Like me

Sunday, March 18, 2012

அணுஉலை கழிவுகள்

              


அணுஉலை கழிவுகள் பற்றிய பதிவு இது.....

அணுஉலையே சர்ச்சையில் ஓடிகொண்டிருக்கும் போது நாம் ஏன் அணுஉலை கழிவுகளை பற்றி பேச வேண்டும் ???.....

கீழே படியுங்கள்

          அணுஉலை வேண்டும் வேண்டும் என்று தொண்டை தண்ணி வற்ற கத்தி கொண்டிருக்கும் நவீன விஞ்ஞானிகளே.... நீங்கள் எவ்ளோ சுயநலவாதிகள் என்பதை நீங்கள் என்றைக்காவது உணர்ந்துல்லீர்களா... நிச்சயமாக இல்லை.... சமுதாயத்தின் மீது அக்கறை உள்ளவர்கள் என்றல் நிச்சயம் நான் சொல்ல போகும் இந்த விஷயம் தெரிந்திருக்கும் .... உங்களுக்கு உங்கள் நாட்டில் மின்சாரம் இருந்தால் போதும் அதனால் நீங்க எந்த வழியை வேண்டுமானாலும் பயன்படுத்துவீர்கள்.... அதனால் சொந்த மக்களுக்கே பிரச்சனை ஏறப்பட்டலும் உங்களுக்கு கவலை இல்லை.. ஏன் என்றால் நீங்க பாதிக்கப்படுவதில்லை... எவனோ ஒருவன் பாதித்தால் நான் என்ன செய்வேன் என்றே மனோபாவமே நம்மில் பலருக்கு அதிகம்....

           என் வீட்டில் மின்சாரம் வருகிறதா அது போதும் எனக்கு... மற்றவன் செத்தால் என்ன பிழைத்தால் நமக்கு என்ன ??

      மொத்தமாக நம் பூமியில் உள்ள இயங்கும் அணுஉலைகள் இவ்வளவு என்று தெரியுமா .... 440 அணுஉலைகள்..... இவ்வளவு அனுளைகளிளிருந்து வெளியேற்றப்படும் அனுக்கழிவுகள் என்ன ஆகின்றன ??... யாரவது யோசித்ததுண்டா ??? நானும் யோசிக்க வில்லை... இந்த கூடங்குளம் பிரச்சனை வந்த உடனே நானும் இதை பற்றி யோசிக்க தொண்டன்கினேன்... அதிர்ச்சிகரமான சில விஷயங்கள் என் கண்ணில் பட்டது....

அது தான் சோமாலியா ... இந்த ஊரு பெயரை உச்சரித்தாலே பஞ்சதிர்க்கும், பசிக்கும் இரையாகி எலும்பும் தோலுமாக இருக்கும் மனிதர்களையே ஞாபக படுத்தும்...

இந்த ஊரை பற்றி நம்மில் பல பேருக்கு தெரியாத (சில உலக அரசுகளுக்கும் மட்டும் தெரிந்த) விஷயங்கள் இதோ... அணுஉலை கழிவுகள் உரிய முறையில் அழிக்கப்படுகின்றன என்று கூறுவது முற்றிலும் பொய்....உலகில் உள்ள அத்தனை அனுஉலை கழிவுகள் மொத்தமாக கொட்டும் குப்பைத்தொட்டி உலகில் ஒன்று உண்டு என்றால் அது சோமாலியா தான்

அங்கே தான் மொத்த கழிவுகளும் கொட்டப்படுகின்றன.... இதற்க்கு என்ன டா ஆதாரம் என்று நீங்கள் கேட்பது புரிகிறது... 2004 சுனாமி வந்ததே தெரியுமா ...அதில் அதிக சேதம் அடைந்த நாடுகளில் சொமளியாவும் ஒன்று .... அந்த மக்கள் நிவாரண பணிகளுக்கும் சென்ற ஊழியார்கள் யாருமே அவர்கள் பிணத்தை தொட கூட இல்லை ஏன் என்றால்... நம் உலக வல்லரசுகள் தங்கள் அனுக்கழிவுகள் கொட்டும் குப்பைதொட்டியாக வைத்து கொண்ட சோமாலியா கடல் சுனாமியால் பொங்கி எழுந்த போது அத்தனை கழிவுகளும் கண்டைனர்களில் மூலம் வெளியே அடித்து வரப்பட்டது... அந்த கண்டைனர்களில் இருந்து கதிர்வீச்சு அதிகமாக இருந்ததே இதற்க்கு காரணம்...

அந்த சோமாலியாவை மேலும் சீரழிக்க நம்ம ஊரும் தயாராகி வருகிறது.....

