Like me

Saturday, March 24, 2012

கூடங்குளம்


                               

ஆந்திரா மாநிலம் நாகார்சுனாசாகர் மற்றும் கேரளா மாநிலம் பூதான்கெட்டு பகுதியில் நிறுவப்பட உத்தேசித்திருந்த இந்த கூடங்குள அனு உலை அந்த மாநிலத்தில் இருக்கும் ஒட்டுமொத்த மக்களின் எதிர்ப்பால் இடமாறி கூடங்குளத்தில் அமைக்கிறார்கள்

      2011 சூலை மாதம் ரஸ்யா பிரதமர் மெத்தவதே ரஸ்யா சுற்றுச்சுழல் அறிவியல் அறிஞர்கள் ஆய்வு செய்து தந்த அறிக்கையில் தற்போது கூடங்குளத்தில் நிறுவப்படும் விவி,இ,ஆர் 1000 அனு உலையில் 31 குறைபாடுகள் உள்ளதை சுட்டிகாட்டியுள்ளார்கள் அதைப்பற்றி  உங்களால் விளக்கமாக தமிழக மக்களுக்கு சொல்ல முடியுமா

     கூடங்குளத்தில் மிகப்பெரிய கொதிகளன்களின்மூலம் கடலில் 1300 டிகிரி பாரன்கீட்டுக்குமேல் வெப்பத்துடன் கடலில் கலப்பதால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிப்பு ஏற்படுமா ஏற்படாதா?

      இதுபோல், கல்பாக்கத்தில் பாதுகாப்பு, ஒத்திகை  நடைபெற்றபோது அங்கிருந்த இரண்டு பஸ் இயங்கவில்லை. அதோடு வாக்கி டாக்கியும் செயல்படவில்லை. கல்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை அணு மின் நிலையத்தில் 16 கி.மி சுற்றளவில் சுமார் 70 கிராமங்கள் உள்ளன. சுற்றுவட்டார ஜனத்தொகை சுமார் 1 லட்சமாகும். அணு உலை விபத்து நேர்ந்தால் இவ்வளவு மக்களையும் பாதுகாப்பான பகுதிக்கு இடப்பெயர்வு செய்ய சரியான சாலை வசதியோ வாகன வசதியோ இதுவரை ஏற்பாடு செய்யப்படவில்லை. என்பது உங்களுக்கு தெரியுமா தெரியாதா
    மருத்துவ அவசர தயாரிப்பு நிலை மிகவும் மோசமாக உள்ளதும். கல்பாக்கத்தைச் சுற்றி 16 கி.மி. தொலைவில் மூன்று ஆரம்ப சுகாதார மையங்களே உள்ளதும் இவற்றில் மருத்துவர்களும் செலிவியர்களும்  பாதிபேர் இல்லையென இங்கு இருக்கின்ற யுவராஜ் போன்றவர்களுக்கு தெரியுமா தெரியாதா
    கல்பாக்கத்தில்அணுக்கதிரினால் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு முதலுதவி செய்வதற்கான போதிய பயிற்சி ஒருவருக்காவது இருக்கிறதா  மருந்துகள் போதிய அளவு  உள்ளதா பாமர தமிழ்சாதியின் மேல் அக்கறை இல்லாத அம்மா ஜெ நீண்ட நாள் நலமுடன் வாழ தீச்சட்டி ஏந்திடும் நம் பெருமைமிக்க ஆளும் கட்சி மந்திரி எம், எல்,யேவுக்கு தெரியும் சொல்லுங்கள் பார்ப்போம்

     இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தொடர்பாக அம்பலப்பட்ட ஊழலை  வெளியிட்ட போது  உங்கள்மீதும் பலகோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக பலபேருக்கு சந்தேகம் வந்துள்ளது உங்களுக்கு தெரியுமா கலாம் அவர்களே

    அணு உலைகளோடு வாழ்வது என்பது மடியில் அணுகுண்டைக் கட்டிக்கொண்டு இருப்பதற்கு நிகரானது என்று

    அணுசக்தி துறையின் முன்னாள் தலைவர் திரு கோபாலகிருஷ்ணன் நம் நாட்டில் உள்ள அணுசக்தி உலைகளில் பலவிதமான பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதாக 1995-ம் ஆண்டு ஓர் அறிக்கையில் கூறினார். இதனை அடிப்படையாகக் கொண்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. தெரியுமா தெரியாதா?

