மாணவர்கள் கைது…!

"எப்படி நடைமுறையில் சாத்தியப்பட முடியாத கோரிக்கையை வைத்துப்போராட முடியும் என்கிறார்கள்.
கிடைப்பதை வாங்கிக் கொள்வதன் பெயர் “பிச்சை”.
போராட்டம் நடத்தி வெல்வதன் பெயர் “விடுதலை”.
எழுத்துப் பிச்சை எடுத்து பிழைத்த கும்பல், போராட்டத்தினைப் பற்றி கட்டுரை, கருத்து, கமெண்ட், பத்திரிக்கைச் செய்தி போடச்சொன்னால் இப்படித்தான் போடுவார்கள்.. உங்களுடைய பிச்சைக்காரப் பிழைப்பைதான் 25 வருடங்களாக பார்த்திருக்கிறோமே....
எங்களின் தேவை ‘விடுதலை’. இதை வெல்லவே போராட்டம்."
கிடைப்பதை வாங்கிக் கொள்வதன் பெயர் “பிச்சை”.
போராட்டம் நடத்தி வெல்வதன் பெயர் “விடுதலை”.
எழுத்துப் பிச்சை எடுத்து பிழைத்த கும்பல், போராட்டத்தினைப் பற்றி கட்டுரை, கருத்து, கமெண்ட், பத்திரிக்கைச் செய்தி போடச்சொன்னால் இப்படித்தான் போடுவார்கள்.. உங்களுடைய பிச்சைக்காரப் பிழைப்பைதான் 25 வருடங்களாக பார்த்திருக்கிறோமே....
எங்களின் தேவை ‘விடுதலை’. இதை வெல்லவே போராட்டம்."
ஈழவிடுதலைக்காக தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தூத்துக்குடி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி, வ.உ.சி.கல்லூரி, காமராஜ் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 43 மாணவர்கள் கைது.
தொடர்புக்கு :க...திரவன் 9500836016
கோரிக்கைகள் :
1. அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை வன்மையாக கண்டிக்கிறோம். ஐ.நா. சபையில் அமெரிக்க தீர்மானத்தை நிறைவேற்றாதே
2. இலங்கையில் நடைபெற்றது வெறும்போர்குற்றமோ மனித உரிமைமீறலோமட்டுமல்ல அதுதிட்டமிடப்பட்ட இனப்படுகொலை.
3. சர்வதேசவிசாரணையும் பொதுவாக்கெடுப்புமே தமிழ்மக்களுக்கான ஒரேதீர்வு. சர்வதேசவிசாரணையும் தனித்தமிழ் ஈழ பொதுவாக்கெடுப்பும் நடத்துவதற்கான தீர்மானத்தை இந்திய அரசுமுன்மொழிந்து கொண்டுவரவேண்டும்
4. சிங்களஇனவெறிஅரசின்துணைத்தூதரகத்தை தமிழ் மண்ணில் இருந்து வெளியேற்ற தீா்மானம் கொண்டுவரவேண்டும். மேலும் இந்திய அரசு இலங்கை உடனான அனைத்து அரசாங்க உறவுகளையும் துண்டிக்கவேண்டும்.
5. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கை அரசின் மீது இந்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்
6. உலகத்தமிழா்களின் பாதுகாப்பை உறுதிச்செய்ய தமிழ்நாடு அரசு சார்பாக வெளியுறவுத் துறையை உருவாக்க வேண்டும்.
7. ஆசியநாடுகள் எதுவும் சா்வதேச விசாரணைக்குழுவில் இடம்பெறக்கூடாது.
8. தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
9. ஈழத் தமிழா் பிரச்சனைக்கு இந்திய அரசு தீர்வு காணாவிட்டால் தமிழகத்திலிருந்து எந்த வரியையும் செலுத்தமாட்டோம்.
-தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு
No comments:
Post a Comment