
உதயகுமார் என்னவோ தலைமறைவாகிவிட்ட தீவிரவாதி போல, அவரை தேடுகிறோம் என்று காவல்த்துறை மக்களை அராஜகம் செய்துக் கொண்டு இருந்த வேளையில், நேற்று மாலை கைதாகும் விருப்பமாய், இடிந்தகரை உண்ணாவிரத பந்தலுக்கு அவர் வந்தார். அவருடன் கைதாவதாக இருந்த சகாக்களும் வந்தார்கள். வந்தவர் தான் கைதாக இருப்பதாக அறிவித்ததுதான் தாமதம் ! கூடியிருந்த ஒட்டு மொத்த மக்களும் கதறி அழுது அவரது காலில் விழுந்து, ' நீங்கள் கைதாகக் கூடாத
ு, கைது ஆகவே கூடாது, உங்களை நாங்கள் பாதுகாப்போம், உங்களுக்காக எங்கள் உயிரை கொடுப்போம் " என்று சொல்லியவாறே, மேற்கொண்டு அவரை பேச விடமால் அப்படியே குண்டுக் கட்டாக தூக்கி கொண்டு சென்ற காட்சி இதுவரை தமிழகம் காணாதது. காண்பவர் கருத்தில் எல்லாம் ஒட்ட வேண்டிய ஒரு காட்சி !
ஒருதலைவன் எப்படி இருக்க வேண்டும்? மக்கள் எப்படி இருக்க வேண்டும் ? அவன் மக்களை எவ்வாறு நேசிக்க வேண்டும் ? மக்கள் அவனை எவ்வாறு நேசிக்க வேண்டும் ? இதற்கெல்லாம் ஒரு உதாரண காட்சியாய் விளங்கிய அக்காட்சி... எவனவன் எல்லாம் தன்னை தலைவன் என்று இதுகாறும் சொல்லிக் கொண்டு திரிகிறானோ, அவனெல்லாம் நாணப்பட்டு நான்று கொண்டு சாக வேண்டிய காட்சி !
ஒரு தலைவன் என்று தன்னை வரித்துக் கொள்கிறவன் 14 வயதில் கொடி பிடித்து தெருவில் இறங்கி கோஷம் போட வேண்டிய அவசியமில்லை. 56 ' லே போட்ட தீர்மானத்தை திரும்பவும் 2012 லே போட வேண்டிய அவசியமில்லை ஒரு தலைவன் என்று சொல்லிக் கொள்கிறவன் சினிமாவில் நடித்து வேற வசனம் பேசி, துப்பாக்கி குண்டுகள் தீர கண்டவனையும் சுட்டுத் தள்ள வேண்டிய அவசியமில்லை. எந்த ஒரு சினிமாவிலும் கதாநாயகியாக நடித்து சிற்றாடை கட்டி குலுக்கு நடனம் ஆட வேண்டிய அவசியமில்லை.
ஒரு தலைவன் என்பவன் எளியவனாய், இதயசுத்தி உடையவனாய், ஒரு இரண்டு வருட காலம் மக்கள் மத்தியில் புழங்கி அவர்களின் இன்பதுன்பத்தில் பங்கு எடுத்தாலே போதும். மக்களுக்கான பிரச்சினையை மக்களை கொண்டே நடத்த தெரிந்தால் போதும். சிக்கன் பிரியாணியும், குவார்டடரும் தேடி தர வேண்டியதில்லை. வெறும்வயிறு காய, ஒரு பந்தலிற் கீழ் அவர்களை அமர்த்தி அவர்களுக்கு அறிவு நிறைத்தால் போதும். ஒரு தலைவன் உருவாகி விடலாம். அப்படியொரு ஒரு தலைவனை தமிழகம் நேற்று கண்டது. மக்கள் தலைவனை தமிழர்கள் கண்டுக் கொண்டார்கள்.
என்ன ஒரு தலைவன் ! எங்கள் தமிழ்த்தாய் அவ்வபோது உத்தம புதல்வர்களை பிறப்பித்துக் கொண்டே இருக்கிறாளே, எங்கள் இதயகுமாரன் பிரபாகரனுக்கு பின்னாலேயே எங்கள் உதயகுமாரனை அடையாளம் காட்டி இருக்கிறாளே ! தமிழ் மக்களே, இவரை நம் கையில் ஏந்தி கொள்ள மாட்டோமோ ! டாடா சுமோவில் வந்து இறங்கி தள்ளுமுள்ளு செய்பவன் எல்லாம் தலைவனா ? இந்த புழுதி மண்ணில் தன கால் தோய நடந்து வரும் இவன் தலைவனா ? வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாட்டை செய்துக் கொண்டு குண்டுத் துளைக்காத மேடையில் நின்று கொண்டு சுதந்திரம் பற்றி பேசுபவன் தலைவனா ? மக்களே என் பாதுகாப்பு வாடை காற்றில் வந்து நின்று மக்களை குசலம் விசாரிப்பவன் தலைவனா ?
