Like me

Tuesday, April 3, 2012

கொத்துக்குண்டு, நச்சுக்குண்டுகளின் சிதறல்களை மூடிமறைக்கும் நடவடிக்கையில் படையினர்!




கொத்துக்குண்டு, நச்சுக்குண்டுகளின் சிதறல்களை மூடிமறைக்கும் நடவடிக்கையில் படையினர்!

வன்னியில் சிறீலங்காப்படையினரின் தமிழின அழிப்பின் போர் நடவடிக்கையின் போது பயன்படுத்தப்பட்டுவந்த கொத்துக்குண்டுகள் மற்றும் நச்சுக்குண்டுகள் போன்ற பன்னாட்டு சட்டவிதிக்குஅமைவாக தடைசெய்யப்பட்ட குண்டுகள் பாவித்ததை உறுதிசெய்யும் சிதறல்துண்டங்களை மூடிமறைக்கும் நடவடிக்கையில் சிறீலங்காப்படையினர் ஈடுபட்டுள்ளார்கள்.
சிறீலங்காப்படையினரின் போர்நடவடிக்கையில் ஆட்லறி எறிகுண்டுஊடாக கொத்துக்குண்டுகளையும,; எரிகுண்டுகளையும்,டாங்கிகளில் இருந்து நச்சுக்குண்டுகளையும் பயன்படுத்தியுள்ளமை வன்னிப்பபோனின் போது காயம் அடைந்த மக்கள் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை அனைவரும் அறிந்ததே.தடைசெய்யப்பட்ட குண்டுகளை பயன்படுத்தி தமிழ்இனஅழிப்பினை மேற்கொண்ட சிறீலங்காப்படையினர் இந்தகொத்துக்குண்டு தாக்குதலிலேயே வன்னியில் பெருமளவான மக்கள் கொல்லப்பட்டுள்ளமை போரின் இறுதிவரை நின்ற படைதுறைசார் போராளிகள்,மற்றம் பொதுமக்கள் நன்கு அறிந்துகொண்டுள்ளமை இதேபோல் சிறீங்காப்படையினர் வீசிய ஒரு குண்டில் பெருமளவான கால்நடைகள் இறந்து கிடப்பதை கீழ் காணும் ஒளிப்படம் காட்டிநிக்கின்றது.வன்னியில் நாள்தோறும் நூற்றுக்கு மேற்பட்ட கொத்துக்குண்டுகளையும் வானில் இருந்து பரசூட்மூலமும் கொத்துக்குண்டுகளை வீசி தமிழ்மக்களை அழித்தார்கள்.
வன்னியில் போர்நடந்தஇறுக்கமான காலகட்டங்களில் டாங்கிகளில் இருந்து நச்சுக்குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினார்கள் இவ்வாறான தாக்குதல்களில் காயம் அடைந்த எத்தனையோ தமிழ்மக்கள் இன்றும் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.இவற்றிற்கு மேலாக வானில் இருந்து வீசப்படும் ஜநூறுகிலோ,ஆயிரம்கிலோ கொண்ட குண்டுகள் நிலத்தில் வீழ்ந்துவெடித்தில் சிறியகுளத்தினை கூட உருவாக்கிஇருக்கின்றது.இவ்வாறு வன்னியில் படையினர் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தியமைக்கான ஆதாரங்கள் மேலும் வெளிவரத்தொடங்கியுள்ளது.

வன்னியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டவர்கள் அண்மையில் கொத்துக்குண்டுகளின் சிதறல்களை மீட்டுள்ளார்கள் இவ்வாறு மீட்கப்படும் தடைசெய்யப்பட்ட குண்டுகள் தொடர்பாக வெளியில் செய்திகள் செல்லக் கூடாது என்று கண்ணிவெடி அகற்றும் பிரிவினர்களுக்கு சிறிலங்கா படையினர் மிரட்;டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இவ்வாறு மீட்கப்படும் தடைசெய்யப்பட்ட நச்சுக்குண்டுகள்,கொத்துக்குண்டுகளின் சிதறல்களை அடையாளம் தெரியாத குண்டுகளின் சிதறல்கள் என்று வெளியில் சொல்லவேண்டும் என்று கண்ணிவெடிஅகற்றும் பிரிவினருக்கு படையினர் அறிவித்துள்ளார்கள்.
வடக்கில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுவரும் நிறுவனங்களுடன் படையினரின் கண்ணிவெடி செயற்பாட்டு அதிகாரிகள் ஈடுபட்டு இவ்வாறான சிதறுதுண்டுகளை மூடிமறைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சலைப் பகுதி நாகர்கோவில் பகுதி கிளிநொச்சி பச்சிலைப்பள்ளிப் பிரதேசம் ஆகியவற்றில் மிதிவெடி மற்றும் வெடிக்காத வெடிகளை அகற்றும் நடவடிக்கைகளில் ஹலோ ட்றஸ்ற் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது,டி.டி.ஜி நிறுவனமானது தெல்லிப்பளை மற்றும் பூநகரிப் பிரதேசங்களில் கண்ணிவெடிகளை அகற்றி வருவதாகவும் டாஸ் நிறுவனம் கிளிநொச்சி மற்றும் கண்டாவளைப் பிரதேசத்தில் கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இவ்வாறு கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்கள் நாள்தோறும் எடுக்கும் வெடிபொருட்களை படையினர் பார்வையிட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஜப்பானில் அணு உலை விபத்தும் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களும்....

 


ஜப்பானில் அணு உலை விபத்தும் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களும்....

தொலைதூர நாட்டில் ஓர் அணு விபத்து நடந்தால் அதனால் வெளியாகும் கதிர்வீச்சு நமது நாட்டை குறிப்பாகத் தமிழகத்தை வந்தடையுமா? அதன் காரணமாக சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதா? என்பதே முக்கியமான கேள்வி! மேலும் நமது நாட்டில் / தமிழகத்தில் முன் உதாரணங்கள் ஏதேனும் இருக்கிறதா? 1986ல் ரஷ்யாவில் செர்னோபில் விபத்து நடந்து பல கொடிய விளைவுகளை அந்நாட்டில் மட்டுமல்லாது, தொலைதூர நாடுகளிலும் கூட பாதிப்பை ஏற்படுத்தியது, மனதில் கொள்வது நல்லது. செர்னோபில் விபத்து நடந்து இரு வாரங்களுக்குப் பின் கல்பாக்க அணு விஞ்ஞானிகள் காற்றிலும், ஆட்டு தைராய்டிலும் அயோடின் 131 எனும் வாயுக்கழிவினை அளந்து பார்க்கையில் அது முந்தைய அளவைவிட ஆயிரம் மடங்கு அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த அணுக்கதிர் வீச்சின் தாக்கம் 3 6 மாதம் வரை நீடித்தது என அரசு தரப்புச் செய்திகளே தெளிவாக உள்ளன. மேலும் மும்பையில் செர்னோபில் விபத்திற்குப் பின் மே மாதம் காற்றில், மணலில் சீசியம் 137 எனும் கதிர்வீச்சுத் தன்மையுள்ள வேதிப்பொருளை அளந்து பார்க்கையில் காற்றில் அது அதிகபட்சமாக 4 மி.லி பெக்கரேல் / மீ எனும் அளவிலும் மணலில் விபத்திற்கு முன் 37 பெக்கரேல் / மீ2 என்ற அளவிலும் விபத்திற்குப் பின் அது 72 பெக்கரேல் / மீ2 (இரு மடங்காக) இருந்தது அணுசக்தி விஞ்ஞானிகளின் ஆய்வின் முடிவில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது. கல்பாக்கத்திலும், மும்பையிலும் அப்போதே இந்தக் கதிர்வீச்சின் காரணமாக சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டிருக்கின்றதா? என அறிய எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை என்பது வேதனையான விசயம். சென்னைக்கும், செர்னோபில்லுக்கும் இடையே உளள தூரம் ஏறக்குறைய 6200 கி.மீ. ஆகும்.

