Like me

Saturday, March 24, 2012

35வது புத்தகக் கண்காட்சி



                    சென்னை புத்தக கண்காட்சியில் தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பான நூல்கள் இடம்பெற்றிருந்தன - தேசியத்தலைவரது நாட்காட்டி அமோக விற்பனை.

tamilnadu news
     சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 35வது புத்தகக் கண்காட்சியில் தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றிய நூல்களும் அதிகளவில் இடம்பிடித்துள்ளன.
  குறிப்பாக தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் நாட்காட்டி அமோக விற்பனையாகி வருவதை காணக்கூடியதாக உள்ளது.

  நடைபெற்றுவரும் 35வது புத்தகக் கண்காட்சி 05ம் திகதி முதல் சென்னை பச்சயப்பா கல்லூரி எதிரில் உள்ள கல்லூரி மைதாணத்தில் நடைபெற்றுவருகின்றது. இதில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கலந்து கொண்டதுடன் பல்வேறு நூல்களையும் வாங்கிச் சென்றனர்.
tamilnadu news

  இந்தமுறை நடைபெற்றுக் கொண்டு இருக்கும் புத்தகக் கண்காட்சியில் தமிழகத்தில் உள்ள பல்வேறு பதிப்பகங்களில் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பான நூல்கள் விற்பைனைக்கு வைக்கப்பட்டிருந்ததையும் அதனை பல மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றதையும் கண்கூடாக காணக்கூடியதாக இருந்தது.
tamilnadu news
  தமிழீழத் தேசியத் தலைவர் குறித்த பல்வேறு புத்தகங்களும் இடம்பெற்றிருந்தன. உலகளாவிய பிரபலமானவர்களின் தலைவர் குறித்த கருத்துக்களை தொகுத்து தோழமை வெளியீட்டினால் வெளியிடப்பட்ட இவன் ஒரு வரலாறு என்ற நூலும் தமிழீழத் தேசியத் தலைவரது மாவீரர் நாள் உரைத் தொகுப்பு நூலும் தலைவரது சிந்தனைகள் அடங்கிய நூலும் தலைவர் தொடர்பாக தமிழக எழுத்தாளர்களால் எழுதப்பட்ட இன்னும் பல நூல்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

  தமிழீழ ஆதரவாளரும் இந்திய கம்யூனிட்டு கட்சியின் மாநிலத் துணைத்தலைவருமான சி.மகேந்திரன் அவர்கள் ஆனந்தவிகடன் வாரஇதழில் தொடராக எழுதிவந்த முள்ளிவாய்க்கால் துயரங்கள் "வீழ்வேன் என்று நினைத்தாயோ" என்ற தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டிருந்தது. கடந்த 13ம் திகதி இந்நூல் வெளியீட்டு நிகழ்வு இதே புத்தகக் கண்காட்சி அரங்கில் நடைபெற்றிருந்தது.

  தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது முழு உருவப்படம் தாங்கிய நாட்காட்டி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது முதல் பெருமளவில் மக்களால் வாங்கிச் செல்லப்பட்டதாக விற்பனையில் ஈடுபட்டிருந்தவர் தெரிவித்திருந்தார். புத்தக கண்காட்சிக்கு வந்திருந்த பலர் தலைவரின் நாட்காட்டியை தொகை தொகையாக வாங்கிச் சென்றதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

உலகத் தமிழர் பேரமைப்பின் வெளியீடான தமிழ் மண் பதிப்பகத்தால் வெளியிடப்பட இருக்கும் பழ.நெடுமாறன் அய்யா எழுதிய பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற வரலாற்று நூலின் விளம்பரம் மக்களை கவர்ந்திருந்தது.

  இந்த நூலின் மாதிரி வடிவம் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. தமிழீழ விடுதலைப்புலிகளின் இராணுவச் சீருடையில் தலைவர் பிரபாகரன் அவர்கள் கம்பீரமாக நிற்கும் படத்தினை தாங்கிய அட்டைப்படத்துடன் கூடிய இந்த நூலின் மாதிரியை பார்க்கும் போது தலைவரே நேராக வந்து நிற்பது போன்று இருந்தது.
tamilnadu news
tamilnadu news
tamilnadu news
tamilnadu news
tamilnadu news
tamilnadu news
tamilnadu news
tamilnadu news
tamilnadu news
tamilnadu news
tamilnadu news
tamilnadu news
tamilnadu news
tamilnadu news
tamilnadu news tamilnadu news

                                                                                                                                                                                                               நன்றி: ஈழ தேசம் இணையம்   

No comments:

Post a Comment