Like me

Saturday, March 17, 2012

ஈழத்தின் கடைசித் தமிழ் மன்னன்

                                              

                                      ஈழத்தின் கடைசித் தமிழ் மன்னனின் நினைவு நிகழ்வு!

கண்டியை தனது இராசதானியாகக் கொண்டு ஆட்சி செய்த ஈழத்தின் கடைசித் தமிழ் மன்னனான கண்ணுச்சாமியின் 181ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு தமிழகம் வேலூரில் இடம்பெற்றுள்ளது.


சிங்களவர்களால் காட்டிக் கொடுக்கப்பட்டு 10.02.1815 அன்று பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழ் மன்னன் கண்ணுச்சாமி 30.01.1832 அன்று தமிழகம் வேலூர் சிறையில் சுகவீனமுற்று சாவடைந்தார்.

இவ் ஈழத்தமிழ் மன்னனின் 181ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு வேலூரில் அமைந்திருக்கும் அவரது நினைவாலயத்தில் கடந்த 30.01.2012 அன்று அவரது உறவினர்களால் நினைவுகூரப்பட்டது.

1739ஆம் ஆண்டிலிருந்து கண்டி இராசதானியை ஆட்சி செய்த நான்கு தமிழ் மன்னர்களில் கடைசி மன்னனாக விளங்கிய கண்ணுச்சாமி அவர்கள் மதுரை நாயக்க வம்சத்தின் தமிழ்வழித் தோன்றல்களில் ஒருவர் ஆவார்.



18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராடிய வன்னி மன்னன் பண்டாரவன்னியனுடனும், தமிழகத்தைச் சேர்ந்த வீரபாண்டிய கட்டப்பொம்மனுடனும் இவர் நல்லுறவைப் பேணி வந்தமைக்கான வரலாற்றுப் பதிவுகள் உள்ளன.

சிறீவிக்கிரம ராஜசிங்கன் என்ற முடிப்பெயருடன் கண்டியை ஆட்சிசெய்த இத் தமிழ் மன்னனின் கொடியை 1945ஆம் ஆண்டு தமது தேசிய கொடியாக வரித்துக் கொண்ட சிங்கள அதிகார வர்க்கம், 1951ஆம் ஆண்டு அக்கொடியின் நான்கு முனைகளிலும் காணப்பட்ட கூர்முனைகளுக்குப் பதிலாக பௌத்த மேலாதிக்கத்தை நிலைப்படுத்தும் அரசமர இலைகளைப் பொறித்துக் கொண்டது.
இம்மன்னனினதும், இவரது மூதாதையர்களினதும் ஆட்சியில் கண்டி இராசதானியின் அதிகாரபூர்வ மொழியாகத் தமிழ் மொழி விளங்கியிருந்தது.

ஈழத்தீவிற்கு இன்று சிங்களம் ஏகபோக உரிமை கோருகின்ற பொழுதும், மேலைத்தேய ஆக்கிரமிப்பு நிகழ்ந்தேறும் வரை ஈழத்தீவை – சிங்களப் பிரதேசங்கள் உட்பட – ஆட்சி செய்தவர்களாக தமிழர்களே திகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் நம்பிக்கை துரோகத்தால் சாகடிக்கப்பட்டவர்கள்.

   
திருடன் போலீஸ் விளையாண்ட சிறுவர்கள் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அப்பா அம்மா விளையாட்டு என்றால் என்னவென்றே அறியாமல் விளையாண்ட சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டனர்.

கணவனோட பகிர்ந்து கொண்ட சுகத்தை காம வெரியங்கள் பகிர்ந்துகொண்டதால் தற்கொலை செய்துகொண்ட பெண்கள்.

குழந்தைகள் மார்புதைக்கும் பொது சுகமாக எண்ணி பொறுத்துக்கொண்ட தாயின் மார்பில் மிதித்து கொள்ளப்பட்டனர்.

போர்க்களத்தில் கூட புறமுதுகு கட்டாத ஆண்மகங்களை கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இவர்கள் இலங்கையின் இனவெறியால் கொல்லப்பட்டவர்கள் அல்ல இந்தியாவின் நம்பிக்கை தொரோகத்தால் சாகடிக்கப்பட்டவர்கள். 

ஆண்மகன்

                           
                                                    ஆண்களின் பருவம்
           பாலன்,                1 வயதுமுதல் 7 வயதிற்குட்பட்ட ஆண் (Balan, 1-7 years).
           மீளி,                     8 வயதுமுதல் 10 வயதிற்குட்பட்ட ஆண் (Meeli, 8 - 10 years).
           மறவோன்,         11 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட ஆண் (Maravon, 11 to 14 years)
           திறவோன்,         15 வயது (Thiravon, 15 years)
           விடலை,            16 வயது (Vidalai, 16 years).
           காளை                 17 வயது முதல் 30 வயதிற்குட்பட்ட ஆண் (Kalai, 17 to 30 years )
           முதுமகன்,          30 வயதுக்கு மேல் (Mudhumagan, after 30 years)

Tamil Literature Reference:

‘காட்டிய முறையே நாட்டிய ஆண்பாற்கு
எல்லையும் பெயரும் இயல்புற ஆய்ந்து
சொல்லிய தொன்னெறிப் புலவரும் உளரே.’
’’ 228
‘பாலன் யாண்டே ஏழ்என மொழிப.’
’’ 229
‘மீளி யாண்டே பத்துஇயை காறும்.’
’’ 230

‘மறவோன் யாண்டே பதினான் காகும்.’
’’ 231

‘திறலோன் யாண்டே பதினைந்து ஆகும்.’
’’ 232

‘பதினாறு எல்லை காளைக்கு யாண்டே.’
’’ 233

‘அத்திறம் இறந்த முப்பதின் காறும்
விடலைக்கு ஆகும்; மிகினே முதுமகன்.’
’’ 234

‘நீடிய நாற்பத் தெட்டின் அளவும்
ஆடவர்க்கு உலாப்புறம் உரித்து என மொழிப.’
’’ 235
உங்களுக்குத் தெரியுமா?
 இவற்றை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி. 