இப்போது சொல்லுங்கள் அணுஉலையை ஆதரிப்பவர்கள் சுயநலவாதிகளா ?? பொதுநலவாதிகளா ???

சிரியாவில் இன்னொரு இனப்படுகொலை

                                            

                  சிரியாவில் 47 பெண்கள்-குழந்தைகள் கழுத்து அறுத்து படுகொலை

இன்னொரு இனப்படுகொலை வேகமாக வளர்ச்சி பெற்று வருவது கண்கூடாக தெரிகிறது.... உலக நாடுகளே உங்களை மன்றாடி கேட்டுக்கொள்கின்றேன்.... தமிழர்களுக்கு இழக்கப்பட்ட கொடூரங்களை தான் இந்த உலக வல்லாதிக்க தேசங்களும் என் தேசமும் கை கட்டி வேடிக்கை பார்த்தது ... பாவம் 26 பெண்கள் மற்றும் 21 குழந்தைகள் கழுத்தை அறுத்தும், கத்தியால் குத்தியும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதையாவது தடுத்து நிறுத்துங்கள்;.... தடுத்து நிறுத்தாட்டியும் பரவைல்லை... தயவு செய்து படுகொலைகளை செய்த அந்த நாட்டு ஆட்சியாளர்களை ஆதரிக்காதீர்கள்

எங்களை தான் மனிதர்களாகவே நினைக்கவில்லை (தமிழனாக பிறந்த பாவமோ என்னவோ) இவர்களையாவது காப்பாற்றுங்கள் .....
குழந்தைகள் கழுத்தை அறுத்து கொள்கின்றனர் ... அப்பாவி மழலைகள் உயிரை காப்பாற்றுங்கள்
இன்னொரு "இசைபிரியா"வின் கற்பபழிப்பை பார்க்க எனக்கு சக்தி இல்லை
                                                                                                                         சுமன் ராஜ்

நடுவண் அரசிற்கு சவுக்கடி ......

                                  


இந்திய நடுவண் அரசிற்கு ஜெயலலிதாவின் சவுக்கடி .......

ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்திருக்கும் பிரேரணை தொடர்பில் கலந்தாலோசிப்பதற்கு நேரம் ஒதுக்குமாறு இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் விடுத்த அவசர வேண்டுகோளை தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நேற்றுத் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டார்.

இலங்கை அரசுக்கு எதிரான பிரேரணையை ஆதரிக்குமாறு தமிழ்நாட்டில் ஏகோபித்த குரலில் அரசியல் கட்சிகள் வலியுறுத்திவரும் தற்போதைய சூழ்நிலையில், சிவ்சங்கர் மேனனை சந்திக்க ஜெயலலிதா மறுத்திருப்பது மத்திய காங்கிரஸ் அரசுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

"ஜெயலலிதாவை சந்திப்பதற்குச் சிவ்சங்கர் மேனன் இரண்டு தடவைகள் சந்தர்ப்பம் கேட்டார். அவர் அவசரமாக சென்னை வருவதற்கும் ஏற்பாடானது. ஆனால், மத்திய அரசின் அமைச்சர்களுடனோ, உயர்மட்ட அதிகாரிகளுடனோ நேரடிப்பேச்சு நடத்துவதை முதல்வர் விரும்பவில்லை" என்று தமிழக அரசின் மூத்த அமைச்சர் ஒருவர் நேற்றிரவு உதயனிடம் தெரிவித்தார்.

"ஜெனிவாவில் இலங்கை விவகாரம் குறித்தும், அது தொடர்பான தமிழக மக்களின் உணர்வுகள் பற்றியும் விளக்கி அம்மா (ஜெயலலிதா) இரண்டு கடிதங்களை பிரதமர் மன்மோகனுக்கு அனுப்பினார். அந்த இரண்டு கடிதங்களுக்கும் உரிய பதில் அனுப்பப்படவில்லை. அவற்றை கிஞ்சித்தும் மத்திய அரசு கவனிக்கவில்லை. இந்த நிலையில், அதிகாரிகளைச் சந்திப்பது அர்த்தமற்ற செயல். இதனால்தான் மேனனின் கோரிக்கையை நிராகரித்தார் முதல்வர்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில் தமிழக முதலமைச்சரின் இந்த நிராகரிப்பால் அதிர்ச்சியடைந்துள்ள மத்திய அரசு, மூத்த அமைச்சர் ஒருவரை தமிழ்நாட்டுக்கு அனுப்புவது குறித்து தீவிரமாக ஆராய்ந்ததாக அறியமுடிகின்றது.

செய்தி மற்றும் படங்கள் : George A Arul

சிறந்த சர்வதேச இளைஞன் விருது

                                
போர் குற்றவாளியான ராஜபக்சேவின் மகனான நமல் ராஜபக்சேவுக்கு சிறந்த சர்வதேச இளைஞன் விருது டெல்லியில் நடக்கும் ஒரு பத்திரிக்கை விழாழில் வழங்கப்படுகிறது.