இப்போதும் ஜப்பான் அணு உலை விபத்திற்குப் பின் 8600/ கி.மீ. தொலைவிலுள்ள அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா மாகாணத்தின் தலைநகரமான சேக்ரோமெண்டோ எனுமிடத்தில் கதிர்வீச்சு பாதிப்பு இருந்தது தெரியவந்துள்ளது. உதாரணமாக அயோடின் 131ஐ எடுத்துக் கொண்டால் காற்றில் அதன் அளவு 165 மிலி பெக்கரேல் / மீ3 என இருந்தது. அதேபோன்று அமெரிக்கத் தலைநகரமான வாஷிங்டனில் கூட கதிர் வீச்சின் பாதிப்பு இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் கனடாவிலும், ஸ்காட்லாந்திலும், சைனாவிலும், தென்கொரியாவிலும் கதிர்வீச்சு பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டோக்கியோவிலும் குடிநீரில் அயோடின் 131 அளவு பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட இருமடங்கு ஆக இருந்ததால் குழாய் மூலமாக பெறும் குடிநீரை யாரும் குடிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஜப்பானுக்கும் தமிழ்நாட்டில் உள்ள சென்னைக்கும் இடையே உள்ள தூரம் வெறும் 6600 கி.மீ. மட்டுமே! 8600 கி.மீ. தொலைவில் பாதிப்பு இருக்கும் போது 6600 கி.மீ. தொலைவிலுள்ள சென்னையில் அதன் பாதிப்பு தெரிய வாய்ப்பு இருக்கும்போது அறிவியல் ரீதியாக கதிர்வீச்சை அளந்து பார்த்து பாதிப்பில்லை எனக் கூறுவதற்குப் பதிலாக காற்றின் திசை, அமெரிக்க நாடுகளின் பக்கம் இருப்பதாக கூறி இங்கே முறையாக அளந்து பார்க்காமல் பாதிப்பு ஏதும் இந்திய மக்களுக்கு வராது எனக் கூறுவது அறிவியல்தானா?

ஜப்பானிய அரசு குடிநீரிலும் உணவுப் பொருட்களிலும் கதிர்வீச்சின் பாதிப்பு இருப்பதை ஒப்புக் கொண்டாலும் அதன் அளவு குறைவாக இருப்பதால் சுகாதார சீர்கேடுகள் வராது எனக்கூறுவது சரிதானா? உணவுப் பொருட்களால் கதிர்வீச்சு பாதிப்பு ஏதும் வராது என இருந்தால் பாதிக்கப்பட்ட ஜப்பான் நகரங்களிலிருந்து வரும் உணவுப் பொருட்களுக்கு அமெரிக்கா ஏன் தடை விதிக்க வேண்டும்?

இந்தியாவில் ஏன் ஜப்பானிலிருந்து வரும் உணவுப் பொருட்களுக்குத் தடை விதிக்கப்படவில்லை? டோக்கியோவிலுள்ள குடிநீர் அயோடின் 131ன் பாதிப்பு குறைவாகத்தான் உள்ளது எனக் கூறினாலும். பின்னர் ஏன் குழாய் வழியான குடிநீரை குடிக்க கூடாது என சொல்ல வேண்டும்? ஆக கதிர்வீச்சு பாதிப்பு என்பது கண்டம்தாண்டி, (இந்திய சுகாதாரத்துறை கதிர்வீச்சின் அச்சம் காரணமாக ஜப்பானிலிருந்து வரும் உணவுப் பொருட்களுக்கு 3 மாதம் தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது) நாடுதாண்டி, பாதிப்பை ஏற்படுத்த முடியும் என இருந்தும் இந்தியாவில் / தமிழ்நாட்டில் முறையான அறிவியல் ஆய்வுகள் நடத்தப்படாதது எதனால்?

ஜப்பான் அனுபவத்திலிருந்து நாம் என்ன பாடங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் எனப் புரிந்து கொள்வதற்கு முன் கதிர்வீச்சு மனித உடம்பில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்தான சில அடிப்படை கருத்துகளை தெரிந்து கொள்வது நல்லது! அவை

1. கதிர்வீச்சைப் பொறுத்த வரை பாதுகாப்பான அளவு என ஒன்று இல்லவே இல்லை என்பதுதான் அணுசக்தி குறித்தான ஆய்வுகள் மேற்கொள்ளும் உலகளாவிய அறிஞர்களின் கருத்தாக உள்ளது.

2. 2005ஆம் ஆண்டு ஜனவரியில் X கதிர்கள், காமா கதிர்கள், நியூட்ரான்கள் புற்றுநோய் ஏற்படுத்தும் தன்மை கொண்டவை என அதிகாரப்பூர்வமாக அறிவியல் நிறுவனங்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

3. Xரே எடுப்பதால் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பு ஒரு அணுகுண்டு போட்டால் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பை விட அதிகம் என்பதே வியக்கத்தகு அறிவியல் உண்மையாகும். இதற்கான காரணத்தை இப்போது சுருக்கமாகப் புரிந்து கொள்ளலாம். உடம்பில் செல் ஒன்றில் புற்றுநோய் ஏற்பட காரணமாக இருப்பது கண்ணுக்குப் புலப்படாத மிகச்சிறு அளவில் மூலக்கூற்றில் (DNA) இரு இடங்களில் ஏற்படும் மாற்றமே! அணுகுண்டினால் ஏற்படும் பெரும் கதிர்வீச்சு உடலில் (செல்களில்) பெரும்பாதிப்புகளை ஏற்படுத்துவதால் உடம்பால் அது உணரப்பட்டு அச்செல்லை உடம்பு அழித்து வருகிறது. இதை அபாப்டோசிஸ் (Apoptosis) என அழைப்பர். செல் அழிந்து விடுவதால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு தவிர்க்கப்படுகிறது.