     1966–ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த அணுசக்தி சட்டம் (Atomic Energy Act, 1962) அணுஉலை காரணமாக உண்டாகும் சுற்றுச்சுழல் பாதிப்பு, அதனை தடுக்கும் முகாந்திரம், இழப்பீடு என எதைப்பற்றியும் பேசவில்லை. ஆனால் அணுசக்தி தொடர்பான அனைத்தும் இரகசியமானது என்றும் இச்சட்டத்தை மீறுவோர் மீது தண்டிக்க வகை செய்யும் கடும் தண்டனைப் பிரிவுகளை கொண்டுள்ளது இச்சட்டம்.

    கடந்த 2004-ம் ஆண்டு கல்பாக்கம் அணு உலையை சுனாமி தாக்கியபோது அணு உலை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மட்டுமே உடனடியாக அணு உலை அருகாமையில் இருந்து வெளியேற்றப்பட்டனரே தவிர சுற்றுபுறப் பகுதியில் வாழும் பொதுமக்களைப் பற்றி யாரும் கவலை கொள்ளவில்லை.  என்பது எத்தனைபேருக்குத்தெரியும்



(i) கல்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை அணு மின் நிலையத்தில் 16 கி.மி சுற்றளவில் சுமார் 70 கிராமங்கள் உள்ளன. சுற்றுவட்டார ஜனத்தொகை சுமார் 1 லட்சமாகும். அணு உலை விபத்து நேர்ந்தால் இவ்வளவு மக்களையும் பாதுகாப்பான பகுதிக்கு இடப்பெயர்வு செய்ய சரியான சாலை வசதியோ வாகன வசதியோ இதுவரை ஏற்பாடு செய்யப்படவில்லை.


    அடுத்து மருத்துவ அவசர தயாரிப்பு நிலை மிகவும் மோசமாக உள்ளது. கல்பாக்கத்தைச் சுற்றி 16 கி.மி. தொலைவில் மூன்று ஆரம்ப சுகாதார மையங்களே உள்ளன. இவற்றில் சொற்ப எண்ணிக்கையில் மருத்துவர்களும் செலிவியர்களும் உள்ளனர். இவர்களுக்கு அணுக்கதிரினால் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு முதலுதவி செய்வதற்கான போதிய பயிற்சி அளிக்கப்படவில்லை. மேலும் முதலுதவிக்கான மருந்துகள் போதிய அளவு இங்கு உள்ளதா என்பதும் மிகப் பெரிய கேள்வியே. அணுக்கதிர் பாதிப்புகளை கண்டறியக் கூடிய கருவிகளும் இங்கு இல்லை.

   இந்த 2012 ஆம் ஆண்டு தமிழகத்தில் தொடங்கப்பட இருக்கும் மின் உற்பத்தி நிலையங்களின் விவரங்களை பாருங்கள்.

எண்

திட்டம்

மின் உற்பத்தி அளவு

தமிழகத்திற்கு கிடைக்கும் மின்சாரம்

பொருள் செலவு

(ரூபாய்)

மின் உற்பத்தி தொடக்க காலம்

1வட சென்னை படி – 22 * 600 = 1200 MW1200 MW4650 கோடிகள்முதலாவது சனவரி 2012
இரண்டாவது பிப்ரவரி 2012
2மேட்டூர் படி – 3600 MW600 MW3106 கோடிகள்மார்ச் 2012
3த.நா.மி.வா. – NTPC – வல்லூர்3 * 500 = 1500 MW1041 MW8444 கோடிகள்முதலாவது டிசம்பர் 2011
இரண்டாவது மார்ச் 2012
மூன்றாவது அக்டோபர் 2012
4த.நா.மி.வா. – NLC – தூத்துக்குடி2 * 500 = 1000 MW387 MW4910 கோடிகள்நவம்பர் 2012
5ஏழு சிறு நீர்மின் திட்டங்கள்90 MW90 MW1556 கோடிகள்டிசம்பர் 2011 -
மார்ச் 2012
6கூடங்குளம் அணுமின் நிலையம்2 * 1000 = 2000 MW925 MWநடுவண் அரசுமார்ச் 2012
7கல்பாக்கம் விரிவாக்கம்2 *250 = 500 MW167 MWநடுவண் அரசுமார்ச் 2012
8நெய்வேலி இரண்டாம் படி விரிவாக்கம்2 *250 = 500 MW230 MWநடுவண் அரசுமுதலாவது ஆகஸ்டு 2011
இரண்டாவது சனவரி 2012