சாகா வரம் பெற்ற இந்தப் பனைமரங்கள்

                                     
          இதுதான் பனங்கிழங்கு! ஒரு பத்துக் கிழங்கை வேகவைத்துச் சாப்பிட்டால் அது ஒருநேர             உணவுக்கு ஈடாகும்.

பனங்கிழங்கு மட்டுமல்ல. நுங்கு , பனம்பழம், பதனீர், கள்ளு, கற்கண்டு, கருப்பட்டி, இன்னும் அதிலிருந்து தயாரிக்கப்படும் பலவகை உணவுப்பொருட்கள் என ஒரு உணவுத் தொழிற்சாலையே அதில் அடங்கியுள்ளது. தவிர பனையில் பயன்படாத பகுதி எதுவும் இல்லை! 

நமது நாட்டில் பாசனவசதி இல்லாத நிலங்கள், பயனற்ற மேட்டுப்பகுதிகள், சாலையோரங்கள், ஏரி குளங்களின் கரைகள், கடற்கரை சார்ந்த பகுதிகள். இன்னும் வேறு பயிர் செய்ய இயலாத பாழ்நிலங்கள் போன்ற இடங்களில் மட்டும் எந்த வரட்சியிலும் சாகா வரம் பெற்ற இந்தப் பனைமரங்கள் நிறைந்திருப்பது உண்மையானால் நமது உணவுத் தேவையில் பாதியை இதுவே நிறைவு செய்யும் என்று நம்புகிறேன்.

ஆனால் இருப்பதையும் அழித்தொழிப்பதை அனுமதிக்கும் அரசுகளை என்ன செய்வது?

ஒரு சென்ட் ஒரு லட்சத்துக்கு விலைபோகும் என்ற கனவில் நிலமனைத்தையும் வீட்டுமனைகளாகவே விற்கும் கனவில் இருப்பவர்களை என்ன செய்வது?
பொன்முட்டையிடும் வாத்தின் வயிற்றைக் கிழிப்பதிலேயே குறியாக இருக்கும் இந்தப் பாழாய்ப்போன பொருளாதாரத்தை என்ன செய்வது 

கலை பயணம்.

   

Sundar Raman
கலை பொக்கிஷத்தை பாதுகாக்க ஒரு பயணம்.

ஆயிரக்கணக்கான நம் முன்னோர்கள் சேர்ந்து, நமக்காக கட்டிகொடுத்த கோவில். இதில் அதிக உழைப்பு, அயரில்லா தொண்டு, தெவிட்டாத கலைநயம் போன்ற அதனை சிறப்பம்சம் பொருந்திய பண்டைய கால பொக்கிஷம். நம் முன்னோர்கள் இதற்க்கு உழைத்த உழைப்பை விட நாம் காப்பாற்ற தேவைப்படும் உழைப்பு சிறிது தான். 

சோழர்களைப் பற்றி நாம் படித்த பல தகவல்கள் அனைத்தும், நம் மெய்சிலிர்த்துப் போனவயாய் இருந்துள்ளது. அப்படிப்பட்ட வம்சத்தில் வந்த மன்னன் கட்டிய செஞ்சி அருகில் உள்ள " தேவனூர் மகாதேவர் "
கோயில் இன்றைக்கு இப்படியொரு நிலையில் உள்ளது!. சென்ற வாரம் நாங்கள் இந்த இடத்தை சென்று பார்வையிட்டு அதிகாரிகளிடம் அனுமதி வாங்கி இதை சுத்தம் செய்ய தீர்மானித்தோம். 
 அதற்க்கான முதற்கட்ட பணிகளை வரும் 17 மற்றும் 18 ஆம் தேதி தொடங்குகிறோம். தங்குவதற்கு, சாப்பாட்டிற்கு ஊரிலேயே ஏற்பாடு செய்து தருவதாக ஊர் தலைவர் உறுதி அளித்துள்ளார்.இதை அனைத்தும் எங்கள் அலுவலக வேலை செய்தது போக ,எங்களுக்கு கிடைக்கும் ஒய்வு நாட்களில் !அன்புள்ளம் கொண்ட உங்களில் யாரேனும் இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால் உங்களுடைய தொலைபேசி என்னை தெரியப்படுத்துங்கள், நாங்களே உங்களை தொடர்பு கொள்கிறோம்.

   


நம்மை விட குறைந்த பொருளுதவியும், வசதிகளும், தொழில்நுட்பமே இருந்தாலும், நம்மை விட அதிக கவனம் செலுத்தி இது போன்ற கலை பொக்கிஷங்களை எழுப்பியுள்ளனர்.இது நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்ற சொத்து, இதை அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைப்பது தமிழர்களாகிய நம் ஒவ்வொருவருடைய கடமை. ஒரு கல்லை சீர்செய்தாலும் அது நமது முக்திக்கு படியாக அமைந்து அந்த இறைவனிடம் நம்மை அழைத்துசெல்லும். மீண்டும் இது பழைய கம்பீரமான அழகை பெற்று காட்சியளிக்க உங்களுக்கு ஆசையாய் இல்லை 

யா ? இதை விட நம் முன்னோர்களுக்கு நாம் செய்யும் கைம்மாறு வேறு என்னவாக இருக்க முடியும் ?