அதற்காக டெல்லிக்கு வரும் ஜூனியர் ராஜபக்சேவுக்கு எதிராக தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தி விடக்கூடாது என அவருக்கு இசட் (Z ) பிரிவு பாதுகாப்பை இந்திய அரசு வழங்கியிருக்கிறது 

தமிழக அழுத்தங்கள், இந்தியாவின் சிறந்த முடிவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தாது

                                    

தமிழக அழுத்தங்கள், இந்தியாவின் சிறந்த முடிவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தாது --- பிரசாத் காரியவசம்

தெரியாம தான் கேக்குறேன் இந்த ஆளு

"இந்தியாவிற்கான இலங்கை தூதுவரா" 


இல்ல "இலங்கைக்கான இந்திய தூதுவரா "

"பிரபாகரன்" என்ற ஒற்றைச் சொல்லில்,.........



இன்று முகநூலில் தென்பட்ட தலைவர் பிரபாகரன் தொடர்பான கருத்துக்கள் இவை....ஒரு பெயர் ஒரு இனத்தை எப்படி இயக்குகிறது என்பதற்கு ஒரு சிறிய உதாரணம் இது..

தமிழச்சி (Tamizachi)
'பிரபாகரன்' என்னும் ஒரு சொல்லில் இருக்கிறது அரசியல்.

'அவர் இறந்து விட்டார்' என்னும் சிங்கள அரசும், 'உயிரோடு இருக்கிறார்' என தமிழ் தேசியவாதிகளும் சூளுரைக்கும் அசட்டுவாதங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மக்கள் தலைவனுக்காக உலகம் முழுவதும் போராடிக் கொண்டிருக்கும் வல்லமையை பிரபாகரன் உருவாக்கி இருப்பதே தலைமையின் வலிமைக்கு உதாரணம்!

ஒரு தலைவனின் வெற்றியானது எத்தனை எதிரிகளை அழித்தான் என்பதல்ல. "எத்தனை மக்களை போராட வைத்தான்" என்பதிலிருக்கிறது.


Kumaran Kathirgamar

இத்தனை வருடப்போராட்டத்தை நடத்துவதற்கு பிரபாகரன் மேடைகளில் வந்து முழங்கியதும் இல்லை,வாக்குறுதிகளை அள்ளி வீசியதுமில்லை,ஆடு,மாடு,கோழி,பணம் என்று ஐந்தாண்டுக்கு ஒரு முறை பிச்சை எடுத்ததும் இல்லை.பிரபாகரன் என்கிற ஒருபிம்பம் தான்,கண்ணுக்கு தெரியாத நிழல் தான் எங்களை ஆட்சி செய்தது,

கடைசி சிங்களவன் எங்கள் மண்ணை விட்டு ஓடும்வரை நாங்கள் அடிபடுவோம்.அதுவரை பிரபாகரன் என்கிற ஒட்டுமொத்த தமிழர்களின் ஒரே தலைமை படைநடத்தும்.

தமிழகத்திலும் சரி,புலம்பெயர் நாடுகளிலும் சரி,தேசியத்தலைவரை பார்க்காமல்,அவரை ஒருநாள் பார்ப்போம் என்பதற்காகவே எந்த வகையான போராட்டத்துக்கும் தயாராக ஆயிரக்கணக்கான இளைஞர்களை ஆக்கி வைத்திருப்பது அந்தப்பெயர் மட்டும் தான்.அது போதும்.அது வழிநடத்தும்,அது படை நடத்தும்.முற்றுகையை உடைத்து வெளிவரத்தான் பிரபாகரன் எங்களுக்கு பயிற்றுவித்துள்ளான்;உள்ளிருந்து அழுவதற்கல்ல.இப்போதும் இந்த முற்றுகையை உடைப்போம்.



Cartoonist Bala

இருந்தாலும்.. இல்லாவிட்டாலும்...
"பிரபாகரன்" என்ற ஒற்றைச் சொல்லில் தமிழர்களின் எழுச்சி அடங்கியிருக்கிறது.


Xavier Jeen 

"தமிழ்" - க்கு அடுத்தபடியாக உலகத் தமிழினத்தை இணைக்கும் சொல் "பிரபாகரன்".
 








தனி மனித வழிபாடு – தனிமனித அரசியல் என்பவற்றிற்கும் அப்பால் பிரபாகரன் என்ற பெயர் தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் அதிர்வுகளை ஈழப்பிரச்சினையை கையாளும் வெளித்தரப்பு புரிந்து கொள்வது அவசியம்