
முள்ளிவாய்க்காலின் மூன்றாம்ஆண்டில் நிற்கின்றோம். இதுவரை உலகில் சொல்லப்பட்டதும் அகராதிக்குள் இருப்பவையுமான வார்த்தைகள் எதனாலும் முள்ளிவாய்க்கால் தரும் வெறுமையையும்,திகைப்பையும்,
முள்ளிவாய்க்காலின் மூன்றுஆண்டுகளுக்கு பின்பாக எங்கு நிற்கிறது எம் இனம்.தமிழீழம் முழுமையும் சிங்களதேசத்தின் படைகளின் கொடும் பிடிக்குள் விழுந்துகிடக்கிறது.பாரம்பர
இதற்கு எதிராக எழுப்பபடும் சிறிய முனகல்கூட உடனடியாகஅழிக்கப்பட்டு மர்மமரணம் என்றும் வாவிக்குள் பிணம் என்றும் பாழடைந்த கிணற்றுக்குள் பிரேதம் என்றும் பதியப்பட்டு முடிக்கப்படுகின்றன.புதைகுழ
நேற்று:
உலக விடுதலைவரலாற்றில் ஒரு இனம் தனது விடுதலைக்காக இத்தனை தூரம் சென்றிருக்குமா என்று விழிவிரிய வைக்கும் தியாகங்களும் அர்ப்பணங்களும் நிறைந்ததாக தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டவரலாறு திகழ்கிறது.தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லி பழைய பாராளுமன்றபோராட்ட தலைமை ஓய்ந்து உட்கார்ந்த வேளையில் எழுந்த பிள்ளைகள் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலைக்காக பயணித்தார்கள்.விடுதலைக்காக
இந்த புள்ளிவரைதான் விடுதலைப்பாதை என்றும் இவ்வளவுதூரம்தான் விடுதலைக்கான பாதை என்று எதுவுமே வரையறுக்கப்பட்டு இருக்கவில்லை.விடுதலையை அடைவதற்கு எது எது சாத்தியமோ அத்தனையையும் செய்திருந்தது இந்த இனம்.எல்லாவிதமான முயற்சிகளையும் செய்திருந்தது.ஒற்றை மனிதன் ஒருவனின் நெஞ்சுக்குள் பிரவாகம் எடுத்த உறுதியுடனும் இலட்சிய தெளிவுடனும் ஆரம்பித்த இந்த விடுதலைப்போராட்டம் மனிதவரலாறு காணாத ஒரு முயற்சியை தமது மக்களின் விடுதலைக்காக எடுத்திருந்தது.வேட்டைத்துப
கைத்துப்பாக்கிகளே மிக அரிதாகவும் கைக்கு எட்டாமலும் இருந்த ஒரு காலகட்டத்தில் 70களின் இறுதியில் விமானஓட்டியாக பயில்வதற்காக ஒருவரை அனுப்பிய தலைமையின் தீர்க்கதரிசனமும் விடுதலைக்கனவும் கொண்டதாக இருந்த போராட்டம் இது.மரபுரீதியான படைக்கட்டுமானங்களையும் படைப்பிரிவுகளையும் அமைத்து அதன் உச்சமாக விமானப்படையையும் வானத்தில் வலம் வரவிட்டிருந்தது.வானத்திலும
மிக நீண்ட காலமாக அடிமைப்பட்டிருக்கும் ஒரு இனத்தில் இயல்பாகவே தோன்றக்கூடிய சமூககுறைபாடுகளையும் மூடத்தனங்களையும் உடைத்தெறிந்து விடுதலைக்கு அண்மித்த ஒரு இனமாக நிற்கவைத்தவர்கள் எமது வீரர்கள்.எல்லாவற்றிலும் மேலாக இதன் விடுதலைப்போராட்டவீரர்கள் தமது போர்ப்பாதையில் தியாகமும்அர்ப்பணமும் இதுவரை சொல்லாத தூரத்துக்கும்,; இதுவரை செல்லாததுமான தூரத்துக்கும் மிக அப்பால் சென்று தம்மை அர்ப்பணித்து விடுதலையை வென்றெடுக்க முயற்சித்தனர்.வரையறுக்கபட்
எப்போதும் பகைமுட்டிக் கிடக்கும் தென்கொரியாவும் வடகொரியாவும் நேற்று எப்படி சிங்களம் வெல்வதற்காக ஒருமித்து உதவினார்கள் என்று பாருங்கள்.காஸ்மீர் பிரச்சனைக்காகவும் புனித யுத்தத்துக்காகவும் அணுஆயுதங்களை கூர்தீட்டிக் கொண்டேயுத்தசங்கு முழங்க எந்தநேரமும் தயாராக இருக்கும் பாகிஸ்தானும் இந்தியாவும் நேற்று எப்படித்தான் ஒரு கோட்டில் சிங்களத்துக்கு உதவ ஒன்றாக நின்றார்கள் என்று பாருங்கள்.முதலாளித்துவ மேற்குலகும்,சோசலிசம் வாயளவில் பேசும் செஞ்சீனாவும் எப்படித்தான் ஓடிஓடிபோட்டி போட்டுக்கொண்டு சிங்களத்துக்கு உதவினார்கள் என்று பாருங்கள்.
நாளை:
இந்த முள்ளிவாய்க்கால் நினைவுநிகழ்வுகளின் பின் என்ன செய்ய போவதாக உத்தேசித்து இருக்கின்றோம்.அடுத்த முள்ளிவாய்க்கால் நினைவுவரை தூங்கியும் சோம்பியும் கிடக்க போகின்றோமா..இல்லை.இந்த நினைவுநாளிலேயே அதற்கான உறுதியை எடுக்க போகின்றோமா?பாரம்பரிய விடுதலைப்போராட்டங்களில் இருந்து மிகவும் வேறுபட்ட முறையிலான போராட்ட முறை ஒன்றை கைக்கொள்ள வேண்டிய தேவையை காலம் எல்லோர் கையிலும் திணித்துள்ளது.பேரினவாத சிங்களபேயரசால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள எமது தாயகத்து மக்களின் அத்தியாவசிய தேவைகளை ஏதேனும் ஒரு விதத்தில் நிவர்த்தி செய்து அவர்களுக்கு நேரடியாக உதவிகளை வழங்கியபடியே போராட்டத்தையும் கையிலெடுக்க வேண்டிய இரட்டை பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது.
எந்த சர்வதேசத்தின் நாடுகளுக்கான இறையாண்மை வரையறைகளை தனது இனஅழிப்புக்காக சிங்களம் பாவித்ததோ அதே சர்வதேச சட்டங்களில் இனஅழிப்புக்கு,போர்க்குற்றததுக்கு என இருக்கும் சரத்துகளை கொண்டே சிங்களதேசத்தின் தமிழீழம் மேலான ஆதிக்கத்தை ஒழிக்க பாடுபடுவோம்.அப்படி செயற்படும் அமைப்புகளுக்கு ஆதரவு வழங்குவோம்.
முள்ளிவாய்க்காலில் உச்சமான இனஅழிப்பு என்பது அறுபதுவருட வரலாற்றை கொண்டது.இந்த அறுபதுவருட இனஅழிப்பில் அழிக்கப்பட்ட அனைத்து தமிழ்மக்களதும் பெயரால் முள்ளிவாய்க்கால் நினைவில் உறுதி எடுப்போம்.
No comments:
Post a Comment