் பல மைல் தொலைவில் இருந்து என்னைப் பார்க்க வரும் ஏழைமக்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள்’ என்றும் என்னுடைய நிலையை அவரிடம் எடுத்துச் சொன்னேன். ஆனாலும் எழுத்தில் தரச் சொல்லி அவர் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருந்தார். கடைசியில் ‘நல்ல சமாரியனாக’ ‘அவர் விசாரணைக்குக் கூப்பிடும்போதெல்லாம் காவல் நிலையம் வருவதாக’ எழுதிக் கொடுத்தேன். 

இப்படி எழுதிக் கொடுத்தது தான் மிச்சம்! “டாக்டர்! உங்களுக்கு ஒன்று தெரியுமா? நீங்கள் செய்யும் வேலைக்கு நான் நினைத்தால் உங்களைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கம்பி எண்ண வைக்க முடியும். ‘போலீசு என்கவுன்டர்’ என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கவனமாக இருங்கள்!” என்று மிரட்டும் குரலில் சொன்னார்.

இதைக் கேட்டு நான் அரண்டு போனேன். இருந்தாலும் என்னுடைய மருத்துவப் பணியையும் சமூகப் பணியையும் யாராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது என்னும் உறுதி எனக்கு இருந்தது. 

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உள்ள பாதுகாப்பு அளவீடுகள் பற்றிய உண்மை நிலையை அண்மைக்காலமாக நான் வெளியே சொல்லி வருகிறேன். இக்கருத்துகளால் அணுமின் நிலையப் பொறுப்பாளர்கள் கேள்விக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, ஆய்வாளரின் இந்த மிரட்டலுக்குப் பின்னால் அணுமின் நிலையப் பொறுப்பாளர்கள் இருப்பார்கள் என்னும் வலுவான ஐயம் எனக்கு இருக்கிறது. கல்பாக்கம் அணுமின் நிலையப் பாதுகாப்பு அளவீடுகள் தொடர்பாக நான் ஒரு புத்தகம் வெளியிடப் போகும் செய்தி அவர்களுக்கு உளைச்சலை ஏற்படுத்தியிருக்கும் என்று நினைக்கிறேன். எனவே காவல்துறை மூலம் என்னை மிரட்டுவதன் மூலம் ‘உண்மைகள் மறைந்து போகும்; கல்பாக்கம் அணு மின் நிலையம் சுற்றுச்சூழல் கதிரியக்கச் சார் பாதுகாப்பானது எனக் காட்டிக்கொள்ளலாம்’ என அவர்கள் கருதுவதாக நான் நினைக்கிறேன். அணுமின் நிலையப் பொறுப்பாளர்களிடம் நான் பல முறை விவாதங்களில் பங்கேற்றிருக்கிறேன். பல முறை அவர்களைச் சந்தித்து நான் திரட்டிய தரவுகளை அவர்களிடம் நான் பகிர்ந்திருக்கிறேன். ஆனாலும் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக என்னுடைய கேள்விகளில் ஒன்றுக்குக் கூட அவர்கள் விடையளித்ததே இல்லை. எனவே அவர்கள் தாம் என்னுடைய வேலைகளை முடக்க மறைமுகமாக, இப்படி இறங்கியிருக்கலாம் என நினைக்கிறேன். 

இப்படிப்பட்ட சூழலில், குடியரசின் மீது நம்பிக்கையும் பற்றும் கொண்ட நீங்கள் ஒவ்வொருவரும் எனக்காகவும் என் குடும்பத்தினருக்காகவும் குரல் கொடுக்க வேண்டுகிறேன். 

தங்கள் உண்மையுள்ள,

மருத்துவர் புகழேந்தி,

புதுப்பட்டினம்

காஞ்சிபுரம் மாவட்டம்

2011 திசம்பர் இரண்டாம் நாள்.
 

ஃபுகுஷிமா: நவீன விஞ்ஞானத்தின் தலைக்குனிவு

           


கடந்த ஆண்டு மார்ச் 11ஆம் தேதி, ஜப்பானின் வரலாற்றை மாற்றி எழுதியது. தொஹுகுவில் ஏற்பட்ட சுனாமியும் நிலநடுக்கமும் உலகின் மிகப் பெரும் அணு உலை விபத்தை ஃபுகுஷிமாவில் நிகழ்த்திக் காட்டியது. அணு உலையின் பல கருவிகள் செயலிழந்தன. கணக்கிட முடியாத அளவு கதிர்வீச்சு இந்த வளிமண்டலத்தில் பரவியது.

ஜெனரேட்டர்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறை தண்ணீரில் மூழ்கியது. மின்சாரம் முற
்றிலும் தடைப்பட்டது. குளிர்விக்கும் திரவம் வழிந்தோடியதால் உலையின் மையம் முற்றாக உருகியது. இந்த விபத்தைக் குளிர்விக்கும் திரவம் தீர்ந்த (LOCA-Loss of Coolant Accident) என்கிறார்கள்.

ஜப்பானின் இந்த அணு வளாகத்தில் இருந்தது அமெரிக்க நிறுவனமான ஜெனரல் எலட்க்ரிக் வடிவமைப்பில் உருவான 6 அணு உலைகள். இந்த விபத்து நடந்தபோது உலை 4ல் எந்த எரிபொருளும் இல்லை, 5-6ல் பராமரிப்புக்காக உலை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்தது. அங்கு வந்த சுனாமி வெறும் 15 மீட்டர் உயரம் கொண்டது. அதுவே அந்தப் பகுதியை முற்றாக நாசம் செய்தது. மின்சாரத்தைத் தொகுத்து எடுத்துச் செல்லும் இணைப்புகள் அறுந்து விழுந்தன. இந்த விபத் தின் சம்பவங்களைப் பார்த்தால் அதில் ஒரு தவறு பல தவறுகளை ஏற்படுத்தி அதைக் கட்டுப்படுத்த முடியாத அளவு அபாயகரமான தாக மாற்றியது. அதாவது தவறுகளின் தொகுப்பு அல்லது ஒரு மரத்தின் கிளைகளைப் போல கிளைக்கும் தவறுகள் (Fault Trees)

சில நொடிகளில் கதிரியக்கம் 30 கி.மீ. தொலைவுக்குச் சென்றது. அங்கிருந்த பணியாளர்கள் பலர் இறந்தனர், பலருக்குத் தீக்காயங்கள் ஏற்பட்டன. இருப்பினும் அரசின் ஆணைக்கு ஏற்ப அவர்கள் அந்த அபாய தருணத்திலும் ஃபுகுஷிமா உலைக்குள் சென்று வேலை செய்தனர். கதிரியக்கத்தின் அபாய அளவுகளை வைத்து அங்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டது. உலை தொடர்ந்து பெரும் ஜுவாலைகளுடன் வெடித்தது. கதிரியக்கத்தின் அளவு வரலாறு காணாததாக மேலெழும்பியது. உலையைச் சுற்றியுள்ள 20 கி.மீ. தூரத்தில் இருந்த மக்கள் அவர்களின் உடமைகளை விட்டு வெளியேறினர். அவர்களின் வீட்டில் இருந்த உணவில் எல்லாம் கதிரியக்கம் தாக்கியிருந்தது. டோக்கியோ நகரத்தில் குழாய்களில் வரும் நீரைப் பயன்படுத்த வேண்டாம் என அரசு அறிவித்தது. குழந்தைகளுக்கு உணவு தயாரிக்கக் கூட தண்ணீர் இல்லாமல் பெற்றோர்கள் தவித்தனர். ஃபுகுஷிமாவில் இருந்து 50 கி.மீ. தொலைவில் இருந்த நெல் வயல்களில், கதிரியக்கத்தால் தண்ணீரின் வழியே நெல் மணிக்குள் மாசுபட்டது. ஃபுகுஷிமா பகுதியில் விளையும் உணவுப் பொருட்களை விற்பனை செய்ய தடை விதித்தது அரசு.

செர்நோபில் அளவுக்குக் கதிரியக்கம் வெளிப்பட்டதால் இதனை Level 7 விபத்து என உலக அணுசக்திக் கழகம் அறிவித்தது. ஜப்பான் அரசு இந்த விபத்தை முறையாக கையாளவில்லை என கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்த உலையை இழுத்து மூடுவது என ஜப்பானின் தலைமைச் செயலர் யுகோய் எடாநோ அறிவித்தார். ஜப்பானிய அணு விஞ்ஞானிகள் மற்றும் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் எப்படியாவது உலையை இயக்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறது. இந்த விபத்தின் சேதாரங்களை மதிப்பிடவே பல ஆண்டுகளாகும். இந்த விபத்தால் 30 கி.மீ. சுற்றளவில் மனிதர்கள் இனி வசிக்க இயலாது. அவர்களை முதலில் மாற்று இடங்களில் குடியமர்த்த வேண்டும். கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். அவர்களின் நீண்ட கால சிகிச்சைக்குத் திட்டங்கள் போடப்பட வேண்டும். 50 கி.மீ. சுற்றளவில் வசிக்கும் விவசாயிகளுக்கு மாற்று வாழ்வாதாரத் திட்டங்கள் பற்றி பெரும் திட்டங்கள் போட வேண்டும். ஆனால் இவை எதைப் பற்றியும் கவலைப்படாமல் உடனே உலையை தொடங்க வேண்டும் என்கிற குரல் எதை உணர்த்துகிறது...