4. அணுசக்தி துறையிலேயே மிகவும் முக்கியப் பிரச்சனை என்னவெனில் அதில் பயன்படுத்தப்பட்ட எரிபொருளை எப்படி பாதுகாப்பது என்பதுதான். இதற்கான தொழில்நுட்பம் கூட இன்னமும் முழுமையாக கண்டறியப்படவில்லை. மேலும் கதிர்வீச்சின் பாதிப்பு எவ்வளவு காலம் நீடிக்கும்?

உதாரணமாக புளூட்டோனியம் 239ஐ எடுத்துக் கொள்வோம். இது தனது கதிர்வீச்சை பாதியாக குறைத்துக் கொள்ள எடுத்துக் கொள்ளும் நேரம் 24,000 வருடங்கள். அயோடின் 129ஐ எடுத்துக் கொள்வோம். 1990களிலேயே தாராபூர் அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள கடல் தாவரங்களில் இதன் அளவு 740 மடங்கு அதிகம் இருந்தது அரசு விஞ்ஞானிகளாலேயே தெரியவந்தது. கல்பாக்கத்தில் என்னவெனில் கடல்வாழ் தாவரங்களில் இதை அளப்பதே இல்லை!

இந்த அயோடின் 129தனது கதிர்வீச்சைப் பாதியாக குறைக்க எடுத்துக் கொள்ளும் காலம் 17 மில்லியன் வருடங்கள் ஆகும். ஆக நாம் நமது சந்ததியினருக்கு இத்தகைய கொடூரமான அழிவுப் பொருட்களை விட்டுத்தான் செல்ல வேண்டுமா? நமது சந்ததியினர் வரும் காலத்தில் அக்கதிர் வீச்சால் பாதிக்கப்பட்டால் நமது மூதாதையர்கள் எத்தகைய பேரழிவை நமக்கு விட்டுச் சென்றிருக்கின்றனர் என காறி உமிழமாட்டார்களா?

5. கதிர்வீச்சால் ஏற்படும் உடம்பு பாதிப்பு முற்றிலுமாகக் கண்டறியப்பட்டுள்ளதா? எனக் கேள்வி எழுப்பினால் அதற்குப் பதில் இல்லை என்றேதான் கூற முடியும். உதாரணமாக By Stander Effect. By Stander Effect என்றால் உடம்பில் கதிர்வீச்சுப் பாதையில் நேரடியாக படாத உறுப்புகளிலும் பாதிப்பு வருவதுதான். கதிர்வீச்சுப் பாதையிலுள்ள செல்களிலே ஏற்படும் வேதிமாற்றம் தூர உறுப்புகளின் செயல்பாட்டை பாதிப்பதால்தான் இது சாத்தியமாகிறது. இது சமீப காலத்தில்தான் கண்டறியப்பட்டுள்ளது. இது போன்ற புதிய கதிர் வீச்சு பாதிப்புகள் பின்னர் கண்டறியப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
George A Arul

மின்சாரத்தை விட மனித உயிர்கள் மேலனவை

                  


மின்சாரத்தை விட மனித உயிர்கள் மேலனவை

நீரைக் கொதிக்க வைத்து நீராவியாக்கி அதன் மூலம் மின்னாக்கியைச் சுழலச் செய்து தயாரிக்கப்படுவது அனல் மின்சாரம். இதற்கு நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது. டீசல், பெட்ரோல், எரிவாயு மூலமும் சுழலச் செய்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு நீரைக் கொதிக்க வைத்து நீராவியாக்குவதற்கு நிலக்கரிக்குப் பதிலாக அணுவின் உட்கருவைப் பிளப்பதால் உருவாகும் வெப்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுவதுதான் அணு மின்சாரம்.

யுரேனியம் போன்ற சில தனிமங்கள் பிளக்கப்படுவதால் அதிக வெப்பமும் ஆற்றலும் கிடைக்கின்றன. அவற்றை முறைப்படுத்தி அதைத் தொடர் நிகழ்வாக மாற்றி நீரைக் கொதிக்க வைத்து நீராவியாக்கி அதன் மூலம் மின்னாக்கியை சுழல வைத்துப் பெறப்படுவது தான் அணு மின்சாரம்.

அணுஉலைத் தொழிற்நுட்பத்தின் பெறுபேறு மின்சாரம். அதனால் தீமைகள் உண்டா? என்றால் உண்டு என்றுதான் பதில் அளிக்க வேண்டும். அவற்றில் முதன்மையானது கதிரியக்கம் (Radiation). இந்த கதிரியக்கம் மிகமிக அபாயகரமானது. இந்தக் கதிர்வீச்சினால் தைராய்டு பாதிப்பு, காசநோய், நீரிழிவு நோய், மலட்டுத் தன்மை, மூளை வளாச்சிக் குறைவு, புண்கள் என பல்வேறு நோய்கள் மனிதருக்கு ஏற்படும்.

இரண்டாவது - கழிவுகள். இந்த பிளக்கப்பட்ட யுரேனியத்தின் கழிவான புளுட்டோனியத்தில் இருந்துதான் அணுகுண்டு செய்யப் பயன்படும் மூலப்பொருள் கிடைக்கிறது. இந்தக் கழிவுகளின் கதிரியக்கம் கிட்டத்தட்ட 45ஆயிரம் ஆண்டுகளுக்கு வீரியத்துடன் இருக்கும்.

மூன்றாவது - விபத்துக்கள். மற்ற தொழிற்சாலைகளைப் போல் சிறிய அளவிலான விபத்துக்கள் என இதைக் கருத முடியாது. அணுஉலையின் சிறிய விபத்தே மிகப் பெரிய மனிதப் பேரழிவை ஏற்படுத்தும். உயிரிழப்பு இலட்சக் கணக்கில் இருப்பதுடன் அதன் பாதிப்பு பல தலைமுறைகளுக்கும் தொடரும்.

நான்காவது - சுற்றுப்புற சீர்கேடு. அணுஉலை அமையும் இடம் மிக பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். அதனால் அதைச் சுற்றி வாழும் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு, தங்கள் வாழ்வாதாரங்களை இழக்க நேரிடும். கடலிலிருந்து ஒரு நாளைக்கு 32 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு, அணு உலைளைக் குளிர்வித்தவுடன் அந்த வெந்நீர் கடலில் மீண்டும் கொட்டப்படுகின்றது. இதனால் கிட்டத்தட்ட 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கடல்வாழ் உயிரினங்கள் அழிக்கப்பட்டு, உயிர்ப் பெருக்கம் பாதிப்படைவதுடன் அதை நம்பியுள்ள மீனவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகிறது.

புகுசீமாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் 11 ஆம் நாள் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து உருவாகிய சுனாமி காரணமாக அங்குள்ள அணுஉலை சேதத்துள்ளாகியது. அதன்போது 15,700 பொதுமக்கள் சுனாமி பேரலைகளுக்குப் பலியானார்கள். இதனை அடுத்து யப்பான் தன்வசமுள்ள 54 அணுஉலைகளை மூட முடிவு செய்தது. இந்த வாரமும் அணுஉலை ஒன்று மூடப்பட்டது. எதிர்வரும் ஏப்ரில் மாதத்தில் எஞ்சிய அணுஉலைகளை யப்பான் மூட இருக்கிறது. இப்படி மூடுவதனால் வேறுவழிகளில் மின்சாரம் பெறும் செலவு 30 பில்லியன் டொலர்களை (3,000 கோடி டொலர்கள்) எட்டவுள்ளது.

யப்பான் அணுஉலையில் ஏற்பட்ட கதிரியக்கக் கசிவால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றை உண்ணும் மக்களும் பாதிப்புள்ளாகும் ஆபத்துள்ளது. இதற்காக யப்பான் உலகத்திடம் மன்னிப்புக் கேட்டுள்ளது.

யப்பானைப் போலவே ஜெர்மனியும் தன்னிடம் உள்ள 17 அணுஉலைகளை அடுத்த 11 ஆண்டுகளில் (2022) முற்றாக மூடயிருக்கிறது. ஒரு அணுஉலையின் ஆயுட் காலம் 100 ஆண்டுகளாகும். ஆனால் விபத்தினால் ஏற்பட்ட கதிர்வீச்சுக் கசிவின் தாக்கம் 45,000 ஆண்டுகள் நீடிக்கும். இது பல தலைமுறைகளுக்கு அறைகூவலாக இருக்கப் போகிறது.

இதேபோல் அமெரிக்காவில் மூன்று மைல் தீவில் (Three Mile Island) உள்ள அணுஉலை 1979 மார்ச்சு மாதம் 28 ஆம் நாள் பாரிய விபத்து ஏற்பட்டது. இதுவே அமெரிக்க வாணிக அணுஉலை வரலாற்றில் மோசமான விபத்தாகும். இது தனியார் நிறுவனம் கட்டிய அணுஉலை ஆகும். இந்த விபத்து தொடக்கத்தில் யந்திரக் கோளாறினால் ஏற்பட்டது. அதனை விளங்கிக் கொள்ளாத யந்திர ஊழியர்கள் அணுஉலை பொருத்தப்பட்டிருந்த தானியங்கி அவசர குளிர்மயப்படுத்தும் முறைமையை கையால் மீறிச் செய்தமையால் நிலைமை மோசமடைந்தது. அணுஉலையில் அளவுக்கு அதிகமான குளிர் நீர் இருப்பதாக ஊழியர்கள் தவறாக எண்ணிவிட்டார்கள். அணு கட்டுப்பாட்டு ஆணையம் 40,000 கலன் கதிரியக்கக் கழிவு நீரை சஸ்குகன்னா ஆற்றில் விட்டது. இதனால் மக்களின் நம்பகத்தன்மையை அந்த ஆணையம் இழக்க வேண்டி நேரிட்டது.

விபத்து நேரிட்டதைத் தொடர்ந்து 140,000 கற்பிணிப் பெண்களும் சிறார்களும் அப்புறப்படுத்தப்பட்டார்கள். பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே இருக்குமாறு பணிக்கப்பட்டார்கள். கால்நடைகளை மூடிவைத்திருக்குமாறு கமக்காரர்களுக்கு அறிவுறுத்தல் விடப்பட்டது. விபத்து நடந்த இடத்தை சுற்றி 20 மைல் சுற்றளவில் வாழந்த 663,500 பேரில் அரைவாசிப் பேர் இடம் பெயர்ந்தார்கள்.

இந்த அணுஉலையை சுத்திகரிக்கும் பணி 1979 ஒகஸ்டில் தொடங்கி 1993 டிசெம்பரில் முடிவுற்றது. அதற்கான செலவு ஒரு பில்லியன் டொலர்கள் ஆகும்.

இந்த விபத்தின் பின்னர் அணுசக்தி எதிர்ப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் இடத்தே பாதுகாப்புப் பற்றிய அக்கறை மேலோங்கியது. நிறுவ இருந்த 51 அணுஉலைகள் (1980 - 1984) கைவிடப்பட்டன. அணுஉலை விபத்துக்குப் பின்னர் வேறு அணுஉலைகளை அமைப்பதை அமெரிக்கா நிறுத்திவிட்டது. உலகளவிலும் அணுஉலைகள் நிறுவுவது குறைந்து வருகிறது.

அமெரிக்க அணுஉலை விபத்தை அடுத்து உருசியாவின் உக்ரேன் குடியரசில் உள்ள செர்னோபில் அணுஉலையில் 1986 ஆண்டு ஏப்ரில் 26 இல் விபத்து ஏற்பட்டது. உடனடியாக 60 பேர் இறந்து போனார்கள். கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்டு நாளடைவில் இறந்து போனவர்களின் எண்ணிக்கை 4,000 என அரசு சொல்லியது. ஆனால் அமைதிக்கான பசுமைக் கட்சி இறந்தவர்களின் தொகை 93,000 என மதிப்பீடு செய்தது. இந்த நகரதை அண்டி வாழ்ந்த 350,00 பேரை உருசிய அரசு வேறு இடங்களில் குடியேற்றியது.

பெலாறஸ் தேசிய அறிவியல் கழகம் (The Belarus National Academy of Sciences) செர்னோபில் அணுஉலை விபத்துக் காரணமாக 270,000 பேர் நாளடைவில் புற்று நோயினால் பாதிக்கப்பட்டார்கள் என்றும் அதில் 93,000 பேர் இறந்து போனார்கள் என்றும் கூறுகிறது. இந்த விபத்து அணுஉலை கட்டிடத்தின் வடிவமைப்பில் உள்ள தவறு காரணமாகவும் அதனை இயக்கிய ஊழியர்களது கவலையீனம் காரணமாகவும் ஏற்பட்டது என்கிறார்கள். இந்த விபத்துக்குப் பின்னர் உருசியா மேற்கொண்டு ஒரு அணுஉலையைத் தன்னும் இன்றுவரை நிறுவவில்லை.

இந்தப் பின்னணியில்தான் கூடங்குளம் மக்கள் அணுஉலையால் தங்களுக்கு ஆபத்து வரும் என அச்சப்படுகிறார்கள். குறிப்பாக புகுசீமாவில் ஏற்பட்ட விபத்துக்குப் பின்னரே இதற்கான எதிர்ப்பு அதிகரித்தது. மக்களது அச்சம் நியாயமானது. கூடங்குளம் அணுஉலை எண்பதுகளில் உருசிய நாட்டின் உதவியோடு கட்டத்தொடங்கி இப்போதுதான் முடிவடைந்துள்ளது. இதற்கான செலவு 18,000 கோடி உரூபாயாகும். நிலநடுக்கம், குண்டு வீச்சு, விமானத்தாக்குதல் ஆகியவற்றுக்கு ஈடுகொடுக்குமாறு கட்டப்பட்டதாக அணு அறிவியலாளர்கள் சொல்கிறார்கள். ஆனால் யப்பானில் ஏற்பட்ட 9.0 றிட்சர் அளவுள்ள நிலநடுக்கம் போல் ஒன்று ஏற்பட்டால் அது அணுஉலையைப் பாதிக்காது என்று யாராலும் அறுதியிட்டுக் கூறமுடியாது.

