Like me

Sunday, April 22, 2012

பூம்புகார் - தாகம் தனியா அலைகளும்...கடல் திண்ணும் கரைகளும்

                            
பூம்புகார் - தாகம் தனியா அலைகளும்...கடல் திண்ணும் கரைகளும் - இரா.கோமகன்

தமிழ்க கடற்கரை 906 கீ.மீ நீளம் கொண்டது. இந்திய கடற்கரை நீளத்தில் 13 சதவிகிதம். கடற்கரையில் நாட்டின் 25 சதவிகிதம் பேர் வசிக்கின்றனர். தமிழக மக்களில் 10 லட்சம் பேர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருக்கின்றனர். இவர்களில் 2 லட்சம் பேர் மீன்பிடித்தலில் நேரடியக ஈடுபட்டுள்ளனர். தமிழக மக்கள் சிறந்த கடலொடிகள் மட்டுமல்ல கடலின் தன்மையை முழுமையாக அறிந்திருந்தனர். கடல் விஞ்ஞானம் பிடிபட்டிருந்தது. கடல் நீரோட்டம், அலைகள், காற்று, வளி மண்டல மாற்றங்கள், கடற்கரை மண் தன்மை, கலங்கள், கடல்வாழ் உயிரிகள் பற்றிய அறிவு வாய்க்கப்பெற்றவர்களாக வாழ்ந்தனர். இவை நாகை மாவட்ட நெய்தல் மக்களுக்கும் வாய்திருந்தது.

ஒரு செம்படவப்பெண் தன் துணைவன் எப்பொழுது கரைவருவான் கடல் தொழிர்முடித்து என்பதை கடற்கரை மணலில் ஒரு குச்சியை சொருகி அதன் இருகு, இளகு தன்மையை வைத்தே ( due to high tidies, low tides and ocean currents makes the shore sand texture) சொல்லிவிடுவாள். கடல் நீரோட்டதில் அலை ஏற்றதில் கரை அடையும் படி கலம் செலுத்தும் நுட்பம் இருந்தது. மீனவ பெண்களின் கடல் அறிவு அபரமானது.

கடல் ஆமைக்கூட்டம் பல ஆயிரம் கீ.மீ தூரம் வந்து இனப்பெருக்கம் செய்து திரும்பும் அழகான கரைகொண்ட பகுதி தமிழ் நெய்தல் நிலம் குறிப்பாக நாகைமாவட்ட கடற்கரை. கடல் ஆமைகள் கடலின் நீரோட்டத்திற்கு எற்ப நீந்துபவை. நாற்பது நிமிடத்திற்கு ஒரு முறை கடல் மேல் மாட்டம் வந்து நீருள் நீந்தும். ஆமைகளை தொடர்ந்து கலம் செலுத்தி புதிய கடற்கரைகளை கண்டுள்ளனர். அவர்கள் கண்டடைந்த கரைகளில் தமிழ் பெயர்கள் விளங்குவது பற்றிய ஆய்வுகள் தொடருகின்றன.

தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்ட கடற்கரை நல்ல களங்கரை கூட, ஆனால் இந்த கடற்கரை தொடர்ந்து அரிப்புக்குள்ளாகிவருகிற்து. முனநீர் பரப்பின்( FORE SHORE) கடல் கிடைமட்டதில் இருக்கும் பள்ளதாக்கில் ( submarine cannyon ) ஆழி நீரோட்டம் நிகழ்துத்தும் பௌதிக வினைகள் இந்த அரிப்புக்கு கரணமாக இருக்ககூடும். இது பற்றிய ஆய்வை அரசு துறைகள் மேற்கொள்ளவேண்டும். புகார் நகரம் அழிந்தது இதனால் தான். தற்பொழுது கூட பூம்புகரின் ஒரு பகுதியான வானகிரியில் ஐந்து ஆண்டுகளில் 70 மீட்டர் அளவிற்கு நிலத்தை கடல் கொண்டு விட்டது.

