
ஏன் இப்படி அப்பாவி விவசாயிகளை கடுப்பேத்துரிங்க டாக்டர் மன்மோகன் சிங் ஜி ..!
மறுபடியும், பணக்கார ஜவுளி முதலாளிகளுக்கு பல்லாக்கும்... ஏழை விவசாயிகளுக்கு பாடையும் கட்டத் தயாராகிவிட்டது மத்திய அரசு. ஆம், வழக்கம்போல பருத்தி ஏற்றுமதிக்கு தடைவிதித்து உத்தரவு போட்டுள்ளது மத்திய அரசு.
இந்த ஆண்டு இந்தியாவில் பருத்தி விளைச்சல் அமோகமாக இருக்கிறது. இந்தியாவின் ஜவுளி உற்பத்திக்கு தேவையானதைவிடவும் கூடுதலாகவே விளைந்துள்ளது. இந்த நிலையிலும், அடிமாட்டு விலைக்கு வாங்கிக் குவிக்க வேண்டும் என்கிற ஆசையோடு, மத்திய அரசை நிர்ப்பந்தித்து, பருத்தி ஏற்றுமதிக்கு தடை செய்ய வைத்துவிட்டனர் ஜவுளி ஆலை முதலாளிகள்!
'கடந்த ஆண்டும் இப்படி தடை விதித்ததால் பருத்தி விவசாயிகள் பாடு திண்டாட்டமாகிப் போனது. ஏகப்பட்ட நஷ்டம் அடைந்தனர் விவசாயிகள். மறுபடியும் தடை விதித்து அவர்களுடைய வாழ்க்கையுடன் விளையாடுகிறது மத்திய அரசு. பணக்கார முதலாளிகள் வாழ்க்கையை வளமாக்க, ஏழை விவசாயிகளை வதைப்பது அநியாயம். இப்படியொரு முடிவை எடுக்கும் முன்பாக மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும்Õ என்றெல்லாம் பிரதமருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் சீறித் தள்ளியிருக்கிறார் குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி.
இப்படி விவசாயிகளுடைய வயிற்றில் அடிக்கும் வேலையைத் தொடர்ந்து கொண்டிருக்கும் மன்மோகன் சிங்குக்குத்தான் சமீபத்தில் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில் டாக்டர் பட்டம் கொடுத்து கௌரவித்துள்ளனர்.
'இந்தியா விவசாயிகளை சீக்கிரம் ஒழித்துக் கட்டிவிட்டு, மொத்த விவசாயத்தையும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளின் கையில் ஒப்படைத்துவிட வேண்டும். அதுதான் நமக்கு சரிப்பட்டு வரும்' என்று நீண்டகாலமாகவே காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. அந்த நாட்டின் உத்தரவுகளை சிரமேற்கொண்டு சரியாக நிறைவேற்றுவதற்காகத்தான் டாக்டர் பட்டம் கொடுத்திருப்பார்களோ?
-ஜூனியர் கோவணாண்டி
Courtesy: Pasumai Vikatan
மறுபடியும், பணக்கார ஜவுளி முதலாளிகளுக்கு பல்லாக்கும்... ஏழை விவசாயிகளுக்கு பாடையும் கட்டத் தயாராகிவிட்டது மத்திய அரசு. ஆம், வழக்கம்போல பருத்தி ஏற்றுமதிக்கு தடைவிதித்து உத்தரவு போட்டுள்ளது மத்திய அரசு.
இந்த ஆண்டு இந்தியாவில் பருத்தி விளைச்சல் அமோகமாக இருக்கிறது. இந்தியாவின் ஜவுளி உற்பத்திக்கு தேவையானதைவிடவும் கூடுதலாகவே விளைந்துள்ளது. இந்த நிலையிலும், அடிமாட்டு விலைக்கு வாங்கிக் குவிக்க வேண்டும் என்கிற ஆசையோடு, மத்திய அரசை நிர்ப்பந்தித்து, பருத்தி ஏற்றுமதிக்கு தடை செய்ய வைத்துவிட்டனர் ஜவுளி ஆலை முதலாளிகள்!
'கடந்த ஆண்டும் இப்படி தடை விதித்ததால் பருத்தி விவசாயிகள் பாடு திண்டாட்டமாகிப் போனது. ஏகப்பட்ட நஷ்டம் அடைந்தனர் விவசாயிகள். மறுபடியும் தடை விதித்து அவர்களுடைய வாழ்க்கையுடன் விளையாடுகிறது மத்திய அரசு. பணக்கார முதலாளிகள் வாழ்க்கையை வளமாக்க, ஏழை விவசாயிகளை வதைப்பது அநியாயம். இப்படியொரு முடிவை எடுக்கும் முன்பாக மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும்Õ என்றெல்லாம் பிரதமருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் சீறித் தள்ளியிருக்கிறார் குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி.
இப்படி விவசாயிகளுடைய வயிற்றில் அடிக்கும் வேலையைத் தொடர்ந்து கொண்டிருக்கும் மன்மோகன் சிங்குக்குத்தான் சமீபத்தில் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில் டாக்டர் பட்டம் கொடுத்து கௌரவித்துள்ளனர்.
'இந்தியா விவசாயிகளை சீக்கிரம் ஒழித்துக் கட்டிவிட்டு, மொத்த விவசாயத்தையும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளின் கையில் ஒப்படைத்துவிட வேண்டும். அதுதான் நமக்கு சரிப்பட்டு வரும்' என்று நீண்டகாலமாகவே காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. அந்த நாட்டின் உத்தரவுகளை சிரமேற்கொண்டு சரியாக நிறைவேற்றுவதற்காகத்தான் டாக்டர் பட்டம் கொடுத்திருப்பார்களோ?
-ஜூனியர் கோவணாண்டி
Courtesy: Pasumai Vikatan
No comments:
Post a Comment