இந்த உலகிற்கு 15,000 அணு உலை ஆண்டுகள் (Reactor years of Experience) அனுபவம் உள்ளதாக உலக அணு விஞ்ஞானிகள் மார்தட்டிக் கொள்கிறார்கள். உலக அணு உலைகளில் 5 தான் இப்படி உருகிய நிலைக்குச் சென்றுள்ளன. அதனால் இந்த விகிதங்களில் பார்த்தால் 8 ஆண்டுகளுக்கு ஒரு விபத்துதான் நடக்க சாத்தியம் உள்ளது என்று அவர்கள் இப்பொழுதும் வாதிடுகிறார்கள். நம் எண்ணம், அந்த 8 வருடங்களுக்கு ஓர் உலை வெடிப்பு கூட ஏன் நிகழ வேண்டும் என்பதுதான். இந்த விபத்துகளில் இருந்து நாம் எந்தப் பாடமும் கற்க இயலாது. ஏனெனில் இந்த 5 பெரும் விபத்துகளும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பற்றவை. எல்லாம் வேறு வேறு விதங்களில் விபத்துக் குள்ளாகியுள்ளது. பழைய விபத்துகளைத் தடுத்து விட்டோம், நம்பிக்கை கொள்ளுங்கள் என்கிறீர்கள். சுனாமி என்ற வார்த்தையை நாங்கள் 2004ல்தான் கேள்விப்பட்டோம்.

அணுசக்தித் துறையின் ஆவணங்களில் அதற்கு முன்னர் இந்த வார்த்தையை நீங்கள் எங்கும் காண இயலாது. அப்படி இருக்கும்பொழுது உங்கள் வடி கட்டிய பொய்களாக நிகழும் பேரபாயத்தை எதிர்கொள்ளப் போவது நீங்கள் அல்ல, இந்த மக்கள். ஆகையால் ஜப்பான் மக்கள் கைகளில் உள்ள கீகர் கருவியின் (Geiger Counters) அளவுகளைப் பார்த்துவிட்டு உண்மையை இப்பொழுதாவது பேசுங்கள். மனம் திறந்து பேசுங்கள்.

-முத்துக்கிருஷ்ணன்

கல்பாக்கம், தாராப்பூர்:அபாயத்தின் ஓசைகள்


கல்பாக்கம், தாராப்பூர்:அபாயத்தின் ஓசைகள்

கல்பாக்கத்தில் 1983 மற்றும் 1985ல் இரு 220 MW அணு உலைகள் கனடா நாட்டின் உதவியுடன் அமைக்கப்பட்டன. அது அமைத்தது முதல் சரிவர இயங்கவில்லை. அதனால் சில காலம் நிறுத்திவைத்து பின்னர் பல சோதனைகளுக்குப் பின் அதன் திறன் 170 MW ஆக குறைக்கப்பட்டு அது இயங்கி வருகிறது.

                                 

அணு உலை தொடங்கியது முதல் கடலில் கொட்டப்படும் அதன் கழிவுகளால் அந்தப் பகுதியில் தொடர் பிரச்சினைகள் ஆரம்பமானது. இரண்டு உலைகளின் கழிவுகள் அந்தப் பகுதியின் கடல் வெப்பத்தை 8 டிகிரி அதிகரித்தது. இதனால் மீன் வளம் வெகுவாக பாதிக்கப்பட்டது. நாம் உண்ணக்கூடிய மீன்வகைகளான ராட்டு, சிங்க ராட்டு, நண்டு வகைகள் அழிந்து, நட்சத்திர மீன்களைப் போன்ற வகைகள் பெருகின. மீனவர்கள் கடலுக்குள் இருக்கும்போது அவர்களின் மீது தெறிக்கும் கடல்நீரால் உடல் முழுதும் அரிப்புகளும் வெடிப்புகளும் மிகக் கொடிய அளவில் உண்டாகிறது. இவை அணு உலைக் கழிவுகளின் விளைவுகள் என கண்டறியப்பட்டுள்ளது. அங்கு வசிக்கும் மருத்துவர் புகழேந்தி சுகாதாரம் , உடல்நலம் தொடர்பான பல ஆய்வுகளை மேற்கொண்டு கதிரியக்கத்தின் பாதிப்புகளுக்கு எப்படி உலையைச் சுற்றியுள்ள மக்கள் பாதிப்புகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பது குறித்த தகவல்களை. அடிப்படை தரவுகள்& ஆய்வுகளுடன் நிறுவுகிறது. ஆனால் அவரது வாதங்களை, ஆய்வுகளை கல்பாக்கம் அணு உலை நிர்வாகம் எப்பொழுதுமே அலட்சியப்படுத்தியே வந்துள்ளது. கல்பாக்கம் அணு உலையைச் சுற்றியுள்ள 5 கி.மீ. பகுதியில் மட்டும் 30,000த்திற்கும் மேற்பட்டவர்கள் வசிக்கிறார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

தாராப்பூரில் அணு உலை தொடங்கியபோது அந்தக் கிராமத்தில் மொத்தம் 700 மீன்பிடிப் படகுகள் இருந்தன, இன்று 40 ஆண்டுகள் கழித்து அங்கு வெறும் 20 படகுகள்தான் உள்ளது. மீன்பிடி முற்றாக அழிந்து விட்டதால் அவர்கள் தினக்கூலிகளாக இடம்பெயர்ந்து வேறு தொழில் நோக்கிச் சென்றுவிட்டார்கள். இருப்பினும் அங்கு உள்ள தானே நதிக்கிளையில் நிகழ்ந்துள்ள பாதிப்புகள் பற்றியும், அங்குள்ள மீன்களில் உள்ள கதிரியக்கம் பற்றியும் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர்கள் மிகவும் விபரமான கேள்விகளைக் கேட்கிறார்கள் என்றும் அங்குள்ள மீன்களில் கதிரியக்கம் இருப்பதை இந்த நீதிமன்றம் உறுதி செய்கிறது என்றும் கூறினார். ஆனால் கதிரியக்கத்தின் அளவைப் பொதுநலன் கருதி வெளியிட நீதிமன்றம் மறுத்தது.

அங்குள்ள அணு உலைக் குடியிருப்புகளில் வசிப்பவர்களில் 224 பேர் கடந்த 10 ஆண்டுகளாக கடும் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கி றார்கள். விபத்துகள் இங்கு நடப்பது மிக சகஜமானது. ஆனால் வழக்கம் போல் அது ரகசிய காப்பின்கீழ் உடனே மூடி மறைக்கப் படும்.

2004 சுனாமியின் பொழுதும் கல்பாக்கத்தில் பல ஆபத்தான சம்பவங்கள் நிகழ்ந்தன. அணு உலையின் சுற்றுச்சுவர் அடித்துச் செல்லப்பட்டது. சுனாமி தாக்கியதில் அங்கு இருக்கும் தொலைபேசி மையம் வெள்ளத்தில் மூழ்கி மொத்த தொலைத்தொடர்பும் ஸ்தம்பித்தது. டிசம்பர் 26, 2004 அன்று மின்சாரம் இன்றி, தண்ணீர் இன்றி, தொலைத்தொடர்புகள் இன்றி ஒரு துண்டிக்கப்பட்ட நிலமாக அது காட்சியளித்தது. அங்கிருந்த உயரமான கிரேனில் அமர்ந்து அதனை இயக்குபவர்தான் சுனாமி அலையைக் கண்டு எச்சரிக்கை செய்துள்ளார். உடன் அந்தப் பகுதியில் இருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். இருப்பினும் 65 முதல் 80 பேர் வரை அடித்துச் செல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாயின.

பெரும் விபத்து ஏதும் நடைபெறவில்லை என்று கூறும் நிர்வாகம், உடனே இந்திய ராணுவத்தின் ஏராளமான பெட்டாலியன்களை ஏன் குவித்தது? அந்தக் காலகட்டத்தில் ஊடகங்கள், ஆய்வாளர்கள் என யார் கேள்வி எழுப்பினாலும் நிர்வாகத்திடம் ஒரே பதில்தான் இருந்தது. எல்லாம் சுபமே!!

1999 மார்ச் 26 அன்று 40 டன்கள் எடையுடைய கனநீர் கொட்டி விட்டது, இதனைப் பல தொழிலாளர்கள் ஒரு வார காலம் சுத்திகரிப்பு செய்தனர். அதில் ஈடுபட்ட ஒரு தொழிலாளி சில காலத்தில் உயிர் இழந்தார். 2000 ஜனவரி 24 அன்று மீண்டும் பெரும் கதிரியக்கம் வெளிப்பட்டது, அதனை இந்திய விஞ்ஞானிகளால் கட்டுப்படுத்த இயலவில்லை. ஆகையால் வெளிநாட்டில் இருந்து நிபுணர்கள் கல்பாக்கம் நோக்கி விரைந்தனர்.

மீன்பிடி குறைந்து கடலுக்குச் சென்றால் பல உடல் உபாதைகளை எதிர்கொள்வதால் மெல்ல மீன்பிடித்தலைக் கைவிட்டு வருகிறார்கள் சத்ரஸ் மக்கள். வேலை ஏதும் இல்லாததால் அணு உலையின் கதிரியக்க கழிவுகளால் தினமும் செத்துக் கரை ஒதுங்கும் மீன்களை 3 நாட்கள் வெயிலில் உலர்த்தி அதனைக் கருவாடாக மாற்றி சென்னைக்கு அனுப்புகிறார்கள். இந்தக் கருவாட்டை DAE, AERB, NPCIL அலுவல கங்களில் உள்ள கேன்டீன்களில் அதிகாரிகள், ஆய்வாளர்களுக்குக் கட்டாய உண வாக மாற்ற அப்துல் கலாம் அவர்கள் ஏற்பாடு செய்தால் அது மக்களின் அச்சத்தைப் போக்க அற்புதமான வழிமுறை யாக இருக்கும்.