மொத்தம்7390 MW4640 MW

இந்த அட்டவணையின் படி 2012 ஆம் ஆண்டு முடிவிற்குள் தமிழகத்திற்கு 4640 மெகாவாட் மின்சாரம் புதிதாக கிடைக்கத் தொடங்கிவிடும். இதற்கும் மேலாக இந்த 2012 ஆம் ஆண்டு கீழ்கண்ட திட்டங்களைத் தொடங்க அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது.

எண்

திட்டம்

தமிழகத்திற்கு கிடைக்கும் மின்சாரம்

பொருள் செலவு

திட்டப் பணி தொடக்க காலம்

மின் உற்பத்தி தொடக்க காலம்

1வட சென்னை படி – 2800 MW4800 கோடிகள்20122015
2வட சென்னை படி – 41600 MW9600 கோடிகள்20122016
3உடன்குடி1600 MW9600 கோடிகள்20122016
4எண்ணூர் விரிவாக்கம்600 MW3600 கோடிகள்20122015
5குண்டா (Kundah Pumped Storage)500 MW1200 கோடிகள்20122016

மொத்தம்5100 MW28800 கோடிகள்

இவையும் தவிர்த்து கீழ்கண்ட புதிய மின் உற்பத்தி திட்டப்பணிகளுக்கு அரசு அதிகாரிகள் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.

எண்

திட்டம்

தமிழகத்திற்கு கிடைக்கும் மின்சாரம்

பொருள் செலவு

திட்டப் பணி தொடக்க காலம்

மின் உற்பத்தி தொடக்க காலம்

1உடன்குடி – விரிவாக்கம்800 MW4800 கோடிகள்20132016
2உப்பூர் அனல் மின் நிலையம்1600 MW9600 கோடிகள்20132016
3எண்ணூர் – மாற்று திட்டம்600 MW3600 கோடிகள்20122016
4தூத்துக்குடி – படி 4800 MW4800 கோடிகள்20122016

மொத்தம்3800 MW22800 கோடிகள்

இதுவும் போதாது என்று காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரில் 4000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட அனல் மின் நிலையத்தை 18000 கோடி ரூபாய் செலவில் அமைத்திட தமிழக அரசு திட்டமிட்டிருக்கிறது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த சிறப்பு அமைப்பு ஒன்றைத் தொடங்கி இருக்கிறார்கள் (M/s. Coastal Tamil Nadu Power Limited). இத்திட்டத்திற்கான இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் கருத்துக்கேட்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.
காற்றாலை மின் உற்பத்தியிலும் தனியார் உதவியுடன் காற்றாலை மின்சாரத்தை மேலும் 10000  மெகாவாட் அதிகப்படுத்த  வாய்ப்பிருப்பதாக மின்சாரவாரிய அறிக்கை தெரிவிக்கிறது.


மேலே பட்டியலிடப்பட்டிருக்கும் திட்டங்களினால் வரும் சில ஆண்டுகளில் தமிழகத்திற்குக் கிடைக்க இருக்கின்ற மின்சாரம் 27540 மெகாவாட்.  இதில் கூடங்குளத்தில் இருந்து கிடைக்க இருப்பதென்னவோ 925 மெகாவாட் மட்டுமே


இன்னும் பல விவாதங்களுடன் பல விமர்சனங்களுடன்
பதவு போட இருக்கும் உங்கள் அன்பு
சிகா,லெனின் 90747357920

No comments:

Post a Comment