கரையில் இருந்த மாரியம்மன் ஆலயம் கடலால் விழுங்கப்பட்டுவிட்டது. இந்த புகைபடங்கள் சாட்சி. இந்த மாரியம்மன் கோவில் மகாமண்டபம் அதன் பின் மூன்று தனித்தனி விமானங்கள் கொண்ட மூன்று பெண் தெய்வங்களுக்கான கருவரைகள் கொண்ட கோவிலாக இருந்தது. 2004-ம் ஆண்டு சுனாமிக்கே தப்பிய கோவில் சுற்றுமதில்களை பெற்றிருந்தது.

இக்கோவிலுக்கு வடபுரத்தில் 700 மீட்டர் தொலைவில் காவேரியாற்றின் கழிமுகத்துவாரம் உள்ளது, இக் கடற்கரையில் கடல் நீரோட்டம் ( ocean current ) பெரும்பாலும் வடக்கு நோக்கியே இருக்கிறது, இதனால் மணல் ஓட்டமும் (littoral drift ) வடக்கு நோக்கி நகர்கிறது.

கடற்கிடைமட்ட பள்ளதக்கால் இவை இங்கு அதிகமாக உள்ளது. இதனால் காவேரியாற்றின் கழிமுகம் முடப்பட்டே இருக்கிறது. வாடைகாலத்தில் தெற்கு நோக்கி கடல் ஓட்டம் இருப்பதால் மணல் சேருவது குறைவதால் முகத்துவாரம் திறந்திருக்கும்.

ஆனால் தற்பொழுது நிழந்திருப்பது இந்த கோவில் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டது. கோவில் இருந்த இடத்தில் அதன் விமானத்தின் கூடு மட்டும் இடிந்த நிலையில் கடலால் இழுத்து செல்லப்படவில்லை கட்டுமானதின் தொழினுட்பதிரணை நாம் வியக்ககூடும் எதிர்வரும் பேராபத்தை உணரானமல், கூடவே அனல் மின்நிலையங்கள் அமையபோவதாக தகவல் உண்டு. கடற்கரை அருகில் கப்பலை நிறுத்தி அங்கிருந்து குழாய் முலம் நிலக்கரியை இறக்குமதி செய்யும் இயற்கையான வனப்பை இக்கடற்கரை பெற்றிருப்பதே அனல் மின் நிலையநிறுவனக் கவர்ச்சிக்கு காரணம்.

கோவில் இருந்த இடம் தாண்டி கடல் எல்லை 15 மீட்டருக்கு வந்துவிட்டது. அனல் மின்நிலையம் வரக்கூடாது என்ற மக்கள் போராட்டத்தில் பிளவுண்ட குழுக்கிடையான மோதல் துப்பாக்கி சூடு வரை சென்றது அதிகார சதுராட்டத்தின் கதை. இழக்கப்போவது நெய்தல் நிலம் மட்டுமல்ல வாழ்வும் தான்.
நகராத்தார்கள் ( செட்டிமார்) எல்லா சூழல்கள் பாற்றி நல்ல விழிப்புணர்வு பெற்றவர்களவே இருக்கின்றனர்.புறதின் அனுபவதொகுப்பாக இருந்ததினால் ஆழிநிர் கொள்ளா இடம் தேடி புலம் பெயர்ந்துள்ளனர். இங்கு வாழும் மீனவர் தங்களை மீன்செட்டி என்று அழைத்துகொள்கின்றனர். இந்த சமூகத்துக்குள்ளே தான் இவர்களின் கொள்வினை கொடுப்பினை நிகழ்கிற்து. இவர்கள் புலம் பெயராமல் இருந்தவர்களும் தன் குழுவுடன் இணையமுடியாத மலெஷிய செட்டிமார் வகையறவும் என கவிஞ்ர் அறிவுமதி கூறுவார். நெய்தல் சுழலால் மீன் பிடிக்க தள்ளப்பட்டிருக்கலாம்.

No comments:

Post a Comment