இந்திய மத்திய அரசு கூடாங்குளத்தில் கட்டப்பட்ட அணுஉலைக்கு எதிராக மக்கள் காட்டுகிற கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது திறக்கவுள்ளது. இந்த அணுஉலை தொடக்கத்தில் 640 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும். தமிழ்நாட்டுக்கு அதில் 220 மெகாவோட் மின்சாரம் வழங்கப்படும். இதை வைத்து மின் தட்டுப்பாட்டை போக்க முடியாது.

உண்மையில் தமிழ்நாட்டுக்கு 12,000 மெகாவோட் மின்சாரம் தேவைப்படுகிறது. அதில் 7,500 மெகாவோட் மின்சாரமே தற்பொழுத்து கிடைக்கிறது. எனவே 4,000 மெகாவோட் மின்சாரம் பற்றாக் குறையாக உள்ளது. இதனை சரிக்கட்ட தமிழ்நாடு அரசு மாற்றுவழியில் காற்றாலை, சூரியக்கதிர் போன்றவற்றின் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 01 முதல் மின்வெட்டு மேலும் அதிகரிக்கும். சென்னையில் 4 மணி நேரமும் மற்றப் பகுதியில் மணி நேரமும் மின்வெட்டு இருக்கும்.

கூடங்குளம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களுக்கு ரூ.500 கோடியில் நலத்திட்டங்களை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான முதல்கட்டப் பணிகள் கடந்த 24 ஆம் நாள் தொடங்கியுள்ளன.

விபத்துக்கள் ஏற்படும் என்பதற்காக விமானம், இரயில் பயணங்களைத் தவிர்க்க முடியாது. ஒருவேளை விபத்து ஏற்பட்டாலும் கூட ஒரு நாட்டின் வளர்ச்சிக்காக சிலர் தியாகம் செய்வது தவிர்க்க முடியாதது என்று சிலர் நினைக்கலாம்.

விமான விபத்துக்களையோ, தொடர் வண்டி விபத்துக்களையோ, அணுஉலை விபத்துடன் ஒப்பிடக் கூடாது. விமானம், இரயில் விபத்துக்களில் ஏற்படும் உயிரிழப்புகள் வெறும் நூற்றுக்கணக்கில்தான் இருக்கும். விபத்தின் பாதிப்புகள் தொடராது. ஆனால் அணுஉலை விபத்தில் உயிரிழப்பு இலட்சக்கணக்கில் ஏற்படும். பல லட்சம் பேர் கதிரியக்கத்தால் தாக்கப்பட்டு நோய்வாய்ப்பட நேரிடும். மேலும் அந்தக் கதிரியக்கப் பாதிப்புகள் பல தலைமுறைகளுக்குத் தொடரும். கண்ணிழந்து, உறுப்புகளை இழந்து குழந்தைகள் பிறக்க நேரிடும். மொத்தத்தில் அணு விபத்து என்பது கற்பனை செய்ய முடியாத அளவுக்கு பேரிழப்பை ஏற்படுத்தும்.

எனவே, அணுஉலை மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வது ஆபத்தானது. மாற்றுவழியில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதே மனிதர்களுக்கு மட்டுமல்ல சுற்றுச் சூழலுக்கும் நல்லது. ஆபத்தான அணுஉலைகள் மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கு மக்களின் உயிர்களைப் பணயம் வைக்க முடியாது. மின்சாரத்தைவிட மக்களின் உயிர்கள் விலைமதிப்பானவை.

பதிவுக்க உதவிய Andrews Andrew Stalin அவர்களுக்கு நன்றி...

வீரத்தளபதி பிரிகேடியர் தீபன்

  


நச்சுக் குண்டு வீசி படுகொலை செய்யப்பட வீரத்தளபதி பிரிகேடியர் தீபன் (படம் இணைப்பு)

PHOTOS, தமிழீழம் | கரிகாலன் | APRIL 1, 2012 AT 18:21

2009ஆம் ஆண்டு 03ஆம் மாதம் 4 ம் திகதி நேரடி மோதலுக்கு முகம் கொடுக்க முடியாமல் திணறிய இந்திய – இலங்கை இராணுவம் கோழைத்தனமாக நச்சு குண்டு வீசி படுகொலை செய்தனர். இதில் வீரத்தளபதி பிரிகேடியர் தீபன் அண்ணா மற்றும் பல போராளிகள் வீரகவியமனவர்கள்.

2009ம் ஆண்டு போர் உக்கிரமடைந்த நிலையில், ஏப்பிரல் மாதம் அளவில் ஆனந்தபுரத்தில் கடும் சமர் இடம்பெற்றது யாவரும் அறிந்ததே. ஆனந்த புரத்தில் தேசிய தலைவர் தங்கும் ஒரு இரகசிய இடத்தை இலங்கைப் படையினர் சுற்றிவளைத்து பெட்டியடித்தனர். சுமார் 4,000 விசேட அதிரடிப்படையிர் களமிறக்கப்பட்டு இத் தாக்குதல் வியூகம் வகுக்கப்பட்டது. தம்மைச் சுற்றி பெட்டியடிக்கப்பட்டதை உணர்ந்த புலிகள் அதனை உடைத்து புதுமாத்தளான் பகுதிநோக்கி நகர முயன்றனர். இதற்காக சுமார் 1000 விடுதலைப் புலிகள் 4,000 இராணுவத்தினரை எதிர்த்து கடும் சமரில் ஈடுபட்டனர். இத் தாக்குதலானது உலகில் எங்கும் இதுவரை எந்த ஒரு விடுதலை அமைப்பும் மேற்கொள்ளாத கடும் தாக்குதலாக அமைந்தது. விசேட அதிரடிப்படையினர் நூற்றுக்கணக்கில் இறந்தனர்.

ஒரு சிறிய இடத்தை பெரும் இராணுவப்படையால் கைப்பற்ற முடியாத நிலை தோன்றியது. களத்தில் பிரிகேடியர் தீபன், கேணல் கடாபி, கேணல் விதுசா, கேணல் துர்க்கா ஆகியோர் நிற்பதை இராணுவத்தினர் புலிகளின் உரையாடலை ஒட்டுக்கேட்டதன் மூலம் அறிந்துகொண்டனர். இவர்கள் அனைவரும் அங்கே நின்றால் இராணுவத்தால் 1 அங்குலம் கூட முன்னேற முடியாது என்பது இராணுவத்துக்கு நன்கு தெரியும். இதேவேளை இராணுவத்தினர் திடீரென 1 கிலேமீட்டார் பின் நோக்கி நகர்த்தப்பட்டனர். இது ஏன் என்பது அவர்களுக்கே தெரியாது. ஆனால் சற்று நேரத்தில் அப்பகுதிக்கு, நச்சுவாயுக் குண்டுகளும், எரிக்கும் பொஸ்பரஸ் குண்டுகளும் வந்து விழுந்தது.

