Like me

Saturday, August 3, 2013

டைனோசர் முட்டைகள்

          அரியலூர் மாவட்டம் அருகே செந்துறை என்ற கிராமத்தில் காவிரி நதியின் படுகையில் சுமார் 2 கிமீ., பரப்பளவு கொண்ட பகுதியில் நூற்றுக்கணக்கான டைனோசர் முட்டைகள் கண்டுபிடிக்கபட்டது.

இது தான் இந்தியாவிலே பெரிய அளவிலான டைனோசர் முட்டை கண்டுபிடிப்பாகும். கால்பந்து அளவுக்கு பெரிய முட்டைகளாக இருக்கும் இவை சுமார் 6.5 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது.
                                             
இந்த முட்டைகள் மாமிச கார்னோசர் மற்றும் இலைகள் மட்டும் உண்ணும் சைவ சௌரபோட் டைனோசரின் முட்டைகள். இதில் சைவமான சௌரபோட்ஸ் நீண்ட கழுத்தை கொண்டு, அதிக உயரமாக வளர கூடியவை. 

இதே பகுதியில் 1843ம் ஆண்டு ஒரு பிரிட்டிஷ் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஒருவர் 32 பெட்டிகள் நிறைய வித்தியாசமான கற்களை(முட்டைகள்) அகழ்ந்தெடுத்தார்.

No comments:

Post a Comment