Like me

Wednesday, March 14, 2012

இலங்கை பிரமுகர்கள் சொல்லாமல் கொள்ளாமல் தமிழகம் வரக் கூடாது’- ஜெயலலிதா…




இலங்கை பிரமுகர்கள் சொல்லாமல் கொள்ளாமல் தமிழகம் வரக் கூடாது’- ஜெயலலிதா…

இனி தமிழக அரசிடம் ஆலோசனை கேட்காமல் இலங்கைப் பிரமுகர்களை தமிழகத்திற்குள் மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது.
மேலும் இலங்கைப் பிரமுகர்கள் அடிக்கடி தமிழகம் வருவதையும் மத்திய அரசு ஊக்குவிக்கக் கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதம்:
இலங்கைத் தமிழர்கள் மற்றும் அவர்களின் உரிமைகள் தொடர்பாக இலங்கை அரசு நடந்து கொண்டு வரும் விதம் குறித்து தமிழக மக்கள் முழுமையாக அறிந்துள்ளனர். ஈழத் தமிழர்கள் கெளரவமாகவும், கண்ணியத்துடனும் வாழ இலங்கை அரசு வழி செய்யவில்லை என்பதே தமிழக மக்களின் ஒட்டுமொத்தக் கருத்தாகும். மேலும் சிங்களர்களுக்கு இணையான அந்தஸ்தை இலங்கை அரசு தமிழர்களுக்கு வழங்கவில்லை என்பதும் தமிழகத்தின் கருத்தாகும்.
இந்தப் பின்னணியில் இலங்கையைச் சேர்ந்த பல முக்கியப் பிரமுகர்கள், முக்கியஸ்தர்கள் தனிப்பட்ட பயணமாக, மாநில அரசுக்கு எந்தவிதத் தகவலையும் கூட தராமல் அடிக்கடி வந்து செல்ல ஆரம்பித்துள்ளனர். அப்படிப்பட்ட ஒரு வருகையின்போது ராஜபக்சேவின் மைத்துனர் திருக்குமரன் நடேசன் என்பவர், 9.1.2012 மற்றும் 10.1.2012 ஆகிய நாட்களில் ராமேஸ்வரம் வந்துள்ளார். அப்போது அவர் சிலரால் தாக்கப்பட்டுள்ளார்.
அவரது வருகை குறித்து இந்திய அரசிடமிருந்தோ, இலங்கை அரசிடமிருந்தோ எந்தவிதமான தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் எடுக்க முடியவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக தென்னிந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதர், தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கும், மத்திய வெளியுறவுத்துறை இணைச் செயலாளரும் எழுதியுள்ள கடிதம் எனது பார்வைக்கு வந்தது. அந்த கடிதத்தின் தொணி, அதில் பிரயோகிக்கப்பட்டுள்ள வார்த்தைகள், தேவையில்லாதது, நியாயமற்றது, ஏற்றுக் கொள்ள முடியாதது.
இலங்கையைச் சேர்ந்த அரசு அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள், விஐபிக்கள் மாநில அரசுக்குத் தகவல் கொடுக்காமல் வந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் எடுக்க முடியாது. இதுதொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்திற்கும், உள்துறை அமைச்சகத்திற்கும் கடந்த 16.9.2011, 24.2.2012 ஆகிய நாட்களில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. எனவே, தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு, இலங்கையைச் சேர்ந்தவர்கள் அடிக்கடி தமிழகம் வருவதை மத்திய அரசு ஊக்கம் தரக் கூடாது, ஊக்குவிக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்,” என்று கூறியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

நாம் போராடியே ஆக வேண்டும்

                   



நாம் போராடியே ஆக வேண்டும்- இல்லையேல் சிறிலங்கா என்ற நாட்டிற்குள் இருந்து நாம் அழிந்து விடுவோம்!..

மார்ச் 17! பிரான்சில் மாபெரும் ஒன்று கூடல்! 2ஆம் உலகப்போரின் உக்கரத்தில் இருந்து விடுபட்டு 64 வருடங்கள், அந்தப்போரின் உக்கரத்தில் உலகம் கண்ட அழிவுகள் – இனிமேல் இனங்களின் அழிவுகள் வேண்டாம் என்றும் நாடுகளுக்கு இடையே நல்லுறவு உருவாக்கு ஐக்கிய நாடுகள் சபை உருவானது. அதே ஐக்கிய நாடுகள் சபை மக்களின் உரிமையை பாதுகாக்க மனிதவுரிமை சாசனத்தை எழுதியது.

இந்த மனிதவுரிமை சாசனத்துக்கு அமைய மக்களும் தாம் வாழும் நாடுகளில் எல்லா மக்களையும் போல் தாங்களும் உரிமையுடன் வாழலாம் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார்கள்.

ஆனால் மக்கள் அடைந்தது ஏமாற்றமே! 64 வருடங்களாக தமிழர், பாலஸ்தீனர், திபெதினர், கூர்திச்தான் மக்கள், பயாப்ரா, ருவாண்டா, டார்பூர், ச்செனி, கம்போடிய, யூகோசொல்வேகிய, லிபியா, துனிசியா, அல்ஜெரியா, எகிப்து, சூடான், காங்கோ, லிபேரியா, இராக், ஆப்கானிஸ்தான், இன்று சிரியா என்று படுகொலைகளும், இனப்படுகொலைகளும் தொடரும் கதைகள்.

எதை வேண்டாம் என்று கூறி ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டதோ, அதையே ஐக்கிய நாடுகள் சபையை இயக்கும் பாதுகாப்பு சபை நாடுகளாகிய அமெரிக்க, ரஷ்யா, சீனா, பிரிந்த்தானியா, பிரான்சு, இந்த படுகொலைகள், இன அழிப்புகளை தடுக்க முடியாமல் அதற்கு துணை போவது போல செய்யும் செயல்பாடுகள், இந்த ஐக்கிய நாடுகளின் சபையை கேள்வி குறியாக ஆகி விட்டு நிற்கிறது.

இந்த இன அழிப்புகள் தொடராமல் இருக்க, மனிதவுரிமை சாசனத்தில் எழுதியது போல் சகல இன மக்களும் சுய நிர்ணய உரிமையுடன் எல்லா இன மக்களுக்கும் சமமாக வாழ பிரான்சில் பாரிஸ் நகரில் மார்ச் 17 மாலை 2h00 மணிக்கு பர்பஸ் (Barbes ligne 2-4) மெட்ரோவுக்கு அருகில் அணைத்து இன மக்களுடன் சேர்ந்து உலக மக்களின் சுய நிர்ணய உரிமைகளை வலியுறுத்தி மாபெரும் ஒன்றுகூடல்.

இன்று அமெரிக்க தமிழர்களின் உரிமைகளை காக்க சிறி லங்கா அரசின் ஆணைகுழு சமர்பித்த சில தீர்மானங்களை நடைமுறை படுத்த வேண்டும் என்று கூறி நிற்கும் நிலையில், 64 வருடங்களாக நடைபெற்ற இன அழிப்பை பற்றி அதில் இருந்து தமிழ் இன மக்களை மீட்க இந்த சர்வதேச நாடுகள் கற்று அறிய வேண்டியது நிறையவே இருக்கிறது என்று உலக சகல இன மக்களுடன் சேர்ந்து போராடுவோம்.

இன்று நாம் போராடியே ஆக வேண்டும்- இல்லையேல் சிறி லங்கா என்ற நாட்டிற்குள் இருந்து நாம் அழிந்து விடுவோம்.

இன்று போராட்டம் சர்வதேசத்தின் முன் நிற்பதால் தமிழ் இனமே சகல இனமக்களுடன் சேர்ந்து எல்லா இன மக்களின் விடுதலையை வலியுருந்துவோம் வாருங்கள்.

தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம் என்று இந்த உலகத்திற்கு வலியுருதிடுவோம்.

மார்ச் 17 உலக மக்கள் சகல காலனித்துவ ஆட்சி முறையில் இருந்து விடுதலை தேடி நிற்கும் நாள்.

- தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு.

மனங்கள் மாறும்வரை............




ஆண்களின் மனங்கள் மாறும்வரை அடிமைத்தனம் என்றும் மாறிவிடாது !!!

சமுதாயத்தில் ஒவ்வொருவரின் மனதிலும் பெண் என்பவள் வெறும் காமத்துக்கான வடிகால் அல்ல. அவளும் நம்மைப் போன்றே உணர்ச்சிகளும் உருவமும் கொண்ட ஒரு உயிரே என்ற பார்வை உண்டாக வேண்டும்.
அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை பெண்கள் அடிமைகளாகவும், போகப் பொருளாகவும், ஆண்களுக்குக் கட்டுப்பட்டவர்களாகவும் மட்டுமே சமுதாயத்தால் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


இதில் சமுதாயம் என்பதற்கு ஆண்கள் மட்டுமே என்று எடுத்துக் கொள்ள வழியின்றி பெண்ணியத்துக்கு எதிரியாய் சில பெண்களும் அமைந்திருப்பது ஒளிந்திருக்கும் ஒரு உண்மையாகும். ஆதலால் பெண்ணியம் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் கூறமுடியும்.

இன்று சில பெண்கள் அடங்க மறுத்து அத்துமீறுதல் என்பது போல் கற்பு நெறி, பெரியவர்களை மதித்தல், குடும்பத்தைக் கட்டிக் காத்தல், கணவனை அனுசரித்தல் போன்ற எல்லாவற்றையும் பெண் விடுதலை என்ற பெயரில் சுக்கு நூறாக்கித் திரியும் தான்தோன்றித்தனமான தலைக் கர்வம்தான் பெண்ணியமா?


இல்லை ஆணுக்குப் பெண் சமமென முழங்கி இன்று பல பெண்கள் எமது கலாசாரத்தைத் தொலைத்துத் திரிவதுதான் பெண்ணியமா? எடுத்ததற்கெல்லாம் சண்டையிட்டு இதுதான் பெண்விடுதலையென்று விவகாரத்து பெற்றுச் செல்வதுதான் பெண்ணியமா?. இல்லை இஷ்டப்படி வாழ நினைப்பதுதான் பெண் விடுதலையா?


பெண்களை அடிமைகளாக, ஆணுக்குக் கட்டுப்பட்டவர்களாக நடத்தாமல் ஆணும் பெண்ணும் சமமென்ற நிலை வேண்டுமென்பதுதான் பெண்ணியமாகும். ஆதிகாலத்தி லிருந்து பெண்ணுக்கு மட்டுமே உரித்தானதாய் வரையறுக்கப்பட்ட, சில பழமையான அடிமைத் தனங்களிலிருந்து பெண்மையை மீட்பதுதான் பெண்ணியம்.


நாகரிக வளர்ச்சிகள் உச்சத்தைத் தொடப்போகும் இக்காலத்திலும் பெண்ணியம் பேசுவதன் அவசியம் மட்டும் மாறாமலிருப்பதன் மர்மம்தான் என்ன?


இன்று ஆணுக்கு நிகராய் பெண்கள் கால் பதிக்காத துறைகளே இல்லை. ஆணைவிட அதிகமாய் சம்பாதிக்கும் பெண்களையும், ஆண்களுக்கே மேலதிகாரியாய் திகழும் பெண்களையும், சர்வ சாதாரணமாய் ஒவ்வொரு அலுவலகத்திலும் பார்க்கமுடிகிறது. ஆட்சிப் பொறுப்பலிருந்து ஆகாய விமானம் வரை பெண்கள் சாதித்திருந்தாலும் இன்னும் ஏன் ஒவ்வொரு வீட்டின் சமையலறையும் பெண்ணின் சொத்தாக அவள் கால்களிலேயே கட்டப்பட்டிருக்கிறது?


திருமணமாகி குடும்ப வாழ்க்கையில் கட்டுண்டிருக்கும் யாராவது ஒரு பெண்ணாவது (பெண்ணியம் பேசிக்கொண்டிருப்பவர்களையும் சேர்த்துதான்) நான் எந்தவொரு வகையிலும் ஆணைச் சார்ந்தோ அவனுக்குக் கட்டுப்பட்டோ இல்லாமல் சரிநிகராகத்தான் இருக்கிறேனென்று மனசாட்சியில் கைவைத்துக் கூறமுடியுமா? அப்படியென்றால் எங்கேயிருக்கிறது பெண்ணியத்தின் எதிரி? நமது கலாச்சாரத்திலா? சமூகத்திலா? இல்லை நம் ஒவ்வொருவரின் மனதுக்குள்ளுமா?


எவ்வளவுதான் சாதித்தாலும் சமுதாயத்தில் பெண்களின் மீதான பார்வையில் இதுவரை பெரிதாய் மாற்றங்கள் ஏதுமில்லை. அந்தக் காலத்தில் பெண் விடுதலைக்காகப் போராடியவர்கள் பெண் கல்விக்கே முக்கியத்துவம் அளித்தார்கள். பெண்கள் கல்வியில் முன்னேறினால் பெண் விடுதலை பெற்று பெண்ணியமும் பேணப்படுமென்று நம்பினார்கள். ஆனா, இன்று பெண்கள் கல்வியில் முன்னேறியும் பெண் விடுதலை மலர்ந்ததாய்த் தெரியவில்லை.


