Like me

Sunday, July 22, 2012

"பகுத்தறிவு பிறப்பதெல்லாம் கேள்விகள் கேட்பதினாலே"






 

























"ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது"

படத்தில் சிறுவர்களுடன் இருப்பவர்கள்
Dinesh Kumar
Seelan Eelamainthan

18-05-2012 அன்று கோவையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக விடியற்காலையில் சென்னையில் இருந்து தோழர்களுடன் தொடர்வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தேன், மதியம் சுமார் 12.30 மணி இருக்கும், ஈரோடில் வண்டி நின்றதும் படத்தில் இருக்கும் இரு சிறுவர்களும் அவரது தந்தையும் வண்டியில் ஏறினார்கள், அச்சிறுவர்களுடன் ஏற்பட்ட அனுபவம் மறக்க முடியாதது, கசப்பானது, இனிமையானதும் கூட

இரு சிறுவர்களையும் மடியில் அமர்த்தி பொழுது போக்கி கொண்டிருந்தோம், அவர்கள் கோவையில் உள்ள SBOA பள்ளியில் படிக்கிறார்கள், பிறந்தது ஈரோடாக இருந்தாலும் வாழ்வது எல்லாம் கோவையில்தான் என கூறினார்கள், நாங்கள் கேள்வி கேட்க அவர்கள் சொல்லிய பதில் மூலம் எந்த அளவுக்கு அவர்களிடம் நம் சமூகம் திணிக்கிறது என நீங்கள் புரிந்து கொள்ளலாம்

.
.
.
.

கேள்வி:உங்கள் பெயர் என்ன?
பதில்: விஷாந்த், நிஷாந்த்

கேள்வி: உங்களுக்கு எந்த நடிகரை பிடிக்கும்
பதில் : விஜய், சூர்யா, ஆர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு

கே: ஏன் விஜய் புடிக்கும், அஜித்த பிடிக்காதா?
ப: அஜித்துக்கு நடிக்க தெரியாது, விஜய்க்கு நடிக்க தெரியும்

கே: இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது யாரு?
ப: காந்திஜி, நேருஜி, இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி

கே: நேதாஜி, பகத்சிங் யாருன்னு தெரியுமா?
ப: தெரியாது

கே: IPL பாக்குறீங்களா??
ப: ஆமா

கே: IPL ல எத்தனை டீம் இருக்கு? யாரு முதல்ல இருக்குறது?
ப: 9 டீம்ஸ், முதல்ல இருக்குறது டெல்லி டீம்

.
.
.
.

(பின்னர் அலைபேசியில் இருக்கும் புகைப்படத்தை காட்டி இவர்களை யாரென்று தெரியுமா என கேட்டோம்)

புகைப்படம்: "பிரபாகரன்" (ராணுவ உடையில்)
பதில்: இவர் ஒரு மிலிட்டரி மேன்

புகைப்படம்: "பெரியார்" (அவர்கள் பிறந்தது ஈரோடு என்பதால் ஆர்வமோடு இருந்தோம்)
பதில்: இந்த சாமியார எங்கயோ பாத்து இருக்கேன்

புகைப்படம்: "அன்னை தெரசா"
பதில்: போதி தர்மர்

.
.
.
.

கே: உங்க பள்ளிகூடத்துல இங்கிலீஷ் தவிர வேற என்ன மொழி சொல்லி கொடுக்குராங்க?
ப: இந்தி, சமஸ்கிருதம், மேத்ஸ், சைன்ஸ்

(இவர்களுக்கு மொழிக்கும், அறிவியலுக்கும் வித்தியாசம் சொல்லாமலேயே கல்வி முறை இருப்பதை கவனிக்கலாம்)

கே: தமிழ் சொல்லி கொடுக்குறது இல்லையா?
ப: அதுவும் ஒரு சப்ஜெக்ட் இருக்கு, அத படிக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு

(அவர் அப்பா விடம் கேட்டோம், "நீங்கள் தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்டவர்களா?" என்று, அவர் "ஆம்" என்று கூறி தலை குனிந்தார்)
.
.
.
.

#இவர்கள் மீது சிறு வயதிலேயே இவர்களின் வரலாறை மறைத்து நஞ்சை புகுத்துகிரார்கள் என்பதை கவனிக்கலாம், இப்போது இருக்கும் பாடத்திட்டங்கள் மூலமாக போதையை திணித்து கேள்வி கேட்கும் சிந்தனையை அழிப்பதை பார்க்கலாம், அடுத்த தலைமுறை??????


இவர்களுக்கு கேள்வி கேட்கும் முறையை சொல்லி கொடுக்க வேண்டும் என நல்லதிற்க்காக மூளை சலவை செய்தோம், எதற்கெடுத்தாலும் அவர்கள் பதில் "டீச்சர்" இப்படித்தான் சொல்லி கொடுத்தாங்க என்றே வந்தது,

விதைப்பை நாங்கள் ஆரம்பித்து வைத்தோம் பின்னர அந்த சிறுவர்களுக்குள்ளேயே விவாதித்து நல்ல முடிவுக்கு வந்தது ஆச்சர்யம் தான், இறுதியில் அச்சிறுவர்கள் "டீச்சர் தப்பு தப்பா சொல்லி கொடுக்குறாங்க, அவங்களை நான் கேள்வி கேட்டே கவனிச்சிக்கிறேன்" என்ற முடிவுக்கு வந்தனர், அவர்கள் நடத்திய ஒரு விவாதத்தைதான் படமாக போட்டுள்ளேன், போராளிகளை பற்றியும், நாம் எப்படி அடிமையாக இருக்கிறோம் என்பதை பற்றியும், நம் நிலையையும் விதைத்தோம், போகும் போது போராளிக்கான அடையாளமான கையை உயர்த்தி காட்டுதலை வினாடிக்கு ஒரு முறை திரும்பி திரும்பி எங்களிடம் காட்டியது திருப்தியை தந்தது.. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது


இவர்களுக்கு படித்து விட்டு மற்றவர்களிடம் அடிமையாக வேலை பார்க்க வேண்டும் என்று தான் மற்ற மொழிகள் திணிக்கபடுகிறது, தொழில் தொடங்க வேண்டும் என்ற முறையை யாரும் சொல்லி கொடுப்பதும் இல்லை, அப்படி செய்தால் இவர்கள் முன்னேறி விடுவார்களே!!!

!
!
!

"பகுத்தறிவு பிறப்பதெல்லாம் கேள்விகள் கேட்பதினாலே"

No comments:

Post a Comment