தேவனூர் இருக்கும் இடம் பற்றிய சிறிய வரைபடம் இதில் இணைத்துள்ளேன்

                                             

ஐரோப்பாவில் நூறு வருட பழமை வாய்ந்த தேவாலயங்களைக் கூட தூசி படாமல் பொத்திபொத்தி பார்த்துக்கொண்டிருக்கும் வேலையில் ,அந்த தூண்களில் உள்ள கலைநயத்தை பாருங்கள் வருடங்களைக்கடந்தாலும் அதன் அழகை அப்படியே வைத்திருக்கும் இடத்தின் இன்றைய அவலமான நிலை " செஞ்சி" அருகே உள்ள " தேவனூர் மகாதேவர் கோயில் " , நேற்றைக்கு உங்கள் பகுதியில் இதுபோன்ற ஏதாவது இருந்தால் புகைப்படங்களை அனுப்புங்கள் என நான் கூறி இருந்ததை பார்த்த ஒரு நண்பர் என் மின்னஞ்சலுக்கு அனுப்பினார் , இதற்கு தீர்வாக என் நண்பர்கள் அனைவரும் , அடுத்த வாரம் இந்த இடத்திற்கு சென்று பார்வை இட திட்டமிட்டுள்ளோம், இதை சுத்தப்படுத்த என்னென்ன பொருட்கள் தேவை ?, எத்தனை நாட்கள் தேவை ?, ஊரில் உதவுவதற்கு யார் உள்ளார்கள் ? உணவு, குடிநீர், போன்ற விடயங்களை ஆராய திட்டமிட்டுள்ளோம் ! அனைத்து ஏற்பாடுகளும் முடிந்ததும் அதன் மறுவாரமே சென்று சுத்தப்படுத்தி அந்த கிராமத்தினருக்கு இதன் அருமைகளை உணர்த்தி மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்க உள்ளோம் என்பதை மகிழ்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் ! விரைவில் இதன் புதுப்பிக்கப்பட்ட படம் இதே முகநூளில் வெளியிடுகிறோம் ! . நன்றி!.
 —

கலை பயணம்.

              


கலை பொக்கிஷத்தை காக்கும் கலை பயணம்.


நம் முன்னோர்கள் விட்டு சென்ற கலை பொக்கிஷம் அழிவதை கண்டு, இதுவரை வருத்தம் மட்டும் தெரிவித்த நாம், இன்று அதை காக்கும் பொருட்டு எடுத்து வைக்கும் முதல் அடி...


இடம்: தேவனூர், செஞ்சி அருகில், மேல்மலையனுருக்கு மிக அருகில்.நாள்: பங்குனி 4 மற்றும் 5 (17, 18 - மார்ச்)

தேவனூர் குறிப்பு:

வரலாற்று அறிஞர்களின் கூற்றுப்படி தென்னிந்தியாவின் மிகப்பெரிய சாம்ராஜ்யங்களில் ஒன்றாக செஞ்சிக்கோட்டை இருந்துள்ளது. இதன் ஆளுகையின் கீழ் இருந்த தேவனூரில் திருநாகேஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. பிற்கால சோழர்கள் சிறப்பாக கட்டிய இந்த கோவிலை பின்னர் ஆட்சி செய்த பாண்டிய, விஜயநகர, நாயக்க மன்னர்களும் தொடர்ந்து பராமரித்து வந்தனர். இந்த கோவிலுக்காக ஏராளமான நிலம், பசு, காளைகளை தானமாக வழங்கியது கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. சிவபெருமானை தேவனாக குறிப்பிட்டு இங்கு சிவன் கோவில் இருந்ததால் தேவனூர் என்று அழைத்துள்ளனர். 17ம் நூற்றாண்டு வரை இந்த கோவில் மிக சீரோடும் சிறப்போடும் இருந்துள்ளது.இதன் பிறகு செஞ்சியை ஆண்ட ராஜா தேசிங்கிற்கும், ஆற்காடு நாவாப்பிற்கும் ஏற்பட்ட உக்கிரமான போரின் போது ஆற்காடு நவாப்பின் பெரும் படையினர் இந்த கோவில் மீது பீரங்கி தாக்குதல் நடத்தி கொள்ளையடித்து சென்றனர்.

இதில் சிதிலமடைந்த கோவில் பின்னர் புதுப்பிக்கப்படாமல் பாழடைந்த நிலையில் உள்ளது. தற்போது, முகநூல் நண்பர்கள் துணை கொண்டு இந்த வரலாற்று பெருமைமிக்க கோவிலை புதுப்பிக்க முயற்சி செய்து, இதோ நாளை முதல் கட்ட வேலைகளை ஆரம்பிக்க உள்ளோம்.

ஏற்கனவே விருப்பம் உள்ள நண்பர்கள் அலைபேசியில் தொடர்பு கொண்டு, தங்களது வருகையை பதிவு செய்தனர். மேலும் மற்ற நண்பர்கள் விருப்பத்தின்பேரில் தங்களை இந்த பணியில் இணைத்துக்கொள்ளலாம்.

தேவனூர் கோவிலுக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளவர்களும், வர விரும்புவர்களும் முன்பே தொடர்பு கொண்டு உறுதி படுத்தினால் உணவு மற்றும் தங்குவதற்கான ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும். தொடர்புக்கான எண்கள் 98409 56955 , 90030 29459 , 95007 86979.


இதில் ஒரே ஒரு பெருமை என்னவென்றால், இதை கட்டிய சோழன் எந்த கலை நயத்துடன் கோவிலை கண்டானோ, அதே பார்வையுடன் இன்று நாம்!...



உங்கள் கையில்!


                            



நீ எந்த மாற்றத்தை விரும்புகிறாயோ, அதை உன்னிலிருந்து தொடங்கு - மகாத்மா காந்தி !