இன்றும் பெண்களுக்கெதிரான வன் கொடுமைகள் உலகம் முழுவதும் அரங்கே றிக்கொண்டேதான் இருக்கின்றன. பெண்களுக்கெதிரான பாலியல் கொடுமைகளுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு உண்டாகாத வரையில் பெண் விடுதலையும், பெண்ணியம் என்பதும் வெறும் பேச்சில் மட்டுமே இருக்கக்கூடும். பெண் என்றால் அவள் மீது விழும் சமூகப் பார்வை பெரும்பாலும் பாலியல் சம்பந்தப் பட்ட வக்கிர உணர்வாகவே இருப்பது இயற்கையாகவே உருவானாதா? இல்லை, வாழ்க்கைமுறை என்ற பெயரில் ஆணாதிக் கத்தால் உருவாக்கப்பட்டதா? அன்று முதல் இன்றுவரையிலும் திரைப்படங்கள், விளம் பரங்கள் போன்ற ஊடகங்களில் எல்லாம் பெண் என்பவள் வெறும் போகப் பொருளாகவே காட்டப்படும் நிலை மாறாதது ஏன்?


இன்று பெண்ணியம் பேசும் எந்தவொரு ஆணாவது உண்மையான மனதுடன் பெண் விடுதலையை ஆதரிப்பதாய் நம்ப முடியுமா? பெண் என்பவள் ஆணுக்குக் கட்டுப்பட்டவள், என்னதானிருந்தாலும் பெண் என்பவள் ஆணுக்குக் கீழேதான் குடும்பத்தில் சமைப்பது, துவைப்பது, பிள்ளைகளை வளர்ப்பது போன்ற பெண்ணுக்காய் வரையறுக்கப்பட்ட வேலைகளைப் பெண்ணே செய்ய வேண்டும் என்ற எண்ணங்கள் ஆண்களின் மனதில் சிலரிடம் வெளிப்படையாகவும், பெண் விடுதலை பேசும் சிலரிடம் ஆழ் மனதிலும் ஓடிக்கொண்டேதான் இருக்கின்றன.


ஏழை, பணக்காரன், படித்தவன் என்று எந்தவொரு வித்தியாசமுமின்றி எல்லா ஆண்களுமே இன்றும் தங்கள் மனைவியின் மீது தங்கள் விருப்பங்களைத் திணிப்பதுடன் ஏதோவொரு வகையில் அவர்களைக் கட்டுப்படுத்தியே வைத்திருக்கின்றனர். விருப்பப்பட்ட இடத்துக்கு, விருப்பப்பட்ட நேரத்தில், விருப்பப்பட்டவர்களுடன் போய் வரும் ஆண்கள் கூட்டம் தங்கள் மனைவியையோ இல்லை மகளையோ அவ்வாறான சுதந்திரத்திற்கு அனுமதிப்பார்களா? ஆணுக்கு ஒரு பார்வை, பெண்ணுக்கு ஒரு பார்வை என்பதே பெண்ணடிமைத் தனத்தின் ஆணி வேராக இருக்கக்கூடும். பெண்ணடிமைத் தனம் என்பது நமது பரம்பரை வழியாக நம் புத்திக்குள் புரையோடிப் போயிருக்கும் சமுதாய நோயேயன்றி வேறேதுமில்லை.


வெறுமனே பேசுவதாலும், எழுதுவதாலும் மட்டுமே மாறிவிடாது இந்த நிலை. என்னால் நிச்சயமாய் கூறமுடியும் பெண் விடுதலையும் பெண்ணிய வளர்ச்சியும் முழுவதுமாய் பெண்கள்கையில் மட்டுமேயில்லை, ஒவ்வொரு ஆண் மகனும் தன் தாயை, மனைவியை, மகளை எப்போது ஒரு நல்ல நண்பராய் நடத்த ஆரம்பிக்கிறானோ அப்பொழுதுதான் பெண்ணியம் மலரத் தொடங்கும்.



சமுதாயத்தில் ஒவ்வொருவரின் மனதிலும் பெண் என்பவள் வெறும் காமத்துக்கான வடிகால் அல்ல. அவளும் நம்மைப் போன்றே உணர்ச்சிகளும் உருவமும் கொண்ட ஒரு உயிரே என்ற பார்வை உண்டாகவேண்டும். ஆண்டாண்டு காலமாய் நம் சமூகத்தில் ஆழ வேரூன்றியிருக்கும் பெண்ணடிமைத் தனத்தை ஒரே நாளில் ஒழித்து விட இயலாதுதான்.

கொலைகார மகிந்தாவிற்கு ஆசி வேண்டி .........

            


நல்லூர் கந்தன் ஆலயத்தில் கொலைகார மகிந்தாவிற்கு ஆசி வேண்டி நடத்தப்பட்ட விசேட பிரார்த்தனை நிகழ்வு!..

இலங்கை::ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை போர்க்குற்ற விசாரணைகளிலிருந்து காப்பாற்றும் படி ஆசி வேண்டி தமிழ் மக்களின் முக்கிய இராசதானிகளில் ஒன்றான நல்லூரில் தமிழ் மக்களின் முக்கிய தலங்களில் ஒன்றான நல்லூர் கந்தன் ஆலயத்தில் விசேட பிரார்த்தனை ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

நல்லூர் கந்தன் ஆலயத்தில் இலங்கை ஜனாதிபதியின் பாதுகாப்பு வேண்டி நடத்தப்பட்ட இந்த விசேட பிரார்த்தனை நிகழ்வு இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது. அத்துடன் நாகவிகாரையிலும் ஜனாதிபதியை பாதுகாக்கும் பொருட்டு விசேட பிரார்த்தனை நிகழ்வு இடம்பெற்றது. பெளத்த பிக்குகள் ஜனாதிபதியை காப்பாற்றும்படி பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.

இந்த நிகழ்வை தமிழ் பௌத்த சங்கம், முப்படையினர் மற்றும் நாளைய இளைஞர் அமைப்பு என்பன ஏற்பாடு செய்திருந்தன. நல்லூர் கந்தன் ஆலயத்தில் காலையிலும் நாகவிகாரையில் மாலையிலும் இந்தப் பிரார்த்தனைகள் இடம்பெற்றன. இதன் பொழுது ஐக்கிய நாடுகள் சபையின் போர்க்குற்ற விசாரணையிலிருந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை காப்பாற்றும்படி பிதார்த்திக்கப்பட்டது. இந்த நிகழ்வுகளில் இலங்கை இராணுவத்தினரும் காவல்துறையினரும் பெருமளவில் தமிழ்மக்கள், அரச ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

தொடர்கின்றது .......




தொடர்கின்றது சிங்களத்தின் கொலைவெறி..!!!


ஜெனிவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை அமர்வுகளில் சிறீலங்காவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தமிழ் மக்கள் குரல் எழுப்பிக்கொண்டிருந்த வேளையிலும் சிங்களக் கொடுங்கோல் இராணுவத்தினர் தமிழ் மக்களை சீண்டிச் சின்னாபின்னமாக்கி சூறையாடும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்ட நிலைமை வர்ணிக்கமுடியாத கொடுமை.

நெடுந்தீவு 10ம் வட்டாரத்தில் பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

நெடுந்தீவு 6ம் வட்டாரத்தைச் சேர்ந்த லக்சனா வயது 13 என்ற குறித்த மாணவி கடந்த 3ம் திகதி சனிக்கிழமை காலை கடைக்குச் சென்றபின்னர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில் குறித்த சிறுமி நெடுந்தீவு 10ம் வட்டாரத்தில் கைவிடப்பட்ட வளவு ஒன்றில் தலையில் பலமாக அடித்து படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலும் இவரது சடலத்திற்கு அருகில் வெற்று மதுப் போத்தல்களும் சிறுமியின் உள்ளாடைகள் கிழித்தெறியப்பட்ட நிலையிலும் காணப்பட்டுள்ளன. இராணுவத்தினரும் ஒட்டுக் குழுக்களும் நெருக்கமாக வாழும் நிலையில் இராணுவத்தினரே இந்த கொடுஞ்செயலைப் புரிந்துள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தையடுத்து நெடுந்தீவு மக்கள் கடும் அச்சத்தின் மத்தியில் காணப்படுவது அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், கிளிநொச்சியில் 16வயது மாணவி மீது பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட படைச் சிப்பாய் மீது காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று பெற்றோர் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி நகரில் கடமையாற்றும் சிப்பாய் ஒருவர் 16 வயதான மாணவி ஒருவரை காதலிப்பதாக கூறி அவரை மதவாச்சிக்கு அழைத்துச் சென்று அங்கு நிராதரவாக கைவிட்டுச் சென்றுள்ளார்.

பின்னர் காவல்துறையினர் குறித்த மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 16 வயதுக்குட்பட்ட பெண்களை அவர்களது சம்மதத்துடன் திருமணம் செய்தாலும் கூட அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவது வழமை. எனினும் இந்தச் சிப்பாய் மீது காவல்துறையினர் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருப்பது குறித்து பெற்றோர் குழப்பமடைந்த நிலையில் காணப்படுகின்றனர்.

விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவர் வெள்ளை வானில் கடத்தப்பட்ட சம்பவம் ஒன்று கடந்த 27ம் திகதி திங்கட்கிழமை கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி உதயபுரம் கிழக்கைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான முத்தையா சுப்பிரமணியம் (வயது 60) என்னும் நபரே கடத்தப்பட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பிரிவில் பணியாற்றிய மேற்படிக் குடும்பஸ்தர், இறுதி யுத்தத்தின் பின்னர் இரகசிய தடுப்பு முகாங்களில் வைந்திருக்கப்பட்டு பின்னர், 2010ம் ஆண்டு விடுவிக்கப்பட்டிருந்தார்.

கடத்தல் சம்பவம் நடைபெற்ற தினத்தில் இரவு 9 மணியளவில் வெள்ளைநிற வாகனத்தில் மேற்படிக் குடும்பஸ்தரின் வீட்டுற்கு முன்னால் வந்திறங்கிய இனம் தெரியாத குழுவினர், விலாசம் விசாரிப்பது போல் அக் குடும்பஸ்தரை வீட்டிற்கு வெளியே அழைத்துச் சென்று வீட்டு வாசலில் வைத்து கடத்திச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக அவரது குடும்பத்தினரால் வவுனியா மனித உரிமைகள் அலுவலகத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை இவ்வாறான பல கடத்தல்கள், காணாமல் போதல்கள், பாலியல் வன்கொடுமைகள் நாளாந்தம் தமிழர் தாயகப் பகுதியில் சிங்களத்தினால் நாளும் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. இவற்றில் பல உயிராபத்துகள் கருதி அச்சத்தில் மூடி மறைக்கப்பட்டுவருகின்றன.

இதனைச் சர்வதேசம் கவனத்தில் எடுக்கவேண்டியது மிகமிக அவசியமானது. இலங்கையில் எல்லாம் முடிந்துவிட்டது என்று தமிழர்களுக்கு வதிவிட உரிமை மறுக்கும் நாடுகளே, உரிமை மறுத்து தமிழர்களை நாடுகடத்திவரும் நாடுகளே இலங்கையில் இன்றும் தமிழர்கள் மீது அரங்கேறிவரும் கொடுமைகள் உங்கள் கண்களுக்கும் காதுகளுக்கும் எட்டவில்லையா?
உரியவர்களே விடை உங்களின் மனங்களில்தான். உலகெங்கும் வாழ் தமிழ் மக்களே நாம் சிந்திக்கும் நேரமல்ல இது ஒன்றுபட்டு செயற்படவேண்டிய நேரம்!



நன்றி : ஈழமுரசு

சர்வதேசத்தை நம்புவது.......

            


சர்வதேசத்தை நம்புவது.......

சிறிலங்காவை நோக்கிய அனைத்துலக பார்வைக்கள் மிக உன்னிப்பாக இருக்கின்றன. இந்தப் பார்வை சிறிலங்கா பேரினவாதத்திற்கு எதிரானவையா?அல்லது மஹிந்த இராஜபக்‌ஷவிற்கு எதிரானதா?


சிறிலங்கா மீதான அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகளின் அழுத்தங்கள் மஹிந்த குடும்பத்திற்கு எதிரானவையா அலல்து சிங்கள ஏகாதிபத்தியத்திற்கு எதிரானவையா?



சிறிலங்காவிற்கு எதிராக வரப்போகின்ற தீர்மானங்கள் ஆசியாவில் சீனாவின் ஆழுமைக்கு எதிரான, அல்லது சவால் விடுகின்ற ஓர் பொறிமுறையா? அல்லது சிறிலங்காவில் தமது செல்வாக்கை மையப்படுத்திய நகர்வா?