இவை ஒருபுறம் இருக்க, அணு சக்தித் துறை BHAVNI என்னும் 500 MW மாதிரி வேக ஈனுலையை (prototype fast breeder reactor) கட்டி வருகிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் மட்டும் 60 லட்சம் பேர் வசிக்கிறார்கள். உலகில் வேறு எங்கும் 60 லட்சம் பேர் வசிக்கக் கூடிய இடத்தில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் அணு உலைகளைக் கட்டியதில்லை. - முத்துக்கிருஷ்ணன்

Wednesday, September 26, 2012

அணு உலை ஆதரவாளர்களிடம் சில கேள்விகள்...

அணு உலை ஆதரவாளர்களிடம் சில கேள்விகள்...
1)அணு உலை விபத்தை கார் விபத்துடன் ஒப்பிடலாமா? 

2)25 ஆண்டு கால போராட்டத்தை நாம் ஏன் தெரிந்து கொள்ள வில்லை?

 3)அணுசக்தி துறை ஏன் ரகசியம் காக்கிறது? 

4)அணுக்கழிவுகள் எத்தனை ஆண்டுகள் கதிரியக்கத்தை வெளிப்படுத்தும்? 

5)மின்சாரம் தயாரிக்க மாற்று வழிகளை ஏன் அரசு ஊக்குவிக்கவில்லை? 

6)உலகின் அபாய உலைகள் இந்தியாவில்தான் உள்ளதா? 

7)ஜாதுகோடா மக்கள் சபிக்கப்பட்டவர்
களா? 

8)வளர்ந்த நாடுகள் ஏன் அணு உலைகளை மூடி வருகிறது? 

9)செர்நோபில்-போபால் ஏன் நம் பாட புத்தகங்களில் இல்லை? 

10)கதிரியக்கத்துடனான மீனை உண்ணலாமா? 

11)இந்திய அணு உலைகள் பாதுகாப்பானவைதானா? 

12)நாடெங்கிலும் ஏன் மக்கள் அணு உலையை எதிர்த்து போராடுகிறார்கள், 

13)இந்திய ஊடகங்கள் ஏன் நம்மை குழப்புகின்றன? 

14)மூன்றாம் உலக நாடுகளில் ஏன் அதிக அளவு அணு உலைகள் நிறுவப்படுகிறது...?

'சமூக செயற்பாட்டாளர் அ.முத்துக்கிருஷ ்ணனின்
“கூடங்குளம் விழித்தெழும் உண்மைகள்” என்ற நூலில்...

கூடங்குளம் போராட்டம் : பெண் போராளிகளின் சிறை அனுபவம்

Balaganesan Narayanan
கூடங்குளம் போராட்டம் : பெண் போராளிகளின் சிறை அனுபவம்

அணுஉலையை எதிர்க்கும் மக்களை தாக்கிய போலீசு காட்டட்சியை கண்டித்தும், அதை ஏவிவிட்ட பாசிச ஜெ, ஸ்ரீரங்கத்தில் அன்னதானம் செய்ய வந்த போது கறுப்புக்கொடி காட்டியதாலும் பெண்கள் விடுதலை முன்னணி தோழர்கள் கைது செய்யப்பட்டு மகளிர் தனிச் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

அங்குள்ள பெண் காவலர்களின் அணுகுமுறையோ ஊரறிந்த விசயம். “ஏய் இங்க வா, போ
, நீ நேற்றுவந்த ‘கேசுதான’ போய் அந்த சிறப்பு கைதி தங்கும் பகுதியில் உள்ள புல்லை புடுங்கு” என்று வயதில் பெரியவர், சிறியவர் என்றில்லாமல் அதிகாரத்தை திமிராக வெளிப்படுத்துவார்கள்.

கடந்த நவம்பர் 2011-ல் விலைவாசி உயர்வுக்கு எதிராக நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது ஜெவை போல் வேசமிட்டதால் ஏற்கனவே சிறைசென்றோம். அப்பொழுது அங்கு உணவு சரியாக சமைத்து பரிமாறாமல், ஆடுமாடுகளுக்கு கொடுப்பதை போன்று நடத்தியதைக் கண்டித்தும் இதர அடக்குமுறைகளை எதிர்த்தும் ஜனநாயக முறைப்படி போராடியிருக்கிறோம். அதை நினைவுபடுத்திய உடன் இம்முறை “ஏம்மா மறுபடியும் வந்துட்டீங்களா? வெளியில் சும்மாவே இருக்கமாட்டீங்களா?” என்ற கேட்டுவிட்டு மரியாதையுடன் நடந்து கொண்டனர்.

சிறையில் அடைக்கப்பட்ட நாள் இரவு குழந்தைகள் இளமாறன், சிந்தனை, அஜிதா மூவரும் புதிய இடம, கொசுக்கடி, துர்நாற்றம் தாங்க முடியாமல் அழுது கொண்டும் தோழர்கள் அவர்களை சமதானப்படுத்தியபடியும் இருந்தனர்.

ரோந்து வந்த பெண்காவலர் “ஏய்! என்ன சத்தம் ரொம்ப பெரிசா போட்டுகிட்டு இருக்க தூங்கமாட்டியா? உனக்கு என்ன மற்றவங்க தூங்குறது தெரியலயா? புரியாது” என்று சீறினார்.

நாங்கள் “மொதல்ல மரியாதையா பேசுங்க எங்களுக்கு தூக்கம் வந்தால் தூங்கறோம் குழந்தைகள் தூங்காம பெரியவங்க எப்படி தூங்க முடியும்” என்று கேட்டதற்கு “என்ன எதிர்த்து பேசுற யாருகிட்ட பேசுற தெரியாதா?. நான் என்ன செய்வேன் தெரியுமா?” என்றவர், எங்கள் செல்லுக்கு மட்டும் ‘கரண்ட்’ சப்ளையை நிறுத்தி விட்டு சென்றார்.

உடனே நாங்கள் அனைவரும் விடாமல் செல்லின் கம்பி ஜன்னலை தட்டு வைத்து ஓசையை எழுப்பி “ஏங்க எங்க செல்லுக்கு மின்சாரம் வரல, எல்லா ரூமிலும் லைட்டும் ஃபேனும் ஓடுது எங்களுக்கு ஏன் நிப்பாட்டினீங்க, ஏம்மா இப்போ கரண்ட் இந்த ரூமுக்கு வருமா? வராதா?” என்று சத்தம் போட்டு இரவில் நடத்திய போராட்டம் மூலம் மீண்டும் 3 நிமிடத்திற்கு பின் சுவிட்ச் ஆன் செய்தார். கரண்ட்டை பெறும் வழி போராட்டம தான் என்பதை மற்ற சிறை கைதிகளும் அனுபவமாக பெற்றனர்.

உடல்நிலை சரியில்லாததால் தோழர் கல்பனா சாப்பிடவில்லை, மற்ற சிலரும் சாப்பாடு நன்றாகயில்லாததால் கொஞ்சமாகவே எடுத்துக் கொண்டு மீதியை குப்பையில் கொட்டிவிட்டனர். அதற்கு அங்கிருந்த பெண் காவலர் “ஏய் ஏங்கே போற ? அதை அள்ளு, அள்ளுகிறாயா இல்லையா?” என மிரட்டினார். தோழர் இந்துமதி அதெல்லாம் முடியாது என்றவுடன் “என்ன நீ ரொம்ப எகிர்ற, எடு லத்திய” என்றார். தோழர் உடனே “எங்கே நீ லத்திய எடுத்து ஒரு அடி மேல வை அப்புறம் நீ இங்க இருப்பியான்னு பார்க்கலாம்” என்றார்.

நிறைய பெண் போலீசார் உடனே அங்கே குவிந்து விட்டனர். தோழரின் பேச்சு பெண் வார்டன்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அங்கு வந்த பெண் போலீசு ஒருவர் “என்ன ? ரொம்ப வாய் பேசுறீங்க” என்றார். உடனே நாங்கள் “ஆமாம், மக்கள் உரிமைக்காக போராடி சிறைக்குள் வந்துள்ளோம். எங்களை அவமரியாதையாக நடத்தினால் ஏற்றுகொள்ள முடியாது. எங்களை மட்டுமல்ல பிற சிறையாளர்களையும் மரியாதைக் குறைவாக நடத்துவதை அனுமதிக்க மாட்டோம்.” என்று விடாப்பிடியாக பேசியதும் கொஞ்சம் அடக்கி வாசித்தனர்.

“இவுங்க புதுசா வந்தவங்க உங்களை பற்றி எதுவும் தெரியாது. இனிமே உங்களுக்கு எந்த பிரச்சனை என்றாலும் என்னிடம் சொல்லுங்க” என்றார் சாந்தி என்ற வார்டன். இவர் சென்ற முறை சிறை சென்ற போது நமது போராட்டத்தால் மூக்கறுப்பட்டு நம்மிடம் பொறுமையாக நடந்து கொள்ள துவங்கியுள்ளார்.