இதோ நாங்கள் காண விரும்பிய மாற்றத்திற்கான முதல் படியை நாளை எடுத்து வைக்கிறோம் ! வெறும் முகநூலை வைத்து என்ன செய்ய முடியும் ? என சிந்தித்த பலருக்கு, இதை வைத்தும் மக்களை ஒன்றிணைத்து எதையும் செய்யலாம் என காட்டப்போகும் முதல் அனுபவம் ! தினம், தினம் ஆயிரம் புதிய தொழில்நுட்பங்கள் வந்தாலும், பழங்காலத்தில் செய்த ஒன்றைக்கூட நாம் இன்று செய்ய முடியாது என்பது மறுக்கமுடியாத உண்மை.அந்த வகையில் பல வரலாறுகளை தன்னுள் தாங்கிக்கொண்டு ஆயிரம், ஆயிரம் வருட பொக்கிஷங்களாக கவனிப்பாறற்று நின்றுகொண்டிருக்கும் கோயில்களை மீட்டுக்கும் பணியை முதலில் நாங்கள் தொடங்கவிருக்கிறோம்.

நாகரீகம்,பண்பாடு,மொழி என அனைத்தையும் இன்றைக்கு தொலைத்து, அதிலிருந்து மீண்டு வருவதற்கு வழி தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கும் தமிழ்நாடு, இன்றைக்கு நாங்கள் ஆயிரம்,ஆயிரம் வருடம் பழமையானவர்கள் என ஆதாரத்துடன் நாம் கை நீட்டி காட்டக்கூடிய ஒன்றே ஒன்று நம் பாரம்பரிய கலை பொக்கிஷங்களான கோயில்கள். ஆனால், இன்றைக்கு அதுவும் சிதையத்தொடங்கிவிட்டது, இதை மத ரீதியாக அணுகாமல் , நம் கலை ரீதியாக அணுகலாம் என தோன்றியது. அதற்க்கான ஆயத்தப்பணிகளை நாளைக்கு தொடங்குகிறோம், இதை இந்த ஒன்றோடு நிறுத்திவிடாமல் மரம் நடுதல்,சீமக்கருவேலமரம் வெட்டுதல் போன்றவற்றையும் தொடரவிருக்கிறோம். இது அத்தனையும் இதுவரை நேரில் சந்திக்காத முக நூல் நண்பர்களை இணைத்ததே !
                        
வார நாள் முழுவதும் வேலை செய்து களைத்துப்போய் ஒரு நாளேனும் மனைவி மக்களுடன் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று எண்ணும் சராசரி மனிதனாய் வாழாமல், தான் பிறந்த ஊருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று என்னுடன் களமிறங்கி உள்ள திருமணமான நண்பர்களுக்கு கண்கள் கலங்கி இந்த நேரத்தில் நன்றிகளை தெறிவித்துக்கொள்கிறேன். இதுவரை என் முகத்தை கூட பார்க்காத பலர் வெளிநாடுகளில் இருந்தும் கூட என்னை அலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்தியது மட்டுமலாமல், தங்களால் இயன்ற உதவியை செய்கிறேன் என கூறிய போது இந்த பிறவிப்பலனை அடைந்தேன். அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்! மேலும், வரலாற்றை புத்தகத்தில் படிப்பதோடு மட்டுமல்லாமல் அதை புணரமைக்க விரும்பும் நமது கல்லூரி தோழர்களுக்கும் நன்றிகள் பல! உங்கள் ஊரில் எதாவது செய்ய வேண்டுமா என ஒருமுறை நான் கூறி இருந்ததை பார்த்து தங்கள் ஊர் சுத்தமடைய வேண்டும் என்ற ஆர்வத்துடன் முதன் முதலில் எனக்கு தங்கள் ஊரில் சிதைந்து கிடக்கும் வரலாற்று பொக்கிஷத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று ஆதங்கத்துடன் மின்னஞ்சல் அனுப்பிய திரு " தமிழ்செல்வனுக்கும் " என் நன்றிகள்!


மாற்றத்திற்கான முதல் விதையை நாங்கள் இங்கே விதைக்கிறோம், அதை முளைக்க வைத்து விழுதுகள் பரப்பி ஆலமரமாக்குவதும், மண்ணோடு மண்ணாக மட்கச்செய்வதும் மறத்தமிழ் நண்பர்களாகிய உங்கள் கையில்!

வில்லில் இசை

                         
அரிசியின் வழி பாட்டுடன் தொடங்கியது இந்த கலை .
தமிழன் வில்லால் உலகை வளைத்து மட்டுமல்லாமல்
வில்லில் இசையையும் வடித்துள்ளான் .
வில்லு பாட்டு -நம் மண்ணின் பெருமையை சொல்லும் பாட்டு .
வில்லு பாட்டு என்றே பெயர் .பாடல் ,உரையாடல் ,பழ மொழிகள் ,வசன கவிகள் (இபோது சிறிது ஆங்கிலமும் )என அனைத்தும் கலந்து விறுவிறுப்பை ஏற்றியது அந்த தருணத்தை .
கிராமத்து சொல் வழக்குடன் .அந்த கலைஞ்சர்களின் கணீர் குரல் , அதிரும் உடுக்கை ,அதிரவைக்கும் வில்லு குடத்தின் ஒலி..இவற்றுடன்
நெல் மணிக்காக உழைத்த நம் உழைப்பாளிகளின் களைப்பை நீக்கும் வில்லின் மணி ஒலிகள் .காற்றும் காத்திருக்கும் போல ...இந்த ஒலிகளை எபோது கடத்துவது என்று .
கைகளால் மட்டுமே ஆடக்கூடிய ஒரு நடனம் தெரிந்திருகிறது அவர்களுக்கு .அவர்களின் கைகள் ஒரு நடனம் ஆடுகிறது .அது அவர்கள் அந்த கலையுடன் கலந்து விட்டதை காட்டியது .கலையை தெய்வமாக பார்க்கும் இது போன்ற மனிதர்களை நேற்று நான் கண்டேன் . 

