Like me

Sunday, March 4, 2012

நெஞ்சு பொறுக்கவில்லை........

              


              சிராவயல் மஞ்சுவிரட்டு (ஜல்லிக்கட்டு) ....அலங்காநல்லூருக்கு போட்டியாக சிராவயல் ஜல்லிக்கட்டு இருக்கும் என்பார்கள்....மேற்கே அலங்காநல்லூர் என்றால் கிழக்கே சிராவயல் என்பார்கள்......அந்த அளவுக்கு பிரசித்தி பெற்றது.....

அந்த சிராவயல் கூட்டத்தையும்....திமிறி வரும் காளையையும் பார்பதற்க்கே கண்கோடி வேண்டும்......வரலாற்று சிறப்பு மிக்க அந்த சிராவயல் ஜல்லிகட்டை....விலங்கு பாதுகாப்பு என கட்டுபாடுகளை விதித்து இந்த முறை சிதைத்து கலை இழந்து போக செய்து இருக்கிறார்கள் இன எதிரிகள் ......

நெஞ்சு பொறுக்கவில்லை........

ஒரு முறை சீமான் சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது...ஒரு இனத்தை அழிக்க அணுகுண்டு வீச தேவை இல்லை......அதன் கலாசார அடையாளங்களை மெதுவாக நாசபடுதினால் போதும்...அந்த இனம் தானாகவே அழிந்து விடும்.....

இப்பொழுது அது தான் நடந்து கொண்டு இருக்கிறது.....நாமும் கையறு நிலையில்...வந்தேறிகளிடம் அதிகாரத்தை கொடுத்து விட்டு நிர்கதியாய் நிற்கிறோம்............

விலங்கு துன்புறுத்தல் பேசும் அறிவாளிகளே .......

**மாட்டை வைத்து உழவு செய்யும்போது...மாட்டிற்கு வலிக்காமல் இனிக்கவா செய்கிறது ?? அதனால் விவசாயத்தை நிறுத்தி விடலாமா ??
**கேரளாவிற்கு அடிமாடாய் லாரியில் போகும்போது எங்கு போனது உங்கள் விலங்கு பாசம் ??
**கர்நாடகத்தில் விழாவின்போது மத சடங்காக ..மாட்டை தீயில் நடக்க செய்கிறார்களே அப்பொழுது எங்கு போனது உங்கள் விலங்கு பாசம் ??
**சல்மான்கான் மானை சுட்டரே ஞாபகம் இருகிறதா ???? அந்த வழக்கு என்ன ஆனது ?????? தீர்ப்பு சொல்லியாச்சா ???????????

**ஆந்திரத்தில் அமைச்சர் நடத்திய விருந்தில் மயில் கரி பரிமாறப்பட்டதாக வழக்கு நடந்ததே....அதுவும் தேசிய பறவை..அந்த வழக்கு என்ன ஆனது ????? தீர்ப்பு சொல்லியாச்சா ???????????

இந்த கேள்விகளுகேலாம் பதில் தராது..எங்கள் பாரம்பரியத்தின் மீது மட்டும் கை வைப்பது ஏன்????

ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்க கோரி நீதிமன்றத்தில் மனு....

தமிழனின் உயிரை பறித்தீர்....உரிமையை பறித்தீர்...ஆட்சி அதிகாரத்தை பறித்தீர்...மூளையை மலுங்கடிதீர்....

இப்பொழுது தமிழனின் பாரம்பரியத்தில் கை வைக்குரீர்...

ஜல்லிக்கட்டு என்பது வீர விளையாட்டு.....இன்று நேற்று அல்ல...காலம் காலமாக தொன்று தொட்டு நடத்த படும் விளையாட்டு......இதுவும் தமிழர்களின் அடையாளத்தை ஒழிக்க நடக்கும் மறைமுக நிகழ்வே....

No comments:

Post a Comment