அடுத்து பெண்கள் சிறை மருத்துவர் அகம்பாவம் அடக்கியது. தோழர் நிவேதாவுக்கு முதல் நாள் ‘வீசிங்’ பிரச்சனைக்கு சிகிச்சை அளித்தும் சரியாகாத காரணத்தால் அடுத்த நாள் மதியம் 2 மணிக்கு மருத்துவரிடம் ‘மூச்சு திணறுகிறது இரவானால் அதிகாமாகிவிடும் ஆகவே இப்போது வந்தோம்’ என்று விளக்கி கூறியும் ‘ஏன் உனக்கு இப்பதான் வர்ற தெரியுதா? நீ முன்னாடியே வர்றமாட்டியா ? எப்படி எந்த அறிகுறியும் இல்லாமல் தீடீர்னு வந்துச்சு? என்று ஏக வசனத்தில் ஏசினார்.

உடலுக்கு பிரச்சனை எப்போ வருகிறதோ அப்போதான் வந்து டாக்டரை பார்க்க முடியும். அதான் இப்ப வந்தோம் என்றதற்கு மீண்டும் காலையிலேயே நீ வரவேண்டியதுதானே என்றார். நேற்று காலையில் 9 மணிக்கே வந்து உட்கார்ந்திருந்தோம். 11 மணிவரை இருந்து பார்த்துவிட்டு போனோம், மேலும் உள்ளே கடிகாரம் இல்லை நேரம் பார்த்து வந்து உட்கார, இப்ப தீடீர்னு மூச்சு திணறுது, அதனால்தான் இப்ப வந்தோம் என பேசிய பின்பும் அடாவடியாக பேசிய டாக்டரை பார்த்து எம் தோழர்கள் ‘ டாக்டர்க்கு தானே படிச்சிருக்கிங்க, என் வயது என்ன உங்க வயதென்ன கொஞ்சம் கூட மரியாதை இல்லாம பேசுறீங்க நான் இவ்வளவு நேரமா ரொம்ப பொறுமையா பேசுறேன், டாக்டர் நோயாளிகளிடம் பொறுமையா பேசனும்னுகூட உங்களுக்கு சொல்லித் தரவில்லையா? மொதல்ல மரியாதைய கத்துக்கிட்டு நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க வாங்கன்னு சொல்லிட்டு சிகிச்சை எடுக்காமல் சிறைக்கு திரும்பினோம்.

நாங்கள் பேசியதை கேட்டு அந்த மருத்துவர் அதிர்ச்சியில் உறைந்து போனதை காண முடிந்தது. இதுவரை அடிமைகள் சல்யுட் அடித்து கூழைக்கும்பிடு போடுவதை பார்த்தவருக்கு தோழர்கள் அணுகுமுறை அதிர்ச்சியளித்தது.

மருத்துவமனை வாசற்படியை தாண்டுவதற்குள் மருத்துவமனையில் வேலைபார்க்கும் சீட்டு எழுதும் ஆயுள் கைதியான பெண்மணி ‘பவானிய கூப்பிடுங்க’ என்று சத்தமாய் கூப்பிட்டதற்கு, தோழர்கள் ‘மரியாதை கொஞ்சம்கூட தெரியாத இந்த டாக்டர்கிட்ட சிகச்சை எடுப்பது தன்மானம் இடம் கொடுக்கவில்லை நாங்கள் வெளியே போய் சிகச்சை எடுத்துக் கொள்கிறோம்’ என சொல்லிவிட்டு செல்லுக்கு திரும்பிவிட்டோம்.

சென்ற முறை ‘நீங்க என்ன லாடு லபக்குதாஸா உங்களை மரியாதையாக பேச’ என்ற ஜெயமணி என்ற போலிசிடம் ‘ நீங்க மேலதிகாரிகளின் கட்டளைக்கு, மக்களின் வரி பணத்தில் வயிறு வளர்த்து விட்டு மக்களை கேவலமாக பார்க்குற நீங்க , ஜனநாயக பூர்வமா மக்களை பார்க்குற எங்கள பார்த்து மரியாதையா பேச கத்துக்கோங்க’ என்று கூறியதையும், மேலும் உண்ணாவிரதம் இருந்து சிறையில் ஏற்கனவே நாம் நடத்திய போராட்டத்தை நினைவுப்படுத்தி கொண்டு ‘ஏங்க டாக்டர் என்ன சொன்னாங்க கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு சிகிச்சை எடுத்துக்கங்க ‘ என்று செல்லுக்கு எங்கள் பின்னாலேயே ஓடி வந்தார்.

நாங்க தப்பு செய்துவிட்டு ஜெயிலுக்கு வரல, சொத்து குவிப்பு வழக்கு போட்டு வாய்தா மேல வாய்தா வாங்குற ஜெ போல உங்களை அடியாள மாதிரி நாங்க நடத்தல , மரியாதை தெரியாத இந்த டாக்டர் கிட்ட சிகிச்சை எடுக்க எங்களுக்கு விருப்பமில்லை என்றோம்.

போய் இந்த பதிலை சொன்னதற்கு அங்கு என்ன நடந்ததோ தெரியாது மீண்டும், ஜெயமணி என்ற போலிசு பெண் வந்தார். ஏங்க அப்படி என்னங்க சொல்லிட்டாங்க அதபோய் பெரிசு படுத்தறீங்க அந்த டாக்டரம்மா வீட்டுக்கு போறங்களாம், நாளை ஞாயிற்றுகிழமை வரமாட்டாங்க, திங்கள் கிழமை வரை உங்களுக்கு உடம்பு ரொம்ப பிரச்சனை ஆயிடுச்சுன்னா என்ன செய்யறது, அவங்க போய் கூப்பிட்டுகிட்டு வாங்க என்கிறாங்க நீங்க வரமுடியாதுங்கறீங்க நான் உங்க இரண்டு பேருக்கிடையில மாட்டிக்கிட்டு அதுக்கும இதுக்கும் அலையமுடியலீங்க’ என்று அழாத குறையாக கூப்பிட்டார். நாங்க வரமுடியாது, உங்க மேல எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லீங்க என்றனுப்பிவிட்டோம்.

டாக்டரம்மா நிலைமை மோசமாவதைக்கண்டு சிறை பொறுப்பாளரான சாந்தி என்ற மேலதிகாரியிடம் போய் இப்படி பிரச்சனையாகிவிட்டது என்றவுடன் அவர் நமக்கு தெரிந்த வளர்மதி என்ற போலீசை அழைத்து நீங்கள் போய் பேசி இந்துமதியிடம் சொல்லி கன்வின்ஸ் பண்ணி அழைத்து வந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள சொல் என்று அனுப்பிய பிறகு போய் சிகிச்சை எடுத்து வந்தோம்.

மேலும் உணவில் நெல்,கல்,கருப்பரிசி கிடப்பதையும் உணவு சரியாக கொடுங்கள் என்றும், நம்மை போல் எல்லா பெண்களையும் மரியாதையுடன் நடத்துங்கள் என்றும் எடுத்துரைத்தோம்.

கொசு உற்பத்தி அங்கிருந்துதான் மொத்த திருச்சிக்கே சப்ளை ஆகும் அளவிற்கு மிகவும் அதிகமாக இருந்தது. கைதிகளுக்கு வழங்க வேண்டிய உணவு பொருட்களை கொள்ளையடிக்கும் ஊழல் பெருச்சாளிகளை போல ‘அவர்களுக்கு சற்றும் குறைந்தவர்களல்ல நாங்கள்’ என்ற வகையில் நிறைய பெருச்சாளிகள் இரவில் செல்லுக்குள் வந்து நம் வயிற்றை கலக்கின.

நாங்கள் குழந்தைகளை வைத்து கொண்டு அச்சத்தோடு அன்றிரவை தூங்காமல் கழித்தோம். சென்னை அரசு மருத்துவமனை குழந்தையை பெருச்சாளி கடித்தது நினைவு வந்ததும் மிகவும் பயந்து போனோம். அடுத்த நாளிரவு அவர்கள் கீழே விரிக்க கொடுத்திருந்த வெள்ளை ஜமுக்காளத்தை எட்டாக சுருட்டி வைத்து பெருச்சாளி உள்ளே வராமல் 3 நாட்களும் தடுத்து குழந்தைகளை பாதுகாக்க முயற்சி எடுத்து பத்திரமாக வீடு வந்து சேர்ந்தோம்.

மற்ற பெண் கைதிகளின் நிலைமையும் கைக்குழந்தைகளுடனும் எண்ணற்றவர்கள் இந்த கொடுமையை அனுபவித்து வருகின்றனர். எங்களைக் கண்டதும் நீண்ட நாட்களாக சிறையில் உள்ள தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள், ஜாமின் எடுக்க வழியில்லமால் தவிக்கும் கைதிகள் உட்பட அனைவரையும் சந்தித்து பேசினோம். நாம் நலம் விசாரிக்க “எங்கே இருக்கிறது இங்கேதான் குத்தி குதறி விடுகிறார்களே? அண்ணா பிறந்த நாளுக்காவது விடுவாங்கன்னு பார்த்தா 12,14 வருசமாகியும் விடமாட்டேங்கிறாங்களே” என்று வேதனையுடன் பதில் சொல்கின்றனர்.

நாங்கள் போய் மூன்று அல்லது நான்கு நாட்கள் இருந்துவிட்டு வெளியில் வந்துவிடுவதால் உண்மை நிலைமையை கணிக்க முடியவில்லை, ஆனால் நன்நடத்தையை கொண்டு ஆண்களை விடுதலை செய்வது போல பெண்களை விடுவித்தால் நன்றாக இருக்கும். உங்கள் அமைப்பு இதற்கு ஏதாவது நடவடிக்கை எடுத்தால் எங்களுக்கு நிம்மதியாக இருக்கும் என்றனர் அந்தப் பெண்கள்.