வில்லுடன் வந்த இவர்களின் சொல்லுடன் பிறபெடுதார் சாஸ்தா(சாஸ்தா கதை ).
 — 

இலங்கை தூதர் வெளியேற்றப்படுவார் - ஆஸ்திரேலிய செனட்டர் லீ ரைனான்

                      
 இலங்கைப் போர்க்குற்றம் - சுயாதீனமான விசாரணை தேவை அன்றேல் இலங்கை 
                 தூதர்   வெளியேற்றப்படுவார் - ஆஸ்திரேலிய செனட்டர் லீ ரைனான்  

புதிய காணொளியை வெளியிட்ட சனால் - 4 ன் புதிய ஆதாரங்கள் குறித்து ஆஸ்திரேலிய அரசின் செனட்டர் லீ ரைனான் செய்தியாளர்களிடம் கூறியவை,இலங்கையின் போர்க்குற்றம் குறித்து பிரிட்டன் தொலைக்காட்சி வெளியிட்ட 54 நிமிட மனித உரிமை மீறல் காட்சிகள் ஆஸ்திரேலிய அரசை உலுக்கி உள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் புதல்வன் 12 வயது சிறுவன் பாலச்சந்திரன் மற்றும் உதவியாளர்கள் நால்வரும் சரணடைந்த வேளை, இலங்கை இராணுவத்தினால் ஆடை களையப்பட்டு, கைகள் கட்டப்பட்டு சுட்டுக் கொன்ற காட்சிகள் போர்க்குற்ற ஆவணமாக காட்டப்பட்டுள்ளன. மேலும் இந்தக் காட்சிகளை புதிய போர்க்குற்ற ஆவணங்களாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன என்றார் லீ. மேலும் கூறுகையில், சமீபத்தில் வெளியிட்ட போர்க்குற்றம் இரண்டாவது பாகம் என்ற ஆவணத்தில்,

ஐ.நா.வின் உணவு வழங்கும் குழுவினர் மீதும் குண்டுகளை வீசி, கொன்றும் வலுக்கட்டாயமாக வெளியேற்றி இருக்கிறார்கள், அதோடு பாதுகாக்கப்பட்ட பாதுகாப்பு வலையம் என்று அறிவித்த பகுதிகளில் கொத்துக் குண்டுகளை வீசி அந்த வளையத்தில் இருந்த மக்களை அழித்துள்ளார்கள். இந்த செயல்களை செய்தவர்கள் அனைவரும் அதாவது போர்க்குற்றங்களை அரங்கேற்றியவர்கள் அனைவரும் இன்று இலங்கை அரசின் மிக உயர்ந்த பதவியில் அமர்ப்பட்டுள்ளனர் என்றார் லீ.

ஆஸ்திரேலியாவில் உள்ள இலங்கை தூதர் டி.எஸ்.ஜி.சமரசிங்கே கூறியது போல இலங்கை அரசே நடத்திய L L R C யின் விசாரணை அறிக்கை போதுமானதாக இல்லை அதாவது நேர்மையற்றவையாக உள்ளன. தற்பொழுது உலகில் இவர்கள் கூறுகின்ற இந்த அறிக்கை பொய்களையும் புனை சுருட்டுக்களையும் உள்ளடக்கியதாகவே உள்ளன. இந்த தருணத்தில் ஆஸ்திரேலியாவின் ஜில்லார்ட் அரசு உலக அரங்கிற்கு அழைப்பு விட வேண்டும், ஐ.நா.வின் நிபுணர் குழு, அம்னெஸ்டி இன்டர்நேஷனல், இன்டர்நேஷனல் கிரைசிஸ் குழு மற்றும் மனித உரிமை கண்காணிப்பு குழு போன்றவைகளை கொண்டு நேர்மையான சுதந்திரமான விசாரணை நடத்திட வேண்டிய தருணம் இது என்று கூறுகிறார் செனட்டர் லீ ரைனான்.

ஆஸ்திரேலியா அரசு உறுதியாக ஆதரிக்க வேண்டும் அமெரிக்க அரசு கொண்டு வரும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை, இந்த வார இறுதியில் நடைபெறும் மனித உரிமை அமைப்பில் கொண்டு வரப்படும் இந்த தீர்மானம் குறித்த ஆதரவு ஆஸ்திரேலியா அரசின் கடமைகளில் ஒன்று மேலும் சுயாதீனமான விசாரணைக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் வலியுறுத்துவதின் மூலம் அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியும்.
செனட்டர் லீ ரைனான் உறுதிபட கூறி வருகிறார் ஆஸ்திரேலிய பிரதமர் ஜில்லார்ட் இலங்கை அரசிடம் கூற வேண்டும் இவ்வாறு, இலங்கை அரசை கூப்பிட்டு அய்யா, உங்கள் தூதரை திரும்ப அழைத்துக் கொள்ளுங்கள், சுதந்திரமான நேர்மையான சர்வதேச விசாரணைக் குழு போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் குறித்து முழு விசாரணை அறிக்கை அளிக்கும் வரையில் உங்கள் தூதரை திரும்ப அழைத்துக் கொள்ளுங்கள் என்று கூற வேண்டும் என்று ஆஸ்திரேலியா பிரதமர் கூற வேண்டும் என்கிறார் லீ. இலங்கை அரசு இந்த உடன்பாட்டுக்கு, கோரிக்கையை ஏற்கவில்லையெனில் ஆஸ்திரேலியாவில் உள்ள இலங்கை தூதர் அட்மிரல் டி.எஸ்.ஜி.சமரசிங்கே அவர்களை உடனே வெளியேற்ற வேண்டும் என்று கூறியுள்ளார் செனட்டர் லீ ரைனான். 

இந்தியா காப்பாற்றுமா.....................?