மேற்கூறப்பட்ட கேள்விகளுக்குள் தமிழர்கள் எங்கே? மேற்குலகிற்கு சீன சார்பு சிங்கள ஆட்சி அல்லது ஆட்சியில் சீன சார்பு தலைவர் இருப்பதே பிரச்சினை. இன்னும் சற்று கூடுதலாக பார்க்கப்போனால் மேற்கத்தைய நலனை புறக்கணிக்கும் ஆட்சியாளர்களே பிரச்சினையே தவிர சிங்கள இனவாதம் பிரச்சினை அல்ல.



ஆனால் ஒரே ஒரு விடயம் என்னவென்றால் சிங்களமும் சரி, சிங்கள பெளத்த பேரினவாதமும் சரி மத ரீதியாக, நட்பு ரீதியாக, நம்பிக்கை ரீதியாக சீன 100 விழுக்காடு சீன சார்பானதே. அதாவது சிங்கள பெளத்த பேரினவாதம் மேற்கினையோ அல்லது இந்தியாவையோ அடிப்படையில் நம்ப தயாராக இல்லை. இதனை மேற்குலகமும் நன்கு புரிந்து வைத்திருக்கும்.



இந்த அடிப்படையில் நீண்டகாலத்தில் இந்திய, மேற்குலக நலன்களை புறக்கணிக்காத ஓர் நம்பிக்கையான நிர்வாக அமைப்பு அங்கு தேவை எனில் அது தமிழர்களின் பிரதேசங்களாஅக்த்தான் இருக்கும். ஆனால் தற்காலிகமாக மேற்குலகத்திற்கு சிங்களத்தினை பயன்படுத்த தேவை தற்போதைய பூகோள, பொருளாதார நெருக்கடிகளில் தவிர்க்க முடியாது.



அனைத்துலகத்தினை நோக்கிய தமிழர்களின் போராட்டம் சில நொடிப்பொழுதுகளில் மாற இடமுண்டா? தமிழர்களை முற்று முழுதாக அனைத்துலகம் கைவிட்ட்டுவிடுமா என்ற கேள்வியும் தமிழ் மக்களிடையே தொக்கி நிற்கின்ற விடயம்தான்.



சிங்கள அரசு இந்தியா மற்றும் மேற்குலகம் சார் நலன்களுக்கும், அழுத்தங்களிற்கும் சரணாகதி அடைந்துவிட்டால் ( சிங்களத்திற்கு இது புதிது அல்ல) தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுவிடுவார்கள் என்பது புறக்கணிக்க கூடிய விடயம் அல்ல. ஏனென்றால் மஹிந்த அரசாங்கம் சாணக்கியம் மிகுந்தது. ஏன் சிங்கள ஆட்சியாளர்களும்தான். ஆகவே தமிழ் மக்களை வைத்து மேற்குலகம் நகர்த்தும் காய்களை தன் மூக்கு போனாலும் பரவாயில்லை என எண்ணும் சிங்களம் மேற்கிடம் சரணாகதி அடையலாம். அந்த சரணாகதியின் போது தமிழர்களுக்கு என்ன கிட்டும்.



மட்டுப்படுத்தப்பட்ட காணி, பொலிஸ் அதிகாரங்களை உள்ளிட்ட பஞ்சாயத்து திட்டமா? அல்லது சில இராணுவ முகாம்களை அகற்றி, சில இராணுவ அதிகாரிகளுக்கு தண்டனை கொடுக்கப்படும் நடவடிக்கையா?



மஹிந்த மேற்குலகிடம் முற்றாக சரணாகதி அடைவதற்கு இரண்டு தேர்வுகள் உள்ளன. ஒன்று தனது கட்சியின் ஆட்சியை காப்பாற்றுவதா? அல்லது தன்னையும் குடும்பத்தினையும் காப்பாற்றுவதா?என்பதே ஆகும்



மேற்குலக நலன்களுக்கு அடி பணிந்தால் எதிர்க்கட்சிகள் ஆட்சியினை கைப்பற்ற அது ஏதுவாக அமைந்துவிடும். மேற்குலகிற்கு அடிபணியாவிட்டால் அது தனக்கும் குடும்பத்திற்கும் பிரச்சினைகளை தோற்றுவிக்கும். ஆகவே மஹிந்த எல்லாவற்றையும் சமாளித்து செல்லவேண்டிய சூழலில் உள்ளார்.



ஆனால் தமிழ் மக்களைப்பொறுத்தவரை ஆட்சி, அதிகாரங்கள், கட்சி அரசியல், தனிப்பட்ட சுயசிந்தனைகள், பதவி ஆசைகள் என்பன கடந்த அல்லது அவைகள் இல்லாத ஒரே ஒரு நோக்கமே அதாவது எங்களின் விடுதலை.



எங்கள் இலட்சியத்தை, உரிமைப்போராட்டத்தினை கட்சி வேறுபாடுகள், சுய நலன்கள், பதவி ஆசைகள் என்பன பாதிக்க முடியாது, பாதிக்க கூடாது. உறுதியாக நாம் போராடிக்கொண்டு இருந்தால் இலக்கினை என்றோ ஒரு நாள் அடைவோம் என்ற வகையில் போராடுவோம்.



சர்வதேசத்தின் நலன்களுக்குள் நாம் சிக்குப்பட்டாலும், சர்வதேச நலன்களில் எங்கள் போராட்டத்தின் இலக்கும் அடிபடாமல் இருப்பதனை பார்த்துக்கொண்டாலே போதுமானது.



அதாவது மக்களிற்கு அதீத நம்பிக்கைகளை ஏற்படுத்தாது இலக்கி அடையும் வரை போராட்டம் தவிர்க்க முடியாது என்ற நோக்கிலேயே செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும்.கடந்த மாதம் சனிக்கிழமை (18/2/2012) வவுனியாவில் பேசிய கூட்டமைப்பு பிரதி நிதிகள் சிலர் சர்வதேசத்தின் மீது அதிக நம்பிக்கைகளை வைத்து பேசினர். உண்மையில் அது சிங்களவர்களை ஆத்திரமூட்டவா? அல்லது தமிழ் மக்களிற்கு தமது செயற்பாடுகள் பற்றி நம்பிகையினை ஏற்படுத்தவா? அல்லது மக்களுக்கு ஏதாவது ஒரு நம்பிக்கையினை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காகவா? அல்லது சிங்களத்தை நம்பவேண்டாம் என்பதனை மக்களுக்கு எடுத்துக்கூறவா? என்ற பல நோக்கங்கள் இருந்தாலும்; மக்களிற்கு எதுவரை நம்பவேண்டும் என்ற வரையறைகளை கூறவேண்டும்.



நாம் சாத்வீக வழிகளில் போராடினோம்;பின்னர் ஆயுதபோராட்டமாக உரிமை போராட்டம் நகர்ந்தது, இப்போது சாத்வீக வழியினை முன் நிறுத்தி மீண்டும் போராட்டம் முனைப்பு பெறுகின்றது. அடுத்து எந்தவகையான போராட்டம் என சந்தர்ப்பங்களே தீர்மானிக்கும். இப்போது அந்த சந்தர்ப்பத்தினை தீர்மானிப்பவர்களாக சர்வதேசம் மாறியுள்ளதே தவிர சர்வதேசம் எமக்கான தீர்வினை சிங்களத்திடம் பெற்று தருபவர்களாக இருப்பார்கள் என்று இல்லை.



சர்வதேச சமூகத்திடம் நீதி வேண்டி போராடிக்கொண்டு இருக்கின்றது தமிழ்ழினம். சர்வதேச விசாரணையே மனித உரிமை மீறல்களிற்கு நீதியான தீர்மானத்தை தரும் என வாதிடுகின்றது சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள். ஆனால் அமெரிக்காவோ சிங்கள அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கைக்கு வலுவூட்டும் செயலில் இறங்கியுள்ளது. மனித உரிமை அமைப்புக்க|ளால், தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட அறிக்கைக்கு அங்கீகாரம் கொடுத்து, சர்வதேச விசாரணைகளை புறக்கணித்து மேற்கொள்ளும் தீர்மானம் உண்மையில் தமிழர்களிற்கு நீதியினை பெற்றுத்தருமா? அல்லது அமெரிக்காவின் பூகோள நலன்களை நிலை நாட்டுமா? என்பதே பெருத்த கேள்வி.

நடந்தது என்ன ???

                                  



நடந்தது என்ன ???

-------------------------------------------------------------------------------------------

சேனல் 4 வசம் பிரபாகரன் குறித்த ’பரபரப்பான’ வீடியோவும் சிக்கியுள்ளது?


லண்டன்: லண்டனைச் சேர்ந்த சேனல் 4 டிவி நிறுவனத்திடம் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்த பரபரப்பான வீடியோவும் கிடைத்துள்ளதாக டெய்லி மெயில் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மிகக் கொடூரமான முறையில் பிரபாகரன் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்தரின் மிக மிக நெருக்கமான முறையில் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டதாகவும், அதுதொடர்பான வீடியோ காட்சியை புதன்கிழமையன்று (இந்திய நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை) ஒளிபரப்பப் போவதாக சானல் 4 நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் அந்த வீடியோ காட்சியில் பிரபாகரன் குறித்த பரபரப்புக் காட்சியும் இடம் பெற்றிருப்பதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது.

Sri Lanka’s Killing Fields என்ற பெயரில் ஒரு ஆண்டுக்கு முன்பு, இலங்கையில் நடந்த ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் நடந்த போர்க்குற்றங்கள், படுகொலைகள் குறித்த ஆவணப் படத்தை சேனல் 4 ஒளிபரப்பி உலகையே அதிர வைத்தது. தற்போது அதன் தொடர்ச்சியாக Sri Lanka’s Killing Fields: War Crimes Unpunished என்ற பெயரில் புதிய ஆவணப்படத்தை அது தயாரித்துள்ளது.

இதில்தான் பாலச்சந்திரன் படுகொலை சம்பவம் இடம் பெற்றுள்ளது. அதிலேயே பிரபாகரன் குறித்த காட்சிகளும் இடம் பெற்றிருப்பதாகவும் தற்போது தகவல்கள் கூறுகின்றன.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஓடக் கூடிய இந்த புதிய வீடியோவில், உள்ள காட்சிகள் குறித்து இந்த வீடியோ காட்சிகளின் நம்பகத்தன்மையைப் பரிசோதித்து இவை உண்மைதான் என்று தெரிவித்துள்ள தடயவியல் நிபுணர் பேராசிரியர் டெரிக் பெளன்டர் கூறுகையில், சேனல் 4 நிறுவனத்திற்கு பாலச்சந்திரன் படுகொலைச் சம்பவம் தவிர்த்து அவனது தந்தை வேலுப்பிள்ளை பிரபாகரன் குறித்த ஒரு படமும் கிடைத்தது.

அதில் பிரபாகரனின் தலையில் மிக பலத்த காயம் காணப்பட்டது. அவரை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்து பின்னர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்திருப்பதாக உணர்கிறோம். இந்த வீடியோ காட்சி அதிகாரப்பூர்வமானதல்ல என்றும் நாங்கள் உணர்கிறோம்.

பிரபாகரனும், பாலச்சந்திரன் பாணியில் கொடூரமாக கொல்லப்பட்டிருப்பதாக உணர்கிறோம். அவரது தலையில் பாய்ந்துள்ள குண்டுக் காயத்தைப் பார்க்கும்போது மிக சக்தி வாய்ந்த துப்பாக்கியால் அவர் சுடப்பட்டிருக்க வேண்டும்.

ஒரு ஆயுதப் போரின்போது ஒருவரை ஒரே ஒரு துப்பாக்கிச் சூட்டில் கொல்வது என்பது இயலாத காரியம். அது சாத்தியமும் அல்ல. ஆனால் பிரபாகரன் கொல்லப்பட்ட விதத்தைப் பார்க்கும்போது அவரை உயிருடன் பிடித்துப் பின்னர் கொலை செய்திருக்க வேண்டும் என்று கருதுகிறோம். மேலும் அசையாத நிலையில் ஒருவரை சுடும்போது எப்படிப்பட்ட குண்டுக் காயம் ஏற்படுமோ அதே போலத்தான் இந்த குண்டுக் காயமும் தெரிகிறது. எனவே பிரபாகரனையும் கூட கட்டி வைத்து சுட்டுக் கொன்றிருக்கலாம்.

இந்த வீடியோ காட்சிகளில் கொல்லப்பட்டுள்ள பலரும் கண்களை மூடியும், கைகள் கட்டப்பட்ட நிலையிலும், ஆடைகளின்றியும் காணப்படுகின்றனர். இதை வைத்துப் பார்க்கும்போது பிடிபட்ட அத்தனை தமிழர்களையும் திட்டமிட்டு படுகொலை செய்திருப்பதாக தெரிகிறது. நிச்சயம் அரசின் உயர்மட்டத்தின் அனுமதி இல்லாமல் இதைச் செய்திருக்க முடியாது என்பது எங்களின் கருத்தாகும் என்றார்.