அம்மா என்ற சொல்லுக்கு அருகதையற்ற பாசிச ஜெயாவை மட்டுமல்ல, இன்றைய அரசியல் அமைப்பு முறையை ஒழித்துகட்டி உழைக்கும் மக்களுக்கான அரசமைப்பை உருவாக்கும் நாள்தான் உழைக்கும் மக்கள் அனைவரும் விடுதலை நாள் என்பதை அவர்களுக்கு உணர்த்த முயன்றோம். இடையில் பிணை கிடைத்ததால் அவர்களை விட்டு பிரிந்தோம், மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையில்.

கூடங்குளம்






26.09.12 இன்று இடிந்தகரையில் ....வைகோ










"408 நாட்களாக இடிந்தகரையில் கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக அறவழியில் போராட்டம் நடக்கிறது. இது போன்ற போராட்டம் உலகின் எந்த பகுதியிலும் இதுவரை நடந்தது இல்லை. மணப்பாட்டில் கடந்த பத்தாம் தேதி காவல்துறை அதிகாரியால் அந்தோணி ஜான் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்தோணி ஜானை சுட்டுக்கொண்ட காவல்துறை அதிகாரி மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா ? அந்த காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்காத முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு என்னுடைய கடுமையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.


நாசகார அணுஉலைக்கு எதிராக போராடிய இந்த மக்களை கண்காணிக்க கடலோர சிறிய ரக விமானங்கள் வர வேண்டிய அவசியம் என்ன வந்தது ? தாழ்வாக பரந்த விமானத்தின் இறக்கையில் அடிபட்டுத்தான் இடிந்தகரை சகாயம் இறந்து போனார் என்று குற்றம் சாட்டுகிறேன். இடிந்தகரை பாகிஸ்தானில் இருக்கிறதா ? அல்லது சைனாவில் இருக்கிறதா ? மத்திய மாநில அரசுகளுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கிறேன். இந்த வைகோ மிக ஆபத்தானவன். என்னை அரசியலில் அடக்கி விடலாம் என்று எண்ணுகிறார்கள். மத யானைகளை போன்றவர்களை அடக்கி பழக்கப்பட்டவன் இந்த வைகோ. முதல்வரை குற்றம் சாட்டுகிறேன், நீங்கள் சொல்லித்தான் மணப்பாட்டில் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அந்தோணி ஜானை நீங்கள்தான் கொன்றீர்கள்.


கூடங்குளத்தில் நிலைமை சீரடைந்தவுடன் இந்த பகுதிக்கு 500 கோடி ரூபாய் செலவிடப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். ஆனால் அணுசக்தி தலைவர் ஆர்.கே . சின்கா கூடங்குளம் அணுஉலை அடுத்த ஆண்டுதான் செயல்படும் என்று அறிவிக்கிறார். அப்படிஎன்றால் முதல்வர் அவர்களே உங்களுக்கு எதுவுமே தெரியாதா ? கலைஞர் தூண்டில் விடுகிறார் உதயகுமாரனுக்கு ! கூடங்குளம் அணுஉலையை செயல்படுத்த வேண்டும் என்றவர், இப்போது இடிந்தகரை மக்களின் போராட்டம் வெகுசன மக்களின் போராட்டமாக உருப்பெற்று வருவதை அறிந்து, போராட்டக் குழுவிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்கிறார் கலைஞர். முதல்வர் ஜெயலலிதாவாக இருக்கட்டும், கலைஞராக இருக்கட்டும். முதலில் அணுஉலை குறித்து தங்கள் கட்சியின் நிலைப்பாட்டை மக்களுக்கு அறிவிக்க வேண்டும். சும்மா பூச்சாண்டி காட்டும் வேலையெல்லாம் வேண்டாம்.


இந்த இடிந்தகரை லூர்து அன்னையின் ஆலய பந்தலுக்கு நிறைய கட்சியினர் வருகின்றனர். இங்கே இந்த பந்தலில் ஒரு கருத்தை தெரிவிக்கின்றனர். சென்னையில் ஒரு கருத்தை தெரிவிக்கின்றனர். டெல்லியில் ஒரு கருத்தை தெரிவிக்கின்றனர். உதயகுமாரனுக்கு சொல்வேன். எங்கள் கட்சியின் கொள்கை அணுஉலையை எதிர்ப்பது. அதுபோலவே இந்த பந்தலுக்கு வரும் கட்சியின் தலைவர்கள் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுப்பது, போட்டோவுக்கு போஸ் கொடுப்பது போன்ற செயல்களை இனி அனுமதிக்க முடியாது. நாங்கள் ஒன்றும் பதவிகளுக்கு அலைய வில்லை. இப்போது கூட இந்த மக்களுக்கு அறிவிக்கிறேன். எனக்கு ஓட்டுப்போடுங்கள் என்று கேட்கமாட்டேன். யாருக்கு வேண்டுமானாலும்ஒட்டுப்போட்டுக்கொள்ளுங்கள். நானும், என் தோழர்களும் இனி கூட்டணி என்று எவர் வாசலிலும் போய் நிற்க மாட்டோம்.


நான் முதன்முறையாக எம்பியாக நியமிக்கப்பட்ட போது, என் மூத்த அக்காவிடம் அறிவுரை வேண்டி நின்றேன். அவர் சொன்னார், நமக்காக யாராவது குரல் கொடுக்க மாட்டார்களா , நிராயுதபாணியாக நிற்பவர்கள், வாழ்க்கையின் அடித்தட்டு மக்களின் வாழ்க்கைக்காக உன் குரல் ஓங்கி ஒலிக்கட்டும் என்றார். அதையே இங்கே சொல்வேன், கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக இந்த மக்களோடு மக்களாக பாடுபடுவேன். நான் இந்த இடிந்தகரை மக்களை சந்திக்கும் போதெல்லாம் புத்துணர்ச்சி பெறுகிறேன். வாளை தீட்டுவதை போல , எனக்கு நானே பட்டை தீட்டிக் கொள்கிறேன்."



26.09.12 இன்று இடிந்தகரையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் பேச்சு.
 

செயற்கை மின்வெட்டு


வணக்கம் நண்பர்களே, கூடங்குளம் அணுஉலை பற்றிய சில மறந்த உண்மைகளை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவது அவசியமானது என கருதுகிறேன்

அணுஉலையில் உற்பத்தியாகும் மின்சாரமானது, திரு.உதயகுமார் மற்றும் அவருடன் சேர்ந்து போராடும் போராளிகளாலும் காலத
ாமதமாகிறது என்று இந்திய மத்திய அரசால் உலகிற்கு காட்டபடுகிறது, 
 Photo: வணக்கம் நண்பர்களே, கூடங்குளம் அணுஉலை பற்றிய சில மறந்த உண்மைகளை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவது அவசியமானது என கருதுகிறேன்

அணுஉலையில் உற்பத்தியாகும் மின்சாரமானது, திரு.உதயகுமார் மற்றும் அவருடன் சேர்ந்து போராடும் போராளிகளாலும் காலதாமதமாகிறது என்று இந்திய மத்திய அரசால் உலகிற்கு காட்டபடுகிறது, ஆனால் ...
உண்மை என்னவெனில், அணுஉலை இயங்க பயன்படும் Compressor இயங்குவதில் பழுதாகி சிக்கல் ஏற்பட்டுள்ளது,

அந்த இயந்திரத்தின் மதிப்பு 1.75 கோடி ரூபாய் ஆகும், ஆகையால் அவற்றை புதிதாக மாற்ற இரசியாவிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது, அது பிப்பரவரி மாதத்தில்தான் இங்கே வந்தடைய முடியும், இந்த சிக்கலை சரி செய்யாமல் அவர்கள் என்னதான் எரிபொருளை நிரப்பினாலும் பயனளிக்காது, இக்காரணத்தினால் அணுஉலை இயங்காது, பிப்பிரவரி மாதத்திலிருந்து மேலும் இரண்டு மாதங்கள் ஒன்றிணைக்க (Assemble) காலம் எடுத்து கொள்ளும், காங்கிரஸ் தலைமையிலான அரசு திரு.உதய குமார் மீது வேண்டுமென்றே தவறான செய்திகளை பரப்பி வருகின்றது.

