Like me

Sunday, March 4, 2012

ம.பொ.சி

                                       

   தோழர்களே, இந்தியாவிடமும் அண்டை மாநிலங்களிதிடமும் இருந்து தமிழகம் முற்றிலுமாக புறக்கணிக்கபடும் இந்த வேலையில்......அருமையான இந்த தலைவரை தெரிந்து கொள்வது இன்றைய அவசியம்....

ம.பொ.சி ( சிவஞானம் ) -- அவரது பெருமைகள்....

அன்றைய கால கட்டத்திலேயே ...இடுக்கி மாவட்டத்தை தமிழகத்தோடு இணைக்க போராடினார்

**சென்னை மீது ஆந்திரர் உரிமை கொண்டாடியதை எதிர்த்துப் போராடி, “தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” என்று சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் முழக்கம் செய்து, தலைநகரைக் காத்தார்.

** தமிழக வடக்கெல்லைக் கிளர்ச்சியைத் தொடங்கி, திருத்தணியை ஆந்திரத்திடம் இருந்து பெற்றதில் இவர் பங்கு அளப்பரியது.... அந்த போராட்டத்தில், 1953இல் தணிகையில் ஆறு வாரக் கடுங்காவல் தண்டனை பெற்றார்.

**மொழிவாரி மாகாணப் பிரிவினைக் கிளர்ச்சியைத் தமிழகத்தில் தொடங்கி 1956இல் தமிழ் மாநிலம் அமையச் செய்தார்.

**தமிழக வடக்கு - தெற்கு எல்லைக் கிளர்ச்சிகளை நடத்தி, வடக்கெல்லையில் ஒரு தாலுகாவும் ( தணிகை), தெற்கு எல்லையில் ஐந்து தாலுகாக்களும் (குமரி மாவட்டம் மற்றும் னெல்லை மாவட்டத்தின் செங்கோட்டை வட்டம்) தமிழகத்துடன் இணையக் காரணமானார்
 

No comments:

Post a Comment