Like me

Sunday, May 13, 2012

என் காதல் நீ.....

ன்னை பிரிஞ்சு உன்னால சந்தோஷமா வாழ முடியுமா ?

முடியும்ன்னா போயிடு ....

முடியலன்னா என்னிடம் வந்துவிடு ... 



அப்புறம் யாரு நம்மளை பிரிக்கிறாங்கன்னு பார்த்திடலாம் .... 


சாவோ வாழ்வோ ஒரு முறைதான் ....

முடிவு எடு ...

என்னை பிரிஞ்சு உன்னால சந்தோஷமா வாழ முடியுமா ?
   

                                                                                                         
                      


தெகட்டிவிட்டது உன் மீது நான் கொண்ட காதல்.....
இன்னமும் நாட்கடத்த விரும்பவில்லை
என் காதலை...
ஒன்று திட்டி விடு என்னை இல்லையேல்
என் இதயத்தோடு கரைந்து விடு....
இப்படி கண்டு கொள்ளாமல் காயப்படுத்தாதே......

            
எனக்கானவளே.....
உன் உச்சரிப்புக்காக காத்திருந்த என் பெயர்....
நீ காலம் தாழ்த்துவதால் 
தயாராகிறது காதல் தற்க்கொலைக்கு...
இனியும் தாமதப்படுத்தாதே
 உதிர்த்து விடு ஓர் முறை 
உன்னவன் பெயரை............


                                            
ன் எண்ணங்களில் நான் இருப்பேன்
உயிர் எழுத்தாக

என் நினைவுகளில் நீயே என்றும்
மெய் எழுத்தாக

உன் அரவணைப்பில் என்றுமே
ஆயுத எழுத்தாக

உலகமே நாம் என்று
உயிர் மெய் எழுத்தாக .


                           


நீ என்னை நினைக்கும் நிமிடத்தில் 
நான் இறந்துவிடுவேனோ தெரியாது ...! 
ஆனால்
 நான் இறக்கும் நிமிடத்திலும் 
உன்னை நினைத்துக்கொண்டுதான் இருப்பேன் ..

                                   



ன்னை நான் அழகென்றேன்
உடனே நீ வெட்கப்பட்டாய்...
 உன் வெட்கம் உன்னைவிட அழகென்றேன்
 ச்சீ...போடா என்று செல்லமாய் சிணுங்கினாய்... 
இந்த செல்லமான சினுங்கள் அதைவிட அழகென்றேன்
 உடனே நீ கோபப்பட்டாய்... 
அந்த செல்லமான சினுங்களைவிட உன் கோபம் அழகென்றேன்...
 உடனே நீ என்னை அடிக்க வந்தாய்... 
அட இதுவல்லவா பேரழகு என்றேன்...
 அடிக்க வந்த கைகளால் என்னை அணைத்து என் இதழ்களில் முத்தம் பதித்தாய்... 
உன் முத்தத்தின் அழகை சொல்ல தமிழில் ஏதடி வார்த்தைகள்... 
நான் மௌனமாய் உனக்குள் கரைந்து போனேன்..