மேலும் கூடுதலாக, நான் கன்னியாகுமரி மாவட்டத்தில் வசித்து வருபவன், இங்கே நாங்கள் 16 முதல் 17 மணி நேரங்கள் வரை மின்சார தடையை பெற்று வருகிறோம், மின்சார வாரியமோ "மின்சார தட்டுப்பாட்டால் நாங்கள் ஒன்றும் செய்ய இயலாது" என பதிலளிக்கின்றனர், ஆனால் நாங்கள் ஆராய்ந்தவரை மின்சார தட்டுபாடு இல்லை, காற்றலை சிறப்பாக செயல்பட்டு வருகிறது, குறைந்தபட்சம் இவர்களால் ஒரு நாளுக்கு 18 மணி நேரம் தடையின்றி சிறப்பாக மின்சாரம் வழங்க முடியும். செயற்கை மின்வெட்டு என்பது வெளிப்படையாக தெரிகிறது

அருகில் உள்ள கேரளாவில் மின்வெட்டு என்பதற்கு அர்த்தமே அவர்களுக்கு தெரியாது, ஆனால் அனைத்து வளமும் அமைந்த தமிழ் நாட்டிற்கு மட்டும் எப்படி மின்வெட்டு வரும்?,

கூடங்குள அணுஉலையை திறப்பதற்க்காகவே, அரசாங்கம் செயற்கை தட்டுபாட்டை காண்பிக்கிறது, மின்சார பற்றாகுறை என அழுத்தமாக நிரூபிக்க முயல்கிறது

நண்பர்களே, காங்கிரஸ் மற்றும் தமிழக அரசாங்கத்திடம் வலையில் சிக்காமல் கவனமாக இருக்கவும்

Thanks:Agazhvaan GGanesh
Gaudwin Ap
ஆனால் ...
உண்மை என்னவெனில், அணுஉலை இயங்க பயன்படும் Compressor இயங்குவதில் பழுதாகி சிக்கல் ஏற்பட்டுள்ளது,

அந்த இயந்திரத்தின் மதிப்பு 1.75 கோடி ரூபாய் ஆகும், ஆகையால் அவற்றை புதிதாக மாற்ற இரசியாவிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது, அது பிப்பரவரி மாதத்தில்தான் இங்கே வந்தடைய முடியும், இந்த சிக்கலை சரி செய்யாமல் அவர்கள் என்னதான் எரிபொருளை நிரப்பினாலும் பயனளிக்காது, இக்காரணத்தினால் அணுஉலை இயங்காது, பிப்பிரவரி மாதத்திலிருந்து மேலும் இரண்டு மாதங்கள் ஒன்றிணைக்க (Assemble) காலம் எடுத்து கொள்ளும், காங்கிரஸ் தலைமையிலான அரசு திரு.உதய குமார் மீது வேண்டுமென்றே தவறான செய்திகளை பரப்பி வருகின்றது.

மேலும் கூடுதலாக, நான் கன்னியாகுமரி மாவட்டத்தில் வசித்து வருபவன், இங்கே நாங்கள் 16 முதல் 17 மணி நேரங்கள் வரை மின்சார தடையை பெற்று வருகிறோம், மின்சார வாரியமோ "மின்சார தட்டுப்பாட்டால் நாங்கள் ஒன்றும் செய்ய இயலாது" என பதிலளிக்கின்றனர், ஆனால் நாங்கள் ஆராய்ந்தவரை மின்சார தட்டுபாடு இல்லை, காற்றலை சிறப்பாக செயல்பட்டு வருகிறது, குறைந்தபட்சம் இவர்களால் ஒரு நாளுக்கு 18 மணி நேரம் தடையின்றி சிறப்பாக மின்சாரம் வழங்க முடியும். செயற்கை மின்வெட்டு என்பது வெளிப்படையாக தெரிகிறது

அருகில் உள்ள கேரளாவில் மின்வெட்டு என்பதற்கு அர்த்தமே அவர்களுக்கு தெரியாது, ஆனால் அனைத்து வளமும் அமைந்த தமிழ் நாட்டிற்கு மட்டும் எப்படி மின்வெட்டு வரும்?,

கூடங்குள அணுஉலையை திறப்பதற்க்காகவே, அரசாங்கம் செயற்கை தட்டுபாட்டை காண்பிக்கிறது, மின்சார பற்றாகுறை என அழுத்தமாக நிரூபிக்க முயல்கிறது

நண்பர்களே, காங்கிரஸ் மற்றும் தமிழக அரசாங்கத்திடம் வலையில் சிக்காமல் கவனமாக இருக்கவும்

Thanks:Agazhvaan GGanesh
Gaudwin Ap

Sunday, September 16, 2012

தமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas)

                                 

மருத்துவர் செந்தமிழ்ச்செல்வன்

தமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas) :

இன்று உலகமே Mayan என்கிற வார்த்தையை அறிந்திருக்கிறது. Mayan Calendar-யை வைத்து உலகம் முழுவதும் இன்று பரபரப்பு கிளப்பப்படுகிறது. 2012-ல் உலகம் அழிந்திவிடலாம் என்கிற புனைவுகளும் தொலைக்காட்சி மர்மத் தொடர்களால் முன்னெடுக்கப்படுகின்றன. Mayan-கள் யார் என்றுத் தெரியாதவர்கள் கூட Mayan என்கிறப் பெயரை உச்சரிக்கிறார்கள். தமிழ் ந
ாட்டின் முன்னோடித் தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்தும் Mayan Calendar பற்றிய நிகழ்ச்சிகளை வெளிநாட்டு தொலைக்காட்சி நிறுவனங்களிடமிருந்து பிச்சையெடுத்து, தமிழ் படுத்தி கட்டைக் குரல்களில் உலக அழிவைப் பற்றி பேசுகின்றன. வரலாற்று அறிவு கொஞ்சம் கூட இல்லாத நம்முடைய தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் Mayan தொடர்பான வரலாற்று நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவது அபத்தம்.

Omlec, Aztec, Mayan, Inca இவைகள் வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்களில் வாழ்ந்த மக்களுடைய நாகரீகங்களின் பெயர்கள். இவர்களை வெள்ளையர்கள் செவ்விந்தியர்கள் என்று பொதுபட அழைத்தார்கள். ஆங்கிலேயர்கள் இவர்களை செவ்விந்தியர்கள் என்று அழைத்ததற்கு வரலாற்று பின்னனி உண்டு. கி.பி. 14, 15 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு செல்ல கடல் வழியைத் தேடிக்கொண்டிருந்தார்கள். அந்த காலகட்டத்தில் Atlantic Ocean-யை குறுக்காக கடந்து இந்தியாவிற்கு போய்விடலாம் என்று Columbus நம்பினார். அவருடைய நம்பிக்கையின்படியே அவர் Atlantic Ocean-யை கடந்தார். ஆனால் அவர் போய் சேர்ந்த கண்டம் அமெரிக்கா. ஆனால் Columbus தாம் வந்து இறங்கிய நாடு இந்தியா என்றே நம்பினார். அமெரிக்க கண்டத்தை சேர்ந்த மக்கள், இனக்குழு வழக்கப்படி தங்கள் உடம்பில் சிகப்பு சாயம் பூசிக்கொள்வது வழக்கம். இதை பார்த்த ஐரோப்பியர்கள் உடம்பில் சிகப்பு சாயம் பூசிய அந்த மக்களையும் தாங்கள் கண்டுபிடித்தது இந்தியா என்கிற நம்பிக்கையையும் ஒன்றாக்கி அந்த மக்களை செவ்ந்தியர்கள் (Red Indians) என்று அழைக்கத் தொடங்கினார்கள். Columbus-க்கு முன்பே Americo Vesbugi என்பவர் அமெரிக்க கண்டத்தை கண்டுபிடித்துவிட்டார் என்பது வேறு கதை. இவரை பெருமைபடுத்தும் விதமாகவே அந்த கண்டம் America என்று அழைக்கப்படுகிறது.

இந்த செவ்விந்தியர்கள் எப்படி இரு அமெரிக்க கண்டங்களிலும் (Green Land, Ice Land, Canada உட்பட) குடியெரினார்கள் என்பது இன்று வரை அவிழ்க்கப்படாத முடிச்சாக இருக்கிறது. ஆனால் ஒன்றை மட்டும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உருதிபடுத்தியிருக்கிறார்கள். அந்த ஒரு விசயத்தைப் பற்றிதான் நம்முடைய முன்னோடித் தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு தெரியாமல் போயிற்று. வரலாற்று அறிவுக்கும் இவர்களுக்கும்தான் ஏழாம் பொறுத்தமாயிற்றே! வெளிநாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்திய அந்த விசயம் செவ்விந்தியர்களுக்கும், தமிழர்களுக்கும் தொடர்பு உண்டு என்பதுதான். இதை படிப்பவர்களுக்கு, இது எதோ இட்டுகட்டிய சமாச்சாரம், வலிந்து தமிழர்களுக்கு பெருமை தேடுகிற விசயம், உலகத்தில் உள்ளவர்களையெல்லாம் தமிழர்களோடு தொடர்புபடுத்துகிற மோசடி என்று நினைக்கத் தோன்றலாம் ஆனால் உண்மை இதுதான்.

நல்லவேளை இந்த உண்மையை கண்டுபிடித்தவர்கள் வெளிநாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் அதனால் நம்மவர்கள் இதை நம்பத் துணிவார்கள். நம்மவர்களுக்கு Made in Foreign என்றாலே ஒரு கிலுகிலுப்புதானே! தமிழ் வரலாற்று ஆராய்ச்சியாளர் ஒருவர் இந்த உண்மையை கண்டிருந்தால் அவரை பைத்தியக்காரன் என்று முத்திரை குத்தி மூலையில் தள்ளி இருப்போம். தன் இனத்து அறிஞனை மதிக்காத எந்த இனமும் உருப்பட்டதாக வரலாறு கிடையாது. இதற்கு வாழும் உதாரணம் தமிழனே.

The Conquest of Mexico and Peru என்கிற வரலாற்று நூலை எழுதிய William H. Prescott என்பவரே முதன் முதலில் செவ்விந்தியர் தமிழர் தொடர்பை பற்றி பேசுகிறார். ஐரோப்பியர்கள் எப்படி செவ்விந்தியர்களை, மெக்சிகோ மற்றும் பெரூ நாடுகள் முழுவதிலிருந்தும் ஒழித்துகட்டினார்கள் என்பதை விலாவாரியாக இந்த நூல் விவரிக்கிறது. இந்த நூலின் தொடக்கத்தில் செவ்விந்தியர்களின் பூர்வீகம் குறித்து பேசும் Prescott தமிழர் தொடர்பை அடித்து கூறுகிறார். வரலாற்று ஆராய்ச்சியாளர் இல்லையென்றாலும் சே குவேராவும் தன்னுடைய தென் அமெரிக்க பயண குறிப்புகளில் இதை பற்றி எழுதியிருக்கிறார்.

