Like me

Saturday, March 17, 2012

வில்லில் இசை

                         
அரிசியின் வழி பாட்டுடன் தொடங்கியது இந்த கலை .
தமிழன் வில்லால் உலகை வளைத்து மட்டுமல்லாமல்
வில்லில் இசையையும் வடித்துள்ளான் .
வில்லு பாட்டு -நம் மண்ணின் பெருமையை சொல்லும் பாட்டு .
வில்லு பாட்டு என்றே பெயர் .பாடல் ,உரையாடல் ,பழ மொழிகள் ,வசன கவிகள் (இபோது சிறிது ஆங்கிலமும் )என அனைத்தும் கலந்து விறுவிறுப்பை ஏற்றியது அந்த தருணத்தை .
கிராமத்து சொல் வழக்குடன் .அந்த கலைஞ்சர்களின் கணீர் குரல் , அதிரும் உடுக்கை ,அதிரவைக்கும் வில்லு குடத்தின் ஒலி..இவற்றுடன்
நெல் மணிக்காக உழைத்த நம் உழைப்பாளிகளின் களைப்பை நீக்கும் வில்லின் மணி ஒலிகள் .காற்றும் காத்திருக்கும் போல ...இந்த ஒலிகளை எபோது கடத்துவது என்று .
கைகளால் மட்டுமே ஆடக்கூடிய ஒரு நடனம் தெரிந்திருகிறது அவர்களுக்கு .அவர்களின் கைகள் ஒரு நடனம் ஆடுகிறது .அது அவர்கள் அந்த கலையுடன் கலந்து விட்டதை காட்டியது .கலையை தெய்வமாக பார்க்கும் இது போன்ற மனிதர்களை நேற்று நான் கண்டேன் . 

வில்லுடன் வந்த இவர்களின் சொல்லுடன் பிறபெடுதார் சாஸ்தா(சாஸ்தா கதை ).
 — 

No comments:

Post a Comment