புலிகளுடன் போரிட்டு வெல்லமுடியாத இராணுவம், கோழைத்தனமாகவும் பேடித்தனமாகவும் நச்சுக் குண்டுகளை அவ்விடத்துக்கு ஏவியது. இதனால் பல போராளிகளும் தளபதிகளும் வீரச்சாவை தழுவிக்கொண்டனர். நச்சுவாயுக் குண்டுகளையும், ஆட்களை மயங்கவைக்கும் குண்டுகளையும் பாவித்து இராணுவம் செய்த அட்டூழியங்கள் பல. இவ்வாறு ஏவப்பட்ட நச்சுக்குண்டால் பிரிகேடியர் தீபன் அவர்கள் உருக்குப் போராடிக்கொண்டு இருந்தார். இதனை அறிந்த இராணுவம் அவரை உயிருடன் பிடிக்க, தற்காலிக சிகிச்சை கூடக் கொடுத்துள்ளது. [படத்தில அதனைக் காணலாம்.]

வரலாற்று நாயகர்களில் வரலாறுகள் என்றும் எங்களுடன்! புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தில் அக்கினி சமரில் வீரவரலாறான எங்கள்அங்கினி குஞ்சுகளை நச்சுக்குண்டுகள் கொண்டு இனஅழிப்பினை அழித்த சிங்கள இனவெறியாளர்களின் இனக்கொடூரங்கள் இன்னும் ஓய்ந்துவிடவில்லை அக்கினிகுஞ்சுகளை இன்றும் எங்கள் மனங்களில் இறுக பற்றுகின்றோம்.
அன்று 2009ஆம் ஆண்டு 03ஆம் மாதம் இறுதி நாட்கள் ஆனந்தபுர மண்ணில் அக்கினி சுவாலைமூண்ட தாக்குதல்கள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன இவ்வாறான தாக்குதல்களுக்கு விடுதலைப்புலிகளின் போராளிகளை அழிக்கவென்று சிங்களப்படையினர் தடைசெய்யப்பட்ட நச்சுக்குண்டுகளை களமுனையில் பயன்படுத்துகின்றார்கள். மணித்துளிகள் நகர தாக்குதல்களும் உச்சம் பெறுகின்றது ஆனந்தபுர மண்ணில் இருந்து தலைவர் அவர்களை பத்திரமாக மீட்டுக்கொண்டு செல்கின்றார்கள் சிறப்பு போராளிகள்.இன்னிலையில் ஆனந்த புரம் மண்ணில் நின்று போராளிகள் சமராடிக்கொண்டிருக்கின்றார்கள் அவர்களை மீட்டெடுக்கமுடியாத நிலையில் எதிரியின் இறுக்கமான சூள்நிலை இன்னிலையில் காயம் அடைந்த பிரிகேடியர் தீபன் அண்ணாவினை பின்தளத்திற்கு கொண்டு செல்லவேண்டிய தேவை அங்கங்கு ஸ்ரீலங்காப்படையினர் ஊடுருவிவிட்டார்கள் தீபன் அண்ணா காயமடைந்த நிலையில் ஒருநாள் அதிகாலை கொண்டு செல்லப்படுகின்றார் அன்று செல்லும் வளியில் ஸ்ரீலங்காப்படையினரின் பாரிய தாக்குதல் ஒன்றிற்கு முகம் கொடுத்து அதில் தாக்குதல் நடந்தேறுகின்றது. அந்த உக்கிர தாக்குதலில் பிரிகேடியர் தீபன் அண்ணா அந்த மண்ணினை முத்தமிடுகின்றார் .தீபன் அண்ணா உள்ளிட்ட போராளிகளை அழிக்க எதிரியவன் பயன்படுத்திய நச்சுக்குண்டுகள் என்பதை இன்றும் உறுதிசெய்கின்றோம்.
தடைசெய்யப்பட்ட பல்வேறு குண்டுகளையே சிங்கள படையினர் களமுனையில் பயன்படுத்தி இந்த இனஅழிப்பு போரினை நடத்தினார்கள்.இவ்வாறு அன்று ஆனந்தபுரம் மண்ணில் பல வீரத்தளபதிகள் வரலாறாகின்றார்கள் ஆனந்தபுரத்தில் இருந்து தலைவர் சென்ற பிறகு அந்த மண்ணில் முன்னூறு வரையான போராளிகள் நின்று தாக்குதல்களை தொடுக்கின்றார்கள் அவர்களுக்கான இறுதி கட்டளை நீங்கள் உடைத்துக்கொண்டு வரமுடிந்தால் வாருங்கள் என்றதுதான் அந்த கட்டளை காயமடைந்த போராளிகளை காப்பாற் முடியாது இறந்தவர்கள் அந்தந்த இடங்களில் விடப்படுகின்றார்கள் இதில்தான் எதியின் முற்றுகை வலயத்தினை ஊடறுத்து நூறுவரையான போராளிகள் தாக்குதலை நடத்திக்கொண்டு அந்த இடங்களை விட்டுவெளியேறுகின்றார்கள் அதாவது சிறு சிறு அணிகளாக அந்தபோராளிகள் களமுனையினை விட்டு வெளியேறுகின்றார்கள்.ஏனைய போராளிகள் எதிரியின் தொடர் எறிகணை மழையிலும் நச்சுக்குண்டு வீச்சிலும் வீரச்சாவினை அடைகின்றார்கள் அவர்களது உடலங்கள் எதிரியினால் கைப்பற்றப்படுகின்றது.
அவைதான் ஆனந்தபுரம் மண்ணில் எரியால் சிதைக்கப்பட்ட உடலங்கள் இதில் இன்னும் ஒரு நிகழ்வு நடந்தேறுகின்றது இந்த பகுதியில் இறுதியில் காயம் அடைந்த நிலையில் இருந்த போராளிகளை ஸ்ரீலங்காப்படையினர் உயிருடன்பிடித்து சித்திரவதை செய்கின்றார்கள்.இதிலும் எத்தனையோ நிகழ்வுகள் நடந்தன.
இது இவ்வாறு ஆனந்தபுரம் மண் ஸ்ரீலங்காப்படையினரின் நெருப்பு மழையினால் நனைந்து சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது .இவ்வாறான நிலையில்தான் படையினர்; பலத்த இழப்புக்களுக்கு மத்தியில் ஆனந்தபுரம் மண்ணினை பிடிக்கின்றார்கள்.தீபன் அண்ணா எத்தனையோ களங்களை கண்ட தளபதி மட்டுமல்லாமல் எத்தனையோ பெயர்குறிப்பிட்டும் குறிப்பிடாமலும் நடத்தப்பட்ட தாக்குதல்களின் வெற்றிகளுக்கு பின்னாலும் அவரது கரங்கள் இருக்கின்றன.
வடபோர் முனையின் கட்டளைத்தளபதியாக இருந்து அவர் ஆற்றிய சாதனைகள் சாதராணமானவையல்ல தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் அவருக்கென்றொரு தனி வரலாறு எழுதும் அளவிற்கு அவரது திறமைகள் எதிரியினால் கூட வியந்துபாக்கப்பட்டவை அந்த சிறப்பு மிக்கதளபதியின் வீரச்சாவு நிகழ்வு மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் அன்று நிகழ்தேறுகின்றது அந்தநினைவூகளை என்றும் மறக்கமுடியாது.
(நன்றி. தாய்த்தமிழ்..)

