Like me

Sunday, March 18, 2012

"பிரபாகரன்" என்ற ஒற்றைச் சொல்லில்,.........



இன்று முகநூலில் தென்பட்ட தலைவர் பிரபாகரன் தொடர்பான கருத்துக்கள் இவை....ஒரு பெயர் ஒரு இனத்தை எப்படி இயக்குகிறது என்பதற்கு ஒரு சிறிய உதாரணம் இது..

தமிழச்சி (Tamizachi)
'பிரபாகரன்' என்னும் ஒரு சொல்லில் இருக்கிறது அரசியல்.

'அவர் இறந்து விட்டார்' என்னும் சிங்கள அரசும், 'உயிரோடு இருக்கிறார்' என தமிழ் தேசியவாதிகளும் சூளுரைக்கும் அசட்டுவாதங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மக்கள் தலைவனுக்காக உலகம் முழுவதும் போராடிக் கொண்டிருக்கும் வல்லமையை பிரபாகரன் உருவாக்கி இருப்பதே தலைமையின் வலிமைக்கு உதாரணம்!

ஒரு தலைவனின் வெற்றியானது எத்தனை எதிரிகளை அழித்தான் என்பதல்ல. "எத்தனை மக்களை போராட வைத்தான்" என்பதிலிருக்கிறது.


Kumaran Kathirgamar

இத்தனை வருடப்போராட்டத்தை நடத்துவதற்கு பிரபாகரன் மேடைகளில் வந்து முழங்கியதும் இல்லை,வாக்குறுதிகளை அள்ளி வீசியதுமில்லை,ஆடு,மாடு,கோழி,பணம் என்று ஐந்தாண்டுக்கு ஒரு முறை பிச்சை எடுத்ததும் இல்லை.பிரபாகரன் என்கிற ஒருபிம்பம் தான்,கண்ணுக்கு தெரியாத நிழல் தான் எங்களை ஆட்சி செய்தது,

கடைசி சிங்களவன் எங்கள் மண்ணை விட்டு ஓடும்வரை நாங்கள் அடிபடுவோம்.அதுவரை பிரபாகரன் என்கிற ஒட்டுமொத்த தமிழர்களின் ஒரே தலைமை படைநடத்தும்.

தமிழகத்திலும் சரி,புலம்பெயர் நாடுகளிலும் சரி,தேசியத்தலைவரை பார்க்காமல்,அவரை ஒருநாள் பார்ப்போம் என்பதற்காகவே எந்த வகையான போராட்டத்துக்கும் தயாராக ஆயிரக்கணக்கான இளைஞர்களை ஆக்கி வைத்திருப்பது அந்தப்பெயர் மட்டும் தான்.அது போதும்.அது வழிநடத்தும்,அது படை நடத்தும்.முற்றுகையை உடைத்து வெளிவரத்தான் பிரபாகரன் எங்களுக்கு பயிற்றுவித்துள்ளான்;உள்ளிருந்து அழுவதற்கல்ல.இப்போதும் இந்த முற்றுகையை உடைப்போம்.



Cartoonist Bala

இருந்தாலும்.. இல்லாவிட்டாலும்...
"பிரபாகரன்" என்ற ஒற்றைச் சொல்லில் தமிழர்களின் எழுச்சி அடங்கியிருக்கிறது.


Xavier Jeen 

"தமிழ்" - க்கு அடுத்தபடியாக உலகத் தமிழினத்தை இணைக்கும் சொல் "பிரபாகரன்".
 








தனி மனித வழிபாடு – தனிமனித அரசியல் என்பவற்றிற்கும் அப்பால் பிரபாகரன் என்ற பெயர் தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் அதிர்வுகளை ஈழப்பிரச்சினையை கையாளும் வெளித்தரப்பு புரிந்து கொள்வது அவசியம்

No comments:

Post a Comment