‘இன்காகள் (Incas) தென் அமெரிக்க சோழர்கள்’ என்கிற ஆராய்ச்சி நூல் ஒன்று தமிழிலும் இருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்னால் நூலகத்தில், யாரும் திரும்பி பார்க்க கூட யோசிக்கும் புத்தக அடுக்கில், தூசி தும்பட்டைகளுக்கு மத்தியிலிருந்து எடுத்து இந்த புத்தகத்தை நான் படித்திருக்கிறேன். இந்த புத்தகத்தை எழுதிய ஆராய்ச்சியாளரின் பெயரை நான் மறந்துவிட்டதின் காரணமாக என்னால் அது குறித்த தகவலை தர இயலவில்லை. இது வருத்தமளிக்க கூடி விசயம். இந்த கட்டுரை எழுதும் பொறுட்டு இந்த அறுமையான புத்தகத்தை நூலக்கத்தில் எவ்வளவோ முயன்று தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த புத்தகத்திற்கு மறுபதிப்பு இல்லை என்பதும் வேதனையான விசயம். தமிழ் அறிஞர்களின் ஆராய்ச்சி அறிவு இப்படிதான் கண்டுகொள்ள ஆளில்லாமல் காணாமல் போகிறது.

செவ்விந்தியர்களின் கலாச்சார கூறுகள் மிகத் தெளிவாக தமிழர்களின் கலாச்சார கூறுகளை உள்ளடக்கி இருக்கின்றன. தமிழர்களின் வானியியல், செவ்விந்தியர்களின் வானியியலோடு ஒத்துப்போகின்றன. செவ்விந்தியர்களின் வானியியல் நுட்பத்தை ஆராய்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், பல்லாயிரம் ஆண்டுகள் அனுபவத்தின் மூலமாகே இத்தகைய நுட்பங்களை பெற முடியும் என்றும் செவ்விந்தியர்களுக்கு இது ஒரே இரவில் கைவர சாத்தியம் இல்லையென்றும் கணிக்கிறார்கள். காரணம் செவ்விந்தியர்கள் ஒரிடத்தில் நிலைத்து வாழ்பவர்கள் கிடையாது அவர்களுடையது நாடோடி கலாச்சாரம். நாடோடி இனம் வானியியலில் தேர்ச்சி பெறுவது சாத்தியம் அற்றது. தமிழர்களுடனான தொடர்பே இவர்கள் வானியியலில் தேர்ச்சி பெறுவதற்கு உதவியிருக்கும் என்று கருதுகிறார்கள். மெசப்பத்தோமியா, எகிப்பது நாகரீகங்களின் தொடர்புகள் செவ்விந்தியர்களிடம் கிடையாது.

செவ்விந்தியர்கள் ஏறக்குறைய 3000 ஆண்டுகளாக அமெரிக்க கண்டங்களில் வாழ்ந்தாலும் அவர்களுடைய வாழ்க்கை, நிலையான விவசாய முறை சார்ந்த நிலவுடமை கலச்சாரம் கொண்டது கிடையாது. காடு சார்ந்த பொருட்களும், கால் நடைகளுமே அவர்களுடைய சொத்துகள். தென் அமெரிக்காவில் காடுகளிலும், வட அமெரிக்காவில் இடம் விட்டு இடம் நகரும் வகையிலுமே அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை அமைத்துகொண்டார்கள். அமெரிக்கா போன்ற இயற்கை வளம் நிறைந்த நாட்டில், செவ்விந்தியர்கள் நிலையான விவசாய சமூகத்தை ஏற்படுத்தாதது ஆச்சரியமான விசயம். Mel Gibson-னின் Apocalypto படம் தென் அமெரிக்க செவ்விந்தியர்களின் சமுதாய அமைப்பை மிகத் துள்ளியமாக காட்சி படுத்தியிருக்கும். Hollywood-ன் இனவெறிப் பிடித்த Cowboy படங்களில் வெள்ளையர்களுக்கும் செவ்விந்தியர்களுக்கும் இடையிலான சண்டை காட்சிகளில் வட அமெரிக்க செவ்விந்தியர்களின் சமுதாய அமைப்பை தெரிந்து கொள்ளலாம்.

ஐரோப்பியர்களுக்கு அமெரிக்கா என்று ஒரு கண்டம் இருப்பதே கி.பி. 12, 13 நூற்றாண்டுகளுக்கு பிறகுதான் தெரியவந்தது. ஆனால் 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களுக்கு அமெரிக்கா கண்டத்தோடு தொடர்பு இருந்திருக்கிறது. இது கற்பனை கதைப் போல இருந்தாலும் இதற்கு வலுவான சான்று உண்டு. தென் பசிபிக் மகாகடலில் (Pacific Ocean) ஆஸ்திரேலிய கடல் பகுதியில் கடல் அகழ்வாராய்ச்சி(Ocean Archeology) மேற்கொண்ட சமயத்தில் மிகப் பெரிய சரக்குக் கப்பல் ஒன்றை கண்டுபிடித்தார்கள். முழுவதும் மரத்தால் கட்டப்பட்டிருந்த இந்த கப்பல் வணிகப் பொருட்களுடன் முழ்கியிருக்கிறது. Carbon-Dating முறையின்படி இந்த கப்பலின் வயது இன்றிலிருந்து 2500 வருடங்களுக்கும் மேல் என்று தெரிந்திருக்கிறது. தரவுகளை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள், தமிழர்கள் வணிகத்திற்கு உபயோகப்படுத்திய கப்பல்களில் ஓன்று ஆஸ்திரேலிய கண்டத்தைத் தாண்டி அமெரிக்கா செல்லும் வழியில் பசிபிக் கடலில் முழுகியிருக்கிறது என்ற முடிவிற்கு வந்தார்கள்.

ஆராய்ச்சியார்கள் கண்ணை மூடிக்கொண்டு இந்த கப்பல் தமிழர்களுடையது என்கிற கணிப்பிற்கு வந்துவிடவில்லை. முதலில் இந்த கப்பல் எந்த மரத்தால் கட்டப்பட்டது என்று ஆராய்ந்தபோது தேக்கு மரத்தால் ஆனது என்று தெரிந்திருக்கிறது. தேக்கு தென்னிந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே கிடைக்க கூடியது. அதுமட்டும் இல்லாமல் 3000 ஆண்டுகளுக்கு முன்னால் கடல்களில் மிகப் பெரிய கப்பல்களை வைத்து வாணிபம் செய்த நாகரீகம் இரண்டே இரண்டுதான். ஒன்று தமிழர்களுடைய நாகரீகம் மற்றது எகிப்திய நாகரீகம். மூழ்கிய அந்த கப்பலின் கட்டுமான அமைப்பு எகிப்தியர்களின் சரக்கு கப்பல்களோடு பொறுந்திபோகவில்லை. மேலும் எகிப்தியர்கள் கறையோரமாகவே பயணித்து செல்லக் கூடியவர்கள். அவர்களுக்கு நடுகடலில் கப்பல் செலுத்தத் தெரியாது. அதன் காரணமாக அவர்களுடைய கப்பல்களின் கட்டுமானமும் கரையோரமாக பயணிக்க ஏற்ற வகையில்தான் இருக்கும்.

கண்டுபிடிக்கப்பட்ட கப்பலோ மிகப் பெரியதாக நிறைய சரக்குகளை கையாளக் கூடியதாக இருந்ததோடு நடுகடலில் பயணம் செய்வதற்கு ஏற்றபடியும் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கப்பலில் இருந்த சரக்குகளும் தென்னிந்தியாவில் மட்டுமே கிடைக்ககூடியவைகள். தமிழ் இலக்கியங்கள் மட்டுமே கடலில் பயணிக்கும் களங்களுக்கு உபயோகத்தின் அடிபடையில் அமைந்த பெயர்களைப் பற்றி கூறுகிறது. இவைகள் மூலம் தமிழர்களின் கடலோடும் அனுபவத்தை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் இது தமிழர்களுடைய வணிக கப்பல்தான் என்று உறுதி செய்திருக்கிறார்கள். ஆக வெள்ளையர்கள் நாடோடிகளாக சுற்றிதிரிந்த காலத்திலேயே தமிழன் ஆஸ்திரேலிய கண்டத்தையும், அமெரிக்க கண்டத்தையும் கண்டு அறிந்துவைத்திருந்தான். இந்த கண்டங்களோடு வணிகத் தொடர்புகள் அவனுக்கு இருந்திருக்கிறது. நம்முடைய சாபக்கேடு இவற்றை பற்றிய முறையான வரலாற்று ஆவணங்கள் இல்லாதது. 3000 ஆண்டுகளுக்கு முன்பே நடுகடலில் பயணிக்கத் தெரிந்த தமிழன், தன்னுடைய சிறப்புகள் பற்றி பதிய தவறியது கேடுகாலமே.

நல்லவேலை ஆரிய வேதங்கள் கடல் பயணத்தை தடை செய்திருக்கின்றன (கடல் என்றால் ஆரியர்களுக்கு பயத்தில் பேதியாகிவிடும்) இல்லை என்றால் மூழ்கிய இந்த தமிழர்களுடைய கப்பலுக்கு தலைவன்(Captain) ஒரு பிராமணன் என்று இல்லாத வரலாற்றை இருப்பதுபோல் எழுதியிருப்பார்கள். தன்னுடைய சிறப்புகள் பற்றிய விழிப்புணர்வே அற்ற தமிழனும் அதை அப்படியே நம்பிவிடுவான்.