எந்த பத்திரிக்கையும் அணுக்கழிவைப் பற்றி மட்டும் பேசக்கூடாது என்று சத்தியம் செய்து இருப்பது

                            







தினம் அணு உலையின் பயன்களைப் பற்றி பத்திரிக்கைகளில் பக்கம் பக்கமாக படித்து எல்லாம் அறிந்த விஞ்ஞானியைப் போன்று நண்பருக்கு விளக்கி சொல்லும்போது எனக்கே மிகவும் பெருமையாக இருந்தது. எல்லாவற்றையும் பொறுமையாக கேட்ட நண்பர் கடைசியில் அதிலிருந்து வரும் கழிவுகளை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே என்று ஒரு விடை தெரியாத கேள்வியை எழுப்பினார். அப்பொழுது தான் எனக்கே உரைத்தது நான் படிக்கும் எந்த பத்திரிக்கையும் அணுக்கழிவைப் பற்றி மட்டும் பேசக்கூடாது என்று சத்தியம் செய்து இருப்பது போன்று அதைப் பற்றி மட்டும் எந்த செய்தியும் எழுதுவதில்லை என்பது.

அதனால் என்ன நாமே ஆராய்ச்சியில் இறங்கிடலாம் என்று ஆறாயத் தொடங்கினோம். பின்னர் தான் தெரிந்தது அணு உலையில் இருந்து வரும் மின்சாரம் எல்லாம் பக்க உற்பத்தி தான், அங்கு நடக்கு மொத்த உற்பத்தியே அணுக்கழிவு தான் என்பது. அதற்கு எதற்கு அணு உலை என்று பெயர் வைத்திருக்கிறார்களோ, அணுக்கழிவாலை என்றே பெயர் வைத்து இருக்கலாம்.

ஒவ்வொரு அணு உலையில் இருந்தும் ஆண்டிற்கு 20 முதல் 30 டன் அணுக்கழிவு வெளிப்படுகிறது. இந்த அணுக்கழிவுகளை மூன்றாக பிரித்திருக்கிறார்கள். முதலாவது அதிகதிரியக்க கழிவு (High Level Waste), இரண்டாவது டிரான்சுரானிக் கழிவு (Transuranic Waste), மூன்றாவது குறைகதிரியக்க கழிவு (Low Level Waste).
அணுக்கழிவுகளில் அதிகதிரியக்க கழிவு வெறும் ஒரு சதவிகிதமே, ஆனால் உலகில் வெளிவரும் கதிரியக்கத்தில் 95 சதவிகிதம் இந்த அதிகதிரியக்க கழிவுகளில் இருந்து தான் வெளிவருகிறது. அணு உலையில் பயன்படுத்தப்பட்ட எரிபொருள் கழிவு தான் இந்த அதிகதிரியக்க கழிவு.

இரண்டாவதான டிரான்சுரானிக் கழிவு உரேனியத்தைவிட கனஉலோகங்கலான புளுட்டோனியம், நெப்டுனியம் போன்றவைகளை உள்ளடக்கியது. குறைகதிரியக்க கழிவுகள் பெரும்பாலும் உடைகள், நீர் வடிகட்டிகள், குழாய்கள் மற்ற அணு உலை அன்றாடப் பொருள்களை உள்ளடக்கியன. இவற்றிலிருந்து வரும் கதிரியக்க அளவு மற்ற கழிவுகளை விட குறைந்த அளவு எனினும், நமக்கு உடனடி ஆபத்து விளைவிக்கும் அளவிலானதே.

செறிவூட்டிய உரேனியத்தை சிறு சிறு உருண்டைகளாக நீள தடிக்குள் நெருக்கமாக அடுக்கி அணு உலை எரிபொருள் தயாரிக்கிறார்கள். இந்த எரிபொருள் அணு உலைக்குள் ஒரு வருடம் எரிந்த பின்னர் எரிதிறன் குறைந்து விடுகிறது என்று கழிக்கப்பட்டு விடுகிறது. இப்படி கழிக்கப்படும் பயன்படுத்தப்பட்ட எரிபொருள் மிகவும் அபாயகரமான அளவு கதிரியக்கம் உடையது. இந்த அதிகதிரியக்க கழிவுகள் அருகில் பாதுகாப்பு இன்றி சில வினாடிகள் இருந்தாலே உடனடி மரணம் தான். அணு உலை எரிபொருள் பயன்படுத்தப்படும் போது யுரேனியம்-235 அணுக்கள் பிளக்கப்பட்டு சீசியம், சிராண்டியம் போன்ற கன உலோகங்கள் தோன்றுகின்றன. இதனால் எரிபொருள் பயன்படுத்துவதற்கு முன்னர் இருந்த கதிரியக்க அளவை விட பயன்படுத்தப்பட்ட பின் கதிரியக்க அளவு பத்து இலட்சம் மடங்கு அதிகமாக இருக்கும்.

பயன்படுத்தப்பட்ட எரிபொருள் பல ஆண்டுகளுக்கு கொதிக்கும் வெப்ப நிலையில் இருக்கும். இவற்றை செயற்கையாக குளிரூட்டப்பட்ட தண்ணீர் குளத்திற்குள் சேகரித்து வைப்பார்கள். இது போன்ற குளங்கள் ஒவ்வொரு அணு மின் நிலையத்திலும் கட்டப்பட்டிருக்கின்றன. இவ்வாறு பத்து முதல் இருபது ஆண்டுகள் குளிரூட்டிய பின் மறுசீராக்கலுக்கு (reprocessing) அனுப்புவார்கள்.

