Like me

Sunday, July 22, 2012

மாய உருவம்

                                    




பல வார இதழ்கள் அரசியல்வாதிகளுக்கே கூஜா தூக்கி விற்பனை ஆகி கொண்டிருக்கின்றன, ஆனால் அதில் சில விதி விலக்கு வார இதழ்களும் உண்டு,cமக்களிடம் செய்திகளை சேர்ப்பதில் மற்ற வார இதழை காட்டிலும் நம்பகத்தன்மை வாய்ந்தது

முதலாளித்துவத்தை பின்பற்றும் அரசாங்கம் எப்பொழுதும் தன்னை எதிர்ப்பவர்கள் மீது ஒரு போலி உருவத்தை கொடுக்கும், அதாவது அவர்களை தீவிரவாதிகள், கொள்ளையர்கள், என ஒரு மாய தோற்றத்தை கொடுக்கும், அதனையும் கேள்வி கேட்க்காத மக்கள் நம்பிவிடுவார்கள், அந்த மாய தோற்றத்தை மக்களிடம் தோலுரித்து காட்டும் வேலையைத்தான் நடுநிலையான பத்திரிக்கைகள் செய்கின்றன

சமீபத்தில் மாவோயிஸ்ட்டுகளின் நிலைமையையும், அவர்கள் மீது அரசாங்கம் போர்த்தியுள்ள ஒரு மாய தோற்றத்தையும் "குமுதம் ரிப்போர்ட்டர்" தோலுரித்து காட்டியது வரவேற்கதக்கதே , ஆனால் கடந்த வாரம் வெளியான இதே வார இதழில் வீரப்பனை "சந்தன கடத்தல்" என்ற அடை மொழியுடன் கட்டுரை தீட்டி உள்ளது வியப்பில் ஆழ்த்தியுள்ளது, இவர்களும் சாதாரண மக்களை போல அரசாங்கம் கொடுத்த மாய உருவத்தைதான் பயன்படுத்துகிறார்கள் என்பது, இதுவும் ஒரு தினமலராகவோ, நக்கீரனாகவோ வந்துவிடுமோ என்ற சந்தேகத்தை தருகிறது


அவர் உண்மையாகவே சந்தனைத்தை கடத்தியதாக இருந்தாலும், அவருக்கு இந்தபட்டம் தேவை இல்லாதது, தாய் நாட்டை கொள்ளை அடிக்கும் சிலருக்கு அவர் தடையாக இருந்ததால்
அவரை கொல்வதற்காக அவர் மீது போர்த்திய உருவம் தான் "சந்தன கடத்தல்", இவர் செய்த மற்ற நல்ல செயல்களை வைத்து பட்டம் கொடுக்க தவறிய பத்திரிக்கைகள், இந்த பட்டத்தை எடுத்து கொள்வது ஏன்??

கொள்ளிடம் ஆற்று மணல் கொள்ளையன் கே.என்.நேரு..
டான்சி ஊழல ஜெயலலிதா..
போபர் கொள்ளையன் ராஜீவ் காந்தி,
காமன் வெல்த் கொள்ளைக்காரி சோனியா,
அலைகற்றை கொள்ளைக்காரன் கருணாநிதி

என்று இவர்களுக்கும் பட்டம் போடும் பட்சத்தில் உங்களை நடுநிலை என பாராட்டலாம், உங்களின் சிந்தனைக்கும் எதை சொன்னாலும் நம்பும் பாமர மக்களின் சிந்தனைக்கும் வித்தியாசம் கிடையாது, உண்மையாக கொள்ளை அடிப்பவர்களுக்கு "அமைச்சர்" பட்டம், கொள்ளை அடித்தவரிடம் இருந்து பாதுகாத்தவருக்கு "கடத்தல்" பட்டமா?

ஜெயலலிதாவை "முதல்வர ஜெயலலிதா" என்று சொல்லியும், வீரப்பனை "சந்தன கடத்தல் வீரப்பன்" என்று போட்டுத்தான் மக்களிடம் அடையாளபடுத்த வேண்டும் என்பதற்கு அவசியமில்லை, நேரடியாக பெயரை மட்டும் சொன்னாலே அனைவருக்கும் இவர்களை தெரியும்
வீரப்பனை கொல்வதில் முக்கிய பங்காற்றியவர்கள் விஜய குமார் உள்ளிட்ட பெரும்பாலான காவலர்கள் மலையாளிகளே, அந்த காவலர்களுக்கு இடம் வரவில்லை என்று வக்காலத்து வாங்குகிறது இந்த கட்டுரை, திடீரென மலையாளிகளின் மேல் குமுதம் பாசம் காட்ட காரணம் என்ன?? 

No comments:

Post a Comment