ஈழப் போர் முடிந்த ஓரிரு நாட்களில் இதுதான் பிரபாகரன் பிணம் என்று கூறி ஒரு வீடியோக் காட்சியையும், புகைப்படங்களையும் இலங்கை ராணுவம் வெளியிட்டது. நந்திக் கடல் பகுதியிலிருந்து பிரபாகரன் உடல் மீட்கப்பட்டதாகவும் அது கூறியது. அந்தப் படத்தில் பிரபாகரன் என்று கூறப்பட்டவரின் உடலில் ஒட்டுத் துணி கூட இல்லாமல் இருந்தது. மேலும், அந்தப் படம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகளும் எழுந்தன.

முதலில் சீருடை அணிந்த நிலையில் பிரபாகரன் உடல் என்று காட்டினர். பின்னர் உடைகள் இல்லாமல் ஒரு உடலைக் காட்டினர். பிறகு சேறு படிந்த நிலையில் ஒரு உடலைக் காட்டினர். மேலும் பிரபாகரன் மரணச் சான்றிதழையும் இதுவரை இலங்கை அரசு இந்தியாவுக்கு தரவில்லை. இதனால் பிரபாகரன் உண்மையில் உயிரிழந்து விட்டாரா என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் எங்குமே இல்லை. இந்த நிலையில் சேனல் 4 பட வீடியோக் காட்சிகள் புதிய திருப்பத்தை ஏற்படுத்துமா என்பது அதைப் பார்த்த பிறகுதான் கூற முடியும்.

இந்த ஆவணப்படத்தை தயாரித்தவரான ஜான் ஸ்னோ கூறுகையில், புதிய ஆவணப் படத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகள் அனைத்தையும் நாங்கள் தீவிர தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அவை அனைத்தும் உண்மையானவை, திரிக்கப்பட்டவை அல்ல என்பது தெரிய வந்தது.

இந்த மிகப் பெரிய போர்க்குற்றச் செயலில் இலங்கை அரசும், ராணுவமும் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த செயல்களுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே, அவரது தம்பி கோத்தபயா ராஜபக்சே, அப்போது ராணுவத் தளபதியாக இருந்த பொன்சேக ஆகியோர்தான் நேரடிப் பொறுப்பாவார்கள். சர்வதேச மனித உரிமைச் சட்டத்தை முற்றிலும் மீறும் வகையில் இந்தப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

இந்த படுகொலைகளை நடத்திய ராணுவத்தினர் அத்தனை பேருமே மிகப் பயங்கர கொலைக் குற்றம் சாட்டப்பட வேண்டியவர்கள். ராணுவ அதிகாரிகள் முதல் அதிபர் வரை, அவரது தம்பிவரை அனைவருமே இதுவரை விசாரிக்கப்படாமல் உள்ளது வியப்பளிக்கிறது.

ஒரு பத்திரிக்கையாளராக நடந்த உண்மைகளை வெளிக் கொண்டு வர வேண்டியது எங்களது கடமை. இனி ஐ.நா சபையும், சர்வதேச சமுதாயமும்தான் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இனியாவது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே எங்களது விருப்பம். அதுதான் பரிதாபமாக உயிரிழந்து போன ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களின் மரணத்திற்கு நியாயமானதாக அமையும்.

நாம் தற்போது சிரியாவைப் பற்றி அதிகம் பேசுகிறோம், கவலைப்படுகிறோம். எனவே இலங்கையில் நடந்த போர்க்குற்றம் குறித்தும் நாம் கண்டிப்பாக கவலைப்பட்டாக வேண்டும். அது முக்கியமானது என்றார்.

இந்த வீடியோ குறித்து ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் ஆசியா பிராந்தியத்துக்கான இயக்குநர் சாம் ஜாப்ரி கூறுகையில், இலங்கை ராணுவத்தின் உயர்ந்தபட்ச தலைவர் அதிபர் ராஜபக்சேதான். ராணுவத்தின் தலைமை கமாண்டரும் அவர்தான். அதேபோல ஈழப் போரின்போது ராணுவ உத்திகளை தான்தான் வகுத்து செயல்படுத்தியதாக அவரது சகோதரர் கோத்தபயா ராஜபக்சேவும் பலமுறை பெருமை பொங்கக் கூறியுள்ளார்.

எனவே நடந்த சம்பவங்கள் குறித்து குறிப்பாக பாலச்சந்திரன், பிரபாகரன் குறித்து இவர்கள் இருவரும் நிச்சயம் விசாரிக்கப்பட்டாக வேண்டும். ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் மிகப் பெரிய அளவில் போர்க்குற்றம் நடந்தது என்பதில் சந்தேகமே இல்லை. மிகக் குறுகிய காலகட்டத்தில் மிகப் பெரிய அளவிலான மனிதப்படுகொலைகள் நடந்துள்ளன என்றார்.

ஸ்னோ தொடர்ந்து கூறுகையில், ஐ.நா. வின் பாதுகாக்கப்பட்ட ரகசிய அறிக்கையில் சில முக்கியத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதாவது பாதுகாப்பு வளையப் பகுதி என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் தஞ்சமடைந்த அப்பாவி பொதுமக்களை வேண்டும் என்றே திட்டமிட்டு குண்டு வீசிப் படுகொலை செய்தனர். இது அரசுக்குத் தெரியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல பாதுகாப்பு வளையப் பகுதியில் தஞ்சமடைந்த மக்கள் குறித்த உண்மையான எண்ணிக்கையை இலங்கை அரசு மறைப்பதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திலிருந்து அனுப்பப்பட்ட தகவலிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்களை பட்டினி போட்டுக் கொல்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பாவி மக்கள் குறி வைத்துக் கொல்லப்பட்டதாக ஐ.நா. நிபுணர் குழுவும் தெரிவித்துள்ளது. எனவே இதுகுறித்தெல்லாம் விசாரிக்கப்பட்டாக வேண்டும் என்றார்.






இடுகை - ஒன்இந்தியா..........
 
 

இ‌ந்‌தியா ஆத‌ரி‌க்காது ‌

                 

இல‌ங்கை‌ அரசு‌க்கு எ‌திரான ‌தீ‌ர்மான‌த்தை இ‌ந்‌தியா ஆத‌ரி‌க்காது ‌- பிரணா‌‌ப் முக‌ர்‌ஜி

''இல‌‌ங்கை அரசு‌க்கு எ‌திராக ஐ.நா.‌ ம‌னித உ‌ரிமை ஆணைய கூ‌ட்ட‌த்‌தி‌ல் அமெ‌ரி‌க்கா கொ‌ண்டு வரு‌ம் ‌தீ‌‌ர்மான‌த்தை இ‌ந்‌தியா ஆத‌ரி‌க்காது'' எ‌ன்று ம‌த்‌திய ‌நி‌தியம‌ை‌ச்ச‌ர் ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி கூ‌றினா‌ர்.

‌ம‌க்களவை இ‌ன்று காலை கூடியது‌ம் இல‌‌ங்கை அரசு‌க்கு எ‌திராக ஐ.நா‌.‌வி‌ல் கொ‌ண்டு வர‌ப்பட‌ம் ‌தீ‌ர்மான‌த்தை இ‌ந்‌தியா ஆத‌‌ரி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌‌தி.மு.க., அ.‌தி.மு.க. உ‌ள்‌ளி‌ட்ட த‌மிழக எ‌ம்.‌பி.‌க்க‌ள் வ‌லியுறு‌த்‌தின‌ர்.

இதையடு‌த்து இல‌ங்கை‌க்கு எ‌திரான ‌தீ‌ர்மான‌ம் கு‌றி‌த்து ம‌க்களவை‌யி‌ல் ‌விள‌க்க‌ம் அ‌ளி‌த்த ‌‌நி‌தியமை‌ச்ச‌ர் ‌பிரணா‌ப் முக‌ர்‌‌ஜி, இல‌‌ங்கை அரசு‌க்கு எ‌திரான ‌தீ‌ர்மான‌ம் கு‌றி‌த்து அரசு ‌வி‌ழி‌ப்பு‌ட‌ன் உ‌ள்ளது எ‌ன்றா‌ர்.

ஜெ‌னீவா‌‌வில் ஐ.நா. ம‌‌னித உ‌ரிமை ஆணைய கூ‌ட்ட‌த்‌தி‌ல் ‌‌தீ‌ர்மான‌ம் தா‌க்க‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்டு ‌உ‌ள்ளது எ‌‌ன்று‌ம் இது ப‌ற்‌றி த‌மிழக முத‌ல்வ‌ர் ஜெயல‌லிதா, ‌தி.மு.க. தலைவ‌ர் கருணா‌நி‌தி ஆ‌கியோரு‌க்கு அரசு ‌விள‌க்க‌ம் அ‌ளி‌த்து‌ள்ளது எ‌ன்று‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

அவ‌ர்க‌ள் இருவரு‌ம் அர‌சி‌ன் ‌நிலை‌ப்பா‌ட்டை தெ‌ரி‌வி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று வ‌லியுறு‌‌த்‌தியு‌ள்ளதாகவு‌ம் ‌பிரணா‌‌ப் கூ‌றினா‌ர்.

இ‌‌ப்‌பிர‌ச்சன‌ை‌யி‌ல் இ‌ன்னு‌ம் முடிவெடு‌க்க கால அவகாச‌ம் உ‌ள்ளது எ‌ன்று கூ‌றிய ‌பிரணா‌ப், சாதாரணமாக எ‌ந்த நா‌ட்டு ‌‌தீ‌ர்மான‌த்‌தி‌ற்கு‌ம் ஆதரவு அ‌ளி‌க்க‌ப்படுவ‌தி‌ல்லை எ‌ன்றா‌ர்.
ஆனா‌ல் இ‌ப்‌பிர‌ச்சனையை அரசு கவன‌த்‌தி‌ல் கொ‌ள்ளு‌ம் எ‌‌ன்று‌ம் இ‌ன்னு‌ம் கால அவகாச‌ம் உ‌ள்ளதா‌ல் ஆலோ‌சி‌த்து அரசு இறு‌தி முடிவு எடு‌க்கு‌ம் எ‌ன்று‌ம் ‌பிரணா‌‌ப் முக‌ர்‌ஜி கூ‌றினா‌ர். 

உரிமை

         


வணக்கம் !புலம்பெயர் தேசத்து இணைய தள ஊடகவியாளருக்கு அன்பு மடல்!..


அனைத்து உரிமைகளையும் இழந்து தவிக்கும் எமக்கு இன்று மிக அதிகமாக மிஞ்சி இருப்பது இன வெறியர்களால் சிதைக்கப்பட்ட எமது உறவுகளின் நிர்வாண கோலங்கள் தான் என்பதை இன்று நெடுந்தீவு பிரதேசத்தில் ஒட்டுண்ணியால் மிகவும் கோரமாக படுகொலை செய்யப்பட சிறுமியின் உயிர் பறிப்பு முதல் அனைவரும் தெரிந்து கொண்ட விடையம்.
ஆனால் இன்று புலம்பெயர் தேசங்களில் வாழ்ந்து வரும் சிலர் தம்மை “ஊடகவியலாளர்கள்” என்று கூறிக்கொண்டு “இணையங்களை” திறந்து வைத்துக்கொண்டு எமது தேசத்தின் விடுதலைக்காக இறுதிக் கணம் வரை களத்தில் நின்று போராடி மலரப்போகும் தமிழ் ஈழத்திற்காய் தம் உயிர்களை அர்ப்பணித்து, இரத்தத்தை உரமாக ஈழ மண்ணில் உறையவிட்டு வீரச்சாவடைந்த எம் உறவுகளின் வித்துடல்களின் புகைப்படங்களை வியாபாரப் பொருளாக கடைகளில் தொங்க விடப்படும் கவர்ச்சிப் பொருளாக இணையங்களில் விளம்பரம் செய்து அவர்களுக்கு புகழ்மாலை சூடியிருக்கிறார்கள் புலம்பெயர் தமிழ் ஊடக வியாபாரிகள் சிலர்.
போர்க்குற்ற படங்கள் என்று கூறிக் கொண்டு படங்களை வெளியிட்டுள்ள இவர்களிடம் ஒரு சில கேள்விகளைமட்டும் உரிமையுடன் கேட்க விரும்புகிறேன். அதற்கான பதிலை இந்த தேசப்பற்றுள்ள தேசிய ஊடகவியலாளர்கள் தருவார்களா??
*இனவெறியர்களால் சிதைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட எம் உறவுகளின் படங்களை போர்க்குற்ற ஆதாரங்கள் என்று கூறி இணையங்களில் வெளியிட்ட இந்த இணைய ஊடகர்கள். அதே போர்க்குற்ற ஆதாரப் புகைப்படங்கள் தமது உடன்பிறந்த சகோதரிகளின் அல்லது தமது உறவினர்களின் படங்களாக இருப்பின் அவற்றை இவ்வாறு வெளியிட்டிருப்பார்களா?
*இறந்த உறவுகளின் உறவினர்கள் தம் உறவுகள் கொல்லப்பட்டதையும் விட இவர்கள் வெளியிட்டுள்ள புகைப்படங்களின் தன்மையினைப் பார்த்து மிகவும் மனம் நொந்துபோய் உள்ளனர் என்பதை இந்த இணைய ஊடகர்கள், என்று கூறிக்கொள்பவர்கள் புரிந்துகொள்வார்களா?
*தமது இணையங்களில் வெளியிட்டுள்ள புகைப்படங்களின் ஊடாக புலம்பெயர் தேசங்களில் வாழும் மக்களில் உணர்வுகளைத் தட்டி எழுப்பப் போகிறார்களாம் இது எவ்வளவுக்கு சாத்தியமானது?
*முள்ளிவாய்க்காலில் குடிப்பதற்கு தண்ணீரும் இல்லாமல் கூட்டம் கூட்டமாக பாதுகாப்புத் தேடி அலைந்து திரிந்த எமது மக்கள் மீது கொத்துக் குண்டுகளைப் போட்டு படுகொலை செய்தபோது வராத இனமான உணர்வுகள் இனி இந்த புலம்பெயர் தமிழர்களுக்கு வருமா? அப்படி வந்தாலும் இனி வரும் காலங்களில் எதனை சாதிக்கப் போகிறார்கள்? இறந்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்வையா?
*பல பத்தாயிரக் கணக்கில் ஜெனிவாவில் ஒன்றுகூடி நீதி கேட்ட மக்கள் தொகை இன்று நான்கு ஆயிரம், ஐந்து ஆயிரமாக மாறியுள்ளது இதுதான் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் விடுதலை உணர்வா? இவர்கள் தான் இந்த தியாகி திலீபன் அவர்களின் “மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” இலச்சியக் கனவை நிறைவேற்றுபவர்கள்?
தமிழீழ விடுதலையை நேசிக்கும் ஒவ்வெரு தமிழரும் உண்மைகளைப் புரிந்து உண்மையாக செயற்பட வேண்டும் சுய விளம்பரத்திர்க்காகவும் சுயநல நோக்கத்திற்க்காகவும் செயற்படுவதை நிறுத்திவிட்டு இழந்த எமது உரிமைகளை மீட்பதற்காக அனைவரும் அனைவரது உணர்வுகளுக்கும் மதிப்பளித்து எமது விடுதலைக்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. இதனை அனைவரும் புரிந்து செயர்ப்படுவார்கள் என்ற நம்பிக்கையுடன்……
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
ம.பார்த்தீபன்.