         
             தெரியாமல் இராமர் தேரையைக் கொன்றார்! தெரிந்தே இந்தியா ஈழத் தமிழரைக் 
                                                      கொன்று குவித்தது! 
       இராமபிரான் ஆற்றில் நீராடுவதற்காகத் தன்னி டம் இருந்த அம்பை நிலத்தில் ஊன்றிவிட்டு நீரா டச் செல்கிறார். இராமர் அம்பை நிலத்தில் ஊன்றிய போது நிலத்தின் கீழ் இருந்த தேரையை அம்பு குத்தி விடுகிறது. நீராடிவிட்டு வந்த இராமர் நிலத்தில் தான் ஊன்றி வைத்த அம்பை இழுக்கிறார். அம்பின் நுனியில் குத்துண்ட தேரை துடிக்கிறது. நிலைமையைஅவதானித்த இராமர் ‘தேரையே நாம் அம்பை குத்தும் போது நீ கூப்பிட்டிருக்கலாம் அல்லவா? ’என்று கூறுகிறார்.

அம்பில் குத்துண்டு வலிதாங்க முடியாமல் துடிக்கும் தேரை இராமரை பார்த்து கூறுகின்றது. ‘இராமா! எனக்கு யார் துன்பம் செய்தாலும் நான் இராமா... இராமா... என்றுதான் உச்சாடனம் செய்வேன். அந்த இராமரே என்னைக் குத்தும் போது நான் யாரைக் கூப்பிடுவேன்.’ இவ்வாறு கூறியடியே தேரையின் உயிர் பிரிந்தது. இதுதான் ஈழத்தமிழர்களின் நிலையும். இலங்கை அரசுகள் தமிழ் மக்களுக்கு காலாகாலமாக பெரும் கொடுமைகள் செய்த போதெல்லாம் இந்தியா காப்பாற்றும் என்று இந்தியா... இந்தியா... என்று தமிழர்கள் உச்சாடனம் செய்தனர். ஆனால் அந்த இந்தியாவே ஈழத்தமிழர்களின் முதுகில் குத்தி சங்காரம் செய்துவிட்டது. என்ன செய்வது! இராமா... இராமா... என்று உச்சாடனம் செய்த தேரையை இராமர் அறியாமல் குத்தினார்.

ஆனால் இந்தியா... இந்தியா... என்று உச்சாடனம் செய்த தமிழர்களை இந்தியா திட்டமிட்டே கொன்றது. இப்போது கூட ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்படும் தீர்மானத்தை எதிர்ப்பதே இந்தியாவின் நிலைப்பாடு. எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ இப்போதும் இந்தியா... இந்தியா... என்று உச்சாடனம் செய்கிறது. ஐந்தறிவு படைத்த தேரையால் இராமரை புரிந்து கொள்ள முடியாமல் போயிருக்கலாம். ஆனால் ஆறறிவு படைத்த தமிழ்த் தேசியக் கூட் டமைப்பால் இன்னமும் இந்தியாவை புரிந்து கொள்ள முடியாமல் இருப்பது கொடுமையிலும் கொடுமை.

ஓ! இந்திய தேசமே! எங்கள் நாட்டை சிதைத்துவிட்டு! எங்கள் உயிர்களைப் பறித்துவிட்டு! எங்கள் வீட்டை உடைத்து விட்டு! எங்களுக்கு நீ வீடுகட்டி கொடுப்பதாக உன் பாராளுமன்றத்தில் தெரிவிப்பதை விடச் சின்னத்தனம் வேறு எதுவும் இல்லை. இறைவா! ஜெனிவா தீர்மானத்தை இந்தியா எதிர்த்தால், இந்தியா எங்களுக்கு வீடுகட்டித் தரத்தேவையில்லை என்று கூறும் சக்தியை எம்மவர்களுக்குத் தா அது போதும்.
 

வரலாற்று அதிசயம்! இலங்கைக்கு எதிராக ஒன்று சோ்ந்த தமிழகம்

                
வரலாற்று அதிசயம்! இலங்கைக்கு எதிராக ஒன்று சோ்ந்த தமிழகம்

இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்றை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டுவந்துள்ளது. தமிழக அரசியலில் அதிசயத்தில் அதிசயமாக அத்தனை கட்சிகளும் இலங்கைக்கு எதிரான இந்தத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென்று ஒருமித்த குரலாக எதிரொலிக்கின்றன.

ஜெயலலிதா: (அதிமுக)
ஒரு குறிப்பிட்ட நாட்டின் மீது கொண்டு வரப்படும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்து, அந்த நாட்டுக்கு எதிராக இந்தியா செயல்படாது’ என்பது போன்ற செய்திகள் ஊடகங்களில் வெளிவருகின்றன. இந்த நடவடிக்கை, இலங்கைக்கு நேரடியான ஆதரவை இந்தியா தருவது போலாகி விடும். இது ஏற்றுக்கொள்ள முடியாதது.

கருணாநிதி: ( திமுக)
இறுதிப் போரின்போது எடுக்கப்பட்ட காட்சிகளின் தொகுப்பை மத்தியில் ஆட்சியில் இருப்போர் ஒரு முறை பார்த்தாலே, தமிழக மக்கள் சார்பில் வைக்கப்படும் இந்தக் கோரிக்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ள முடியும்.

விஜயகாந்த்: (தேதிமுக)
அமெரிக்காவின் தீர்மானம் முழுஅளவுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றாலும், இதை நிறைவேற்றுவதன் மூலம் சிங்கள இனவெறி அரசை உலக அரங்கின் முன்பு குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முடியும். நடுநிலை வகிப்பதையோ, தீர்மானத்தில் கலந்துகொள்ளாமல் இருப்பதையோ இந்தியா மேற்கொண்டால் அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.


வைகோ: (மதிமுக)
இலங்கைக்கு ஆயுதங்களும், ஆயிரக்கணக்கான கோடிப் பணமும் அள்ளிக் கொடுத்து முப்படைத் தளபதிகளை அனுப்பியும் யுத்தத்தை நடத்தியது இந்தியா. இந்திய அரசின் துரோகம் அம்பலத்துக்கு வந்துவிட்டது. இதற்கு மேலும், ஐ.நா-வின் கவுன்சிலில் தமிழர்களுக்குத் துரோகம் விளைவித்தால், எந்தக் காலத்திலும் தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள்.

ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்) :
யுத்தம் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் மனித உரிமை மீறல் குற்றங்கள் தொடர்பாக எந்த நடவடிக்கையும் இலங்கை அரசு எடுக்கவில்லை. இதுபற்றி மத்திய அரசும் இலங்கையை நிர்ப்பந்திக்கவில்லை. மனித உரிமை மீறல்கள் மீது, நம்பகத்தன்மை வாய்ந்த சர்வதேசத் தரத்திலான விசாரணை நடத்தப்பட்டு, போர்க் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ராமதாஸ்: (பாமக)
இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிக்கும்படி மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

தா.பாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்):
இலங்கையின் குற்றத்தை மூடி மறைக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. மகிந்த ராஜபக்சவை இன அழிப்புப் போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்.

திருமாவளவன்: (விடுதலைச்சிறுத்தைகள்)
மிகவும் நீர்த்துப்போன இந்தத் தீர்மானத்தைக்கூட இந்திய அரசு ஆதரிக்காமல், வழக்கம்போல சிங்கள இனவெறியர்களுக்குத் துணை போனால், அது கடும் கண்டனத்துக்கு உரியது.

ஞானதேசிகன் (காங்கிரஸ்):
இலங்கையில் கால் ஊன்றுவது குறித்து சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளோடு நடந்து வரும் போட்டி காரணமாகவே, இந்தத் தீர்மானத்தை, அமெரிக்கா கொண்டு வந்திருக்கிறது. இருந்தாலும், இலங்கையில் மிகப்பெரிய மனித உரிமை மீறல்கள் நடந்து இருக்கின்றன என்பதால், அமெரிக்கா தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா குரல் கொடுக்க வேண்டும்.

பழ.நெடுமாறன்: (தமிழர் இயக்கம்)
தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக தமிழக மக்களின் இந்த வேண்டுகோளை ஏற்று, ஐ.நா. மனித உரிமைக் குழுவில் இந்தியா நடந்து கொள்ள வேண்டும்.

சீமான்: (நாம் தமிழர் கட்சி)
தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கத் தயங்குவதற்குக் காரணம்… ‘இந்தப் போரை நடத்தியதே நீங்கள்தானே?’ என்று ராஜபக்ச கேட்பார் என்பதுதான்.

பொன்.ராதாகிருஷ்ணன் (பி.ஜே.பி):
இலங்கையில் தமிழர்களுக்குச் செய்த துரோகங்களுக்கு, மத்திய காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி உதவி செய்தது போலவே, ஐ.நா-விலும் உதவி செய்யும் என்று இலங்கை அரசு எதிர்பார்க்கிறது. இலங்கைக்கு ஆதரவு நிலையை மத்திய அரசு எடுத்தால், ஆதரவைத் திரும்பப் பெறுவோம் என்று தி.மு.க. அறிவிக்க வேண்டும்.

வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி):
இலங்கைக்கு ஆதரவாக இந்தியா செயல் பட்டால், அது இனத்துரோகம். எனவே, அமெரிக்க தீர்மானத்தை காங்கிரஸ் அரசு வழி மொழிய வேண்டும்.


இப்படி தமிழகத்தில் தேசிய, திராவிட, கம்யூனிஸ, தமிழினக் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டுக் குரல் கொடுத்துள்ளது. 
                  சோனியாவும் மன்மோகனும் என்ன செய்யப்போகிறார்கள்?
 

HATS..OFF......SACHIN

             
   CONGRATS...SACHIN...finally..reached..his..100th..century.....HATS..OFF.....to..the..great..legend

100's 100:

1) 119* vs ENG-Manchester-14 August 1990-Draw- Test 
2) 148* vs AUS-Sydney-6 January 1992-Draw-Test
3) 114 vs AUS-Perth-3 February 1992-Lost-Test
4) 111 vs SA-Johannesburg-28 November 1992-Draw- Test 
5) 165 vs ENG-Chennai-12 February 1993-Won-Test
6) 104* vs SL-Colombo-31 July 1993-Won-Test
7) 142 vs SL-Lucknow-19 January 1994-Won-Test 
8) 110 vs AUS-Colombo-September 9, 1994-Won-ODI
9) 115 vs NZ-Vadodara-October 28, 1994-Won-ODI
10) 105 vs WI-Jaipur-November 11, 1994-Won-ODI 
11) 179 vs WI-Nagpur-2 December 1994-Draw-Test 
12) 112* vs SL-Sharjah-April 9, 1995-Won-ODI
13) 127* vs KEN-Cuttack-February 18, 1996-Won-ODI
14) 137 vs SL-New Delhi-March 2, 1996-Lost-ODI
15) 100 vs PAK-Singapore-April 5, 1996-Lost-ODI
16) 118 vs PAK-Sharjah-April 15, 1996-Won-ODI 
17) 122 vs ENG-Birmingham-8 June 1996-Lost-Test
18) 177 vs ENG-Nottingham-5 July 1996-Draw-Test 
19) 110# vs SL-Colombo-August 28, 1996-Lost-ODI
20) 114# vs SA-Mumbai-December 14, 1996-Won-ODI 
21) 169# vs SA-Cape Town-4 January 1997-Lost-Test 
22) 104# vs ZIM-Benoni-February 9, 1997-Won-ODI
23) 117# vs NZ-Bangalore-May 14, 1997-Won-ODI 
24) 143# vs SL-Colombo-3 August 1997-Draw-Test
25) 139# vs SL-Colombo-11 August 1997-Draw-Test
26) 148# vs SL-Mumbai-4 December 1997-Draw-Test
27) 155* vs AUS-Chennai-9 March 1998-Test
28) 177 vs AUS-Bangalore-26 March 1998-Lost-Test 
29) 100 vs AUS-Kanpur-April 7, 1998-Won-ODI
30) 143 vs AUS-Sharjah-April 22, 1998-Lost-ODI
31) 134 vs AUS-Sharjah-April 24, 1998-Won-ODI
32) 100* vs KEN-Kolkata-May 31, 1998-Won-ODI
33) 128 vs SL-Colombo-July 7, 1998-Won-ODI
34) 127* vs ZIM-Bulawayo-September 26, 1998-Won- ODI
35) 141 vs AUS-Dhaka-October 28, 1998-Won-ODI
36) 118* vs ZIM-Sharjah-November 8, 1998-Won-ODI
37) 124* vs ZIM-Sharjah-November 13, 1998-Won- ODI
38) 113 vs NZ-Wellington-29 December 1998-Lost- Test 
39) 136 vs PAK-Chennai-31 January 1999-Lost-Test
40) 124* vs SL-Colombo-28 February 1999-Draw-Test 
41) 140* vs KEN-Bristol-May 23, 1999-Won-ODI
42) 120# vs SL-Colombo-August 29, 1999-Won-ODI 
43) 126*# vs NZ-Mohali-13 October 1999-Test
44) 217# vs NZ-Ahmedabad-30 October 1999-Draw- Test
45) 186*# vs NZ-Hyderabad-November 8, 1999-Won- ODI 
46) 116# vs AUS-Melbourne-28 December 1999-Lost- Test 
47) 122 vs SA-Vadodara-March 17, 2000-Won-ODI
48) 101 vs SL-Sharjah-October 20, 2000-Lost-ODI 
49) 122 vs ZIM-New Delhi-21 November 2000-Won- Test

