
கலை பொக்கிஷத்தை காக்கும் கலை பயணம்.
நம் முன்னோர்கள் விட்டு சென்ற கலை பொக்கிஷம் அழிவதை கண்டு, இதுவரை வருத்தம் மட்டும் தெரிவித்த நாம், இன்று அதை காக்கும் பொருட்டு எடுத்து வைக்கும் முதல் அடி...
இடம்: தேவனூர், செஞ்சி அருகில், மேல்மலையனுருக்கு மிக அருகில்.நாள்: பங்குனி 4 மற்றும் 5 (17, 18 - மார்ச்)
தேவனூர் குறிப்பு:
வரலாற்று அறிஞர்களின் கூற்றுப்படி தென்னிந்தியாவின் மிகப்பெரிய சாம்ராஜ்யங்களில் ஒன்றாக செஞ்சிக்கோட்டை இருந்துள்ளது. இதன் ஆளுகையின் கீழ் இருந்த தேவனூரில் திருநாகேஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. பிற்கால சோழர்கள் சிறப்பாக கட்டிய இந்த கோவிலை பின்னர் ஆட்சி செய்த பாண்டிய, விஜயநகர, நாயக்க மன்னர்களும் தொடர்ந்து பராமரித்து வந்தனர். இந்த கோவிலுக்காக ஏராளமான நிலம், பசு, காளைகளை தானமாக வழங்கியது கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. சிவபெருமானை தேவனாக குறிப்பிட்டு இங்கு சிவன் கோவில் இருந்ததால் தேவனூர் என்று அழைத்துள்ளனர். 17ம் நூற்றாண்டு வரை இந்த கோவில் மிக சீரோடும் சிறப்போடும் இருந்துள்ளது.இதன் பிறகு செஞ்சியை ஆண்ட ராஜா தேசிங்கிற்கும், ஆற்காடு நாவாப்பிற்கும் ஏற்பட்ட உக்கிரமான போரின் போது ஆற்காடு நவாப்பின் பெரும் படையினர் இந்த கோவில் மீது பீரங்கி தாக்குதல் நடத்தி கொள்ளையடித்து சென்றனர்.
இதில் சிதிலமடைந்த கோவில் பின்னர் புதுப்பிக்கப்படாமல் பாழடைந்த நிலையில் உள்ளது. தற்போது, முகநூல் நண்பர்கள் துணை கொண்டு இந்த வரலாற்று பெருமைமிக்க கோவிலை புதுப்பிக்க முயற்சி செய்து, இதோ நாளை முதல் கட்ட வேலைகளை ஆரம்பிக்க உள்ளோம்.
ஏற்கனவே விருப்பம் உள்ள நண்பர்கள் அலைபேசியில் தொடர்பு கொண்டு, தங்களது வருகையை பதிவு செய்தனர். மேலும் மற்ற நண்பர்கள் விருப்பத்தின்பேரில் தங்களை இந்த பணியில் இணைத்துக்கொள்ளலாம்.
தேவனூர் கோவிலுக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளவர்களும், வர விரும்புவர்களும் முன்பே தொடர்பு கொண்டு உறுதி படுத்தினால் உணவு மற்றும் தங்குவதற்கான ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும். தொடர்புக்கான எண்கள் 98409 56955 , 90030 29459 , 95007 86979.
நம் முன்னோர்கள் விட்டு சென்ற கலை பொக்கிஷம் அழிவதை கண்டு, இதுவரை வருத்தம் மட்டும் தெரிவித்த நாம், இன்று அதை காக்கும் பொருட்டு எடுத்து வைக்கும் முதல் அடி...
இடம்: தேவனூர், செஞ்சி அருகில், மேல்மலையனுருக்கு மிக அருகில்.நாள்: பங்குனி 4 மற்றும் 5 (17, 18 - மார்ச்)
தேவனூர் குறிப்பு:
வரலாற்று அறிஞர்களின் கூற்றுப்படி தென்னிந்தியாவின் மிகப்பெரிய சாம்ராஜ்யங்களில் ஒன்றாக செஞ்சிக்கோட்டை இருந்துள்ளது. இதன் ஆளுகையின் கீழ் இருந்த தேவனூரில் திருநாகேஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. பிற்கால சோழர்கள் சிறப்பாக கட்டிய இந்த கோவிலை பின்னர் ஆட்சி செய்த பாண்டிய, விஜயநகர, நாயக்க மன்னர்களும் தொடர்ந்து பராமரித்து வந்தனர். இந்த கோவிலுக்காக ஏராளமான நிலம், பசு, காளைகளை தானமாக வழங்கியது கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. சிவபெருமானை தேவனாக குறிப்பிட்டு இங்கு சிவன் கோவில் இருந்ததால் தேவனூர் என்று அழைத்துள்ளனர். 17ம் நூற்றாண்டு வரை இந்த கோவில் மிக சீரோடும் சிறப்போடும் இருந்துள்ளது.இதன் பிறகு செஞ்சியை ஆண்ட ராஜா தேசிங்கிற்கும், ஆற்காடு நாவாப்பிற்கும் ஏற்பட்ட உக்கிரமான போரின் போது ஆற்காடு நவாப்பின் பெரும் படையினர் இந்த கோவில் மீது பீரங்கி தாக்குதல் நடத்தி கொள்ளையடித்து சென்றனர்.
இதில் சிதிலமடைந்த கோவில் பின்னர் புதுப்பிக்கப்படாமல் பாழடைந்த நிலையில் உள்ளது. தற்போது, முகநூல் நண்பர்கள் துணை கொண்டு இந்த வரலாற்று பெருமைமிக்க கோவிலை புதுப்பிக்க முயற்சி செய்து, இதோ நாளை முதல் கட்ட வேலைகளை ஆரம்பிக்க உள்ளோம்.
ஏற்கனவே விருப்பம் உள்ள நண்பர்கள் அலைபேசியில் தொடர்பு கொண்டு, தங்களது வருகையை பதிவு செய்தனர். மேலும் மற்ற நண்பர்கள் விருப்பத்தின்பேரில் தங்களை இந்த பணியில் இணைத்துக்கொள்ளலாம்.
தேவனூர் கோவிலுக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளவர்களும், வர விரும்புவர்களும் முன்பே தொடர்பு கொண்டு உறுதி படுத்தினால் உணவு மற்றும் தங்குவதற்கான ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும். தொடர்புக்கான எண்கள் 98409 56955 , 90030 29459 , 95007 86979.
இதில் ஒரே ஒரு பெருமை என்னவென்றால், இதை கட்டிய சோழன் எந்த கலை நயத்துடன் கோவிலை கண்டானோ, அதே பார்வையுடன் இன்று நாம்!...
No comments:
Post a Comment