கைகோர்த்த திமுக மற்றும் அதிமுக.!..

                               
அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்க பாராளுமன்றத்தில் கைகோர்த்த திமுக மற்றும் அதிமுக.!..

இலங்கைக்கு எதிராக ஐக்கியநாடுகள் சபையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொண்டு வரும் தீர்மானத்தில், இந்தியாவின் நிலை என்ன என்பதை தெளிவுபடுத்தியே ஆகவேண்டுமென்று, தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் பார்லிமென்டில் வலியுறுத்தின. போர்க்குற்றம் புரிந்த இலங்கையை, இந்தியா ஆதரிக்கக் கூடாது என்று இரு கட்சிகளின் எம்.பி.,க்களும் குரல் கொடுத்தனர். இதனால் கேள்வி நேரமும் ரத்தாகி, அடுத்தடுத்து ஒத்திவைப்புகளும் நடந்தன. நாள்பூராவும் ராஜ்யசபாவை ஒத்திவைக்க நேர்ந்தது.



இலங்கையில் நடந்த போரின்போது, தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில், போர்முறை விதிமீறல்களில் இலங்கை ஈடுபட்டதாகவும், மனித உரிமைகளுக்கு எதிராகச் செயல்பட்டதாகவும் கூறி, ஐக்கியநாடுகள் சபையில் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. ஜெனிவாவில் நடக்கும் கூட்டத்தில், இந்த தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது. அமெரிக்கா தலைமையில், இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. இலங்கைக்கு எதிரான இந்த தீர்மானம் குறித்து, நேற்று பார்லிமென்டிலும் பிரச்னை வெடித்தது. ராஜ்யசபாவில் கேள்விநேரத்தை எடுத்துக் கொள்ள சபைத் தலைவர் அன்சாரி முயன்றார். இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் இந்த தீர்மானத்தின் மீது, இந்தியா என்ன முடிவெடுக்கப்போகிறது என்பதை அவையில் தெரிவித்தாக வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர் தமிழக எம்.பி.,க்கள். கேள்விநேரம் முடிந்ததும் இதுபற்றிப் பேசலாம் என அன்சாரி கூறியதை, எம்.பி.,க்கள் ஏற்காததால், அமளியில் வேறு வழியின்றி கேள்வி நேரமே ரத்தானது.



தி.மு.க. எம்.பி., திருச்சி சிவா கூறியதாவது: இலங்கையில் நடந்த போரின்போது, தமிழ் மக்கள் மீது மிகப்பெரிய அளவில் போர்க்குற்றங்களில் அந்நாட்டு அரசு ஈடுபட்டது. இதைக் கண்டித்து பிரான்ஸ், நார்வே உள்ளிட்ட நாடுகள் ஐ.நா.,சபையில் தீர்மானம் கொண்டுவர உள்ளன. ஜெனிவாவில் இந்தியா என்ன செய்யப்போகிறது என்பதை தெரியப்படுத்த வேண்டும். நியாயமாகப் பார்த்தால், இந்தியா கொண்டு வந்திருக்க வேண்டிய தீர்மானம் இது. ஆனால், மற்ற நாடுகள் கொண்டு வருகின்றன. இப்போதாவது இந்தியா இதை ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார் .



அ.தி.மு.க. எம்.பி., மைத்ரேயன் பேசும்போது,” போர்க் குற்றவாளி ராஜபக்ஷேயை தண்டிப்பதற்கும், தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் கிடைக்கவும் அருமையான சந்தர்ப்பம். தீர்மானத்தை ஆதரிக்க இந்தியா முன்வர வேண்டும். பிரதமர் மன்மோகன்சிங் இப்போதே அவைக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும். இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை இந்தியா கொண்டு வர வேண்டும்,’ என்றார்.



வெங்கையா நாயுடு (பா.ஜ.,) பேசும்போது, ” இலங்கையில் தமிழர்கள் பிரச்னை என்பது மிகவும் சர்வதேச அளவில் உணர்வுப்பூர்வமான, மிக முக்கிய பிரச்னை. இத்தீர்மான விஷயத்தில், மத்திய அரசு உடனடியாகத் தனது நிலைப்பாட்டை விளக்க வேண்டும்,’ என்றார்.



காங்கிரசின் ஞானதேசிகன் பேசுகையில், ” எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுத்தாலும், அது அங்குள்ள தமிழர்களை பாதிக்கும். மிகுந்த எச்சரிக்கையுடன் இவ்விஷயத்தில் அணுகுமுறை இருக்க வேண்டும் என்றார். இவர்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், எழுந்த பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சல்,” ஐ.நா., சபையில் கொண்டுவரப்படும் தீர்மானம் குறித்து, இன்னும் முழுவதுமாகத் தெரியவில்லை. இருப்பினும், வெளியுறவுத்துறை அமைச்சருடன் இது குறித்து உடனடியாகப் பேசுகிறேன். விரைவில் இது குறித்து விளக்கத்தை அரசு அளிக்கும்,’ என்றார். அமைச்சரின் இந்த பதில் எம்.பி.,க்களை திருப்திப்படுத்த வில்லை.



கூச்சல், அமளி: கூச்சல் அதிகமாகவே, வேறுவழியின்றி சபை ஒத்திவைக்கப்பட்டது. பின் கூடியபோதும் அதே சூழ்நிலை உருவானதாலும், உடனடியாக பிரதமர் விளக்கம் அளிக்க கோரிக்கை வைத்ததாலும், சபையை நடத்த முடியாமல் நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. 

நாம் செய்யப்போவது என்ன?..

                           
வெளிவரப்போகும் ‘தண்டிக்கப்படாத குற்றங்கள்’ நாம் செய்யப்போவது என்ன?..

சனல்-4 தொலைக்காட்சி புதிதாக வெளியிடவுள்ள தண்டிக்கப்படாத குற்றங்கள் எனும் ஆவணம் தொடர்பாக பல குழப்பகரமான செய்திகள் தமிழ் மக்களிடையே பரப்பிவிடப்பட்டுள்ளது.