விசாரித்து அறியுங்கள் மக்களே, தலைவன் யார் ? தறுதலைகள் யார் ? என்று !
ஒருதலைவன் எப்படி இருக்க வேண்டும்? மக்கள் எப்படி இருக்க வேண்டும் ? அவன் மக்களை எவ்வாறு நேசிக்க வேண்டும் ? மக்கள் அவனை எவ்வாறு நேசிக்க வேண்டும் ? இதற்கெல்லாம் ஒரு உதாரண காட்சியாய் விளங்கிய அக்காட்சி... எவனவன் எல்லாம் தன்னை தலைவன் என்று இதுகாறும் சொல்லிக் கொண்டு திரிகிறானோ, அவனெல்லாம் நாணப்பட்டு நான்று கொண்டு சாக வேண்டிய காட்சி !
ஒரு தலைவன் என்று தன்னை வரித்துக் கொள்கிறவன் 14 வயதில் கொடி பிடித்து தெருவில் இறங்கி கோஷம் போட வேண்டிய அவசியமில்லை. 56 ' லே போட்ட தீர்மானத்தை திரும்பவும் 2012 லே போட வேண்டிய அவசியமில்லை ஒரு தலைவன் என்று சொல்லிக் கொள்கிறவன் சினிமாவில் நடித்து வேற வசனம் பேசி, துப்பாக்கி குண்டுகள் தீர கண்டவனையும் சுட்டுத் தள்ள வேண்டிய அவசியமில்லை. எந்த ஒரு சினிமாவிலும் கதாநாயகியாக நடித்து சிற்றாடை கட்டி குலுக்கு நடனம் ஆட வேண்டிய அவசியமில்லை.
ஒரு தலைவன் என்பவன் எளியவனாய், இதயசுத்தி உடையவனாய், ஒரு இரண்டு வருட காலம் மக்கள் மத்தியில் புழங்கி அவர்களின் இன்பதுன்பத்தில் பங்கு எடுத்தாலே போதும். மக்களுக்கான பிரச்சினையை மக்களை கொண்டே நடத்த தெரிந்தால் போதும். சிக்கன் பிரியாணியும், குவார்டடரும் தேடி தர வேண்டியதில்லை. வெறும்வயிறு காய, ஒரு பந்தலிற் கீழ் அவர்களை அமர்த்தி அவர்களுக்கு அறிவு நிறைத்தால் போதும். ஒரு தலைவன் உருவாகி விடலாம். அப்படியொரு ஒரு தலைவனை தமிழகம் நேற்று கண்டது. மக்கள் தலைவனை தமிழர்கள் கண்டுக் கொண்டார்கள்.
என்ன ஒரு தலைவன் ! எங்கள் தமிழ்த்தாய் அவ்வபோது உத்தம புதல்வர்களை பிறப்பித்துக் கொண்டே இருக்கிறாளே, எங்கள் இதயகுமாரன் பிரபாகரனுக்கு பின்னாலேயே எங்கள் உதயகுமாரனை அடையாளம் காட்டி இருக்கிறாளே ! தமிழ் மக்களே, இவரை நம் கையில் ஏந்தி கொள்ள மாட்டோமோ ! டாடா சுமோவில் வந்து இறங்கி தள்ளுமுள்ளு செய்பவன் எல்லாம் தலைவனா ? இந்த புழுதி மண்ணில் தன கால் தோய நடந்து வரும் இவன் தலைவனா ? வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாட்டை செய்துக் கொண்டு குண்டுத் துளைக்காத மேடையில் நின்று கொண்டு சுதந்திரம் பற்றி பேசுபவன் தலைவனா ? மக்களே என் பாதுகாப்பு வாடை காற்றில் வந்து நின்று மக்களை குசலம் விசாரிப்பவன் தலைவனா ?
விசாரித்து அறியுங்கள் மக்களே, தலைவன் யார் ? தறுதலைகள் யார் ? என்று !
No comments:
Post a Comment