ஒரு வழியாக மறுசீராக்கலுக்குப் பின் பயன்படுத்தப்பட்ட எரிபொருளில் இருந்து அனைத்து கதிரியக்கமும் வெளியேறி சாதாரண கழிவாகி விடுமா என்று எதிர்பார்த்தால் அதுவும் இல்லை. இந்த மறுசீராக்கலே ஒரு கண்கட்டி வித்தை போல தான் இருக்கிறது. பயன்படுத்தப்பட்ட எரிபொருளை துண்டு துண்டாக வெட்டி நைட்ரிக் அமிலத்தில் கரைக்கிறார்கள். பின்னர் இந்த கரைசலில் இருந்து புளுட்டோனியத்தையும் (ஆயுதம் செய்ய) உரேனியத்தையும் பிரித்து எடுக்கிறார்கள். எஞ்சி இருக்கும் கரைசல் மிகுந்த கதிரியக்கம் உடைய கழிவாக இருக்கிறது. சிறிதளவு இருந்த கழிவை கரைத்து அதிகளவாக்கிவிட்டு கதிரியக்க வீரியத்தை குறைத்து விட்டோம் என்கிறார்கள். ஆனால் இப்போழுது கழிவின் அளவு அதிகரித்து விட்டதே, ஆதலால் மொத்த கதிரியக்க அளவு அதே தானே இருக்கப்போகின்றது என்று வினவினால் பதில் தராமல் மழுப்புகிறார்கள்.

எப்போழுது தான் இந்த கதிரியக்கம் முழுக்க ஒழிந்து பயன்படுத்தப்பட்ட எரிபொருள் சாதாரண குப்பையாக மாறும் என்று கேட்டால் சுமார் ஏழரை இலட்சம் ஆண்டுகள் பொறுங்கள் என்று பொறுமையாக பதில் தருகிறார்கள். நாம் அதிர்ச்சி அடைந்து நன்றாக சரி பார்த்து விவரமாக கூறுங்கள் என்று வினவினால் பாதி ஆயுள் (half life) என்று விவரிக்க தொடங்கி விட்டார்கள்.

கதிரியக்க மூலகங்கள் தொடர்ந்து கதிரியக்கத்தை பரப்பி வருவதால் நாளடைவில் வலுவிழந்து படிப்படியாக பாதியாக அளவில் குறைந்து விடுகின்றன அல்லது வேறு மூலகங்களாக மாறிவிடுகின்றன. இப்படி கதிரியக்க மூலகங்களின் வலு பாதியாக குறைவதற்கான காலத்தை அரை ஆயுள் காலம் என்று கணக்கிடுகிறார்கள். அரை ஆயுள் காலத்தை வைத்து கதிரியக்க கன உலோகங்கள் எவ்வளவு விரைவாக தேய்கின்றன என்று கணித்துவிடலாம்.

பயன்படுத்தப்பட்ட எரிபொருளில் இருக்கும் புளுட்டோனியம்-239 கனஉலோகத்தின் அரை ஆயுள் 24,000 ஆண்டுகளாகும். இந்த 24,000 ஆண்டுகளுக்கு பின்னர் புளுட்டோனியம்-239, யுரேனியம்-235 ஆக மாறுகிறது. இந்த யுரேனியம்-235 கனஉலோகத்தின் அரை ஆயுள் 7,03,800 ஆண்டுகளாகும். பின்னர் இந்த யுரேனியம்-235 தோரியம்-231 ஆக மாறுகிறது. இப்படி படிப்படியாக பல கனஉலோகங்களாக மாறி இறுதியில் ஈயம்-207 என்கிற கதிரியக்கம் இல்லாத கொடிய நச்சுப்பொருளாக நிலைப்பெறுகிறது.
இவ்வாறு இலட்ச்கணக்கான ஆண்டுகள் கதிரியக்கத்தோடு இருந்தால் அதுவரை எப்படி இந்த கழிவுகளை நாம் பாதுகாப்பது? அரசாங்கம் எல்லாம் எங்களுக்கு தெரியும், நாற்பது ஆண்டுகளாக நாங்கள் பாதுகாக்கவில்லையா என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு என்ன தெரியும் என்று நமக்கு தானே தெரியும்.

ஜூலை 1998 இல் நம் சென்னையில் மத்திய புலனாய்வு அதிகாரிகள் மூன்று பொறியாளர்களை கைது செய்தார்கள். என்ன என்று விசாரித்தால் எட்டு கிலோ யுரேனியம் வைத்து இருந்தார்களாம். அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து திருடி வந்துவிட்டார்களாம்.

நவம்பர் 7, 2000 அன்று சர்வதேச அணு ஆற்றல் அமைப்பு இந்தியாவில் காவல்துறை 25 கிலோ யுரேனியம் கடத்த முயன்ற இரு கடத்தக்காரர்களை கைது செய்திருப்பதாக அறிவித்தது.

டிசம்பர் 2009 இல் மும்பை காவல்துறை ஐந்து கிலோ யுரேனியம் வைத்திருந்ததாக மூவரை கைது செய்தது.

இவை எல்லாம் நம் சிற்றறிவிற்கு எட்டியவைகள். நாம் அறியாமல் இது போன்று எவ்வளவு யுரேனியம் கடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறதோ தெரியவில்லை. உலகத்திலேயே ஒரு பலவீனமான பாதுகாப்பு அமைப்பை வைத்துக்கொண்டு, மேலும் கையூட்டு கொடுத்தால் எதையும் செய்து கொடுக்கின்ற அதிகாரிகளையும் வைத்துக்கொண்டு நம்மால் எப்படி ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு இந்த அணுக் கழிவுகளை பாதுகாக்க முடியும்? இதெல்லாம் நமக்கு தேவையற்ற சுமைகள் என்றே தோன்றுகிறது.

மின்சாரம் வேண்டுமா இல்லை புற்றுநோய் வேண்டுமா என்று கேட்டால் மின்சாரம் எங்களுக்கு, புற்றுநோய் உங்களுக்கு என்று தெளிவாகத்தான் பதில் சொல்கிறார்கள் நகரவாசிகள். அவர்களுக்கு தெரியவில்லை பாதிப்பு என்பது அணு உலை இருக்கின்ற ஊர்களுக்கு மட்டுமல்ல, அங்கிருந்து ஒரு ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்காவது பாதிப்பிருக்கும் என்று. இரசியாவில் செர்நோபில் விபத்து நடந்த போது 1500 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் சுவிடன் நாட்டில் ஏற்பட்ட பாதிப்புகளை நாம் மறந்து விட முடியாது.

இப்படித்தான் முதன் முதலில் கதிரியக்க பொருள்கள் கண்டறியப்பட்ட போது ஆர்வமாக முகப்பூச்சு, தண்ணீர், மருந்து என்று அனைத்திலும் பயன்படுத்தினர். இப்போழுது யாரையாவது சிறிது உரேனியத்தை முகத்தில் பூசிக்க சொல்லுங்கள் பார்க்கலாம். அது போன்று தற்போது ஐம்பது வருடமாக அணு ஆற்றல் என்று ஆர்வமாய் அலைந்து கொண்டிருக்கிறார்கள். அனேகமாக நூறு வருடத்திற்கு பின்னால் உலகத்தில் எங்குமே அணு உலைகள் இல்லாமல் போய்விடலாம். ஆனால் அணு உலைகள் வெடிக்கும் பட்சத்தில் உலகமே இல்லாமல் போய்விடும்.

சாகுல் அமீது