இன்று இரவு பிரித்தானிய நேரப்படி 10.55 மணிக்கு இந்த ஆவணப்படத்தை வெளியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ள சனல்-4, இதனைக் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜெனீவாவில் நடைபெற்ற திரையிடலில் காட்சிப்படுத்தியிருந்தாகவும் தெரியவருகின்றது.
2013ம் ஆண்டு சிறீலங்காவில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில், பிரித்தானிய கிரிக்கெட் அணியினர் சிறீலங்காவிற்கு சென்றிருக்கும் நிலையில் இந்தக் காணொளி வெளியிடப்படுவதாகத் தெரிவித்துள்ள ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்’ ஆவணப்பட இயக்குனர் கல்லம் மக்ரே (Callum Macrae) இலங்கையில் இடம்பெற்ற போரின் இறுதிக் கட்டத்தில், ஐ.நாவோ மேற்குலகமுமோ இராணுவத்தினரின் மனித உரிமை மீறல்களைத் தடுக்கக் காத்திரமான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை எனவும் சர்வதேச சமூகத்தினால் தோல்வி காணப்பட்டதும் மறக்கப்பட்டதுமான தமிழினப் படுகொலையை வெளிக்கொண்டு வரும் முயற்சியே இது எனவும் கூறியுள்ளார்.
இலங்கையின் கொலைக்களங்கள், தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் எனும் தலைப்பில் வெளியிடப்படவுள்ள இந்த ஆவணப்படத்தில் பெண் போராளிகள் மீதான பாலியல் வன்முறை, கைது செய்யப்பட்டவர்கள் கண்களும், கைகளும் கட்டப்பட்டுப் படுகொலை, பாதுகாப்புப் பிரதேசம் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளுக்குள் பொது மக்கள் மீதான எறிகணைத் தாக்குதல்கள் மற்றும் 12 வயது சிறுவன் சித்திரவதை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்படும் நேரடிக் காட்சி என்பனவற்றுடன் கண்கண்டவர்களின் சாட்சியங்கள், காணொளித் தடவியல் நிபுணர்களின் ஆதாரம் மற்றும் புதிய காணொளிகள், நிழற்படங்கள் என்பன அடங்கியுள்ளதாக சனல்-4 தெரிவித்துள்ளது.
இறுதிக்கட்ட யுத்தத்தில் பொதுமக்கள் வேண்டுமென்றே இலக்கு வைக்கப்பட்டதற்கு, சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, இராஜதந்திர தகுதி வழங்கப்பட்டுள்ள இரண்டு இராணுவத் தளபதிகள் (ஜெகத் டயஸ், சவேந்திர சில்வா எனக் கருதப்படுகின்றது) உட்பட உயர்மட்டத் தளபதிகளின் உத்தரவே காரணம் என்று இந்த ஆவணப்படம் குற்றம்சாட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறீலங்கா இராணுவம் மிகமிக ஒழுக்கமானது, நன்கு ஒருங்கிணைக்கப்பட்டது, என்றும் போரைத் தாமே வழிநடத்தியதாகவும் ஜனாதிபதி மகிந்தவும், பாதுகாப்புச் செயலாளரும் தொடர்ச்சியாக உரிமை கோரி வந்துள்ளனர். பாதுகாப்பு வலயங்கள் என அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட இடங்களில், சிறீலங்காவின் உயர்மட்டக் கட்டளையின் பேரிலேயே போர்க்குற்றங்கள் நிகழ்த்தப்பட்டன. இதற்கு நேரடியான பொறுப்பை இவர்களே வகித்துள்ளனர் எனவும் கல்லம் மக்ரே குற்றம்சாட்டியுள்ளார்.
இவ் ஆவணப்படம் தொடர்பாக கல்லம் மக்ரே மேலும் தகவல் வெளியிடுகையில், சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த தலைவர்களும் போராளிகளும் சிறீலங்காப் படைத்தரப்பினரால் நீதிக்குப் புறம்பான வகையில் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் போர்த்தவிர்ப்பு வலயத்தில் படைத்தரப்பினரால் பொது மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதல்கள் தொடர்பில் ஐ.நா.சபை அதிகாரிகளால் ஆதாரங்களுடன் ஆவணப்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்றையும் சனல் 4 தொலைக்காட்சி முன்வைக்கவுள்ளது. போரில் சிக்குப்பட்டிருந்த மக்களுக்காக அனுப்பப்பட்ட கடைசி உணவுத் தொகுதி வாகனத் தொடர் அணியுடன் ஐ.நா. சபையின் இரண்டு மனிதாபிமான பணியாளர்கள் சென்றிருந்தனர். இவர்கள் அரசாங்கத்தினால் போர் தவிர்ப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட உடையார்கட்டில் அமைந்திருந்த பாடசாலை ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மருத்துவமனை அருகே சிக்கிக்கொண்ட போது எறிகணைத் தாக்குதல்களிலிருந்து தப்பித்துக்கொள்ள மக்களின் உதவியுடன் பதுங்குகுழிகளை அமைக்கத் தொடங்கினர்.
ஐ.நா. மனிதாபிமான பணியாளர்களில் ஒருவரான அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பீற்றர் மைக்கே தன்னிடமிருந்த ஜி.பி.எஸ். கருவி மூலம் தனது இருப்பிடத்தை தெரிவிக்கும் வகையில் சிறீலங்கா அரசாங்கத்திற்கு தகவலை அனுப்பினார். இதனையடுத்து தொடர்ந்து பல நாட்களாக தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்கள் இப்பிரதேசத்தில் இடம்பெற்றன.
இந்த எறிகணைத் தாக்குதல்கள் ஐ.நாவின் மனிதாபிமான பணியாளர்கள் தங்கியிருந்த பதுங்குகுழிகளையும் தாக்கியிருந்தன. இதன்போது பலர் கொல்லப்பட்டதுடன் பலர் கடுமையாக காயமடைந்தனர். இச்சம்பவங்கள் எல்லாவற்றையும் ஐ.நாவில் மனிதாபிமான பணியாளர்களால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
அதேவேளை சிறீலங்காவின் அதிகாரபீடம் பொதுமக்களை இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்படுவதை அறிந்திருந்தது. இறுதிக்கட்டப் போரின்போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்களில் இலங்கையின் அதிகாரப் பீடத்திற்கு தொடர்பு உள்ளது என்பதற்கான முக்கியமான ஆதாரங்களாக இவை உள்ளன.
ஐ.நாவின் மனிதாபிமானப் பணியாளர்கள் தம்மிடம் இருந்த செய்மதித் தொலைபேசி மூலம் சிறீலங்காவிற்கான அவுஸ்திரேலிய தூதரகம் மற்றும் கொழும்பிலிருந்த ஐ.நா. அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு தாக்குதல்களை நிறுத்துமாறு சிறீலங்காப் படைத்தரப்பினரிடம் வலியுறுத்துமாறு கோரிக்கை விடுத்தனர்.
இத்தகவல் அப்போதைய படைத் தளபதி சரத் பொன்சேகாவுக்கும் படைத்துறை அமைச்சருக்கும் தெரிவிக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது. இத்தகவல் கிடைத்த சிறிது நேரத்தினுள் ஐ.நாவில் மனிதாபிமான பணியாளர்கள் மறைந்திருந்த பதுங்குகுழிக்குச் சற்றுத் தொலைவில் எறிகணைகள் வீழ்ந்தன. இவ்வாறு சிறீலங்கா அரசாங்கத்தினால் போர் தவிர்ப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட பிரதேசத்தில் தொடர்ச்சியான எறிகணைத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதுகுறித்து ஐ.நா. மனிதாபிமான பணியாளர்களில் ஒருவரான பீற்றர் மக்கே கூறுகையில், தாம் இருந்த இடத்தில் இருந்து 100 மீற்றர் தொலைவில் எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததாகவும். அவர்கள் விரும்பியபோது இத்தகைய எறிகணைத் தாக்குதல்களை கட்டுப்படுத்தலாம் என்பதை இவை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கையின் அதிகாரம் பீடம் மீது மேற்கொள்ளக் கூடிய சட்ட நடவடிக்கைகளுக்கு இந்த ஆதாரங்கள் முக்கியமானதாக இருக்க வாய்ப்புள்ளது. போர்த்தவிர்ப்பு வலயங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இத்தகைய தாக்குதல்கள் குறித்து படைத்துறை அமைச்சர் மற்றும் படைத்தளபதி ஆகியோருக்கு நேரடியாகத் தெரிந்திருந்தது என்பதற்கு இது முக்கியமான ஆதாரமாகும்.
ஐ.நா. மனிதாபிமான பணியாளர்கள் பாதுகாப்புத்தேடி மறைந்திருந்த பதுங்குகுழியில் இருந்து சற்றுத் தொலைவில் எறிகணைத் தாக்குதல்களை மேற்கொள்ளும் படி உத்தரவிடப்பட்டதும் போர்த் தவிர்ப்பு வலயங்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களும் பொதுமக்கள் அங்கு இலக்கு வைக்கப்பட்டமைக்கான தகுந்த ஆதாரங்களாக உள்ளன என Callum Macrae தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமிழீழ தேசியத் தலைவரின் தலைவர் 12 வயது மகன் பாலச்சந்திரன் நீதிக்குப் புறம்பான வகையில் மார்பிலும் இடுப்பிலும் சுடப்பட்டு இறந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், அவருக்கு அருகே 5 ஆண்களின் உடலங்கள் காணப்படுகின்றன. இவர்கள் பாலச்சந்திரனின் மெய்ப்பாதுகாவலர்களாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
இவர்களை கட்டுவதற்காக பாவிக்கப்பட்ட உடைகளும் தரையில் காணப்படுகின்றன. இவர்களின் கண்களும் கைகளும் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதை இது உறுதிப்படுத்துகிறது. பாலச்சந்திரனின் படுகொலை தொடர்பான புதிய ஆதாரங்கள் போர்க்குற்றங்கள் தொடர்பில் அழுத்தங்களை அதிகரிக்கும்.
பாலச்சந்திரன் மற்றும் அவரின் மெய்ப்பாதுகாவலர்களின் உடலங்களை கொண்ட கிடைக்கப்பெற்ற தெளிவான ஆதாரங்களை தடயவியல் நிபுணரான பேராசிரியர் டெரிக் பௌண்டர் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளது. கண்கள் கட்டப்பட்டிருந்த பாலச்சந்திரனின் மெய்ப்பாதுகாவலர்கள் பார்க்கும் வகையில் அவர் படுகொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாக டெரிக் பௌண்டர் கூறியுள்ளார்.
எமக்கான விடுதலைக்காகப் போராடும் எம்மினத் தலைவர் மக்களோடு மக்களாகவே தனது பெற்றோரை விட்டிருந்தார். அதனைப்போலவே தனது பிள்ளையையும் விட்டிருக்கக்கூடும். மக்களிடமிருந்து தனது பிள்ளையைப் பிரித்துப்பார்க்காதத் தலைவரின் பிள்ளை கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படும் செய்தி தமிழர்களுக்கு பேரதிர்ச்சியைத் தரக்கூடியதே.
ஆனால், சிறீலங்கா அரசு தனது கொடூரங்களை இவ்வளவிற்கு நடத்திவிட்டு, சர்வதேசத்திடம் மனிதாபிமானத்திற்கான போர் நடத்தியதாக முகம்காட்டி நிற்கின்றது. சில வல்லரசுகள் இதற்குத்துணை போயுள்ளன. போய்க்கொண்டும் இருக்கின்றன. இவர்களின் கொடூரங்களில் சில ஊடகங்களின் முயற்சியால் வெளிப்பட்டு நிற்கின்றன.
இவற்றைப் பார்த்துவிட்டு நாம் என்ன செய்யப்போகின்றோம்? எமது ஒருமித்தகுரல் மட்டுமே சிறீலங்கா இனப்படுகொலை அரசின் முகத்தோற்றத்தைக் கிழிக்கும். எமக்கான விடுதலைக்காக விலை கொடுத்த மக்களின் உயிர்களுக்கு நிச்சயமாக நியாயம் கிடைக்கவேண்டும்.
சர்வதேசம் பார்த்திருக்க மண்ணோடு மண்ணாக்கப்பட்ட மக்களுக்கு, இராணுவ வெறியாட்டத்தில் சித்திரைவதைக்கும், பாலியல் வல்லுறவுக்கும் உள்ளாக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்ட பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் நாம் நியாயம்கேட்க மறுக்கலாமா? எமது எண்ணங்கள் செயல்கள் எமது இனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையை நாம் வெளிக்கொணர்வோம்.  

சிறிலங்காவின் பறக்கும் படை !

                

                                                  சிறிலங்காவின் பறக்கும் படை ! 



ஐ.நா மனித உரிமைச் சபை தொடர்பில் சிறிலங்காவைச் சூழ்ந்துள்ள அச்சமேகத்தை போக்கும் நோக்கில், சிறிலங்கா அரச தரப்பினர் தொடர் பறப்புக்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

சிறிலங்காவின் வெளிவிவாரத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், சவுதி அரேபியாவூடாக அரபு நாடுகளை வளைத்துப் போடும் முயற்ச்சியாக தற்போது சவுதி அரேபியாவில் முகாமிட்டுள்ளார்.

மறுபுறம் இன்று செவ்வாய்கிழமை , சிறிலங்காவில் இருந்து ஐ.நா மனித உரிமைச் சபை விவகாரங்களுக்கான சிறப்பு பிரதிநிதி மகிந்த சமரசிங்க, நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவொன்று ஜெனீவாவுக்கு புறப்பட்டுள்ளது.

இதேவேளை, சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் ஆலோசகர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க, இந்தியாவில் இருந்து ஜெனீவா புறப்பட்டுள்ளார்.

பிந்திய செய்தியொன்றில் சவுதியில் இருந்து சிறிலங்கா திரும்பியுள்ள அமைச்சர் ஜீ.எல்.பீரிசும் ஜெனீவாவுக்கு செல்கின்றார்.

ஐ.நா மனித உரிமைச் சபையில் 120க்கும் மேற்பட்ட சிறிலங்கா தரப்பு பிரதிநிதிகள் பங்கெடுத்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

இதில் சரிபாதி பேர் சிறிலங்காவின் புலனாய்வுத்துறையினர் என நம்பகமான ஜெனீவாச் செய்திகள் தெரிவிப்பதோடு இராஜதந்திரச் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள தமிழர்களை கண்காணிப்பதும் அவர்களின் நடவடிக்கைகளை நோட்டமிடுவதுமாக உள்ளதென அறியமுகின்றது. 

ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்காவை சுற்றிவளைத்த எட்டு நாடுகள் !

                
                  
                         ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்காவை சுற்றிவளைத்த எட்டு நாடுகள் ! 

ஐ.நா மனித உரிமைச் சபையின் நேற்றைய (13-03-2012) செவ்வாய்கிழமை அமர்வின் போது, எட்டு நாடுகளின் கருத்துவளைப்புக்களை, சிறிலங்கா எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ், நோர்வே, கனடா , பெல்ஜியம், அவுஸ்றேலியா , பிரித்தானியா, அயர்லாந்து ஆகியன சிறிலங்கா தொடர்பில் தங்களுடைய இறுக்கமான நிலைப்பாட்டினை முன்வைத்தன.

இதேவேளை சர்வதேச நீதியாளர் ஆணையம் ICJ எனும் அமைப்பும் சிறிலங்கா தொடர்பில் தங்களுடைய கடுமையான விமர்சனத்தை முன்வைத்தது.

இந்த விவாதத்தில், சிறிலங்கா தொடர்பில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து, அமர்வில் பங்கெடுத்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஐ.நா மனித உரிமைச் சபைக்கான வள அறிஞர் குழுவின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :

மனித குலத்தின் தேசிய இனத்துவ, சமய மற்றும் மொழி ஆகியனவற்றின் உரிமைகள் குறித்தான ஐ.நா பிரகடனம் தொடர்பில் விவாதம் இடம்பெற்றிருந்தது.

அமர்வில் பங்கெடுத்திருந்த 40 நாடுகளில் European Union, Pakistan on behalf of the Organization of Islamic Cooperation, Austria, Italy, China, Russian Federation, Hungary, Kuwait, Malaysia, Costa Rica, Angola, United States, Iran, Azerbaijan, Nepal, Slovenia, Ethiopia, Honduras, Romania, Greece, Ecuador, Norway, Latvia, Sri Lanka, Morocco, India ஆகிய நாடுகள் விவாதத்தில் கலந்து கொண்டிருந்தன.

American Association of Jurists; France Libertés; International Youth and Student Movement for the United Nations; Society for Threatened People; Canadian HIV/AIDS Legal Network; Human Rights House Foundation; Ligue internationale contre le racisme et l’antiracisme et l’antisémitisme; Asian Legal Resource Centre; Nonviolent Radical Party, Transnational and Transparty; Helsinki Foundation for Human Rights; International Movement Against all Forms of Discrimination and Racism; Asian Indigenous and Tribal Peoples Network; Centrist Democratic International; Regional Centre for Human Rights and Gender Justice “Corporacion Humanas”; Reporters Without Borders International; Physicians for Human Rights; Democracy Coalition Project; Lawyer’s Rights Watch Canada; Islamic Human Rights Commission; International Commission of Jurists; Freedom House; Organisation pour la Communication en Afrique et de Promotion de la Cooperation Economique Internationale; Human Rights Watch; World Alliance for Citizen Participation; Organization for Defending Victims of Violence; Union of Arab Jurists; Jubilee Campaign; International Islamic Federation of Student Organizations; Rencontre Africaine pour la Defense des Droits de l’Homme; Iranian Elite Research Centre; and the United Nations Watch. ஆகிய தன்னார்வ, மனித உரிமைகளுக்கான அமைப்புகளும் பங்கெடுத்திருந்தன.

இலங்கை, இந்தியா, மலேசியா உட்பட பல நாடுகளில் சிறுபான்மை தேசிய இனங்களுக்கான உரிமைகள் குறித்து விவாதம் இருந்தது.