உலக நாகரீகங்களுடனான நம்முடைய தொடர்புகளைப் பற்றி பேச இன்று நாதியில்லை. ஆங்கொன்றும் இங்கொன்றுமாக நம்முடைய சிறப்புகள் குறித்து வரலாற்று ஆதாரங்கள் கிடைத்தாலும் வெகு மக்களிடம் அதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழர்கள் தவறிவிடுகிறார்கள். தவறிவிடுகிறார்கள் என்பதை விட அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஆயிரம் ஆண்டுகளாக தொடரும் இந்த அக்கறையின்மை, நாடு இழப்புகளிலும், இனப் படுகொலைகளிலும் தமிழனை கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.

கடலை நன்கு புரிந்து கொண்டவர்கள் நம் முன்னோர்களே...

  




தாமிரபரணி முன்பு தூத்துக்குடி அருகில் கடலில் கலந்தது; இப்போது, காயல்பட்டினம் அருகே சென்று கலக்கின்றது. காவிரி ஆறு, முன்பு சென்னைக்கு அருகில் பழவேற்காடு வரையிலும் வந்ததாகச் சொல்லுவார்கள். இப்போது, பூம்புகார் அருகே போய் விட்டது. வைகை ஆற்றில், கடலில் இருந்து உள்வாங்கி வந்த தண்ணீர் மானாமதுரை வரையிலும் அழிவுகளை ஏற்படுத்தி இருக்கின்றது. மக்கள் அச்சம் அடைந்தனர். எனவே, இராமநாதபுரம் மன்னர், அந்த ஆறு கடலில்
 கலப்பதைத் தடுத்து விட்டார்.



கடலை நன்கு புரிந்து கொண்டவர்கள் நம் முன்னோர்களே.



ஆற்றுக் கழிமுகங்களை முறையாகப் பயன்படுத்துகின்ற முறையான தொழில்நுட்பம் தமிழர்களிடம் மட்டுமே இருந்திருக்கின்றது. கடல் தண்ணீர் பொங்கிப் பெருகும்போது, அது ஆறுகளின் வழியாக நிலத்துக்கு உள்ளே வரும். அப்படி அது எப்போது பொங்கும் என்பதைக் கணித்து, அந்தவேளையில் கப்பல்களை உள்நாட்டுப் பகுதிகளுக்குக்கொண்டு வந்து, பொருள்களை இறக்கி விட்டு, மீண்டும் கடலுக்குத் திரும்பிச்சென்றார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். கடலில் மேல் அலைகள், அதாவது ஆண் அலைகள் வரும்போது, பாய்மரத்தை மடிக்காமலேயே துடுப்பு வலிக்காமலேயே உள்ளே வந்து, பொருள்களை இறக்கி விட்டு, அடுத்த அலையில் வெளியே சென்று விடுவார்கள்.



சென்னை பெசன்ட் நகர் இராஜா அண்ணாமலை புரத்தில், கடற்கரையிலேயே இந்த அமைப்பு இருக்கின்றது. அங்கே உள்ளே புகும் தண்ணீர், பட்டினப்பாக்கம் வழியாக, வெளியேறிப் போய் விடும். அதைக்கூடப்புரிந்து கொள்ளாமல், அந்த இடத்தையும் மணல் போட்டு நிரப்பி, இப்போது, அங்கேயும் கட்டடங்களைக் கட்டிக்கொண்டு இருக்கின்றார்கள். இதுபோல, தமிழகத்தில் 17 இடங்கள் ஆய்வில் கண்டு அறியப்பட்டு உள்ளன. இன்றைக்கும் சென்னையைக் காப்பாற்றிக் கொண்டு இருப்பது, அடையாறு, கூவம், கொற்றலையாறுகள் தாம். அந்த ஆறுகளின் வழியாக உள்ளே வருகின்ற தண்ணீர், பாலாறு வரையிலும் போய்த் திரும்பும். அதனால்தான், அந்த வழியில் பல இடங்களில், ‘அலையாத்தி அம்மன், கடல் அணைத்த அம்மன், கடல் அணைத்த பெருமாள்’ என பல தெய்வங்களை உருவாக்கி வைத்து இருக்கின்றார்கள். நமது நிலங்களைப் பாதுகாத்த இயற்கையைப் புரிந்து கொள்ளாமல், இப்படி சாமிகளாக ஆக்கி விட்டார்கள்.



சுனாமியின்போது, கன்னியாகுமரியில், கடல் 200 மீட்டர்கள் வரையிலும் உள்வாங்கி இருக்கின்றது. அந்தக் காலத்தில் ஆறுகள் கடலோடு கலப்பது குறித்து, மக்களுக்கு மரபு சார்ந்த சிந்தனைகள் இருந்தன. இப்போது இல்லை. என்னுடைய ஆய்வுகளில், நான் மக்களோடு கலந்து, அவர்களோடு வாழ்ந்து , தரவுகளைச் சேகரித்து இருக்கின்றேன். அன்று கயிறுகளை வைத்து ஆழம் பார்த்தார்கள். இன்றைக்கு, ரேடார் மிஷன்களைக் கொண்டு ஆழம் பார்க்கின்றார்கள்.



நெல் விவசாயம், இரும்பின்பயன்பாடுகளைக் கண்டு அறிந்தவர்கள் தமிழர்களே. ஆதிச்சநல்லூர் இரும்பு நாகரிகம், 3500 ஆண்டுகளைக் கடந்து விட்டது. இரும்பு நாகரிகத்தையும், வேளாண்மையையும் , கூ ட் ட ம் கூட்டமாக உலகம் முழுமையும் சென்றார்கள். பருத்தி நாகரிகத்தை, மெக்சிகோ வரையிலும் கொண்டு சென்றார்கள். எனவே, இவர்கள் வெறுமனே மீன் பிடிக்க மட்டுமே கடலைப் பயன்படுத்த வில்லை. ‘கடலோடிகள்’ என்ற பெயரை நாம் பயன்படுத்தி வந்து இருந்தால், நமது பெருமை நிலை நிறுத்தப்பட்டு இருக்கும். மாறாகஇவர்கள், ‘மீனவர்கள்’, ‘கட்டுமரக்காரர்கள்’ என்ற அளவிலேயே சுருக்கப்பட்டு விட்டார்கள்.



பொதுவாக, இந்தியப் பெருங்கடல் பற்றிப் புரிந்து கொள்ளாமல், தமிழர்களுடைய வரலாறு முழுமை பெறாது. கடலுக்கு உள்ளே நகரங்கள் மூழ்கியதுபோல, கடலுக்கு அருகாமையில் உள்ள மணலுக்கு உள்ளேயும் பல நகரங்கள் புதையுண்டு கிடக்கின்றன. குறிப்பாக, இராமநாதபுரம் மாவட்டக் கடற்கரையில் பல நகரங்கள் புதைந்து கிடக்கின்றன. ‘அத்தியூத்து’ என்ற இடம், எட்டு மீட்டர், பத்து மீட்டர் ஆழத்தில் புதைந்து உள்ளது. அதேபோல, சாயர்புரம் தேரியிலும், கன்னியாகுமரி மாவட்டம் முட்டத்திலும் உள்ளன. எனவே, கடற்கரைகளையும் ஆய்வு செய்தால் தான், தமிழருடைய நாகரிகத்தின் தொன்மையை நிறுவ முடியும்.



தமிழர்கள் ஒரேயடியாக இடம் பெயர்ந்து விட வில்லை. இடம் விட்டு இடம் பெயர்ந்து சென்று இருக்கின்றார்கள். அதனால், சீனாவுக்குள் இருக்கின்ற தமிழரை, தாய்லாந்து நாட்டில் இருந்து வந்தவர்களாகவே சீனர்கள் பார்க்கின்றார்கள். அதேபோல, ஆஸ்திரேலியாவுக்குப் போன தமிழர்களை, இந்தோனேசியாவில் இருந்து வந்தவர்களாகவே பார்க்கின்றார்கள். இது கூட வரலாற்றில் புரிந்து கொள்ள முடியாத வரலாற்று விந்தைகள். அண்மையில் கூட, ஈழத்தமிழர்கள் அகதிகளாகக் கப்பலில் புறப்பட்டு, ஆஸ்திரேலியாவுக்குச் சென்று பிடிபட்டார்கள் என்று படித்தோம். அதுவும், பழைய வரலாற்றின் தொடர்ச்சி தான்.



உணர்ச்சிகரமாக முழங்குகிறோம், உலகில் 83 மொழிகளில், தமிழின் தாக்கம் இருக்கின்றது என்று. அவை அங்கே எப்படிப் போனது? யார் கொண்டு சென்றார்கள்? எந்தெந்த முறைகளில் கொண்டு போனார்கள்? என்பதை எல்லாம் பார்க்க வேண்டும். கடல்சார் மேலாண்மையில் தமிழகம் உலக அளவில் சிறப்பு இடம் பெற்று இருக்கின்றது. கொரியா, ஜப்பானிலும் கூட, இந்தத் துறையில் தமிழர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள். மீனவர்கள் என்றால், ஏதோ லுங்கி கட்டிக் கொண்டு திரிகிறார்கள், குடிக்கிறார்கள் என்று மட்டும் கருதக்கூடாது. அவர்கள் கடல் சார் சூழல் இயல் அறிந்தவர்கள்.





கடல் ஆராய்ச்சியாளர் திரு.பாலு அவர்கள் தாயகத்தில் திரு. அருணகிரி அவர்களுக்கு அளித்த பேட்டியிலிருந்து...........