
Sunday, September 2, 2012
வெற்றி

"தோல்வியா யார் சொன்னது !ஆயிரக்கணக்கான பொருட்கள் பயன்படமாட்டா என்று கண்டிருக்கிறேனே . அது தான் வெற்றி ! " என்று தோல்விகளில் வெற்றி கண்ட எடிசன்
****
மேதை எடிசனும், அகில விஞ்ஞானி, ஐன்ஸ்டைனைப் போல் மந்த புத்திச் சிறுவனாகத்தான் பள்ளிக் கூடத்தில் காட்சி அளித்திருக்கிறார்.
ஏழு வயதில் திடீரென எடிசனின் சிந்தனா சக்தி விரிந்து தூண்டப் பட்டது! சூழ்நிலைச் சாதனங்களின் மேல் ஆர்வம் மிகுந்து அடிப்படை ஆய்வுக் கேள்விகள் எழுந்தன. ஒன்பது வயதில் ரிச்சர்டு பார்க்கர் [Richard Parker] எழுதிய ‘இயற்கைச் சோதனை வேதம் ‘ [Natural & Experimental Philosophy] என்ற நூலைப் படித்து முடித்தார். பதிமூன்றாம் வயதில் தாமஸ் பெயின் [Thomas Paine] எழுதிய ஆக்க நூல்களையும், சிரமத்துடன் ஐஸக் நியூட்டன் இயற்றிய ‘கோட்பாடு ‘ [Principia] என்னும் நூலையும் ஆழ்ந்து படித்தார். தனது 21 ஆம் வயதில், மைகேல் ஃபாரடேயின் [Micheal Faraday] செய்தித்தாளில் இருந்த ‘மின்சக்தியின் பயிற்சி ஆராய்ச்சிகள் ‘ [Experimental Researches in Electricity] பகுதியை ஒருவரி விடாது ஆழ்ந்து படித்து முடித்தார். அந்த ஞானம் அவரது வாழ்க்கையில் ஒரு பெருத்த மாறுதலை உண்டாக்கியது! செய்கை முறையில், சோதனைகள் புரிந்து படைக்கும் திறனை எடிசனுக்கு அவை அடிப்படை ஆக்கின. கணிதப் படிப்பில் லாத எடிசன், விஞ்ஞான இயற்பாடு [Theory] எதுவும் முறையாகக் கற்காத எடிசன், சோதனைகள் மூலம் மட்டிலுமே திரும்பத் திரும்ப முயன்று, ஞான யுக்தியால் பல அரிய நூதனச் சாதனங்களைப் படைத்து உலகப் புகழ் பெற்றார்.
சிவில் உரிமைகளின் தாய்

வரலாற்றையே மாற்றிய ஒரு பேருந்து நிகழ்வு !
பெண்ணுக்கும், கரு நிறத்திற்கும் மதிப்பில்லாத காலம் அப்போது . வெள்ளையர்கள் ஏறி விட்டால், இருக்கையில் அமர்ந்துள்ள கறுப்பர்கள் அவர்களுக்கு எழுந்து இடம் தரவேண்டும்
. 1955களில் அமெரிக்காவில் இது நடந்தது.
ஒரு வெள்ளையர் பேருந்தில் ஏறியவுடன், கறுப்பர்கள் எழுந்துவிட்டனர். ஒர பெண் மட்டும் எழ மறுத்தார். “நீ எழ மறுத்தால், போலீசைக் கூப்பிடுவேன்” என்றார், ஓட்டுநர். “தாராளமாக செய்யுங்கள்” என்றார் அந்தப் பெண். போலீஸ் வந்தது. அந்தப் பெண்ணைக் கைது செய்தது.
உரிமைக்குக் குரல் கொடுத்த அந்தப் பெண்ணின் பெயர் தான் ரோசாபார்க்ஸ்.
இச்செய்தி கருப்பர்கள் நிறைந்த அந்தப் பகுதியில் கொந்தளிப்பை ஏற்படுத்த ,நீதி கிடைக்கும் வரை மாநகரப் பேருந்தில் ஏறுவதில்லை, பணிகளுக்கும் செல்வதில்லையென புறக்கணிப்பு போராட்டத்தை நிகழ்த்தினர் .
நிறைய மிரட்டல்களுக்கு மத்தியின் ரோசா தொடர்ந்து பொறுமையாக போராடியதால் சிவில் உரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. சிவில் உரிமைகளின் தாய் என அழைக்கப்படுகிறார்.
"அன்று அவர் எழ மறுத்ததால்தான், இன்று நாங்கள் எழுந்து நிற்கவும், தலை நிமிர்ந்து நடக்கவும் முடிகிறது" என்பது கருப்பினத்தவர்களின் கூற்று.
ஒருவர் நினைத்தால் சரித்திரத்தை மாற்றலாம் என்பதற்கு எடுத்துக்காட்டு இவர்.
ஒரு வெள்ளையர் பேருந்தில் ஏறியவுடன், கறுப்பர்கள் எழுந்துவிட்டனர். ஒர பெண் மட்டும் எழ மறுத்தார். “நீ எழ மறுத்தால், போலீசைக் கூப்பிடுவேன்” என்றார், ஓட்டுநர். “தாராளமாக செய்யுங்கள்” என்றார் அந்தப் பெண். போலீஸ் வந்தது. அந்தப் பெண்ணைக் கைது செய்தது.
உரிமைக்குக் குரல் கொடுத்த அந்தப் பெண்ணின் பெயர் தான் ரோசாபார்க்ஸ்.
இச்செய்தி கருப்பர்கள் நிறைந்த அந்தப் பகுதியில் கொந்தளிப்பை ஏற்படுத்த ,நீதி கிடைக்கும் வரை மாநகரப் பேருந்தில் ஏறுவதில்லை, பணிகளுக்கும் செல்வதில்லையென புறக்கணிப்பு போராட்டத்தை நிகழ்த்தினர் .
நிறைய மிரட்டல்களுக்கு மத்தியின் ரோசா தொடர்ந்து பொறுமையாக போராடியதால் சிவில் உரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. சிவில் உரிமைகளின் தாய் என அழைக்கப்படுகிறார்.
"அன்று அவர் எழ மறுத்ததால்தான், இன்று நாங்கள் எழுந்து நிற்கவும், தலை நிமிர்ந்து நடக்கவும் முடிகிறது" என்பது கருப்பினத்தவர்களின் கூற்று.
ஒருவர் நினைத்தால் சரித்திரத்தை மாற்றலாம் என்பதற்கு எடுத்துக்காட்டு இவர்.
ANTS

Ants, like many animals on the Gulf Coast of the USA, have had their ability to survive severely tested in the wake of Hurricane Isaac. In this picture they’re displaying their fascinating team work skills by creating a living life boat on top of the flood waters in Florida. Worker ants make up the bulk of the raft, helping to keep it afloat while continuing to care for the larvae of the colony. The queen ant is safely sheltered in the centre of the bundle, while soldier ants scurry across the top on lookout for potential dangers such as predators...
Subscribe to:
Posts (Atom)