இதில் சிறிலங்கா தொடர்பில் பேசப்பட்டுள்ள விடயங்களாக….இலங்கையில் நிரந்தரமான அரசியல் தீர்வினை வலியுறுத்தி பேசிய கனடா, சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தப் படல் வேண்டும் என தெரிவித்தது.

நல்லிணக்க ஆணைக்குழுவானது, போர் குற்றச்சாட்டுக்கள் குறித்து பொறுப்புக்கூறத் தவறிவிட்டதோடு, ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையினையும் கவனிக்க தவறிவிட்டது என கனடா குற்றஞ்சாட்டியது.

சர்வதேச சட்டங்களுக்கு புறம்பாக, இலங்கைத்தீவில் நடந்தேறிய மனித உரிமை மீறல்கள், குற்றங்கள் குறித்து சுதந்திரமான விசாரணையின் அவசியத்தையும் கனடா மீண்டும் ஒருதடவை அமர்வில் இறுக்கமாக தெரிவித்தது.

ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கா தொடர்பிலான விவாதத்துக்கு ஆதரவு தனது முழுமையான ஆதரவினை வழங்குவதாக தெரிவித்த பிரித்தானியா, சிறிலங்காவின் நல்லிணக் க ஆணைக்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியது.

காணமல் போதல், ஊடக சுதந்திரம் குறித்தும் தனது கவலையைத் தெரிவித்த பிரித்தானியா, மனித உரிமைகள் தொடர்பில் காத்திரமான செயற்பாடுகளுக்கு, சிறிலங்கா உடனடியாக பணியாற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டது.

சிறிலங்கவின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையினை வரவேற்றுக் கொள்கின்றோம் என தெரிவித்த அயர்லாந்து, ஐ.நாவுடன் இணைந்த கூட்டுச் செயற்பாட்டுடன் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த சிறிலங்கா செயலாற்ற வேண்டுமென சுருக்கமாக முடித்துக் கொண்டது.

இலங்கைத்தீவில் நடந்தேறிய சர்வதேச சட்டமீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு ,சிறிலங்கா காலதாமதமின்றி பதிலளிக்க வேண்டும்என தெரிவித்த நோர்வே, சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படல்வேண்டும் என கேட்டுக் கொண்டது.

இதேவேளை, ஐ.நா மனித உரிமைச் சபையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையினை தாம் ஆதரிக்கப் போவதாகவும் நோர்வே தெரிவித்தது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் கருத்துரைத்த டென்மாக் பிரதிநிதி, சிறிலங்கா அரசாங்கம் ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையுடன் இணங்கிச் செயற்பட வேண்டும் என்றும், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் வலியுறுத்தினார்.

இலங்கையில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த, மனிதஉரிமைகள் பாதுகாப்பு, சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பளித்தல், பொறுப்புக்கூறும் விவகாரங்களுக்கு பதிலளித்தல் அவசியம் எனவும் தெரிவித்தார்.

இவ்வாறே பிரான்ஸ், அவுஸ்றேலியா ஆகியனவும், சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை; நடைமுறைப்படுத்துவற்கான அவசியத்தை வலியுறுத்தி நின்றன.

தொடர்ந்து கருத்தினை வெளியிட்ட சர்வதேச நீதியாளர் ஆணையம் ICJ எனும் அமைப்பு, சிறிலங்கா தொடர்பில் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது.

வாhத்;தைகள் வேண்டாம் இங்கு செயல்தான் முக்கியம் என சிறிலங்காவுக்கு கடும் தொனியில் வெளிப்படுத்திய ICJ ,1977ம் ஆண்டு முதல் சிறிலங்கா அரசானது பல ஆணைக்குழுக்களை நிறுவியுள்ளது என குற்றஞ்சாட்டியது.

காலவிரயம், திட்டங்கள், வரைகள் யாவும் கடந்துவிட்ட நிலையில், சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச் சபைக்கு பொறிப்பிருக்கின்றது என தெரிவித்த ICJ , சுதந்திரமான சர்வதேச விசாரணையொன்று, சிறிலங்கா தொடர்பில் அவசியம் என வலியுறுத்தியது.

சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள், சர்வதச சட்டங்கள் ஆகியனவற்றுக்கு புறம்பாக, சிறிலங்காவில் இடம்பெற்று வரும்
சட்டத்தக்கு புறம்பான கொலைகள் , அச்சுறுத்தல்கள் ,பிற குற்றங்கள் குறித்து தனது கடுமையான கண்டனத்தை ICJ தெரிவித்தது.

மகிந்த ராஜபக்ச அரசாங்கமானது, கடந்த மூன்றாண்டுகளில் பொறுப்புகூறலில் இருந் தவறிவிட்டது என குற்றஞ்சாட்டிய ICJ , சிறிலங்கா தொடர்பிலான பிரேரணைக்கு நாடுகளின் ஆதரவின் அவசியத்தை வலியுறுத்தியது.

மேலும் ஐ.நா மனித உரிமைச் சபையில் சமர்பிக்கப்பட்டுள்ள பிரேரணையானது, சிறிலங்கா தொடர்பில் முதல்படியெனவும் ICJ தெரிவித்தது.

இவ்வாறு, பன்முனைகளிலும் இருந்து ஏவப்பட்ட கருத்துக்களுக்கு பதிலுரைக்க வேண்டிய கட்டாய நிலைக்கு சிறிலங்கா தள்ளப்பட்டிருந்தது.

சிறிலங்காவின் உள்நாட்டு விவாரங்களில் வெளியாரின் தலையீடு அவசியம் இல்லை என தெரிவித்த சிறிலங்கா, உள்நாட்டு விவகாரத்தை, உள்நாட்டிலேயே தாங்கள் தீர்த்துக் கொள்வோம் என தெரிவித்தது. 

தாய்

                             


                                   பசும் தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணிவைரம்

                                  இவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா.... 

மரணித்த 36 மணி நேரத்தில்

                            
                 மனிதன் மரணித்த 36 மணி நேரத்தில்

ஈக்கள் முட்டை இடுகின்றன உடலில்....


60 மணி நேரத்தில் லார்வாக்கள் தோன்றுகின்றன..


3 நாட்களில் நகங்கள் கழன்று விடுகின்றன...


4 நாட்களில் ஈறுகள் தொலைகின்றன...


5 நாட்களில் திரவமாய் உருகுகிறது மூளை...


6 நாட்களில் வாயுக்களால் வெடிக்கிறது வயிறு..


2 மாதங்களில் உடல் உருகி திரவமாகின்றது...



இப்படி மனிதனின் உடல் சிதைந்து போக...... மனிதனுக்கு

ஆணவம், தலைகணம், கோபம், ஆடம்பரம், கௌரவம்,

கொலை வெறி, ஜாதி மத சண்டைகள் தேவையா...??


அறிவு ஜீவிகள் சிந்திப்பார்களா......????
 
 

படிப்பிணை தரும் தகவல்

                      
                   பேருந்தில் தொங்கி கொண்டு செல்வது தான் வீரம் என்றால் இன்று ஆயுதம் ஏந்தி எல்லை ஓரத்தில் எந்த வீரனும் நிக்க மாடன்.. ஓடும் பேருந்தில் தான் தொங்கி கொண்டு இருப்பான். அசட்டு தனத்தை சாகசம் என்று எண்ணாமல் புத்திவுடன் செயல் படுவீர் மாணவ மணிகளே !

யார் இந்த சோழர்கள்?



                    


                                   யார் இந்த சோழர்கள்? இவர்கள் தமிழர்களா? என்ன செய்தார்கள்?

சோழர் காலம்

தென் இந்திய வரலாற்றின் உயர்விற்கு சோழ அரசர்கள் பெரும் பங்களிப்பு செய்துள்ளனர். முற்கால சோழர்கள் சங்ககாலத்தில் ஆட்சிபுரிந்தனர். சங்க கால சோழ அரசர்களில் தலைச்சிறந்த அரசர் கரிகாலன் ஆவார். வெகு காலத்திற்குப் பிறகு பல்லவர்கள் ஆட்சி வீழ்ச்சியுற்ற போது சோழ அரசு மறுபடியும் தலைதூக்க ஆரம்பித்தது. விஜயாலயன் எனும் சோழ மன்னரால் மீண்டும் புதுப்பொலிவுடன் சோழர் ஆட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டடது. பிற்கால சோழமன்னர்கள் கி.பி. 850 முதல் கி.பி.1279 வரை சுமார் 430 ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர்.


சான்றுகள்

கிடைக்கக் கூடிய பொருத்தமான சான்றுகளின் அடிப்படையில்தான் எந்தவொரு சமூகம் அல்லது அரசாட்சியின் வரலாற்றையும் எழுத முடியும். சோழர்களைப் பற்றி அறிய ஏராளமான கல்வெட்டு, தொல்பொருள், மற்றும் இலக்கியச் சான்றுகள் கிடைக்கின்றன. மகாவம்சம் போன்ற இலக்கியச் சான்றுகளும், மெகஸ்தனிஸ் போன்ற வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்புகளும் முற்கால சோழர்கள் பற்றி சிறந்த சான்றுகளாக உள்ளன.


கல்வெட்டுகள்

சோழர் கால வரலாற்றைப் பற்றிய தகவல்களை அறிய உதவும் சான்றுகளில் முதன்மையானவை கல்வெட்டுகள் ஆகும். சோழ அரசர்களின் வாழ்க்கை, ஆட்சிமுறை மற்றும் சோழர்கால அரசியல், பொருளாதார, சமய, சமூக பண்பாட்டு நிலைகளைப் பற்றி கல்வெட்டுகள் கூறுகின்றன. கோவில்களில் உள்ள தூண்களிலும் சுவர்களிலும் கல்வெட்டுகள் பதிக்ககப்பட்டுள்ளன. தஞ்சை பெதிய கோவில் என்றழைக்கப்படும் பிரகதீஜ்வரர் ஆலயத்தில் கல் வெட்டுகள் ஏராளமாக காணப்படுகின்றன. கடலூர், விழுப்புரம், திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், கும்பகோணம், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பல முக்கிய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சோழ அரசர்களின் ஆட்சிமுறைகளைப் பற்றி தகவல்களை கல்வெட்டுகள் வழங்குகின்றன.

மூன்றாம் இராஜேந்திரனின் ஆட்சி முறையைப் பற்றி திருவந்திபுரம் கல்வெட்டுகள் கூறுகின்றன. குடவோலை முறை, கிராம நிர்வாகம், வரி வசூல் முறை, நில வருவாய் முறை ஆகியவை குறித்து உத்திரமேரூர் கல்வெட்டுகள் கூறுகின்றன. சில கல்வெட்டுகளில் மெய்கீர்த்திகள் எனப்படும் மன்னர்களின் வெற்றி வரலாறுகளும் காணப்படுகின்றன.

அன்பில் செப்பேடுகள், கன்னியாகுமரி கல்வெட்டுகள், கரந்தை செப்பேடுகள் மற்றும் திருவாலங்காடு செப்பேடுகள் ஆகியன சோழர்களைப் பற்றிய பயனுள்ள பல தகவல்களை அளிக்கின்றன. சைவ மதம் அங்கு சிறப்புடன் இருந்தது குறித்து தஞ்சையில் உள்ள பெருவுடையார் கோவில் கல்வெட்டுகள் கூறுகின்றன. சோழர்களின் சமகால அரசர்களான சேரர், பாண்டியன், இராஷ்டிர கூடர், கங்கா ஆகியோர் வெளியிட்ட கல்வெட்டுகளும் சோழர்களின் சிறப்புகள் பற்றிக் கூறுகின்றன.


நினைவுச் சின்னங்கள்:

சோழர்கால வரலாற்றை அறிந்துகொள்ள நினைவுச் சின்னங்கள் மிக முக்கிய சான்றுகளாய் பயன்படுகின்றன. நினைவுச் சின்னங்கள் ஆலயங்களின் பகுதிகளாக உள்ளன. தஞ்சையில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயம், கங்கை கொண்ட சோழபுரம் கோவில், தாராபுரத்திலுள்ள ஐராவதீஸ்வரர் ஆலயம், திருபுனவத்திலுள்ள கம்பகரேஸ்வரர் ஆலயம் சோழர்காலத்தின் முக்கிய நினைவுச் சின்னங்கள் ஆகும்.


நாணயங்கள்:

சோழ அரசர்கள் பொன், வெள்ளி, செப்பு நாணயங்களை வெளியிட்டனர். அவற்றில் பொற்காசுகள் மிக்க குறைவாகவும், வெள்ளி செப்புக்காசுகள் அதிகமாகவும் கிடைக்கின்றன. சோழர் காலத்தில் வெளியிடப்பட்ட சோழ நாணயங்களில் சோழர்களின் சின்னமாகிய புலி சினனமும், சோழ அரசர்களின் பெயர்களும் காணப்பபடுகின்றன. இராஜராஜ சோழன் இலங்கையின் நாணயத்தைப் போன்ற நாணயங்களை நமது ராஜ்ஜியத்தில் வெளியிட்டார். சோழ அரசர்களின் காலங்களை வரிசைப்படுத்தவும், சோழர்கால சமுதாய பொருளாதார நிலைமைகளை அறிந்துகொள்ளவும் இந்நாணயங்கள் பெரிதும் பயன்படுகின்றன.