50) 201* vs ZIM-Nagpur-26 November 2000-Draw-Test

51) 146 vs ZIM-Jodhpur-December 8, 2000-Lost-ODI 
52) 126 vs AUS-Chennai-20 March 2001-Won-Test 
53) 139 vs AUS-Indore-March 31, 2001-Won-ODI
54) 127* vs WI-Harare-July 4, 2001-Won-ODI
55) 101 vs SA-Johannesburg-October 5, 2001-Lost- ODI
56) 146 vs KEN-Paarl-October 24, 2001-Won-ODI 
57) 155 vs SA-Bloemfontein-3 November 2001-Lost- Test
58) 103 vs ENG-Ahmedabad-13 December 2001- Draw-Test
59) 176 vs ZIM-Nagpur-24 February 2002-Won-Test
60) 117 vs WI-Port of Spain-20 April 2002-Won-Test 
61) 105* vs ENG-Chester-le-Street-July 4, 2002-N/R- ODI
62) 113 vs SL-Bristol-July 11, 2002-Won-ODI 
63) 193 vs ENG-Leeds-23 August 2002-Won-Test
64) 176 vs WI-Kolkata-3 November 2002-Draw-Test 
65) 152 vs NAMI-Pietermaritzburg-February 23, 2003- Won-ODI
66) 100 vs AUS-Gwalior-October 26, 2003-Won-ODI
67) 102 vs NZ-Hyderabad-November 15, 2003-Won- ODI  
68) 241* vs AUS-Sydney-4 January 2004-Draw-Test 
69) 141 vs PAK-Rawalpindi-March 16, 2004-Lost-ODI 
70) 194* vs PAK-Multan-29 March 2004-Won-Test
71) 248* vs BAN-Dhaka-12 December 2004-Won-Test 
72) 123 vs PAK-Ahmedabad-April 12, 2005-Lost-ODI 
73) 109 vs SL-New Delhi-22 December 2005-Won- Test 
74) 100 vs PAK-Peshawar-February 6, 2006-Lost-ODI

75) 141* vs WI-Kuala Lumpur-September 14, 2006- Lost-ODI 
76) 100* vs WI-Vadodara-January 31, 2007-Won-ODI 
77) 101 vs BAN-Chittagong-19 May 2007-Draw-Test
78) 122* vs BAN-Mirpur-26 May 2007-Won-Test
79) 154* vs AUS-Sydney-4 January 2008-Lost-Test
80) 153 vs AUS-Adelaide-25 January 2008-Draw-Test 
81) 117* vs AUS-Sydney-March 2, 2008-Won-ODI 
82) 109 vs AUS-Nagpur-6 November 2008-Won-Test
83) 103* vs ENG-Chennai-15 December 2008-Won- Test 
84) 163* vs NZ-Christchurch-March 8, 2009-Won-ODI 
85) 160 vs NZ-Hamilton-20 March 2009-Won-Test 
86) 138 vs SL-Colombo-September 14, 2009-Won-ODI
87) 175 vs AUS-Hyderabad-November 5, 2009-Lost- ODI 
88) 100* vs SL-Ahmedabad-20 November 2009-Draw- Test
89) 105* vs BAN-Chittagong-18 January 2010-Won- Test
90) 143 vs BAN-Mirpur-25 January 2010-Won-Test
91) 100 vs SA-Nagpur-9 February 2010-Lost-Test 
92) 106 vs SA-Kolkata-15 February 2010-Won-Test 
93) 200* vs SA-Gwalior-February 24, 2010-Won-ODI 
94) 203 vs SL-Colombo-28 July 2010-Draw-Test
95) 214 vs AUS-Bangalore-11 October 2010-Won-Test
96) 111* vs SA-Centurion-19 December 2010-Lost- Test
97) 146 vs SA-Cape Town-4 January 2011-Draw-Test 
98) 120 vs ENG-Bangalore-February 27, 2011-Tied- ODI
99) 111 vs SA-Nagpur-March 12, 2011-Lost-ODI
===========100========
100* vs BAN-Mirpur-16 March,2012- (ODI)