இலக்கியம்:

சங்கால சோழர்கள் மற்றும் பிற்கால சோழர்கள் பற்றி, அறிந்துகொள்ள இலக்கியங்கள் சிறந்த சான்றுகளாக உள்ளன. சேக்கிழாரின் பெரிய புராணம் சைவ பக்தர்களைப் பற்றிக் கூறுகிறது. இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் சேக்கிழார் வாழ்ந்தார். ஜெயம் கொண்டாரின் கலிங்கத்துப்பரணி ஒட்டக்சுத்தரின் மூன்று உலாக்கள், குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ் ஆகிய நூல்கள் சோழர்கள் பற்றி பயனுள்ள பல தகவல்களைத் தருகின்றன. வீர சோழியம், வநசோழ சரிதம், ஸதல புராணம், சோழ வம்ச சரிதம் ஆகிய இலக்கியங்கள் முற்கால சோழ அரசர்கள் பற்றி அறிய உதவும் சறந்த இலக்கியச் சான்றுகளாக உள்ளன.


அயல்நாட்டு சான்றுகள்:

சோழ அரசிற்கும் இலங்கை அரசிற்கும் இடையயே இருந்த உறவுகள் பற்றி இலங்கை இலக்கியமான மகாவம்சம் கூறுகின்றது. மேலும் இந்நூல் இலங்கையில் சோழர் ஆட்சி குறித்தும் கூறுகின்றது. ஐரோப்பிய பயணி மார்க்கோ போலோ, அயல்நாட்டு எழுத்தாளர் மெகஸ்தனிஸ் ஆகியோர் சோழர்களைப் பற்றி பல சுவையான தகவல்களைக் கூறுகின்றனர். அல்பெரூணி எனும் முகமதிய வரலாற்றாசிரியரும் சோழர்கள் பற்றி எழுதியுள்ளார்.


பிற்கால சோழ அரச குலம்:

பிற்கால சோழ அரச மரபை உருவாக்கியவர் விஜயாலயன் என்ற அரசர் ஆவார். இவர் முத்தரையர்களிடமிருந்து தஞ்சையைக் கைப்பற்றி கி.மு. 850 ல் அதை சோழ நாட்டின் தலைநகராக்கினார். பல்வல மன்னர் அபராஜிதனை தோற்கடித்து அவரது இராஜ்ஜியத்துடன் இணைத்துக்கொண்டார். சிவ பக்தரான இவர் பல இடங்களில் சிவன் கோவில்களைக் கட்டினார்.


முதலாம் பராந்தகன் கி.பி. 907 – கி.பி. 953:

உத்திரமேரூர் கல்வெட்டுகள் முதலாம் பராந்தக சோழன் பற்றி நிறைய தகவல்களைத் தருகின்றன. இவர் ஆதித்யனின் மகனாவார். இவர் டிதன் இந்தியாவின் பல பகுதிகளை வென்று தனது நாட்டுடன் இணைந்து தமது பேரரசின் எல்லையை வடக்கே நெல்லூர் வரை விரிவுபடுத்தினார். பாண்டிய மன்னரைத் தோற்கடித்து வெற்றிகரமாக மதுரையைக் கைப்பற்றினார். இந்த வெற்றியை போற்றும் விதமாக இவருக்கு ‘மதுரை கொண்டான்’ என்ற பட்டடம் வழங்கப்ப்டடது. அத்துடன் மேலும் இலங்கை மற்றும் பாண்டிய அரசர்களின் கூட்டு ராணுவத்தைத் தோற்கடித்ததால் இவர் ‘மதுரையும் ஈழமும் கொண்டான்’ என்ற பட்டம் பெற்றார்.


இவர் ஒரு சிவபக்தர். இவர் சிதம்பத்தில் உள்ள நடராஜர் ஆலயத்திற்கு பொன்னால் கூரை வேய்ந்தார். எனவே இவர் ‘பொன்வேய்ந்தசோழன்” என்று அழைக்கப்பட்டார். இவரது ஆட்சி காலத்தில் கிராம நிர்வாகம் சிறப்புற்று காணப்பட்டது. பராந்தகனுக்குப் பிறகு கண்டராதித்தியன். அரிஞ்சயன், இரண்டாம் பராந்தகன் என அழைக்கப்பட்ட சுந்தரசோழன் மற்றும் உத்தமசோழன் ஆகியோர் அரசாண்டனர்.


முதலாம் இராஜராஜ சோழன் கி.பி. 985 – கி.பி 1014

இரண்டாம் பராந்தனுக்கும் வானவன் மகா தேவிக்கும் மகனாகப் பிறந்தவர் முதலாம் இராஜராஜ சோழன் ஆவார். திருவலாங்காடு செப்பேடுகள் இராஜராஜன் பற்றி கூறுகின்றன. இவர் சோழர் குலத்தின் மிக வலிமை மிக்க மன்னராவார். முதலாம் இராஸராஸ சோழனின் சிறப்புகள் சோழ நாட்டிற்கு மட்டுமல்லாது தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்க்கின்றன. இவர் காலத்தில் பல கல்வெட்டுகள் வெளியிடப்பட்டன. இராஜராஜனிடம் வலிமை மிக்க ராணுவம் இருந்தது. இவர் சேரரின் ராணுவத்தை திருவனந்தபுரத்தில் தோற்கடித்தார். இவர் கொல்லத்தை சார்ந்த பாஸ்கர ரவி எ்னற மன்னனையும் தோற்கடித்து, ‘காந்தளூர் சாலை கலமருதளிய’ என்ற பட்டம் பெற்றார். இவர் அமரபுஜங்கன என்ற பாண்டிய மன்னனை வென்றார். இலங்கை அரசன் ஐந்தாம் மகிந்தாவை வென்று அனு ராதபுரத்தையும் இலங்கையின் வட பகுதியையும் இவர் கைப்பற்றினார். இவர் புலனருவா நகரத்தைப் புதிய தலைநகராக்கி அங்கு பல கோவில்களைக் கட்டினார். இவர் சேர, பாண்டிய, இலங்கை ஆகிய மூன்று மன்னர்களை வென்று

மும்முடி சோழன்” என்ற பட்டம் பெற்றார். இவர் மைசூர் பகுதியில் உள்ள கங்கபடி, தடிகை பாடி, நொளம்ப்பாடி ஆகியவற்றை வென்றார். இவர் விளிங்ஞம் என்ற பகுதியை வென்று ‘திக் விஜயம்’ நடத்தினார். மாலத் தீவுகள், கலிங்கம் ஆகியவற்றையும் வென்றார். இவருக்கு ‘அருண்மொழி’, ‘இராஜகேசரி’ போன்ற பட்டங்கள் உண்டு. இராஜராஜ சோழனுக்கு அவரது மகன் பட்டத்து இளவரசான ராஜேந்திரன் ஆட்சி மற்றும் போர்ப்பணிகளில் மிகவும் உறுதுணையாக இருந்தார்.

இராஜராஜ சோழன் ஒரு சிறந்த நிர்வாகி, தமது ஆட்சி காலத்தில் இவர் நில அளவை முறையை அறிமுகப்படுத்தினார். இவரது ஆட்சிக்குட்பட்ட பகுதிகள் அனைத்திலும் உள்ளாட்சி நிர்வாக முறையை சிறப்பாக நடைமுறைப்படுத்தினார். இவர் தஞ்சையில் உள்ள பெரிய கோவில் என்றழைக்கப்படும் பிரகதீஸ்வரர் ஆலயத்தைக் கட்டினார். இவர் புத்த மதத்தையும் சைவ சமயத்தையும் ஆதரித்தார். நாகப்பட்டினத்தில் புத்தஆலயம் கட்டட அனுமதி அளித்ததோடு ஆனைமங்கலம் எனும் கிராமத்தையும் புத்த மடாலயத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.


முதலாம் இராஜேந்திரன் கி.பி. 1002 – கி.பி.1044:

முதலாம் இராஜராஜ சோழனுக்குப் பிறகு அவரது மகன் முதலாம் இராஜேந்திரன் அரியணை ஏறினார். முதலாம் இராஜேந்திரனைப் பற்றி திருவாலங்காடு செப்பேடுகள், கரந்தை செப்பேடுகள் ஆகியன பல தகவல்களைக் கூறுகின்றன. இவர் ஒரு சிறந்த நிர்வாகியும், போர் வீரரும் ஆவார். இவரின் தந்தையாருடைய இராணுவ தீரச்செயல்களிலும் சிறந்த நிர்வாகத்திலும் இவருக்கு முக்கியப் பங்குண்டு. இவர் பதிவ ஏற்றவுடன் இலங்கை முழுவதையும் கைப்பற்றி இலங்கையில் சோழர் ஆட்சியை நிலை நிறுத்தினார். இவர் தனக்கு உதவ தன் மகன் இராஜாதி ராஜனை பட்டத்து இளவரசர் ஆக்கினார்.

தனது ஆட்சியின் போது இவர் பல சிவ ஆலயங்களையும் விஷ்ணு ஆலயங்களையும் கட்டினார். இவர் வங்காள அரசன் முதலாம் மகிபாலனைத் தோற்கடித்து கங்கையில் இருந்து தஞ்சைக்குத் தண்ணீர் கொண்டு வந்தார். இந்நீர், கங்கைகொண்ட சோழபுரத்திற்கு அருகே உள்ள சோழ கங்கம் என்ற நீர்பாசன ஏரியில் சேர்க்கப்பட்டடது. இந்த வெற்றியைப் போற்றும் விதமான இராஜேந்திர சோழனுக்கு ‘கங்கை கொண்டான்” என்ற சிறப்புப்பட்டம் சூட்டப்பட்டது.


இவர் தன் தலைநகரை தஞ்சையில் இருந்து கங்கைகொண்ட சோழப்புரத்திற்கு மாற்றினார். இவர் இலங்கையை கைப்பற்றினார். பின்னர் சேர பாண்டிய அரசர்களை வெற்றிக்கொண்டார். சாளுக்கிய குல அரசன் இரண்டாம் ஜெயசிம்மனோடு இவர் போரி்ட்டார். கலிங்கத்து அரசனையும் இவர் வெற்றிகொண்டார். இவர் ஒரு வேதக்கல்லூரியை நிறுவினார். முதலாம் இராஜேந்திரன், வீரராஜேந்திரன், அதிராஜேந்திரன் ஆகிய அரசர்கள் சில வருடங்கள் சோழ நாட்டை ஆட்சி செய்தனர்.



முதலாம் குலோத்துங்கன் கி.பி. 1120 – கி.பி. 1170:

சோழர் வரலாற்றில் குலோத்துங்கசோழன் மிகப்பெரிய திருப்புனையை ஏற்படுத்தினார். குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழ், விக்கிரம சோழன் உலா ஆகிய நூல்கள் குலோத்துங்கனின் நிர்வாகம், இராணுவ வெற்றிகள் பற்றி விளக்குகின்றன. இவர் சேர பாண்டிய மன்னர்களைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தார். மேற்கு சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தியனுடன் இவர் போரிட்டார். குலோத்துங்கன் காலத்தில் சோழப்பேரரசு மிகவும் பரந்து காணப்பட்டது. வினயாதித்யாவிடம் இருந்து வெங்கியின் ஆட்சியைக் கைப்பற்றினார். முதலாம் குலோத்துங்க சோழனை சீனா போன்ற தூர கிழக்கு நாடுகள் நன்கு அறிந்திருந்தன. இவர் சீன அரசவைக்கு தூதுவரை அனுப்பினார். இவர் இலங்கையின் வட பகுதியில் தன் ஆதிக்கத்தை இழந்தார். ஆனால் தென் பகுதியில் தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்தினார். இவர் கலிங்கத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். சோழப்பேரரசின் பொருளாதார நிலையை முன்னேற்றமடைய செய்தார். பல புதிய சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தி முறையான நில அளவை முறையினை இவர் தொடர்ந்து நடைமுறைப்படுத்தினார்.

மக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சுங்க வரி உட்பட பல விதமான வரிகளை நீக்கி, வரி சுமையில் இருந்து மக்களை மீட்டடதால் இவருக்கு ‘சுங்கம் தவிர்த்த சோழன்’ என்ற சிறப்புப்பட்டம் வழங்கப்பட்டது. இவர் பல நிர்வாக சீர்த்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். சோழப் பேரரசு இவர் காலத்தில் புத்துயிர் பெற்றது. இவரது ஆட்சியில் உள்நாட்டு அமைதியும் சிறந்த நிர்வாகமும் சோழமக்களுக்கு கிடைத்தன.


சோழ அரசர்களில் மிகவும் சிறந்த அரசராக முதலாம் குலோத்துங்கன் கருதப்படுகிறார். அவருக்கு பின் வந்த அரசர்கள் திறமையற்றவர்களாக இருந்ததால் சோழர் ஆட்சி வீழ்ச்சியுற்றது